வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

ஜேர்மனியில் இனவாதத் தாக்குதல் அச்சுறுத்தலால் பாடசாலைகளுக்கு விடுமுறை !

ஜேர்மனியில் இனவாதத் தாக்குதல் அச்சுறுத்தலால் பாடசாலைகளுக்கு விடுமுறை !

ஜேர்மனியில் டியுஸ்பேர்க் நகரில் கடந்த வாரத்தில் பாடசாலை ஒன்றுக்கு அச்சுறுத்தல் கடிதம் ஒன்று ஈமெயிலில் வந்துள்ளது. அக்கடிதத்தில் வெளிநாட்டவர்களுக்கு எதிரானதும் தீவிர வலதுசாரி நாஸிக் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப் போவதகவும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாரத் தொடக்கம் திங்கட்கிழமை, 20 பாடசாலைகள் மூடப்பட்டு விடுமுறைகள் வழங்கப்பட்டன.

மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஒன்லைன் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. மீண்டும் நேற்றைய தினம் ஒரு பாடசாலைக்கு தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆறு நாட்களுக்கு பல தடவைகள் அச்சுறுத்தல் ஈமெயில் பல்வேறு பாடசாலைகளுக்கும் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்தப் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

டியுஸ்பேர்க் நகரத்தைப் பொறுத்தவரை ஜேர்மனியின் நோட் ரைன் வெஸ்பாலன் மாநிலத்தின் 5 வது பெரிய நகரம். துருக்கியர், அராபியர் என வெளிநாட்டவர்கள் செறிவாக மற்றும் கூடுதலாக வாழும் நகரம். குடியேறிகளின் ஆதிக்க கூடிய நகரம்.

அந்த வகையில் டியுஸ்பேர்க் நகரப் பாடசாலைகளில் வெளிநாட்டு பின்னணியை கொண்ட மாணவர்களே பெருமளவில் கற்கிறார்கள். இதுவொரு “ இனச்சுத்திகரிப்பு” அச்சுறுத்தலாக இடப்பெயர்வை வரலாற்றை பின்னணியாக கொண்ட மாணவர்களை அச்சமடைய வைத்துள்ளதாக அந்நகரப் பாடசாலை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். மேற்கு ஐரோப்பா உட்பட அமெரிக்க நாடுகளில் வளர்ந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்கள், குற்றங்கள் மற்றும் வன்முறைகள் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன.

 

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் நிவாரணம்

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் நிவாரணம்

வங்குரோத்தடைந்துள்ள இலங்கை நிலநடுக்கத்தால் பாரிய அழிவைச் சந்தித்துள்ள மியான்மார் நாட்டுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் இலங்கைக்கான மியன்மார் தூதுவரிடம் கையளித்தார். இலங்கை எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநயக்க மியான்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தமைக்கு மியன்மார் தூதுவர் நன்றி தெரிவித்தார். அத்துடன் நெருக்கடியான நேரத்தில் இலங்கை தன்னுடைய சுகாதார மற்றும் நிவாரண பணிக்குழுவை அனுப்பி வைத்தமைக்கும் தூதுவர் நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க சீன வர்த்தக மோதல் – மசகு எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க சீன வர்த்தக மோதல் – மசகு எண்ணெய் விலை சரிவு!

சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல்கள் உலக சந்தைகளை சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றதால் நேற்று வெள்ளிக்கிழமை எண்ணெய் விலைகள் சடுதியாக 8வீத வீழ்ச்சியடைந்துள்ளன. கோவிட் பெருந்தொற்று உச்சகட்டத்திலிருந்த காலங்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின் பதிவாகிய சடுதியான வீழ்ச்சி இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரிவிதிப்புக்கு பதிலடியாக சீனா ஏப்ரல் 10 முதல் அனைத்து அமெரிக்கப் பொருட்களுக்கும் 34% கூடுதல் வரி விதிக்கும என அறிவித்துள்ளது.

சாமி என்ற பெயரில் உலாவந்த மோசடி காமுக ஆசாமி புளிக்களுக்கு 7 ஆண்டுகள் சிறை ! : த ஜெயபாலன்

தன்னைக் கடவுள் என்று சித்தரித்து வயது வேறுபாடின்றி பெண்களைப் பாலியல் பொருளாக நுகர்ந்து தூக்கியெறியும் புளிக்கள் முரளி கிருஷ்ணணுக்கு இன்று ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக புளிக்கள் முரளிகிருஷ்ணணின் காம லீலைகளை அம்பலப்படுத்தி லண்டன் மக்களை விழிப்படையச் செய்வதில் தேசம்நெற் முன்நின்றது. இன்றைய தீர்ப்பு கடவுளையும் மதத்தையும் வைத்துக் கொண்டு கல்வியை வைத்துக்கொண்டு பதவிநிலைகளை வைத்துக் கொண்டு பாலியல் லஞ்சம் கோருகின்றவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மிகச்சிறந்த தீர்ப்பாக அமைந்துள்ளதாக தேசம்நெற் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மிகத்துணிச்சலுடன் போராடி இந்தத் தீர்ப்பினை பெறுவதற்கு முன் வந்த இரு பெண்களுக்கும் தமிழ் சமூகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது என்றும் தேசம்நெற் தெரிவிக்கின்றது.

