மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார் !
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை 50 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிவு சமர்பித்தமை குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தனது முடிவை அறிவித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்றிருந்தார் எனினும் ஜனாதிபதி அந்த முன்மொழிவுக்கு தனது ஒப்புதலைத் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட முன்மொழிவை ஆணைக்குழு முற்றிலுமாக நிராகரித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் இலங்கை மின்சார சபை நிதி ரீதியாக நிலையற்றதாக மாறும் அபாயம் உள்ளது என்றும், மேலும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.