October

October

இத்தாலியில் பேருந்து தீப்பற்றி விபத்து – குழந்தைகள் உள்ளடங்கலாக 21 பேர் பலி !

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் குழந்தைகள் உள்ளடங்கலாக 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவிகின்றனர்.

பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றியதால் பாலத்திலிருந்து விலகி புகையிரத பாதைக்கு அருகில் விழுந்து விபத்து சம்பவித்துள்ளது

பேருந்திலிருந்து எரிபொருள் கசிந்ததில் பேருந்து தீப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயினை அணைத்ததாகவும், இந்நிலையில் பயணிகளை மீட்க வேண்டியும் இருந்ததால் பெரும் சவாலுக்கு உள்ளதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு

மலேசியாtில் இலங்கையர் மூவர் கொல்லப்பட்ட விவகாரம் – சந்தேகநபர் சிறைக்காவலில் உயிரிழப்பு !

மலேசியா – சென்டுல் பகுதியில் இலங்கையர்கள் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைமையக அதிகாரி டத்தோ அலாவுதீன் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு கொலைகளை செய்வதற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று இலங்கையர்களும், பாகிஸ்தானியரும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர். நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்தது.

உயிரிழந்த இலங்கையர் தவிர மேலும் ஆறு இலங்கையர்களும், பாகிஸ்தானியர் ஒருவரும் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்” எனத் தெரிவித்தார்.

நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி முடங்கியது யாழ்ப்பாணம் நீதிமன்றவளாகம் !

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு திங்கட்கிழமை (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.

நாளையும் (04) யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை

2023 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு – கொவிட் 19 தடுப்பூசியை கண்டுபிடிக்க மூல காரணமானவர்களுக்கு !

கொவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக 2023 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை ரோயல் ஸ்வீடிஸ் அக்கடமி இன்று (அக்.2) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலமாக, நமது நோய் எதிர்ப்பு சக்தியில் எம்ஆர்என்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அடிப்படை புரிதலை மாற்றியமைத்துள்ள பரிசு பெற்றவர்கள், நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்துக்கான அச்சுறுத்தலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முன்னோடியில்லாத பங்களிப்பினை செய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் வேதியியலாளரான கடாலின் கரிகோ, எம்ஆர்என்ஏயின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டார் என்றாலும், அவர் நோயெதிர்ப்பியல் நிபுணரான ட்ரூவ் வைஸ்மேன் உடன் இணைந்து நியூக்லியோசைடின் பாதிப்பும், நோய் எதிர்ப்பு அமைப்பில் அதன் தாக்கம் குறித்தும் கடந்த 2005-ல் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். பின்னர் 2008, 2010ம் ஆண்டுகளில் வெளியான மேலும் சில ஆய்வுக்கட்டுரைகள் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளை சரிசெய்ய உதவியது. இதன் மூலம் எம்ஆர்என்ஏவை மருத்துவ ரீதியாக பயன்படுத்துவதில் இருந்த முக்கியமான தடைகள் நீங்கின.

இதன் மூலம், மனித ஆரோக்கியத்துக்கான அச்சுறுத்தலாக விளங்கிய கோவிட் 19-க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்த இணை முன்னோடியில்லாத பங்களிப்பை செய்துள்ளதாக நோபல் பரிசு குழுவின் நடுவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த இணையை கவுரவிக்கும் வகையில், ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் கமிட்டி மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு இருவரையும் தேர்வு செய்துள்ளது. பரிசு பெற உள்ள அறிவியல் கண்டுபிடிப்பு 2005ம் ஆண்டைச் சேர்ந்தது என்றாலும், கோவிட் 19க்கு எதிராக ஃபைசர்/பையோடெக் மற்றும் மடேர்னாவால் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை.

 

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணிபுரியும் ஹங்கேரியைச் சேர்ந்த கரிகோவும், அமெரிக்காவைச் சேர்ந்த வைஸ்மேனும் தங்களின் ஆராய்ச்சிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர். இதில் 2021ம் ஆண்டு பெற்ற லஸ்கர் விருது நோபல் விருத்துக்கு இணையாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் விஞ்ஞானியான ஸ்வாண்டே பாபோவின் அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமத்தின் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது. இவரது கண்டுபிடிப்பு முற்றிலும் புதிய துறையான பலியோஜெனோமிக்-ல் மனித பரிணாமம் மற்றும் இடம்பெயர்வு குறித்து ஆழமாக புரிந்து கொள்ள அறிவியல் சமூகத்துக்கு உதவியது.

இந்தாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலமாக நோபல் பரிசு அணிவகுப்பு தொடங்கியுள்ளது.

உலகின் பொருளாதார சுதந்திரம் 2023 இற்கான ஆண்டறிக்கை – இலங்கைக்கு பின்னடைவு !

கனடாவின் ஃப்ரேசர் நிறுவனத்துடன் இணைந்து அட்வகேடா நிறுவனம் வெளியிட்ட உலகின் பொருளாதார சுதந்திரம் 2023 இற்கான ஆண்டறிக்கையில் உள்ளடங்கிய 165 நாடுகளில் இலங்கை 116 வது இடத்தினைப் பிடித்துள்ளது.

 

165 நாடுகளின் கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தனிநபர்களின் பொருளாதார சுதந்திரத்தை அதாவது தங்கள் சொந்த பொருளாதார முடிவுகளை எடுக்கும் திறனை வெளியிடும் அறிக்கையே இந்த பொருளாதார சுதந்திர அறிக்கையாகும்.

 

இதில் நாட்டின் ஒழுங்குமுறை, சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம், அரசாங்கத்தின் அளவு, சட்ட அமைப்பு, சொத்து உரிமைகள் மற்றும் நல்ல பணக் கொள்கை என்பன அடங்குகின்றது.

மேலும் இந்த தரவரிசையில் இப்போது முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது, அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ஹாங்காங், 3 ஆம் இடத்தில் சுவிட்சர்லாந்து, 4 ஆம் இடத்தில் நியூசிலாந்து, 5 ஆம் இடத்தில் அமெரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முறையே 6 தொடக்கம் 10 ஆம் இடம் வரை தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.

மேலும் ஜப்பான் (20வது), ஜெர்மனி (23வது), பிரான்ஸ் (47வது) மற்றும் ரஷ்யா (104வது) ஆகிய இடங்களை முறையே பெற்றுள்ளன. வெனிசுலா மீண்டும் கடைசி இடத்தினைப் பெற்றுள்ளது.

வட கொரியா மற்றும் கியூபா போன்ற சில நாடுகளின் தரவுகள் இல்லாததால் அவற்றை தரவரிசைப்படுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் தரவரிசையில் 104 வது இடத்தில் இருந்த இலங்கை 116 ஆவது இடத்தினை அடைந்திருப்பது பொருளாதார சுதந்திரத்தில் சரிவடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையின் பொருளாதார சுதந்திரத்தின் 5 துணைக் கூறுகளில் 4 அந்தந்த தனிப்பட்ட மதிப்பெண்களில் சரிவை பதிவு செய்வதால், இலங்கையின் மதிப்பெண்ணில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அளவு, பணத்திற்கான அணுகல், சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம் மற்றும் கடன், உழைப்பு மற்றும் வணிகத்தின் கட்டுப்பாடு ஆகிய கூறுகளில் சரிவை சந்தித்துள்ளது.

சட்ட அமைப்பு மற்றும் சொத்து உரிமைகள் மதிப்பெண்ணில் முன்னேற்றத்தை காட்டிய கூறாகும்.

இந்த பின்னடைவிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளாக நிலையான பணம் மற்றும் நிதி சூழலில் சுதந்திரமாக வர்த்தகம் செய்யவும், வேலை செய்யவும், பரிவர்த்தனை செய்யவும் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கபட்டால் இலங்கை இந்த சரிவிலிருந்து மீண்டுவர முடியும் என அட்வகேடா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.