நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப் புவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்திக்கொண்டிருக்கும்போது அதனை தடுக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் ஐ.தே.க செயற்படுகிறது என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு இல்லாத தையும், பொல்லாததையும் கூறுவதற்கும் கோள் சொல்வதற்கும் நேரம் ஒதுக்கித் தருமாறு ஐ.தே.க கேட்டுள்ளது. அவர்கள் அதற்கு இணங்கவில்லை. அதனால் நியூயோர்க்கில் தொடர்புகொண்டு நேரம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுள்ளார்கள்.
எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் ஐ.தே.க செயற்படுகிறது. ஐ.தே.க கட்சியின் ஆட்சிக் காலத்தில் இருந்த சர்வதேச நாணய நிதியமல்ல இப்போது இருப்பது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை முற்றிலும் மாறுபட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சேவையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எக்காரணம் கொண்டும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது என்பதை பொறுப்புடன் கூற விரும்புகிறேன் என்றும் கூறினார். ஐ.தே.க எம்.பி ரவி கருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.