ஒக்டோபர் 11, 2024 முதல் நவம்பர் 11, 2024 வரையிலான காலத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த பதிவுகள் பற்றி தகவல்கள் அறிவிக்கப்பட்டவுடன் உரிய சமூக ஊடக நிறுவனங்கள் அவ்வாறான 184 முறைப்பாடுகளின் இணைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கியதாக தேர்தல் ஆணைக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இருப்பினும், 87 முறைப்பாடுகள் தொடர்பான இணைப்புகள் அல்லது உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக நிறுவனங்கள் மறுத்துள்ளன.
219 முறைப்பாடுகள் தொடர்பான உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை என்று தேர்தல் ஆணைக்கழு தெரிவித்துள்ளது.
வெறுப்புப் பேச்சு, இனம் மற்றும் மதத்திற்கு எதிரான அவதூறு அறிக்கைகள், தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் தவறான அல்லது போலியான தகவல் பரிமாற்றம் தொடர்பான பதிவுகள் மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.





குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் வயோதிப ஆண்களால் நடத்தப்படுகின்ற ஆலயங்கள் பெரும்பாலும் ஆன்மீக நோக்கங்களுக்காக அல்லாமல் அவர்களுடைய வேறு தேவைகளுக்கே பயன்பட்டு வருகின்றது என்பதற்கு லாகுர்னே சிவன் கோவிலும் குடும்பி ஜெயந்திரனும் நல்ல உதாரணம். புலம்பெயர் மக்கள் ஆலயங்களில் செலவிடும் பணம் பெரும்பாலும் சட்டவிரோதமாக அல்லது அநியாயமாகவே அழிந்து போவதாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் பதின்மவயது பெண் பிள்ளைகளை சீரழித்துவரும் வெற்றிவேலு ஜெயேந்திரனுக்கு பாரிஸ் சிவன் கோயிலிருந்து வரும் யூரோக்களும் உமாசந்திரப் பிரகாஷ்ஷின் அரசியல் செல்வாக்குமே குடும்பியை சட்டத்தின் முன் தண்டனையிலிருந்து தப்ப வைக்கின்றன.



