12

12

‘நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு சமமான முறையில் கல்வி வழங்கப்படுவதில்லை.” – இலங்கை ஆதிவாசிகள் குற்றச்சாட்டு !

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு அதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு சமமான முறையில் கல்வி வழங்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால சந்ததி தொடர்பில் சிந்தித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீ்ரவு காண வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.