2020

2020

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது  காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி மாவட்ட  முடிவுகளை போலவே இந்த தொகுதியிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27535
ஐக்கிய மக்கள் சக்தி – 18706
தேசிய மக்கள் சக்தி – 4380
ஐக்கிய தேசிய கட்சி – 3930

வெளியானது – காலி மாவட்டம் அம்பலாங்கொடை தொகுதிக்கான முடிவுகள் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது காலி மாவட்டம் அம்பலாங்கொடை தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 39142
ஐக்கிய மக்கள் சக்தி – 8202
தேசிய மக்கள் சக்தி – 2322
ஐக்கிய தேசிய கட்சி – 1242

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதுடன் காலி மாவட்டத்தின் கிடைத்துள்ள  தேர்தல் முடிவுகளின்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியிலுள்ளது.

மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம்!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 40143
ஐக்கிய மக்கள் சக்தி – 9009
தேசிய மக்கள் சக்தி – 4196

இங்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே அதிகப்படியான வாக்குகளை பெற்று  வெற்றி பெற்றுள்ளது.

காலியில் தொடரும் பொதுஜன பெரமுனவின் ஆதிக்கம்…..!

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் போன்ற தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது காலி தேர்தல் மாவட்டத்தின் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் காலி – பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 25850
ஐக்கிய மக்கள் சக்தி – 6105
தேசிய மக்கள் சக்தி – 1235

ஐக்கிய தேசிய கட்சி – 1235

இதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

வெளியானது., யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியினுடைய முடிவுகள் !

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மூன்றாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 7,634

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,642

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 5,545

வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை – 3,846

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 35,216

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25,165

செல்லுபடியான வாக்குகள் – 23,136

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,029

இதனடிப்படையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

 

ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள் வெளியானது!

காலி மாவட்டத்தினுடைய தேர்தல் முடிவுகளையடுத்து  2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. இது ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே ஆகும்.

அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6588
இலங்கை தமிழரசு கட்சி – 4412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1328

வெளியானது முதலாவது தேர்தல் முடிவு – காலியில் பெரமுன ஆதிக்கம்!

2020 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற பொது தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

காலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி இதிகளவிலான வாக்குகளை பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27,682
ஐக்கிய மக்கள் சக்தி – 5,144
தேசிய மக்கள் சக்தி – 3,135
ஐக்கிய தேசிய கட்சி -1,507

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீடிப்பு !

விடுதலைப் புலிகள் அமைப்பு உலகின்  உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது. இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளை தனது புதிய பட்டியலில் சேர்த்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடையானது 30 உறுப்பு நாடுகளில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், பாபர் கஹால்சா, ஹிஸ்புல் முஜாதீன், காலிஸ்தான் சிந்தபாத் ஹமாஸ், ஹிஸ்புல்லா, துருதிஷ்தான் தொழிற்கட்சி, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் உட்பட 20 அமைப்புகளுக்கான தடையை நீடிப்பது என ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஜூலை 30 ஆம் திகதி தீர்மானித்தது.

அதேவேளை பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் அந்த வழக்கின் தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 1 கோடியே 21 லட்சத்து 41 ஆயிரத்து 958 பேர் குணமடைவு!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 89 லட்சத்து 56 ஆயிரத்து 830 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 21 லட்சத்து 41 ஆயிரத்து 958 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-
அமெரிக்கா – 25,29,952
பிரேசில் – 20,20,637
இந்தியா -12,82,215
ரஷியா – 6,69,026
தென் ஆப்ரிக்கா – 3,77,266
சிலி – 3,38,291
பெரு – 3,02,457
மெக்சிகோ – 3,00,254

கொரோனா ஊரடங்குகளால் சுமார் 100கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு.

கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  ஐக்கிய நாடுகள்சபை  தெரிவித்துள்ளது.

“வரலாற்றில் இல்லாதவகையில் கல்வியில் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. 160க்கும் அதிகமான நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதன் காரணமாக 100 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஐக்கிய நாடுகள்சபை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா  வைரஸ் ஐந்து மாதங்களைக் கடந்து 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா  உள்ளிட்ட நாடுகள்  கொரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

கொரோனாதடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது.