அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

david-milib.jpgஇலங்கையின் நிலைவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகவும், உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிவிலியன்கள் மீதான தாக்குதல் குறித்து அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டியது இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் இறுதி நிலப்பரப்பு முற்றுகையிடப்பட்டதாக அரசாங்கத் தரப்பு வெளியிட்டுள்ள செய்திகளைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன்களை மனித கேடயமாக புலிகள் பயன்படுத்துவதாக வெளியான தகவல்கள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் படையினர் பிரவேசித்துள்ளதாகவும், சிவிலியன் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அரசாங்கம் பெரும் கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

முன்னொருபோதும் இல்லாதவாறு யுத்த நிறுத்தத்தின் அவசியம் அதிகரித்துள்ளதாகவும், சிவிலியன்கள் அபாயகரமான வலயத்திலிருந்து சுதந்திரமாக வெளியேற தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஒரேநேரத்தில் கூடுதல் பொது மக்கள் வெளியேறி வரலாமென எதிர்பார்ப்பு

badurdeen.jpgபுதுக் குடியிருப்பு- புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் கூடுதலான பொது மக்கள் வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இவ்வாறு ஒரே நேரத்தில் வரும் கூடுதலான மக்களைத் தங்க வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கென வவுனியாவில் பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்ததாக அமைச்சர் கூறினார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறுவதற்கு மக்கள் தயாராகி வருவதாக அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன்தினமும் சுமார் இரண்டாயிரம் பேர் வெளியேறி வந்துள்ளார்கள், என்று தெரிவித்த அமைச்சர் பதியுதீன், ஒரே தடவையில் பெருந்திரளானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

இவர்களைத் தங்க வைப்பதற்கு நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகக் கூறிய அமைச்சர் ரிஷாட், சிலவேளை, மக்கள் வருவதற்கு முன்னர் இந்தத் தற்காலிகக் குடியிருப்புகளான வீடுகளை நிர்மாணித்து முடிக்கலாமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி முகாம்களிலும் தங்கியுள்ள மக்களின் நலன்கள் குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வவுனியாவில் அரச அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே, வெளியேறி வரவிருக்கும் மக்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கின்றார்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைப் படையினர் முழுமை யாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அங்கிருந்து பொதுமக்கள் முற்றாக வெளியேறியதன் பின்னரே, புலிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடருமெனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலைமையின் தற்போது புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன மேற்கொண்டு வருகிறார் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் இவ்வேளையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கலாம் – பிரதமர்

pm-srilanka.jpgசர்வதேச யுத்த ஒழுங்கு விதிகளை மீறி அப்பாவி பொது மக்கள் தங்கி இருக்கும் பாதுகாப்பு வலயத்தினுள் மறைந்திருந்தபடி புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடாத்துவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குற்றஞ்சாட்டினார்.புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யும் இறுதித் தருணம் நெருங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் இவ்வேளையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கலாம். அதனால் முன்னெச்சரிக்கையோடு பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புலிப் பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்கள் பின்னடைந்த இந்நாட்டை இரண்டு மூன்று மடங்காக துரித மாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

1 ஆம் தவணை கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவு

sri-lanka-students-01.jpgநாட்டின் சகல அரசாங்கப் பாடசாலைகளினதும் இந்த வருடத்திற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று புதன்கிழமை யுடன் நிறைவடைய உள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியமைச்சின் கீழ் இயங்கும் தமிழ் – சிங்கள – முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படவுள்ளன. இரண்டாம் தவணைக் கல்வி
நடவடிக்கைகளுக்காக தமிழ் – சிங்கள பாடசாலைகள் இம் மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளன. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 20 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளன.

தமிழ் – சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஜுலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடைய உள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளன.  இந்த வருடத்தின் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகள் யாவும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் கல்விமையமைச்சு அறிவித்துள்ளது.

