2020 நோபல் பரிசு முழுயைான விபரங்கள் – பரிசு பெற்றவர்களும் பரிசுக்கான காரணங்களும் – ஒரே பார்வையில் !

நோபல் பரிசு 2020
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, 1901ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்த வருட நோபல் பரிசுகளை பெற்றவர்களுடைய விபரங்கள் இதோ !
மருத்துவத்துக்கான நோபல்பரிசு 2020
அதன்படி இந்த ஆண்டிற்கான மருத்துவ துறையின் நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஹார்வி ஜே ஆல்டர், மைக்கேல் ஹாஃப்டன், சார்லஸ் ரைஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பரிசு பெற்றவர்களில் விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் ஆகியோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் பிரிட்டனை சேர்ந்தவர். நோபல் பரிசு பெறும் இந்த மூன்று மருத்துவர்களுக்கும் பரிசு தொகை ரூ.8 கோடி ஆகும்.
காரணம்:
ஹெப்பாடைடிஸ் சி என்ற வைரஸின் கண்டுபிடித்ததற்காக இந்த மூன்று மருத்துவர்களும் கூட்டாக நோபல் பரிசு பெறுகின்றனர்.
மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது! – Thinakkural
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020
விஞ்ஞானிகள் ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்  ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நோபல் பரிசு 2020
காரணம்:
‘கருந்துளை’ பற்றிய ஆய்வுக்காக இந்த மூன்று விஞ்ஞானிகளும் இயற்பியலுக்கான நோபல் பரிசினை கூட்டாக பெறுகின்றனர்.
2020 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு- Dinamani
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2020
அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
நோபல் பரிசு 2020
காரணம்:
Unmistakable Poetic Voice என்ற திறனிற்காக அவருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் லூயி க்ளூக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு| Dinamalar
அமைதிக்கான நோபல் பரிசு 2020
 இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ”உலக உணவுத் திட்டம்’ அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு 2020
காரணம்:
கொரோனா வைரஸ் பரவலின் காரணத்தினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட நேரத்திலும் இந்த அமைப்பு உலகம் முழுவதும் இருந்த ஏழைகளுக்கு உணவு வழங்கியது. மேலும் அதன் மூலம் நாடுகளுக்கிடையே சமாதானத்தினையும் ஏற்படுத்த பாடுபட்டதன் காரணத்தினால் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு |  pavoor.in
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2020
பால்.ஆர்.மில்க் ரோம் மற்றும் ராபர்ட்.பி. வில்லசன் ஆகிய இருவர் இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்தின் நோபல் பரிசினை கூட்டாக பெறுகின்றனர்.
நோபல் பரிசு 2020
காரணம்:
ஏல கோட்பாட்டின் மேம்பாடு மற்றும் ஏல கோட்பாட்டின் புதிய வடிவமைப்புகளை உருவாக்கியதற்காக இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பெறுகின்றனர்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.! | Paul R Milgrom and Robert B  Wilson win 2020 Nobel Prize in Economics | Puthiyathalaimurai - Tamil News  | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
வேதியியல் நோபல் பரிசு 2020 
 2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியலாளர்களுக்கு மரபணு மாற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது.
காரணம் –
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் புதன்கிழமை 2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியாலாளர்களுக்கு மரபணு மாற்றத்திற்கான முறையை உருவாக்கியதற்காக வழங்கியுள்ளது.
“இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுட்னா ஆகியோர் மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்: அது CRISPR/Cas9 மரபணு கத்தரிக்கோல் என்று அகாடமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *