வடக்கி லிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றும் முதற்கட்ட நடவடிக்கை இம்மாத இறுதியில் அல்லது மே மாத முதற்பகுதியில் மன்னாரில் ஆரம்மபிக்கப்படும் என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை கண்டறியவும் அவர்களுக்கு தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படு;திக் கொடுக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில் நலன்புரி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வட பகுதியிலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் சிதறி வாழ்கின்றனர். இவர்களுள் உள்ள வறிய மக்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள இடைத்தங்க்ல் முகாம்களில் செல்லொனாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்