குடாநாட்டில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் மழை இன்னும் சில தினங்கள் நீடிக்கும் சாத்தியம் அதிகம் உண்டு என்று திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. நேற்றுக்காலை 8.30 மணி வரை 90.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், காலை முதல் பிற்பகல் 5.30 மணி வரை மொத்தம் 83.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலைய வட்டாரங் கள் மேலும் தெரிவித்தன. எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் மழை வீழ்ச்சி குறையலாம் என்று எதிர் பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது. இடியுடன் கூடிய மழை பெய்வதனால் பொதுமக்கள் இடிமின்னல் தாக்கங்களில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
பேச்சு வார்த்தை நடத்த வருமாறு இந்திய அரசாங்கம் விடுத்த அழைப்பை நிராகரித்தமையால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடுகள் வலுவடைந்து வருவதாக தெரிய வருகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் விடுத்த அழைப்பை நிராகரித்தமையால் கூட்டமைப்பு பிளவை நோக்கி இட்டுச் செல்லப்படுவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
திமுக, அதிமுக அணியினர் இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதால், உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கப் போவதாக லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவை. இதனைத் தோலுரித்துக் காட்டுவதே எங்கள் கடமை. உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கிற முயற்சியில் ஈடுபடப் போகிறோம். அப்படி அமைகிற அமைப்புகளோடு சேர்ந்து குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம்.
கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, இராமநாதபுரம், சிவகங்கை, மத்திய சென்னை உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவோம்.
விஜயகாந்த் அந்தத் தொகுதியில் அவரது மைத்துனரை நிறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையாகட்டும், தேர்தல் கூட்ட ணி குறித்த பிரச்னையாகட்டும் அவரைப் போல் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியவர்கள் இல்லை. பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ளயிருப்பதால் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். அமையும் சூழலைப் பொறுத்து தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறினார்.
பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை படையினர் ஆரம்பித்துள்ளதையடுத்து பெருமளவிலான மக்கள் அங்கிருந்த வரலாம் எதிர்பார்ப்புடன் அம்மக்களை என்ற தங்க வைப்பதற்காக வவுனியா செட்டிக்குளம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக கொட்டில்கள் (டெண்டுகள்) அமைக்கப்படுகின்றன. யூ. என். எச். சீ. ஆர் சுமார் 12,000 தற்காலிக கொட்டில்களை வழங்க முன்வந்துள்ளது. இப்போது சுமார் 9000 கொட்டில்களை அமைக்கும் ஆயத்த நிலையில் உள்ளன. என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.
மேலும் இப்பிரதேச செயலகப் பிரிவிலேயே 700 ஏக்கர் பகுதியும் துப்புறவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியிலும் மக்களை தங்கவைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. கொட்டில்களில் மக்களை தங்க வைப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட மலசல கூட வசதிகளையும் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. வவுனியாவில் தங்கியுள்ள ஐ. நா. மனிதாபிமான அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் இதற்கென பெரிதும் உதவி வருவதாகவும் செயலாளர் ஹால்தீன் தெரிவித்தார்.
தற்போது வவுனியாவுக்குள் சுமார் 64,000 பேரளவில் வந்துள்ள நிலையில் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரை உள்வாங்குவதற்கு எதுவாக வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.
புதுமாத்தளன் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களுள் சுமார் 400 பேர் செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிலும், மேலும் 1200 பேர் ஒமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1000 பேர்; படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளனர். இவர்கள் இன்று அல்லது நாளை வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழர்களை காப்பாற்ற கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியி கிருஷ்ணசாமி,
பக்கத்து நாடான இலங்கையில் தமிழ் இனம் கூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது. 3 லட்சம் தமிழர்கள் 20 கி.மீ. சதுர பரப்பளவிற்குள் முடக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குடிக்க தண்ணீர், சாப்பாடு மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல் துன்பப்பட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை பட்டிக்குள் அடைப்பது போல குறிப்பிட்ட ஒரு எல்லை பகுதிக்குள் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தி, அவர்களை குண்டு வீசி கொலை செய்து வருகின்றனர்.
இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களுக்காக உலக நாடுகள் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களை காக்க இந்தியா முன்வரவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி செய்யவேண்டும். இலங்கை தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
எங்களுடன் உள்ள கட்சிகள் மற்றும் எங்களுக்கு ஒத்துழைப்பவர்களுடன் இணைந்து இலங்கை தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படும். இது குறித்து நாளை அறிவிக்கப்படும்.பாராளுமன்ற தேர்தலில், புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து 13 ந் தேதி(திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்றார்.
இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, நேற்று அதிகாலையிலிருந்து தூரச்சேவைகள் உட்பட நாடு முழுவதும் எதுவித தங்குதடையுமின்றி பஸ் சேவைகள் இடம்பெறுவதாக சபையின் பிரதான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான அத்தியட்சகர் என். கே. ஏ. டபிள்யூ. குணவர்தன தெரிவித்தார்.
நேற்று முற்பகல் வரை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு 101 பஸ் வண்டிகள் வந்து சேர்ந்ததாகவும், தூர இடங்களுக்குத் தடங்கலின்றி பஸ் சேவைகள் நடைபெறுவதாகக் கூறிய அத்தியட்சகர், “பஸ் இல்லை” என்ற நிலையை இல்லாமற் செய்யும் அளவுக்கு பஸ் சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார். இ. போ. ச. சாலை ஊழியர்களின் கோரிக்கைகளுக்குச் சாதகமான முடிவைப் பெற்றுத் தந்து சுற்று நிருபத்தை வெளியிட போக்குவரத்து அமைச்சருடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று அதிகாலை முதல் நாடு முழுவதும் இ. போ. ச. பஸ் சேவை வழமைக்குத் திரும்பியது.
புத்தாண்டு முற்பணம், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் நண்பகலில் இருந்து திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதனால், பயணிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர். சிலர் பஸ் இல்லாத காரணத்தினால் தனியார் வேன்களுக்கு ஹட்டன் நோக்கிச் செல்ல ஆள் ஒருவருக்கு 500 ரூபா முதல் 1000 ரூபா வரை செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுட்டது. அவ்வாறும் வரமுடியாதவர்கள் பலர் விடுதிகளில் தங்கினர்.
நேற்று (11) அதிகாலை முதல் இரத்தினபுரி பஸ் டிப் போவுக்கு சொந்தமான நூற்றுக்கு மேற்பட்ட பஸ் வண்டி கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிப்போ அதிகாரியொருவர் தெரிவித்தார். சன நெரிசல் மிக்க இச்சந்தர்ப்பத்தில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என பயணிகள் தெரிவித்தனர்.
புலிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவது தொடர்பில் அவர்களின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் பிரஸ்தாபித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன்னவை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே றிட்சார்ட் பௌச்சர் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
இலங்கையின் முல்லைத்தீவு வடக்கின் மிகச்சிறிய பகுதியில் சுமார் 500 புலிகள் உள்ளனர். அவர்களால் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பௌச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். அதன்போது இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம் “மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டதை பிரதி அமைச்சர் பௌச்சர் மீளவும் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார் என்று இங்குள்ள இலங்கைத் தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பினார். அவர் லிபிய ஜனாதிபதி கேர்ணல் மு அம்மர் கடாபி, பிரதமர் அல்படாதி அலி அல் முஹம்மதி உட்பட மேலும் பல தலைவர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். இந்த விஜயத்தின் போது மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
500 மில்லியன் அமெரிக்க டொலரை நிதி உதவியாக வழங்கவும் சுகாதார சேவை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப் புகளை வழங்கவும் லிபியா இணக்கம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து 173 பெண்கள், மற்றும் 242 குழந்தைகள் உட்பட 606 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வந்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது. 173 பெண்களும், 193 ஆண்களும், 112 சிறுவர்களும், 130 சிறுமிகளும் இதில் அடங்குவதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
முல்லைத்தீவு இராமநாதபுரம் பகுதியில் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தேடுதலின் போது பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். 60 எம்.எம். மோட்டார் குண்டுகள், எம்.பி.எம்.ஜி. குண்டுகள், 6 லைனர்கள், 4 கிரேன்டுகள், 55 வரை படங்கள், புலிகளின் சீருடை ஒன்று, புலிகளின் தொப்பிகள் 25 என்பவற்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களுள் எவரும் காயமடைந்திருக்கவில்லை எனவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும், அமெரிக்கர் ஒருவரை பணயமாக பிடித்து வைத்துள்ள சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான இழுபறிகள் தொடருகின்ற நிலையில், ஏடன் வளைகுடாவில் மேலும் இரு சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
16 அமெரிக்க சிப்பந்திகளுடனான அமெரிக்க இழுவைப் படகு ஒன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக மரிடைம் அமைப்பு கூறுகின்றது. பிறிதொரு சம்பவத்தில், கடற்கொள்ளையர்கள், இருபத்தாறாயிரம் தொன்கள் எடையுள்ள கடற்கலன் ஒன்றின் மீது சுட்டதாக கூறப்படுகின்றது.
அந்த கப்பலின் தலைமை மாலுமியின் அறையை நோக்கி அவர்கள் கைக்குண்டை ஏவியதாகவும், ஆனாலும், அது வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கப்பல் சிப்பந்திகள் கடற்கொள்ளையர்களை தண்ணீர் குழாய்கள் மூலம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.