மே தினத்தில் வலிகாமம் வடக்கில் காணிகள் விடுவிப்பு !
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணிகள் 40.7 ஏக்கர் நேற்று தொழிலாளர் தினமன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காணி அனுமதிப் பத்திரங்களை யாழ் மாவட்ட மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்தால் யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம. பிரதீபனிடம் கையளித்துள்ளார். இந்நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் , காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மற்றும் மாங்கொல்லையில் 15.13 ஏக்கரும் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டகப்புலம் கிராமத்தில் 20 ஏக்கரும் பொதுமக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சென்று பார்வையிட்டு அடையாளப்படுத்த முடியும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.