48 மணி நேரத்தில் நான்கு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதியது ! இருவர் உயிரிழப்பு 40 பேர் வரை காயம் !

48 மணி நேரத்தில் நான்கு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதியது ! இருவர் உயிரிழப்பு 40 பேர் வரை காயம் !

கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் , கொழும்பிலிருந்து கதுருவெல நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் பொலன்னறுவை – ஹபரனை பிரதான வீதியின் மின்னேரிய இராணுவ முகாமுக்கு அருகில் இன்று மே 1 ஆம் திகதி பிற்பகலே இரண்டு பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பேருந்துகளிலும் காயமடைந்த பயணிகள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடல்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேமாதிரி பெலியத்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையிலும், பெலியத்தவில் உள்ள வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *