18

18

வரண்டு போன அமேசன் – இறந்துபோன நூற்றுக்கணக்கான டொல்பின்கள் !

பிரேசிலில் மழைக்காடுகளின் வழியாக ஓடும் அமேசான் நதியின் கிளை நதிகள் வரண்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வரட்சி காரணமாக அமேசானின் கிளை நதிகள் வரண்டுள்ளன.

இதன் காரணமாக அந்த நதிகளின் வழியாக தொலை தூர கிராமங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கான டொல்பின்களும் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், ஏராளமான படகுகள் தரைத்தட்டி கிடக்கின்றன. இதுதொடர்பான ட்ரோன் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

 

காசா வைத்தியசாலை மீதான தாக்குதல் – கடுமையான போர்க்குற்றம் என எம்.ஏ. சுமந்திரன் சாடல் !

காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதல் கடுமையான போர்க்குற்றம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2009 இல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே போன்றே நொண்டிச்சாட்டை தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அதனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

https://x.com/MASumanthiran/status/1714476352613798120?s=20