நிர்வாக சேவை பதவி உயர்வுகளில் 60 வீதமானவர்கள் தமிழர்கள் !
இலங்கை நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த 23 அதிகாரிகள் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நிர்வாக சேவை விசேட தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பதிவி உயரத்தப்பட்ட 23 பேரில் 14 அதிகாரிகள் தமிழர்கள் ஒருவர் முஸ்லீம் எட்டுப்பேர் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் நேற்று முதல் அமுலுக்கு வர தீர்மானிக்கப்பட்டிருந்தது.
பதவி உயர்வு பெறுவோர் பட்டியலில் எஸ்.சிவசிறி, எஸ்.முரளிதரன், எஸ்.அச்சுதன், கே.சிறிமோகனன், என்.மணிவண்ணன், என்.சிவலிங்கம், ரி.திரேஸ்குமார், ஏ.சோதிநாதன், சுபாகினி மதியழகன், எஸ்.சத்தியசீலன், பி.தயானந்தன், வை.பரந்தாமன், எம். சிறிஸ்காந்தகுமார் மற்றும் வி.மதுமதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.