மங்களவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாராளு மன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்ததுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பூரண ஆதரவு வழங்கவும் முன்வந்துள்ளனர். இவர்களுள் மாத்தறை மாவட்ட உள்ளூராட்சிச் சபைகளின் உறுப்பினர்களும் அடங்குவர். இச்சந்திப்பு நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது.

மங்கள சமரவீர எம். பி. யின் ஒரேயொரு இணைப்புச் செயலாளரைத் தவிர அவரது பிரத்தியேக நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இதுவரை தாம் தனித்து விடப்பட்ட உணர்வைக் கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் உண்மை நிலையை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதுடன் மாத்தறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக இணைந்து உழைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். இந்நிகழ்வில் மாத்தறை மாவட்ட உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *