லண்டன் Barnet பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி தமிழ் மக்களை ஏமாற்றி வந்து கேரளாவை சேர்ந்த போலிசாமியாரான முரளிகிருஸ்ணன் என்கிற சரவணசாமி, இலங்கை தமிழர்கள் மூவர் பொலிசார்க்கு வழங்கிய முறைப்பாட்டினை தொடர்ந்து Colindale பொலிஸ்சாரல்
மதியம் மூன்று மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு அதிக நிதிகளை வழங்கியதாக சந்தேகிக்கபடும் லைக்கா தொலைபேசி நிறுவன உரிமையாளர் மற்றும் உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் உட்பட நிதிவழங்கிய பல தமிழ் வர்த்தகர்கள் விசாரணைக்கு உட்படுத்த படலாம் என தெரியவருகிறது.
இந்தச் சாமியாரை மையப்படுத்திய தீவிர பாலியல் முறைகேட்டுக் காணொளிக் காட்சிகள் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தன.
அந்தக் காணொளிகளை அவரது தரப்பு மறுத்திருந்தது.
இந்தநிலையில் இலங்கை தமிழர்கள் மூவர் காவல்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து கொலின்ல் பகுதி காவல்துறை நேற்று இவரை கைதுசெய்து கடந்த 24 மணிநேரமாக விசாரணைக்கு உட்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இவரது கைதை அடுத்து அவரது ஆச்சிரம பக்தர்களிடம் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது இவருக்கு அதிக நிதியுதவியை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாமென்பதால் இவரை பிணையில் எடுப்பதற்கு அவருக்கு நெருக்கமான சிலர் தீவிர முயற்சியெடுத்து வருவதாக தெரியவருகிறது.
அதேவேளை, கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அந்தச் சாமியரது காணொளிகள் என்று கூறப்பட்டு, சில ஆபாச காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகிவந்தன.
தென்னிந்திய தொலைக்காட்சிகள் சிலவும் அந்தச் சாமியார் பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்களை தமது செய்தி அறிக்கைகளில் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சாமி என்ற பெயரில் உலாவந்த மோசடி காமுக ஆசாமி புளிக்களுக்கு 7 ஆண்டுகள் சிறை ! : த ஜெயபாலன் – தேசம்
[…] லண்டனில் போலிச்சாமியார் கைது ! […]