ஆலயங்களுக்குள்ளும் சாமி வேடத்திலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் வேடத்திலும் இன்னும் பல அயோக்கியர்கள் ஒழிந்துள்ளனர் அவர்களும் விரைவில் களையெடுக்கப்பட வேண்டும்.

மார்ச் 24 முதல் ஆரம்பமான புளிக்கள் முரளிகிருஷ்ணணுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று ஏப்ரல் 3 மாலை முடிவுக்கு வந்தது. இன்று மாலை மூன்று மணிக்குப் பின் வூட்கிரீன் நீதிமன்னத்தில் நீதபதி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். நீதி மன்றத்துக்கு புன்முறுவலோடு வந்து சென்ற புளிக்கள் முரளிகிருஷ்ணன் தன்னுடைய ஈனச் செயல்களுக்கு எவ்விதமான மனவருத்தத்தையும் காட்டிக்கொள்ளவில்லை.

புளிக்கள் முரளிகிருஷ்ணன் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்த இரு குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு அவருடைய குற்றச்செயல்களுக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படக் கூடாதென்பதை நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிராக மற்றுமொரு பெண் வைத்து மூன்று பாலியல் தாக்குதல் வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. குறித்த பெண் இந்த மோசடி ஆசாமிக்கு £128,000 பவுண்களையும் வழங்கியிருந்தார். அதாவது அந்த ஆசாமியின் செயரிற்றிக்கு நன்கொடையாகக் கொடுத்திருந்தார். அந்த மோசடிக் குற்றச்சாட்டும் முன்னரே கைவிடப்பட்டது.

லண்டன் பானற் பகுதியில் கோயில் அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்ற இந்தக் கள்ளச்சாமியை வணங்குவதற்கு லண்டனின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் பக்தைகள் சென்று வருகின்றனர். கும்பிடுகின்றனர். இன்றைய தீர்ப்பைக் கேட்டு இந்தக் கூட்டம் நீதிமன்றில் கண்ணீரும் விட்டது. இந்தக் கூட்டங்களையும்இ காமுகனாக அறியப்பட்ட பிரேமானந்தாவைக் கும்பிட்ட முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் மற்றுமொரு காமுகனான சீமானையும் களையெடுக்க எங்களுக்கு ஒரு ஈவேராப் பெரியார் போதாது என்றும் அவர் இன்னும் நூறு பெரியார் உருவாகி எம் தமிழ் சமூகத்தை காக்கவேண்டும்.

முன்னைய பதிவுகள்:

பணம் – பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ! பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்? சமூக வலைத்தளங்களில் முறைப்பாடு செய்யப்பட்டு நீக்கப்பட்ட செய்தியின் எழுத்துரு!

லண்டனில் போலிச்சாமியார் கைது !

போலிச் சாமியார் ஓம் சரவணபவாவுக்கு முண்டுகொடுக்கவில்லை! – தனிமனிதர்களின் நம்பிக்கைகளுக்கு நிறுவனங்கள் பொறுப்பல்ல

லைக்கா சாமியார் ஐந்து மில்லியன் பவுண்கள் பிணையில் விடுதலை! “நானோ லைக்காவோ சாமியாரை பிணை எடுக்கவில்லை” லைக்கா துணைத் தலைவர் பிரேம்! : காணொலி

லைக்கா செக்ஸ் சாமியார் எனக் குற்றம்சாட்டப்பட்ட புலிக்கள் முரளிகிருஷ்ணனின் வழக்கு ! 

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு!!!

லண்டன் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த செக்ஸ் சாமியாரின் வழக்கின் தீர்ப்பு !

சாமி என்ற பெயரில் உலாவந்த மோசடி காமுக ஆசாமி புளிக்களுக்கு 7 ஆண்டுகள் சிறை !

சாமி என்ற பெயரில் உலாவந்த மோசடி காமுக ஆசாமி புளிக்களுக்கு 7 ஆண்டுகள் சிறை !

தன்னைக் கடவுள் என்று சித்தரித்து வயது வேறுபாடின்றி பெண்களைப் பாலியல் பொருளாக நுகர்ந்து தூக்கியெறியும் புளிக்கள் முரளி கிருஷ்ணணுக்கு இன்று ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக புளிக்கள் முரளிகிருஷ்ணணின் காம லீலைகளை அம்பலப்படுத்தி லண்டன் மக்களை விழிப்படையச் செய்வதில் தேசம்நெற் முன்நின்றது. இன்றைய தீர்ப்பு கடவுளையும் மதத்தையும் வைத்துக் கொண்டு கல்வியை வைத்துக்கொண்டு பதவிநிலைகளை வைத்துக் கொண்டு பாலியல் லஞ்சம் கோருகின்றவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மிகச்சிறந்த தீர்ப்பாக அமைந்துள்ளதாக தேசம்நெற் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மிகத்துணிச்சலுடன் போராடி இந்தத் தீர்ப்பினை பெறுவதற்கு முன் வந்த இரு பெண்களுக்கும் தமிழ் சமூகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது என்றும் தேசம்நெற் தெரிவிக்கின்றது.

ஆலயங்களுக்குள்ளும் சாமி வேடத்திலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் வேடத்திலும் இன்னும் பல அயோக்கியர்கள் ஒழிந்துள்ளனர் அவர்களும் விரைவில் களையெடுக்கப்பட வேண்டும்.

மார்ச் 24 முதல் ஆரம்பமான புளிக்கள் முரளிகிருஷ்ணணுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று ஏப்ரல் 3 மாலை முடிவுக்கு வந்தது. இன்று மாலை மூன்று மணிக்குப் பின் வூட்கிரீன் நீதிமன்னத்தில் நீதபதி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். நீதி மன்றத்துக்கு புன்முறுவலோடு வந்து சென்ற புளிக்கள் முரளிகிருஷ்ணன் தன்னுடைய ஈனச் செயல்களுக்கு எவ்விதமான மனவருத்தத்தையும் காட்டிக்கொள்ளவில்லை.

புளிக்கள் முரளிகிருஷ்ணன் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்த இரு குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு அவருடைய குற்றச்செயல்களுக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படக் கூடாதென்பதை நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிராக மற்றுமொரு பெண் வைத்து மூன்று பாலியல் தாக்குதல் வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. குறித்த பெண் இந்த மோசடி ஆசாமிக்கு £128,000 பவுண்களையும் வழங்கியிருந்தார். அதாவது அந்த ஆசாமியின் செயரிற்றிக்கு நன்கொடையாகக் கொடுத்திருந்தார். அந்த மோசடிக் குற்றச்சாட்டும் முன்னரே கைவிடப்பட்டது.

லண்டன் பானற் பகுதியில் கோயில் அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்ற இந்தக் கள்ளச்சாமியை வணங்குவதற்கு லண்டனின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் பக்தைகள் சென்று வருகின்றனர். கும்பிடுகின்றனர். இன்றைய தீர்ப்பைக் கேட்டு இந்தக் கூட்டம் நீதிமன்றில் கண்ணீரும் விட்டது. இந்தக் கூட்டங்களையும்இ காமுகனாக அறியப்பட்ட பிரேமானந்தாவைக் கும்பிட்ட முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் மற்றுமொரு காமுகனான சீமானையும் களையெடுக்க எங்களுக்கு ஒரு ஈவேராப் பெரியார் போதாது என்றும் அவர் இன்னும் நூறு பெரியார் உருவாகி எம் தமிழ் சமூகத்தை காக்கவேண்டும்.

லண்டன் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த செக்ஸ் சாமியாரின் வழக்கின் தீர்ப்பு !

லண்டன் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த செக்ஸ் சாமியாரின் வழக்கின் தீர்ப்பு !

தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட செக்ஸ் சாமியார் எனக் குற்றம்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச தரப்பு சட்டத்தரணி ஏப்ரல் 1 செவ்வாய் கிழமை தன்னுடைய இறுதி வாதத்தை முன்வைத்து பாதிக்கப்பட்;ட பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்திடம் நியாயத்தைக் கோரினார்.

ஏப்ரல் 2இல் பாலியல் வன்புணர்வு மற்றும் நான்கு பாலியல் தாக்குதல்கள் குற்றம்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனின் சட்டத்தரணி தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து தங்கள் இறுதிவாதத்தை முன்வைத்தனர்.

புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நிதிமோசடிக் குற்றச்சாட்டை அரசதரப்பு முன்னரே கைவிட்டிருந்தது. தற்போது பாலியல் வன்புணர்வு மற்றும் நான்கு பாலியல் தாக்குதல்கள் பற்றிய விடயங்களிலேயே தீர்பு அளிக்கப்பட உள்ளது.

200,000க்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற லண்டனில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. ஆலயங்களோடு தொடர்புடையவர்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சில ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியில் லண்டன் தமிழர்கள் இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

யூலியன் அசான்ஜ் – மக்ஸின் குஸ்ஸிநோவ்: ஒருவருக்கு கதாநாயகன் மற்றவருக்கு துரோகி – தொடரும் சர்வதேச படுகொலைகள்!

இவ்வாரம் சர்வதேச அரசியல் சூழலில் மிக முக்கியமான வாரம். சர்வதேச அரசியலில் யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதகங்களும் அமையும். பல் துருவ அரசியல் வலுப்பெற்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இராணுவ அரசியல் ஆளுமையின் பலம் முன்னைய நிலையிலிருந்து சற்று பலவீனப்பட்டுப் போயுள்ளதன் பின்னணியில் இவற்றைக் காணலாம்.

மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு 53 நாடுகளும் மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடுத்துள்ளன. பெப்ரவரி 19இல் ஆரம்பமான இவ்வழக்கில் 76 ஆண்டுகள் பாலஸ்தீனிய மண் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் சட்டத்தன்மை பற்றியும் சர்வதேச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு, இஸ்ரேவேலின் ஊழல் குற்றவாளியும் இனப்படுகொலை பிரதமருமான பென்ஜமின் நெதன்யாகு கட்டுப்படப்போவதில்லை.

ஆனாலும் இந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் அமெரிக்க, பிரித்தானிய, மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் துணை போனால் அவர்கள் போட்டிருக்கும் ஜனநாயகப் போர்வை முற்றாகப் பொசுங்கிவிடும். சர்வதேசத்தில் அவர்களும்; கொலையாளிகளாகவும் காட்டான்களாகவுமே பார்க்கப்படும் நிலையுள்ளது. அதனால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் தற்போது இஸ்ரேலை சற்று கண்டிக்க ஆரம்பித்துள்ளன. யுத்த நிறுத்தம் என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்த நிலைமை மாறி யுத்த நிறுத்தம் வேண்டும் என்று கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் ஐநாவில் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்ட உடனடி யுத்த நிறுத்தத் தீர்மானத்தை மீண்டுமொரு தடவை இன்று பெப்ரவரி 20 அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது. பிரித்தானியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்ட போதும் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகின்ற போதும் மனித உரிமைகள் பற்றி மூச்சுக்காட்டாமல் இருந்த அமெரிக்க நேட்டோ அணி ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பெப்ரவரி 17இல் சிறையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அனைத்தும் ரஸ்யாவை ‘பறையா ஸ்ரேட் – paraiah state’ என்று கூப்பாடு போட்டன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழக்குப் பற்றி மௌனமாக இருக்கின்றன. ஆனால் பிரேஸில் ஜனாதிபதி லூல டி சில்வா காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எதியோப்பியாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே பிரேஸில் ஜனாதிபதி லூல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்த அநீதியை இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கின்றது என்றும் அன்று ஹிட்லர் செய்தது ஹொலக்கோஸ்ட். இன்று இஸ்ரேல் செய்வதும் ஹொலக்கோஸட் என்றும் ஒப்பிட்டு பெப்ரவரி 19இல் கருத்து வெளியிட்டார். ஒரு கண்ணியமிக்க அரசுத் தலைவர் இஸ்ரேலை இவ்வளவு பச்சையாகச் சாடியது இதுவே முதற்தடவை. இதே கருத்துப்பட துருக்கியின் ஆட்சித் தலைவர் ஏடவானும் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரேஸில் – இஸ்ரேல் ராஜதந்திர உறவுகள் அடிமட்டத்துக்குச் சென்றுள்ளது.

இந்த அமளிதுமளிகள் அரங்கேறுவதற்கு சில தினங்களுக்கு முன் சரியான திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, ரஷ்யரான மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பவர் ஸ்பெயினில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர் மீது வாகனத்தையும் ஏற்றியுள்ளனர். ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டரை ஓட்டிச்சென்ற ரஷ்யர் மக்ஸின் குஸ்ஸிநோவ் உக்ரைனில் ஓகஸ்ட் 9, 2023இல் தரையிறங்கி உக்ரைனிடம் இருந்து 500,000 டொலரை சன்மானமாகப் பெற்றார். இதனை மிகப்பெரிய தேசத்துரோகம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்ததுடன் அதற்கான தண்டணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். கொல்லப்பட்டவர் விளாடிமிர் புட்டினால் சுட்டிக்காட்டப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டரைக் கடத்திச் சென்று கூட இருந்த இரு ரஷ்ய வீரர்களைப் படுகொலை செய்த மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு துரோகி உக்ரைனுக்கும் நேட்டோ அணிக்கும் கதாநாயகனாக இருந்து இப்போது தியாகி ஆகிவிட்டார் மக்ஸி;ன் குஸ்ஸிநோவ்.

அலெக்ஸி நவால்னி, மக்ஸின் குஸ்ஸிநோவ் ஆகியோரின் மரணங்கள் பற்றி அவர்களது மனித உரிமைகள் பற்றி நேட்டோ அணி புலம்பிக்கொண்டிருக்கையில் உலகின் மிகப் பிரபல்யமான ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் யை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது பற்றிய வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஊடகவியலாளர் யூலியன் அசான்ஜ்யை விடுவிக்குமாறு கோரிய போதும் அதை எதனையும் பொருட்படுத்தாமல் யூலியன் அசான்ஜை சிறையில் வைத்துள்ளது, தன்னை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் காவலாளியாகக் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா.

அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹசைனிடம் பேரழிவு ஆயதங்கள் உள்ளது என அமெரிக்காவும் – பிரித்தானியாவும் கூட்டாகச் சதி செய்து ஈராக்கைத் தாக்கி அந்நாட்டை அதன் எண்ணை வளத்தை அபகரிக்க சின்னனாபின்னமாக்கினர். ஈராக்கில் அமெரிக்க இராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைச் சித்திரவதை செய்தது. இவற்றை அம்பலப்படுத்தியதற்காக தலைசிறந்த ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அலெக்ஸி நவால்னி போல் மரணத்தைத் தழுவுவார் என யூலியன் அசான்ஜ் உடைய மனைவி அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு யூலியன் அசான்ஜ்யை படுகொலை செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டை யூலியன் அசான்ஜ்க்கு நீண்டகாலம் தனது தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்த ஈக்குவடோரும் உறுதிப்படுத்தியுள்ளது. யூலியன் அசான்ஜ் ஒரு நாள் அலெக்ஸி நிவால்னி போன்றோ அல்லது மக்ஸின் குஸ்ஸிநோவ் போன்றே ஆகலாம் என்ற நிலையேற்பட்டுள்ளது.

மேற்குலகு விதந்துரைக்கும் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பதெல்லாம் அவரவர் நலன்சார்ந்ததே. “ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி” என்றும் கொள்ளலாம் இல்லையேல் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்றும் கொள்ளலாம்”.

அன்று இனவாத பிரிட்டோரியா அரசோடு இணைந்து நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பிரித்தானியா இறுதியில் அதே நெல்சன் மண்டேலாவுக்கு தன்னுடைய நாட்டிலேயே சிலை எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலைக்கு செய்யப்படுவதற்கு ஒத்துழைக்கும் பிரித்தானியா எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரித்தானியா உலகில் மிக மோசமான குரூரமான காலனித்துவத்தை ஈவிரக்கமின்றி விஸ்தரித்த நாடு. ஆனால் அரசியல் சூழல்கள் மாற்றமடையும்போது அதற்கேற்ப மாறி தன்னுடைய குறைந்தபட்ச நன்மதிப்பை முற்றிலும் இழக்காமல் காப்பாற்றிக் கொண்டுள்ளது.

தற்போது நான்கு மாதம் கழிந்தபின் முன்வைக்கின்ற யுத்தநிறுத்தக் கோரிக்கையும் தன்னுடைய ஜனநாயகப் போர்வை பொசுங்கி தான் அம்பலப்பட்டுப் போவேன் என்ற அச்சமே. அது போல் யுலியன் அசான்ஜ் நாடுகடத்தல் வழக்கில், அவர் நாடுகடத்தப்பட்டால் உலகில் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்துக்கு விழும் மிகப்பெரும் அடியாக அது அமையும். அது வரலாற்றில் பிரித்தானியாவின் நீதித்துறைக்கு ஏற்படும் மிகப்பெரும் கறையாக அமையும். ஏனைய நாடுகளும் பிரித்தானிய சட்டத்துக்கு இணங்க ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும்.

‘குண்டு வீசுவதை நிறுத்துங்கள்!’, ‘குழந்தைகளை கொல்வதை நிறுத்துங்கள்!!’ சனிக்கிழமை காலை லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


நாளை பிரித்தானிய நாட்காட்டியில் மிக முக்கியமான நாள். ‘Rememberance Day’ – ‘ஞாபகார்த்த தினம்’ உலக மாகா யுத்தம் நவம்பர் 11ம் திகதி 11 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டநாள். அதையொட்டி அந்த யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கின்ற தினம். தற்போது முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் மட்டுமல்ல அதன் பின்னான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அதில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களையும் நினைவு கூருகின்ற மிக முக்கிய சடங்காக 11 / 11 மாறியுள்ளது.
இவ்வருடம் இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டவழித்து விடப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இன அழிப்பு, குழந்தைகள் அழிப்பு யுத்தத்திற்கு அமெரிக்க, பிரித்தானிய அரசுகளும் இராணுவ பொருளாதார பங்களிப்புகளை வழங்கி இந்த இன அழிப்பு குழந்தைகள் அழிப்பு யுத்தத்தின் பங்காளிகளாகி உள்ளனர்.இவற்றைக் கண்டித்து: குண்டு வீசுவதை நிறுத்துங்கள்! குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்!! என்று கோரி பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காக் குரல்கொடுக்கின்ற மாபெரும் மக்கள் போராட்டம் ஹைப்பாக்கில் இருந்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.

ஒடுக்குமுறையை எதிர்க்கின்ற மனிதத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் இப்போராட்டத்தில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியம். பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை, பாலஸ்தீனிய குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை கண்டிக்கத் தவறினால், அதனைத் தடுக்கத் தவறினால், அதிகாரமும் இராணுவ பலமும் உடையவர்கள் தாம் விரும்பியதை எந்த விலையைக் கொடுத்தும் அடைய முடியும் என்பது உறுதிப்படுத்தப்படுவதுடன் நாளைய எதிர்காலம் மிக மோசமானதாக்கப்பட வாய்ப்பாக அமையும்.

இனவெறிக் கருத்துக்களை விதைத்து ஏழை, நலிந்த மக்களை தரக்குறைவாக மதிப்பிடும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் Rmemberance Dayயைக் காரணம் காட்டி இந்த போராட்டத்தை நிறுத்தவும் பெரு முயற்சியில் இறங்கியிருந்தார். அதனையும் மீறி மெற்றோபொலிட்டன் பொலிஸார் ஊர்வலத்தை தடை செய்ய மறுத்திருந்தனர்.

இந்த போராட்ட நாளில் ‘தமிழ் சொலிடாரிட்டி’ அமைப்பு பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுத்து இப்போராட்டத்தில் தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததுள்ளனர்.

பிரித்தானிய அமைச்சரவையில் வரலாறு காணாத ராஜினாமாக்கள்! ஜெயவர்த்தனபுரவில் கோட்டா Go Home – லண்டனில் பொறிஸ் Bye Bye …!!!

இன்று இரவு வரை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனை வெளியேறும்படி வற்புறுத்தி 43 அமைச்சர்கள், இளைய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமாச் செய்துள்ளனர். 24 மணி நேரத்தில் இவ்வளவு தொகையான அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்தது நவீன பிரித்தானிய அரசியல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். நேற்று மாலை ஆறு மணியளவில் சுகாதார அமைச்சுச் செயலாளர் சஜித் ஜாவட் ராஜிநாமாச் செய்து ஆரம்பித்து வைத்த இந்த அரசியல் நாடகத்தில் அடுத்த பத்து நிமிடங்களில் நிதியமைச்சர் ரிஷி சுனாக் ராஜிநாமாச் செய்தார். இன்று பிரித்தானியாவில் இயங்கும் அரசு இல்லாத நிலையேற்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக இவ்வாறான அரசியல் நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் பிரதமர் ராஜிநாமாச் செய்வதே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது எதற்கும் அசைந்து கொடுக்காமல் தடித்த தோலுடன் எவ்வித சுரணையும் இன்றி தான் தொடர்ந்தும் பதவியில் இருப்பேன் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருக்கின்றார். பிரதமர் பொறிஸ்க்கு முன்னர் அப்பதவியில் இருந்த திரேசா மே, டேவிட் கெமரூன், மார்பிரட் தட்சர் கூட நெருக்கடிகள் ஏற்பட்ட போது கௌரவமாக தங்கள் பதவியை ராஜிநாமாச் செய்தனர். ஆனால் பிரதமர் பொறிஸ் பதவி விலகுவதற்கான எவ்வித சமிஞ்சையையும் வெளியிடவில்லை. மாறாக தன்னிடம் மக்களாணை இருக்கின்றது என்றும் அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பேன் என்றும் தெரிவித்து வருகின்றார்.

ஆனால் பிரித்தானிய பிரதமருக்கு மிகநெருக்கமானவரான உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் இன்று பிரதமர் பொறிஸை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. பிரதமர் பொறிஸ்க்கு நெருக்கமான நதீம் சகாவி, கிராம் சாப் போன்ற அமைச்சர்களும் அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் கொன்சவேடிவ் அமைச்சரவைக் கப்பலில் இருந்து குதித்துத் தப்புவதிலேயே அமைச்சர்கள் தீவிரமாக உள்ளனர்.

கடந்தவாரம் கொன்சவேடிவ் கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 38 வாக்குகளால் தோல்வி கண்டது. ஆனால் இன்னுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் 38 பேர் கூட பிரதமர் பொறிஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வந்தபோது ‘கோட்டா கோ ஹோம்’ என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோசம் எழுப்பினர். அதேபோல் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் பொறிஸ் கேள்வி நேரம் முடிந்து செல்லும் போது ‘bye bye … பொறிஸ்’ என்று இனிமேல் பாராளுமன்றம் வரவேண்டாம் என்று வழியனுப்பி வைத்தனர்.

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் ஏற்படவுள்ள பிரித்தானிய பிரதமர் பதவி வெற்றிடத்திற்கு பத்து வரையான கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் அணி வகுத்துள்ளனர். முதலில் தன் அமைச்சுப் பதவியை ராஜநாமாச் செய்த சஜித் ஜாவட் உட்பட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் மற்றும் பலர் பொறிஸ்க்கு எதிரான அணியில் இருந்து போட்டியிட உள்ளனர். கல்வி அமைச்சராக இருந்து தற்போது கடந்த 24 மணிநேரம் நிதி அமைச்சராக இருக்கும் நதீம் சகாவி மற்றும் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் உட்பட இன்னும் சிலர் பொறிஸின் வெற்றிடத்தை நிரப்ப அவர் பக்கம் இருந்து போட்டியிடுவார்கள் எனத் தெரியவருகின்றது.

பிரித்தானியாவில் அடுத்த தேர்தல் 2024 இலேயே நடைபெற வேண்டும். ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீது கட்சியின் அழுத்தம் மேலும் மேலும் இறுக்கமடைந்தால் பொறிஸ் ஜோன்சன் பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு விடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் பொறிஸ் ஜோன்சனுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் அத்தேர்தலில் வெற்றி பெற்றால் ‘போனால் மயிர். வந்தால் மலை’ என்பது தான் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கணிப்பாக இருக்கும். இன்று தூக்கத்தில் அவருடைய சிந்தனை “தோல்வியை ஏற்றுக்கொண்டு எதுவுமே இல்லாமல் வெளியேறுவதா? அல்லது அடுத்த தேர்தலை அறிவித்து மீண்டும் மக்களிடம் செல்வதா?” என்பதாகவே இருக்கும்.

இவ்வாறான ஒரு பொதுத் தேர்தல் நடந்தால் அதில் பொறிஸ் ஜோன்சன் வெல்வார் என்பதும் கேள்விக்குறி. ஏனெனில் ஏற்கனவே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பற்றி கட்டப்பட்ட விம்பம் சுக்குநூறாகி விட்டது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதை – பிரிக்ஸிற்றை வைத்து தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற பொறிஸ் ஜோன்சனால் ஐந்தாண்டு பதவிக்காலத்தைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.

இந்நிலைமை இலங்கையின் அரசியலுடன் ஒப்புநொக்கக் கூடிய வகையில் உள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தை வென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவால் தற்போது அரசைக் கொண்டு நடத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒரு விடயத்தை சாதித்துவிட்டோம் என்பதற்காக அதுவே காலம் பூராவும் வாக்குகளைக் குவிக்கும் என எண்ணுவது மடமை. ஆப்பிரஹாம் மாஸ்லோவின் படிநிலைத் தேவை விதிக்கமைய ஒரு தேவை நிறைவேற்றப்பட்டால் மக்கள் அத்துடன் திருப்தியடைந்து அதே நிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களது தேவை படிநிலையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும். புதிய தேவையை ஆட்சியாளர்கள் பூர்த்திசெய்யாது விட்டால் மக்களின் எதிர்ப்புக்கு ஆட்சித்தலைமை உள்ளாகும். பிரித்தானியாவிலும் இலங்கையிலும் நடப்பது அதுவே.

அதுமட்டுமல்லாமல் நாடு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. அண்மைய வரலாறு காணாத விலைவீக்கம், அதனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கீழ்நிலையில் இருந்த வட்டிவீதம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. செல்வந்த நாடுகளின் கூட்டில் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பிதத்துக்கு வந்துவிட்டது. அதனால் பிரித்தானியா பொருளாதார நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது.

உக்ரைன் யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூடுதல் கரிசனை காட்ட அல்லது யுத்தத்தைத் தூண்டிவிட அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மறைத்து மக்களைத் திசை திருப்பும் எண்ணமும் முக்கிய காரணம். பிரித்தானிய பிரதமரின் லொக்டவுன் குடி கும்மாளம், அடுக்கடுக்காக அவர் அவிழ்த்துவிட்ட பொய்கள், உள்ளடக்கம் இல்லாமல் மிகைப்படுத்திப் பேசுவது, இறுதியாக பாலியல் குற்றங்கள், துஸ்பிரயோகங்கள் செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் அவை பற்றித் தெரிந்திருந்தும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அமைய பதவி உயர்வுகள் வழங்கியது, பின் அவற்றை மறைக்க பொய்புரட்டுக்களை அவிழ்த்துவிட்டது என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் உள்நாட்டில் தங்கள் இருப்பைத் தக்க வைக்க உக்ரெய்னில் உக்கிரமான யுத்தத்தை நடத்தி வந்த போதிலும்; உள்நாட்டில் அவர்களுக்குள்ள நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இத்தலைவர்களின் கயமைக்கு உக்ரெய்ன் மற்றும் பிரித்தானிய அமெரிக்க மக்கள் விலையைச் செலுத்துகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் கௌரவமாகப் பதவி விலகுவாரா? இல்லையேல் அவர் பலாத்காரமாக கட்சியினால் வெளியேற்றப்படுவாரா? இல்லையேல் அவர் பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என்பது இன்றும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் தெரியவரும். பொருளாதாரம் அரசியல் கற்போருக்கு அதனை அவதானித்து வருவோருக்கு இதுவொரு உலக ஆய்வுகூடம்.

முன்னைய செய்தி : https://www.thesamnet.co.uk//?p=86949

பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா! ஜனாதிபதி கோட்டாவுக்கு முன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நிரந்தரமாகவே வீட்டுக்குப் போக வேண்டி வரலாம்!!

சில மணிநேரங்களுக்கு முன்பாக குறிப்பாக பிரித்தானிய July 05, நேரம் மாலை ஆறுமணி இரு நிமிடங்கள் அளவில் பிரித்தானிய சுகாதாரத்துறைச் செயலாளர் சஜித் ஜாவட் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜிநாமாச் செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பத்து நிமிடங்களில் பிரித்தானிய சான்சிலர் ஒப் எஸ்செக்கர் என்றழைக்கப்படும் நிதியமைச்சர் ரிஷி சுனாக் பதவி விலகினார். பிரித்தானியாவின் மிக முக்கியத்துவமான இரு அமைச்சர்கள் பத்து நிமிட இடைவெளியில் பதவி விலகியுள்ளனர்.

“அரசாங்கம் சரியாகவும் தகமையுடனும் கனதியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியுடையவர்கள்” என்றும் இந்த அடிப்படைகளுக்காக போராடுவது அவசியம் என்பதால் தான் பதவி விலகுவதாக ரிஷி சுனாக் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“பணிவு, பற்றிக் கொள்ளல், புதிய பாதை என்பனவே கடந்த மாதம் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படை. ஆனால் கவலைக்குரிய விடயம் அது உங்கள் தலைமையில் சாத்தியமில்லை. அதனால் அமைச்சுப் பொறுப்பை ராஜிநாமாச் செய்கின்றேன்” என்று சுகாதார அமைச்சர் சஜித் ஜாவட் தெரிவித்து இருந்தார்.

பிரித்தானிய பிரதமரின் நேர்மையற்ற, ஓழுக்கமற்ற போக்குகள் நாட்டை முடக்கத்தில் போட்டுவிட்டு அரசு குடித்து கும்மதாளம் போட்டது போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக பெரும் நெருக்கடியை பிரித்தானிய அரசியலில் ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறான நெருக்கடிகளின் போதெல்லாம் உண்மைக்குப் புறம்பாக எல்லாவற்றையும் மூடி மறைத்து பொய்யை உண்மையாகவே சொல்லும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், உண்மைகள் அம்பலத்துக்கு வந்ததும் அதனை வெறும் கண்துடைப்புக்காக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோருவார். இது ஒன்றல்ல இரண்டல்ல பல தடவைகள் நடந்தேறி பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பத்தகுதியற்ற ஒருவராக ஆனார்.

இதைவிட பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சவேடிவ் கட்சிக்குள் பாலியல் வல்லுறவு துன்புறுத்தல் சம்பவங்கள் மிகவும் சாதாரணமாக இடம்பெற்று வந்தது. இவ்வாறான கயவர்களுக்கு எதிராக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் கிறிஸ் பின்சர் கொன்சவேடிவ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு பொறுப்பான உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் கிரிஸ் பின்சர் பாலியல் தொந்தரவு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருபவர் என்ற குற்றச்சாட்டு ஏழுந்திருந்தும் பிரதமர் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கடுமையான அழுத்தங்கள் வரவே விசாரணைகள் முடியும் வரை கிரிஸ் பின்சர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலத்தி வைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது அமைச்சர்கள் பதவி விலகுகின்ற அளவுக்கு போனதற்குக் காரணம், பிரித்தானிய பிரதமர் தெரிவித்த இன்னுமொரு பொய். அதாவது கிரிஸ் பின்சரை இந்த முக்கிய பதவியில் அமர்த்துகின்ற போது அவர் ஒரு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர் என்ற விடயம் தனக்கு தெரியாது என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரே பிரதமருக்கு தனக்கு ஏற்பட்ட பாதிப்பை எடுத்துக் கூறியிருக்கின்றார். தற்போது எல்லாம் அம்பலமானதும் பிரதமர் பொறிஸ் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரி இருக்கின்றார்.

ஏற்கனவே குடியும் கும்மாளமும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி இருக்கையில், கிறிஸ் பின்சர் விவகாரமும் அதனைத் தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்ததும் பிரித்தானிய அரசியலில் பெரும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. கொன்சவேடிவ் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெற்றால் சஜித் ஜாவட் உம் ரிஷி சுனாக் கும் களமிறங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் தங்களை அடுத்த தலைமைத்துவப் போட்டிக்கு தயார்படுத்தவே பதவி விலகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.