1 ஆம் தவணை கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவு

sri-lanka-students-01.jpgநாட்டின் சகல அரசாங்கப் பாடசாலைகளினதும் இந்த வருடத்திற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று புதன்கிழமை யுடன் நிறைவடைய உள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியமைச்சின் கீழ் இயங்கும் தமிழ் – சிங்கள – முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படவுள்ளன. இரண்டாம் தவணைக் கல்வி
நடவடிக்கைகளுக்காக தமிழ் – சிங்கள பாடசாலைகள் இம் மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளன. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 20 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளன.

தமிழ் – சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஜுலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடைய உள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளன.  இந்த வருடத்தின் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகள் யாவும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் கல்விமையமைச்சு அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *