அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புஷ் மீது பாதணியை வீசிய ஊடகவியலாளர் இன்று விடுதலை!

1099images.jpgஅமெரிக் காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது தமது பாதணியை வீசியெறிந்த ஊடகவியலாளர் முண்டாசர் அல் சய்தி இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக அவரது அவரது சகோதரர் டர்காம் தெரிவித்தார்.
 
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் ஓய்வு பெறுவதற்கு முன் ஈராக் சென்றிருந்தபோது ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

மாநாட்டில் கலந்து கொண்ட டி.வி செனல் நிருபர் முண்டாசர் அல் சேய்திää தன் கால்களில் அணிந்திருந்த 2 ஷ_க்களையும் கழற்றி புஷ் மீது வீசி எறிந்தார். அவருக்கு ஈராக் நீதிமன்றம் 3 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனுசெய்ததில் இந்த தண்டனை ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டது. இவரது நன்நடத்தை காரணமாக அந்தத் தண்டனை மேலும் குறைக்கப்பட்டது. இவர் நேற்று விடுதலை செய்யப்படுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

எனினும் சட்ட நெறிமுறைகள் முழுமை அடையாததால் அவர் நேற்று விடுதலை செய்யப்படவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் விடுதலை செய்யப்படுகிறார். இந்தத் தகவலை அவரது சகோதரர் டர்காம் தெரிவித்தார

ஐக்கிய நாடுகளின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி இலங்கை விஜயம்!

ஐக்கிய நாடுகளின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி லீன் பெஸ்கோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வது அவரின் விஜயத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசனைக்கு ஏற்ப அவர் இங்கு விஜயம் செய்ய உள்ளதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது உட்பட அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவர் கூடுதல் கவனம் செலுத்த உள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.நா. வின் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தையின் பின்னரே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக லீன் பெஸ்கோ மேலும் தெரிவித்துள்ளார். 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 12இல் ஆரம்பம்

150909students1.jpgஇவ் வருடத் துக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
 
இந்தப் பரீட்சை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் மட்டும் நடைபெறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை சுமார் 5 இலட்சத்து 45 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளதுடன் இதற்காக சுமார் 4 ஆயிரம் பரீட்சை நிலையங்களை நிருவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து சுமார் 25 ஆயிரம் பரீடசார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களுக்கு பரீட்சை எழுதவென வவுனியா நலன்புரி மத்திய நிலையங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு முன்னர் குறிப்பிட்ட பரீட்சார்த்திகள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேறினால் அங்கும் பரீட்சை நிலையங்கள் அமைக்க கவனம் செலுத்தப்படும் என்றும் வடக்கின் பரீட்சார்த்திகளுக்கு சிக்கல் இல்லாமல் பரீட்சைக்குத் தோற்ற வகைசெய்யப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

முகாம்களில் உள்ள மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பான அரசாங்கம் இந்த விவகாரத்தை ஒரு விளையாட்டாக கையாள முடியாது

101009displacedidps.gifவவுனி யாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற முகாமைத்துவம் குறித்து உறுதியான திட்டம் உண்டு என்றும், அத்திட்டம் நேர்த்தியாகவும் திறமையாகவும் கட்டுக்கோப்பான முறையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வப்போது இடம்பெறும் தனது சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவது குறித்து அரசாங்கம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து மட்டக்களப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, முகாம்களில் உள்ள 3 இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பான அரசாங்கம் இந்த விவகாரத்தை ஒரு விளையாட்டாக கையாள முடியாது என்று கூறினார்

புலிகளின் இரகசிய ஆவணங்கள் கடற்படையினரால் மீட்பு!

புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான மிகவும் இரகசிய தகவல்களை உள்ளடக்கிய முக்கிய ஆவணங்களை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சனிக்கிழமை கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம்  அறிவி;த்துள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து தேடுதல் நடத்திய படையினர் கதிரவெளிப் பிரதேசத்திலுள்ள இலங்கத்துறை என்ற இடத்தில் நிலத்தின்கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த முக்கிய ஆவணங்களை மீட்டுள்ளனர்.
மிகவும் பாதுகாப்பான முறையில் 25 பொதிகளில் இந்த ஆவணங்கள் பத்திரப்படுத்தப்படிருந்தன. இவை புலிகளின் மிகவும் முக்கியமான ஆவணங்கள் என்பது ஆரம்ப ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் மேலும் அறிவித்துள்ளது. 

”இலங்கை முகாம்களில் மக்கள் தடுப்புக்காவல் நிலையில்…”- நவி பிள்ளை

150909navifora.jpgஇலங் கையில் அண்மைய யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இடம்பெயர நேர்ந்த மக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது போன்றதொரு சூழலில் இருந்துவருகிறார்கள் என்று ஐ.நா.மன்ற மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதிம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தில் நவநீதம் பிள்ளை ஆற்றவுள்ள உரை என ஊடகங்களிடம் வழங்கப்பட்டுள்ள தகவல்களில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு எண்ணிக்கையில் மக்கள் முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த முகாம்களில் உதவியமைப்புகள் சென்று பணியாற்றுவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அங்கே நடைபெறுகின்ற மனிதாபிமானப் பணிகளுக்கு அச்சுறுத்தலாய் அமைந்துள்ளன என்றும் நவநீதம் பிள்ளையின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உ/த பரீட்சை வினாத்தாள் திருத்தும் 2ம் கட்டம் ஆரம்பம் – ஆறாயிரம் பேர் பணியில்

150909students.jpgக. பொ. த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்ப மானதுடன் ஆறாயிரம் பேர் இதற்கென ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 25 ஆம் திகதி வரை இவ்வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் தொடருமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

நாடளாவிய 15 நகரங்களிலுள்ள 20 நிலையங்களில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் இதற் கென ஆறாயிரம் பேரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், வினாத்தாள் திருத்தும் முதலாம் கட்ட நடவடிக்கைகள் ஆகஸ்ட் 30 ஆம் ஆரம்பமாகி நேற்று முன்தினம் 13 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் க. பொ. த. உயர்தரப் பரீட்சை வினாத் தாள் திருத்தும் நடவடிக்கைகள் இரண்டு மாதங்கள் தாமதமடைந்தன. இதற்கு சில ஆசிரிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவித்த அவர், இம்முறை சகல ஆசிரியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனால் இம்முறை பரீட்சை முடிவுகளை குறிப்பிட்ட தினத்தில் வெளியிட முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீதி விபத்தால் படுகாயமடையும் ஒருவருக்கு…ரூ. 10 இலட்சம் முதல் ஒரு கோடி வரை அரச ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைச் செலவு

திடீர் வீதி விபத்து காரணமாக வருடா வருடம் இலங்கையில் 2000-3000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையானோர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதேநேரம் திடீர் வீதி விபத்தினால் சுமார் ஐம்பதினாயிரம் பேர் வருடாந்தம் காயமடைவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

திடீர் வீதி விபத்துகளில் பெரும்பாலானவற்றுக்கு சாரதிகளின் கவனயீனமே காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது. வீதி விபத்துகளினால் காயமடைகின்ற ஒருவருக்கு அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவென பத்து இலட்சம் முதல் ஒரு கோடி ரூபா வரை செலவாகுவதாக அரசாங்க சுகாதாரத் துறை யினால் கணக்கிடப்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் சாரதிகளின் கவனயீனத்தால் காயமடைகின்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு செல வாகின்ற செலவுத் தொகையை சாரதிகளிடமோ,  அல்லது வாகன உரிமையாளர்களிடமோ இருந்து அறவிடுவது குறித்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை கவனம் செலுத்தியுள்ளது.

இது விடயமாக சட்ட மா அதிபருடன் ஆலோசனை நடத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் சட்டத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று கூறினார்.

வவுனியாவில் இருந்து திரும்பிய அகதிகள் இரு தினங்களில் விடுவிக்கப்படுவார்கள் – அமைச்சர் முரளிதரன்

140909karuna.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு கொண்டுவரப்பட்டு, இதுவரை விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை இரு நாட்களுக்குள் விடுதலை செய்வதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி வழங்கியுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட சில இடம்பெயர்ந்த குடும்பங்கள், விடுவிக்கப்படாமல் மட்டக்களப்பில் இடைத்தரிப்ப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல அம்பாறை மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட சில குடும்பங்கள் முதலில் விடுவிக்கப்பட்டாலும், பின்னர் மீண்டும் அழைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முரளிதரனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர்களுக்கான சில பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்காகவே பாதுகாப்பு தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இருந்தபோதிலும், அவர்கள் இரு தினங்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுனர் உறுதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசின் முக்கிய அரசியல் பிரமுகரை படுகொலை செய்யும் திட்டம் அம்பலம்

அரசாங்கத்தின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருந்த பெரும்பான்மை இன சர்வதேச நபர் ஒருவரை கொழும்பு பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர் தென் மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கும் போர்வையில் இத்தகைய திட்டத்தைத் தீட்டியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன.

தென் மாகாண சபை தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் மேற்படி விசாரணைப் பிரிவினர் கடந்த 12ம் திகதி அந்நபரைக் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள புலி சந்தேக நபரிடம் விசாரணை செய்தபோதே அவர் மேற்படி பெரும்பான்மை இன சந்தேக நபர் சம்பந்தமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த சந்தேக நபர் தென் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் தோரணையில் செயற்பட்டுள்ளார். இவர் வேறொரு கொலைக்கும்பலின் கைக் கூலியாக முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரைக் கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்றுள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

பயங்கரவாதம், பாதாள உலகக் கோஷ்டி போன்றவற்றை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசியல் பிரமுகர்களைப் படுகொலை செய்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் அமைப்புகள் செயற்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேற்படி சந்தேக நபர் அவ்வமைப்புகளின் ஒப்பந்தக்கார ராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அந் நபரிடம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்நபர் தொடர்பான சகல தகவல்களையும் வெளியிடுவது தொடரும் விசாரணைகளுக்குத் தடையாக அமையலாம் என்பதால், விசாரணையின் முடிவில் முழுமையான தகவல்களை வெளியிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.