உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

அமைச்சர்களின் 50 ஆடம்பர குடியிருப்புக்கள் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

அமைச்சர்களின் 50 ஆடம்பர குடியிருப்புக்கள் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

 

அமைச்சரவை அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட 50 ஆடம்பர உத்தியோகபூர்வ குடியிருப்புகளை, அரசுக்கு வருமானத்தை ஈட்டும் வகையிலான திட்டங்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரச கட்டிடங்களில்  இடப்பற்றாக்குறை காரணமாக புதிய வளாகங்களைக் கோரியுள்ளதால், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு இந்த குடியிருப்புகளில் ஒன்று ஒதுக்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த குடியிருப்புகளுக்கு ஏற்கனவே அதிக அளவு பொது நிதி செலவிடப்பட்டுள்ளது. எனவே அவை மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் அதிகப்படியான சலுகைகளை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர் விஜேபால, அரசியல்வாதிகளுக்கான வாகன அனுமதிகளை அரசாங்கம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது. இதற்கிடையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமது  அரசாங்கத்தில் எந்த அமைச்சரும் ஆடம்பர குடியிருப்புகளை பயன்படுத்த மாட்டார்கள் என ஆட்சியமைப்பதற்கு முன்பே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் – தொழில்துறையை வளர்ப்பதன் மூலம் இளைஞர்கள் வெளியேற்றத்தை தடுப்போம் என்கிறார் பா.உ இளங்குமரன்!

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் – தொழில்துறையை வளர்ப்பதன் மூலம் இளைஞர்கள் வெளியேற்றத்தை தடுப்போம் என்கிறார் பா.உ இளங்குமரன்!

 

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் உருவாக்கப்படும்  என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன். நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பா.உ இளங்குமரன், “கடந்த அரசாங்கத்தை விட எமது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கல்விக்கு மேலும் அதிக நிதியை ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்துவோம். நாட்டை விட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.தற்போது பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் நாட்டின் பொருளாதார பின்னடைவும் கிராமிய வறுமையுமே காரணம்.  நாங்கள் எமது நாட்டினுள்ளேயே தொழிற் துறைகளை உருவாக்கும் போது மாணவர்களும் இங்கே கல்வி கற்க கூடிய சூழ்நிலை ஏற்படும். என தெரிவித்தார்.

மேலும் பேசிய பா.உ இளங்குமரன், தங்கத் தீவாக இருந்த தீவகம், கடந்த ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சி காரணமாக தகரத் தீவாக மாற்றம் பெற்றுள்ளது. சுற்றுலாத்துறையை தீவகத்தில் அபிவிருத்தி செய்வதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இடமாக மாற்றுவதனூடாக தீவகம் மீண்டும் செந்தளிப்பு பெறும். தீவகத்தை மீண்டும் தங்கத் தீவாக மிளிர வைப்போம்.

எதிர்காலத்தில் வடக்கில் மூன்று மத்திய பொருளாதார நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்திலும், பரந்தன் – ஆனையிறவை மையப்படுத்திய இடத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும், பலாலியில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இங்கேயே தொழில்துறையை உருவாக்கி, இங்கேயே உழைத்து உண்ணக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவோம். கடந்த காலத்தில் மனித வளம் சிறந்த முகாமைத்துவம் இல்லாமையால் வீணடிக்கப்பட்டது. ஆனால் இனி நாங்கள் மனித வளத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் வாளுடன் பாடசாலை மாணவன் கைது !

யாழில் வாளுடன் பாடசாலை மாணவன் கைது !

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாள் ஒன்றுடன் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினரிடையே அடுத்தடுத்து போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரம் என்பன மிக வேகமாக தலைதூக்கி வருவதுடன் ஒரு அச்சமான ஓர் சூழல் உருவாகி வருகிறது. யாழ்ப்பாண வாள்வெட்டு பிரச்சினைகள் தொடங்கி போதைப்பொருள் பாவனை தொடர்பான வழக்குகள் வரை அனைத்திலும் அதிகமாக இளைஞர்களே கைதாகின்றமை எதிர்கால தலைமுறையினர் குறித்த அச்சத்தை பலரிடமும் ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழையும் இலங்கையர்களால் பெரும் நெருக்கடி – இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் விசனம் !

சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழையும் இலங்கையர்களால் பெரும் நெருக்கடி – இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் விசனம் !

 

இலங்கையர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழைவதால் தமது அரசாங்கத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவி (Damiano Francovigt) நீர்கொழும்பில் உள்ள டொன் போஸ்கோ ஆன்மீக நிறுவனத்திற்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கைக்கான இத்தாலிய தூதுவர், மொழி மற்றும் தொழில்முறை அறிவுடன் இத்தாலிக்கு வந்து தொழில் பெறுவதன் மூலம், இலங்கையர்களை பாதுகாக்கப்படுவதற்கும் நேரடியாக வேலை வாய்ப்புகளை தேடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என  குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் தாபோன் நகர சபையின் ஆளுநர் ரவேந்தா ஜெகநாதனின் தலையீட்டால், டொன் போஸ்கோ நிறுவனத்தில் தற்போது மூன்று துறைகளில் பயிற்சி பெற்று வரும் தொழிலாளர்கள் குழுவை முதல் முறையாக இத்தாலிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் இதன்மூலம் அந்நிய செலவணியாக டொலரை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமையும் என தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் தொழில் துறைகள் ஆக்கிரமிக்கும் வேறு மாகாண பட்டதாரிகள் – ஆளுநர் வேதநாயகன் !

வடக்கு மாகாணத்தின் தொழில் துறைகள் ஆக்கிரமிக்கும் வேறு மாகாண பட்டதாரிகள் – ஆளுநர் வேதநாயகன் !

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர்கல்விக்கான வாய்ப்பு இருந்ததாகவும் இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. தற்போது அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு பரந்தளவில் கிடைக்கின்றது.  அதனைச் சரிவர இளைஞர்கள் பயன்படுத்தவேண்டும்.  அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர்கல்வித் தெரிவு இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை என்றும் இவை தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பட்டதாரிகள்  தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு கோரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஆளுநர் வேதநாயகனின் பல்கலைக்கழக கல்வி தொடர்பான கருத்துக்களை  சற்று ஆழமாக வடக்கு மாகாண பட்டதாரிகளும் – மாணவர்களும் சிந்திக்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ,   கணினி மற்றும் விஞ்ஞான துறைகளை சேர்ந்த மாணவர்கள் இலகுவாக தொழில் வாய்ப்புகளை பெறுகின்ற போதும் கூட கலைப்பாடங்களை தெரிவு செய்த மாணவர்கள் சுமார் 5 தொடங்கி 10 ஆண்டுகள் வரை வேலை ஒன்றுக்காக காத்துக்கொண்டு இருக்கும் சூழலே காணப்படுகின்றது. பல்கலைக்கழக தெரிவின் போது கலைப்பிரிவிலும் சில பாடங்கள் தொழில்சந்தை வாய்ப்பை கொண்டுள்ள போதும் கூட தமிழ் மாணவர்கள் இந்து நாகரிகம், வரலாறு, கிறிஸ்தவ நாகரிகம், புவியியல், நடனம், நாகம் ஆகிய பாடங்களையே தெரிவு செய்கின்ற போக்கு தொடர்கிறது.

மேலும் தனியார் துறை வேலைவாய்ப்பு  தொழிற்சந்தைக்கு ஏற்றது போன்றதான கணினி அறிவு , ஆங்கில அறிவு  நவீன தொழில்நுட்பங்களை கையாளும் திறன்கள் கூட விருத்தி செய்யப்படாமலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரிகள் வெளியேறுவதாக கல்வியாளர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு தேசம் திரை நேர்காணலில் பங்குபற்றிய ஜேர்மன் டெக் அதிபர் தர்மநாதன் பல கோடி ரூபாய்கள் பெறுமதிமிக்க இயங்கும் கிளிநொச்சி ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் நாற்பது வீதம் கூட யாழ்ப்பாண, கிளிநொச்சி மாணவர்கள் கற்க வருவது கிடையாது. வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்தே மாணவர்கள் அதிகமாக வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதேநேரம் தென்னிலங்கை பாடசாலைகளில் இன்னமும் செயற்பாட்டு நிலையில் உள்ள தொழில்துறை பாடங்களை உள்ளடக்கிய பதின்மூன்று வருட உத்தரவாத கல்வி செயற்திட்டம் கூட வடக்கு மாகாண பாடசாலைகளில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை கல்வியை தொடர முடியாமல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூலிவேலைக்காக செல்லும் அபத்தமான சூழல் வடக்கின் பொறுப்பற்ற – தொழில்துறை பற்றிய அறிவற்ற ஆசிரியர்களாலும் , பல்கலைக்கழக விரிவுரையாளர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடனான கடன் ஒப்பந்தத்தில் புதிய அரசாங்க வேலைவாய்ப்பு நியமனங்களை கட்டுப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் புதிய பட்டதாரி நியமனங்கள் எதுவுமே தற்போதைக்கு சாத்தியமில்லை என கூறப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையிலேயே தொழில்சந்தை வாய்ப்பில்லாத பாடங்களை தெரிவு செய்ய வேண்டாம் என ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/share/p/1BaoTiALrb/

பிறப்பு வீதம் வீழ்ச்சி: குழந்தைகளிடத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு – வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தகவல்

பிறப்பு வீதம் வீழ்ச்சி: குழந்தைகளிடத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு – வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தகவல்

 

நாட்டின் பிறப்புவீதம் கடந்த 10 வருட காலத்தில் படிப்படியாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் குழந்தைகள் நீரிழிவு போன்ற நோய்நிலைமைக்குள்ளாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

 

பிறப்பு வீத வீழ்ச்சி கல்வி, சுகாதாரம் மற்றும் ஆளணி போன்ற காரணிகளிலும் பாதிப்பு செலுத்தும் என்பதோடு குறிப்பிடத்தக்க மக்கள்தொகை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரித்த அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

 

2013ஆம் ஆண்டு 350,000ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2023ஆம் ஆண்டாகும்போது 250,000ஆக குறைவடைந்ததுடன் 2024ஆம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை 228,000ஆக பதிவாகியுள்ளது.

அவ்வாறு பிறக்கும் குழந்தைகளிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் நோய் நிலைமைகளுக்கு ஆளான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

 

20 ஆண்டுகளுக்கு முன்னர் காணக்கிடைக்காத குழந்தை பருவ நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதும் அதிகரித்துள்ளது. அவ்வாறு நீரிழிவு நோயால் பாதிப்புக்குள்ளான சுமார் 100 குழந்தைகள் சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பைக் காண முடிகிறது. அதிகரித்த உடல் பருமன், மந்தபோசனை போன்ற உடலியல் நோய்களாலும் மன நோய் காரணமாகவும் சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்துள்ளது.

 

சிறுவர்களின் குறும்புத்தனமும் அதற்கு எதிர்மாறான ஆடிசம் நிலையும் மன உளைச்சலுக்கு ஆளாகுவதும் மேலோங்கியுள்ளது. குழந்தைகள் இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு ஆளாகுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். ஆகையால், பெற்றோர் மற்றும் சமூகம் என்ற ரீதியில் இவை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல், எதிர்காலத்தில் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றார்.

ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கும் மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள் – சரத் வீரசேகர கூச்சல் !

ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கும் மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள் – சரத் வீரசேகர கூச்சல் !

மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர்களை இங்கு தங்க வைத்தால் தேவையில்லாத பிரசச்சினைகள் ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அட்மிரல் சரத் வீரசேகர, பணம் செலுத்தி படகில் வருபவர்கள் அகதிகளல்ல, இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இலங்கையின் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து அனைத்து இனத்தவர்களுடன் இணக்கமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்கிறார்கள். பிற நாட்டு முஸ்லிம்கள் ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கிறார்கள். ஆகவே அவர்கள் இலங்கையில் இணக்கமாக செயற்படமாட்டார்கள். மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு இலங்கைக்கு வருகைத் தருபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் போர்த்துக்கேயர்களும் அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு தான் இலங்கைக்கு வந்து இலங்கையை ஆக்கிரமித்தார்கள். மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றார்.

இனவாத கருத்துக்களை கொண்ட தென்னிலங்கை தலைவர்கள் அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றுவது தொடர்பில் அதிகம் பேசி வருகின்றனர் – தென்னிந்தியாவுக்கு சென்ற இலங்கை தமிழ் அகதிகளை பற்றியே பேசாத தமிழ்தேசிய தலைமைகளிடம் ரோஹிங்கியா அகதிகளை பற்றி பேசுவார்கள் என எதிர்பார்ப்பது அபத்தமானது. இருந்தாலும் கூட மனித உரிமை அமைப்புக்களும் – சமூக செயற்பாட்டாளர்களும் – இலங்கை மக்களும் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றகூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்களை பல பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மியன்மாரிலிருந்து நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை பொதுமக்களும் – சமூக செயற்பாட்டாளர்களும் மேற்கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது.

கிளி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கிய காடையர்கள் பிணையில் விடுதலை – அமெரிக்க பத்திரிகையாளர்கள் அமைப்பு விசனம் !

கிளி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கிய காடையர்கள் பிணையில் விடுதலை – அமெரிக்க பத்திரிகையாளர்கள் அமைப்பு விசனம் !

இலங்கை தமிழ் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணையை நடாத்த வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் கார்லோஸ் மார்டினெஸ் டி லா செர்னா அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

CPJ வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் அதிலிருந்து தப்பியிருக்கின்றார். பின்னர் அவர் நெஞ்சு, கழுத்து,முதுகில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார். அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி டிசம்பர் 27 ஆம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 30 ஆம் திகதி நீதிமன்றில் சந்தேக நபர்கள் தமிழ்ச்செல்வனால் அடையாளம் காட்டப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் உடனடியாக பதில் கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.

உள்ளூர் நாளிதழ்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவருவதன் காரணமாக தான் தாக்கப்பட்டிருக்கலாம் என எம்மிடம் தமிழ்ச்செல்வன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ்பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனைகள் கிடைக்காமை தொடர்பில் CPJ ஆவணப்படுத்தியிருக்கிறது.1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதிகளில் உள்நாட்டு போர் காரணமாக கொல்லப்பட்ட அதிகளவான பத்திரிகையாளர் தமிழ் பத்திரிகையாளர்கள்.

எனவே புதிதாக பொறுப்பேற்ற அரசு தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான் தாக்குதல், துன்புறுத்தல்கள் மற்றும தணடனை விலக்களிப்பு என்பவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் கோரியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்கள் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் வேண்டுகோள் !

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்கள் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் வேண்டுகோள் !

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை திறப்பு விழாவில் தெரிவித்தார்.

பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், பௌதீக வளங்களின் முன்னேற்றம் என்பது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அதேபோன்று தனித்து பௌதீக வளங்களின் முன்னேற்றம் மாத்திரமும் அபிவிருத்தியாகிவிடாது. எங்களின் சேவையை மேம்படுத்தும்போதுதான் அபிவிருத்தி முழுயடையும். எனவே மக்களுக்கு தரமான, அன்பான, விரைவான சேவையை வழங்க முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.

அங்கு மேலும் பேசிய ஆளுநர், கௌரவ ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாக செயற்படுத்தவேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்கவேண்டும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்.பி.பி இளங்குமரன் ஏற்படுத்திய வெளிச்சத்தில் குளிர்காயும் பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய குழுவினர் !

என்.பி.பி இளங்குமரன் ஏற்படுத்திய வெளிச்சத்தில் குளிர்காயும் பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய குழுவினர் !

 

யாழ்ப்பாணத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுண்ணாம்பு கல் அகழ்வு இடம்பெறுவதை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் என்.பி.பி பா.உ இளங்குமரன் அம்பலப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து சட்டவிரோதமான சுண்ணாம்பு கல் அகழ்வு நடைபெறுவது தொடர்பில் இதுவரை கண்டுகொள்ளாத யாழ்ப்பாணத்து ஊடகங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தற்போது பொறுப்புள்ளவர்களாக பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வடமாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக்கோரி மனு ஒன்றை கையளித்துள்ளார். குறித்த மனுவில் யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றைக் கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் பொ. ஐங்கரநேசன்.

வட மாகாண சபையின் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக பணியாற்றியிருந்த பொன். ஐங்கரநேசனுக்கு சுண்ணாம்புக்கல் அகழப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியாமலில்லை. கடந்த கால ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் கூட சுண்ணாம்புக்கல் அகழ்வு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து சட்டவிரோதமான அகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் இவை தொடர்பில் வடக்கு மாகாண சபை இயங்குநிலையில் இருந்த போது இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை அப்போதைய அமைச்சர் பொன். ஐங்கரநேசன். மாறாக இரணைமடு குளத்தின் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல திட்டங்களில் தங்களால் முடியுமானவரை எல்லாம் ஊழல் நடந்தது வடக்குமாகாண சபை இயங்கு நிலையில் இருந்த காலகட்டங்களில். இதனாலேயே வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்த அனைவரையும் தமிழ்மக்கள் அடுத்தடுத்து அனைத்து தேர்தல்களிலும் நிராகரித்தனர் – நிராகரித்தும் வருகின்றனர்.

 

இவ்வாறான நிலையில் புதிதாக பாராளுமன்றம் தெரிவான என்.பி.பி இளங்குமரன் மீது ஊடக வெளிச்சம் விழ ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் அந்த வெளிச்சத்தில் தாங்களும் குளிர்காய எண்ணி வழக்கொழிந்து போன பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய வாதிகளும் தம் மௌனம் களைத்து சுண்ணாம்புக்கல் அகழ்வு பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். எவ்வாறான போதும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் ஆரோக்கியமானது தான் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.