மங்களவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாராளு மன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்ததுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பூரண ஆதரவு வழங்கவும் முன்வந்துள்ளனர். இவர்களுள் மாத்தறை மாவட்ட உள்ளூராட்சிச் சபைகளின் உறுப்பினர்களும் அடங்குவர். இச்சந்திப்பு நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது.

மங்கள சமரவீர எம். பி. யின் ஒரேயொரு இணைப்புச் செயலாளரைத் தவிர அவரது பிரத்தியேக நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இதுவரை தாம் தனித்து விடப்பட்ட உணர்வைக் கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் உண்மை நிலையை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதுடன் மாத்தறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக இணைந்து உழைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். இந்நிகழ்வில் மாத்தறை மாவட்ட உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டார்.

கோள் சொல்ல நாணய நிதியத்திடம் நேரம் ஒதுக்கிக் கேட்கிறது ஐ.தே.க

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப் புவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்திக்கொண்டிருக்கும்போது அதனை தடுக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் ஐ.தே.க செயற்படுகிறது என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு இல்லாத தையும், பொல்லாததையும் கூறுவதற்கும் கோள் சொல்வதற்கும் நேரம் ஒதுக்கித் தருமாறு ஐ.தே.க கேட்டுள்ளது. அவர்கள் அதற்கு இணங்கவில்லை. அதனால் நியூயோர்க்கில் தொடர்புகொண்டு நேரம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுள்ளார்கள்.

எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் ஐ.தே.க செயற்படுகிறது. ஐ.தே.க கட்சியின் ஆட்சிக் காலத்தில் இருந்த சர்வதேச நாணய நிதியமல்ல இப்போது இருப்பது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சேவையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எக்காரணம் கொண்டும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது என்பதை பொறுப்புடன் கூற விரும்புகிறேன் என்றும் கூறினார். ஐ.தே.க எம்.பி ரவி கருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இ.போ.ச. மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம் -அமைச்சர் டளஸ்

dalas_alahapperuma.jpgஇலங்கை போக்குவரத்து சபை மீது பிரயாணிகள் வைத்துள்ள நம்பிக்கை இழக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. அதனைக் காப்பாற்றுவோம் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். பலங்கொட பஸ் டிப்போவை 37ஆவது மாதிரி டிப்போவாகத் தரமுயர்த்தும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அண்மையில் நடைபெற்ற இவ்வைபத்தில் உரையாற்றிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையை சரியான பாதையில் கொண்டு செல்கிறது. போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அர்ப்பணிப்புடனான சேவை காரணமாக அதன் பஸ்களின் எண்ணிக்கை 5200 ஆக அதிகரித்துள்ளது என்று மேலும் குறிப்பிட்டார். 

திருமலை கடலில் துருக்கி இரசாயன கப்பல்: சல்பூரிக் அமில கசிவு; கடல்நீர் பாதிப்பு

திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக திருகோணமலை நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள துருக்கி நாட்டுக் கப்பலையும், அதிலுள்ளவர்களையும் காப்பாற்றும் அவசர பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ன தெரிவித்தார்.

சல்பூரிக் அமிலத்தை ஏற்றிக் கொண்டு சென்ற துருக்கி நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.ரி. கிரேன்ட்பா’என்ற கப்பலே திருமலை துறைமுகத்திற்கு அப்பாலுள்ள நடுக்கடலில் வைத்து கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சல்பூரிக் அமிலத்தினால் இலங்கையின் கடற்பரப்பிலும், கரையோர பிரதேசத்திலும் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் அந்தக் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளை கடற்படையினர் அவசரமாக மேற்கொண்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில், சல்பூரிக் அமிலம் இரசாயனத்தை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் மற்றுமொரு துறைமுகமான காக்கிநாடா நோக்கி கடந்த 2ம் திகதி இந்தக் கப்பல் பயணத்தை தொடங்கியுள்ளது.

அந்தக் கப்பலில் சரக்குகளை ஏற்றக்கூடிய அளவைவிட மேலதிகமாகவும் சரக்குகள் இருந்துள்ளன. இந்தக் கப்பலில் சல்பூரிக் அமிலம் வைக்கப்பட்டிருந்த தாங்கிகளில் கசிவு ஏற்பட்டு அது கப்பலின் ஸ்திர சமநிலை பேணுவதற்காக வைக்கப்பட் டுள்ள தாங்கிப் பிரதேசத்திற்குள் படிய ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அந்தக் கப்பலிலிருந்து உதவிக்காக இலங்கை கடற்படைக்கு அவசரத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியிலுள்ள மீட்பு ஒத்துழைப்பு மையத்தின் ஊடாக இந்த தகவல்களை பெற்றுக்கொண்ட இலங்கை கடற்படையிர் இந்தக் கப்பல் சட்டபூர்வமான ஒரு சரக்குக் கப்பல் என்பதை ஊர்ஜிதம் செய்த பின்னர் அவசர மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சல்பூரிக் அமில கசிவினால் இந்தக் கப்பல் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கப்பலின் ஊழியர்கள் உடனடியாக அதிலிருந்து கடற்படையினரால் அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர். கப்பலுக்குள் பிரவேசித்த இலங்கை கடற்படையினர் அதன் தாங்கிகளை பரிசோதித்தபோது அதில் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளமையை உறுதி செய்துள்ளனர். இந்தக் கப்பலிலுள்ள சல்பூரிக் அமிலம் இலங்கையின் கடற்பரப்பிலும், கரையோர பிரதேசத்திலும் பாரிய சுற்றாடல் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தக் கப்பலை தற்பொழுது மேலும் ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்வதற்கான அவசர நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வதற்கான வசதிகளை வழங்குவதில் கப்பலின் முகவர்களும் அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கத்தின் ஊடாக துருக்கிக்கு கடற்படையினர் அறிவித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் வெள்ளத்தினால் நெல் வயல்கள் முற்றாக சேதம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வயல் பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் உழுது பண்படுத்தலுக்குத் தயாராக விருந்த பல நெல் வயல்கள் பலத்த சேதத்திற்குள்ளாகி இருப்பதுடன் வரம்புகளும் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன.கடந்த வாரம் அம்பாறைக்கு மேற்புறமாகப் பெய்த பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் ஆற்றின் குறுக்கால் வயலுக்கு நீர் வழங்குவதற்கு போடப்பட்டிருந்த பலகைத் தடை காரணமாக ஆற்றில் செல்ல முடியாமல் மேலெழுந்து வயல் நிலங்களுக்குள் பிரவேசித்ததனாலேயே சேதம் ஏற்பட்டுள்ளதாக இப்பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.

சம்மாந்துறை விவசாய பிரிவைச் சேர்ந்த தொய்யன் வட்டை, வீரக்காடு போன்ற கண்டங்களிலுள்ள பெரும்பாலான வயல்களிலுள்ள மண் இந்த வெள்ளித்தினால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் பல அடி ஆழமான குழிகளும் நெல் வயல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வேளையில் அணைக்கட்டின் தடைப் பலகையைக் கழற்றி இருந்தால் இந்தப் பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

லாலு பேச்சு: கைது செய்ய உத்தரவு

laluprasat.jpgநான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருண் காந்தியை ரோடு என்ஜினை ஏற்றி கொன்றிருப்பேன் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பிகார் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

லாலு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லாலுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. லாலுவின் பேச்சு விஷமமானது. இதுவும் துவேஷப் பேச்சாகும் என்று பாஜக மூத்த தலைவர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்திருந்தார்.

இருப்பினும், நான் சொல்ல வந்தது வேறு. மதவாத அரசியலைத்தான் புல்டோசர் போட்டு நசுக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால் மீடியாவில் வந்ததைப் போல நான் பேசவில்லை. அரசியல் ரீதியாக வருண் கதையை முடித்திருப்பேன் என்றுதான் நான் கூறினேன் என்று ஜகா வாங்கியிருந்தார் லாலு.

இந்த நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந் நிலையில் லாலுவைக் கைது செய்ய கிஷண்கஞ்ச் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.