17

17

வருணை எதிர்த்த அனைவரின் டெபாசிட் காலி

varun.jpgஉ.பி.  மாநிலம் பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி போட்டியிட்ட பிலிபித் தொகுதியில் வருண் காந்தியைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர். இவர்களில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் காந்தி இத்தேர்தலில் 4,19,539 வாக்குகள் பெற்று, 2,81,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.காங்கிரஸ் கட்சிக்கு 2வது இடமும், சமாஜ்வாடிக் கட்சிக்கு 3வது இடமும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4வது இடமும் கிடைத்தது. வருண் காந்தியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு வேண்டுகோள்

wdj-senavi.jpgநீர் மின்உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதல் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலை 6.30 முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப் பகுதியில் நாட்டின் நாளாந்த மின் பாவனை 28 மில்லியன் அலகுகளாகும். இந்த அளவை 22 மில்லியனாக குறைத்துக்கொள்ள முடியுமாயின் தற்போதைய மின்உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட பிரதேசங்களில் சீரான மழை வீழ்ச்சி கிட்டும் வரை மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பாவிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக இலங்கை மின்சார சபை மிகவும் அவதானத்துடன் செயல்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

இன்று மே 17 சந்திப்பு : வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். : த ஜெயபாலன்

IDP_Campsமனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. ( வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன் )

குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.

Wanni IDPs : Their needs & Future

Meeting & Discussion

 17th of May 2009, Sunday, 4:30pm
 
Quakers Meeting House,
Bush Road,
Wanstead,
London, E11 3AU.

Futrher Information :

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்
 
மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு