உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஆனையிறவு உப்புக்கு உரிமைகோரும் பா உ சிறிதரன் !

ஆனையிறவு உப்புக்கு உரிமைகோரும் பா உ சிறிதரன் !

ஆனையிறவு உப்புக்கு இவர்கள் ராஜலுனு என்று பெயர் வைத்ததைக் கண்டித்து தான் கொடுத்த அழுத்தத்தால் தான் அதற்கு ‘ஆனையிறவு உப்பு’ என்று பெயர் வைக்கப்பட்டதாக பா உ சிறிதரன் ரீல் விட்டுள்ளார். அமைச்சர் ஹெந்து நெத்திக்கு போன் பண்ணி அழுத்தம் கொடுத்ததால் தான் அதன் பெயர் மாற்றப்பட்டதாக உரிமை கோருகின்றார். இதனை மறுத்த பா உ இளங்குமரன் 2020க்களில் சிறிதரனுடைய உள்ளுராட்சி சபைதான் அதற்கான அனுமதியை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

ஆனையிறவு உப்பளம் ஆரம்பிக்கப்பட இருப்பதை அறியாத பா உ சிறிதரன் அதனை இந்தியாவிடம் கையளிக்குமாறு பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். ஆனால் பா உ சிறிதரன் இதனைத் தெரிவித்து சில நாட்களிலேயே ஆனையிறவு உப்பளத்தை அமைச்சர் சந்திரசேகரன் உட்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

அந்நிகழ்வில் உரையற்றிய அமைச்சர் சந்திரசேகர், இதற்கு ஆனையிறவு உப்பு என்றே பெயரிட உள்ளோம், ஆனால் ஏற்கனவே முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஒப்பந்தத்தை மாற்ற சிறிதுகாலம் எடுக்கும் என்பதைச் சுட்டிக்காட் இருந்தார். தற்போது அமைச்சர் சந்திரசேகரன் உறுதியளித்தபடி ஆனையிறவு உப்பு என்ற பெயரிலேயே ஆனையிறவு உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது.

இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்

இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்

பா உ சிவஞானம் சிறிதரன் பா உ இளங்குமரனின் தொழிலை நையாண்டி செய்து கிளிநொச்சியில் உரையாற்றினார். தனக்கு கட்சிக்குள் நடக்கின்ற சொந்தக் கதை சோகக் கதைகளை எல்லாம் கொட்டித் தீர்த்து கிளிநொச்சியில் உள்ள நான்கு பிரதேச சபைகளைக் கைப்பற்றப் பெரும் பிரயத்தனம் எடுத்துவருகின்றார். கிளி கனிஸ்டா மகாவித்தியாலயத்தில் அதிபராக இருந்தவர். இன்றும் அப்பாடசாலையின் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை வைத்துள்ளார். கிளிநொச்சி பா உ சிறிதரனின் கோட்டை என்றால் மிகையல்ல. சிறிதரன் ஏன் எனக்கு இவ்வளவு பயப்படுகின்றார் என்று சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கேள்வி எழுப்பினார். அவருடைய பிரச்சாரப் பீரங்கி அலனைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியை நாங்கள் முறியடித்தோம். அது தான் அவருக்குக் கோபம் என்றார் பா உ இளங்குமரன்.

 

கிளிநொச்சிக் கூட்டத்தில் அண்மையில் உரையாற்றுகின்ற போது பா உ இளங்குமரன் மின்சார சபையில் ஊழியராகப் பணியாற்றியதை கிண்டலடித்து: “இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார்” எனத் தனது தொழில் மேலாண்மையை வெளிப்படுத்தினார். இதே போல் பா உ இளங்குமரனின் தொழிலைக் கிண்டலடித்து ‘நாயைப் பிடியுங்கோ என்று வீடுவீடாய் மீற்றர் ரீடிங் எடுத்தவர், தன்னைப் போல் எம்பிபிஎஸ் படிக்காதவர்’ என்ற தொனியில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை ‘வடக்கத்தையான்’ என்று பா உ சிறிதரன் திட்டிய ஒளிப்பதிவு வெளியாகி இருந்தது. அதுபோல் பா உ அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை மலையகத் தமிழர்கள் பற்றிய பொதுப்புத்தியில் இருந்து கைநாட்டு எழுத வாசிக்கத் தெரியாதவர் என நையாண்டி பண்ணியதோடு தான் கப்பல் விட்ட பரம்பரையிலிருந்து வந்ததாகவும் மலையக மக்களை கள்ளத் தோணிகள் கப்பலில் வந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தார். பா உ இரா சாணக்கியனும் அமைச்சர் சந்திரசேகரனது நாசியில் உள்ள ஒவ்வாமைப் பிரச்சினையை வைத்து நளினம் செய்திருந்தார். தமிழ தமிழ் தேசியத் தலைமைகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியலை எதிர்கொள்ளும் அரசியல் வலிமை இல்லாததால் அவர்கள் தங்களது சாதி, பிரதேச, மதவாத அரசியலையும் எதிரணியினரின் தொழிலையும் வைத்து அரசியல் செய்யும் மூன்றாம்தர நிலைக்கு கீழிறங்கி உள்ளனர்.

இதே மூன்றாம் தர அரசியலைஇ தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகுதி மக்களுக்கு எதிராகவும் இந்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள் செய்கின்றனர். இவர்கள் விளிம்புநிலை மக்களை சமூகத்தில் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்படும் மக்களை, தொழிலாளர்களை, ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதிபர்கள், மருத்துவர்கள் என மேட்டுக்குடியைச் சேர்ந்த பரம்பரை மேல் தட்டினரையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதாலேயே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியில் பா உ இளங்குமரன் என்ற சாதாரண மின்சாரசபை ஊழியரும் உள்ளார். சிறிபவானந்தரா மருத்துவ கலாநிதி இவ்வாறு பல தரப்பட்ட சமூக தொழில் பிரிவுகளில் உள்ளவர்களும் தோழமை அடிப்படையில் மக்களோடு மக்களாக இணைந்து செயற்படுகின்றனர்.

சிறிதரனின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது போல் அமைச்சர் சந்திரசேகர் கருத்துத் தெரிவிக்கையில் நீங்கள் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு பிரிந்து நின்று குழாயடிச் சண்டை பிடிக்கின்றீர்கள் என்று குற்றம்சாட்டினார்.

சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவில் ஐஃபோன்கள் உற்பத்தி அதிகரிப்பு !

சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவில் ஐஃபோன்கள் உற்பத்தி அதிகரிப்பு !

ஆப்பிள் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் 22 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஐஃபோன்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 60 வீதம் அதிகமான உற்பத்தியை அப்பிள் நிறுவனம் இந்தியாவில் செய்துள்ளது. ஒரு வகையில் அப்பிள் நிறுவனம் சீனாவிற்குப் பதில் இந்தியாவில் அதன் தயாரிப்பையும் விநியோகத்தையும் அதிகரித்திருப்பதாக தெரிகின்றது. முன்னர் அமெரிக்க ஜனாதிபதி புதிய வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஃபோன்களை அமெரிக்கா அனுப்புவது விரைவுபடுத்தப்பட்டது. ஆனால் ஏப்பில் 11 அமெரிக்க ஜனாதிபதி திறன்பேசிகள், கணினிகள் உட்பட்ட மின்னணுப்பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதனால் இந்தியா சற்று ஆறுதலடைந்துள்ளது.

10.2: ஆகவே ஐஃபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கும் டொனால்ட் ட்ரம்பின் கனவு விரைவில் பலிக்காது எனவே கூறப்படுகிறது. ஊழியர் பற்றாக்குறை மற்றும் மூலப்பொருள் வசதியின்மை போன்ற இன்ன பல காரணங்களால் அப்பிள் ஐஃபோன்கள் உற்பத்தியை அமெரிக்காவிற்கு இடம்மாற்றுமா? என்பது கேள்விக்குறியேயாகும்.

 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கினார் – சீனா மீதான புதிய வரிகளை நீக்க தீர்மானம் !

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கினார் – சீனா மீதான புதிய வரிகளை நீக்க தீர்மானம் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் ஒன்பதாம் திகதி முதல் சீனாவில் இருந்து வரும் பொருட்கள் மீது 125 % வரி விதிக்கப்பட்ட்டு தற்போது இவ்வரி 145% ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத் தக்கது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்திருந்தது.

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட சில முக்கிய மின்னணுப் பொருட்களுக்கான பரஸ்பர வரியை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார். அமெரிக்க மக்கள் அதிகமாக வாங்கிக் குவிக்கும் இந்த பொருள்களின் விலையேற்றம் பெரும் சுமையாக அமைவதைத் தடுக்கும் வகையில் இந்த வரிகுறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விலக்கினால் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு 145% வரி பொருந்தாது. ஆப்பிளின் ஐபோன்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின்னணு சாதனங்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதால், இது தொழில்நுட்ப முதலீட்டாளர்களுக்கு நன்மையளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வடக்கில் மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் – முதலீட்டாளர்களுக்கு அழைப்பு !

வடக்கில் மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் – முதலீட்டாளர்களுக்கு அழைப்பு !

வடமாகாணத்தில் குறுகிய காலகட்டத்தில் உருவாகவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடு செய்ய, அந்த மாகாணத்தைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களை யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கழகத் தலைவர் இ. ஜெயசேகரன் தெரிவித்ததாவது,

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயன தொழிற்சாலை வளாகம் மற்றும் மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகியவை முதலீட்டு வலயங்களாக உருவாக்கப்பட உள்ளன.

வடமாகாணத்தில் அமையவுள்ள இந்த வலயங்களில் விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும். இவ்வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், மின்சாரம், வீதி வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் வழங்கப்படும். மேலும், 200 வீதம் முதலீட்டுக் கழிவுரிமை வழங்கப்படும் எனவும், தொழிற்சாலைகளுக்கான அனுமதிகள் மற்றும் இறக்குமதி சலுகைகள் எளிதில் பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டு முயற்சிகள் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு, அதிகளவான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்முனைப்பாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டு சபைக்கு விரைவாக சமர்ப்பிக்குமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு 021 222 1336 அல்லது jeyamanonr@boi.lk என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மரத்தடியில் காத்திருப்பு !

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மரத்தடியில் காத்திருப்பு !

2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சீரமைக்கவென 1,950 மில்லியன் ரூபாயும் இந்திய உதவியாக 300 மில்லியனும் செலவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் பலாலி விமான நிலையத்தில் வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளன என்று குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில் 47 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சி மற்றும் யாழ்ப்பாண விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டுக்கு வந்துள்ள பலாலி விமான நிலையம் தொடர்பில் பயணிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. விமானப் பயணத்திற்காக பயணிகள் மரங்களுக்கு கீழ் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளரான தமிழ்ச்செல்வன் கூட குறைப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் தனது சேலம் ஆர் . ஆர். பிரியாணி உணவகத்தை ஆரம்பித்துள்ள அவர் கொடுத்த போட்டியில் யாழ்ப்பாண விமானநிலையம் தற்காலிக கொட்டகையிலேயே இயங்குவதாக குறிப்பிட்டிருந்தார். மலசல கூட வசதி பற்றியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இத்தனை மில்லியன்கள் செலவு செய்து தற்காலிக கொட்டகைதான் போட முடிந்துள்ளது என்பது வேடிக்கை. கடந்தகால ஆட்சியாளர்களின் ஊழல் எத்தகையது என்பதற்கு இவையெல்லாம் சான்றாகவுள்ளது.

தமிழ்நாடிலிருந்து கொழும்புக்கு நேரடி ரயில் பாதை கனவு நனவாகிறது !

தமிழ்நாடிலிருந்து கொழும்புக்கு நேரடி ரயில் பாதை கனவு நனவாகிறது !

மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலன் தமிழ்நாடு – கொழும்பு நேரடி ரயில் பாதைக்கு அடிகோலியுள்ளது என “இந்தியா ருடே” இணையத்தளம் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து கொழும்புக்கு நெடுஞ்சாலை அல்லது ரயில் பாதையை அமைக்க தேவையாகவிருந்த 25 கிலோ மீற்றர் பாலத்தை பாம்பன் பாலம் நிறைவு செய்துள்ளது என இந்தியா ருடே புளங்காகிதம் அடைகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் வர்த்தகம் மேம்படும் என்றும் இந்தியா ருடே ஆரூடம் கூறியுள்ளது.

யாழில் எறும்புக்கடியால் சிசு பலி !

யாழில் எறும்புக்கடியால் சிசு பலி !

பிறந்த 21 நாளேயான பெண் சிசுவொன்றை எறும்புகள் கடித்துள்ளன. பெற்றோர் எறும்புக்கடி தொடர்பில் அசமந்தமாக இருந்துள்ளனர். நான்கு நாட்கள் கழித்து பால் குடித்த சிசு மரணமடைந்துள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனையின்படி எறும்புக் கடியால் கிருமித் தொற்று ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது. எறும்பு, மட்டத்தேள் மற்றும் பூரான் போன்ற பூச்சிகள் கடிக்கும் போது விரைவாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 க்குப் பின் !

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 க்குப் பின் !

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பெறுபேறுகள் வெளியானவுடன் , பின்வரும் முறைகளில் நீங்கள் அவற்றை சரி பார்கலாம் என இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப் பூர்வமான இணையதளமான https://www.doenets.lk இலும், அல்லது https://www.results.exams.gov.lk இலும் காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த கால ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர் – சந்திரகுமார் வேண்டுகோள் !

கடந்த கால ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர் – சந்திரகுமார் வேண்டுகோள் !

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சங்கு சின்ன வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சனிக்கிழமை அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ் தரப்புக்கள் ஒற்றுமையுடன் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.

மேலும், கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் நடைபெற்ற ஊழல் நடவடிக்கைகள் மக்கள் முன்னிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு மக்களே மாற்றத்திற்கான முடிவை எடுக்க வேண்டிய நேரமிது என்று சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சியில் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் ஊழலற்ற வினைத்திறனான நிர்வாகம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.