நல்லை ஆதீன குரு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் !
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம் பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தனது 68வது வயதில் நேற்று இயற்கை எய்தினார். கொழும்பில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய உடல் இன்றே தகனம் செய்யப்படும் எனத் தெரியவருகின்றது.
சுந்தரலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட நல்லூரை சொந்த இடமாகக் கொண்ட இவர் 1970 களின் ஆரம்பத்தில் நல்லை ஆதீன முதலாவது குருமகா சந்நிதானத்தில் துறவறம் பெற்று ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர
தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் என்ற நாமம் பெற்றார். 1981ஆம் ஆண்டு முதலாவது
குருமகா சந்நிதானம் சமாதி நிலையைஅடைந்தமையை தொடர்ந்து, நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானமாக பட்டம்சூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.