செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்க அதிபர் விஜயம்

usa-sa.jpgஅமெரிக் காவுக்கும் உலகெங்கிலும் வாழும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தையை தொடங்கும் நம்பிக்கையுடன் , அமெரிக்க அதிபர் ஒபாமா மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகளுக்கு விஜயம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவுடன், தலைநகர் ரியாத் அருகே ஒபாமா பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.

வியாழக்கிழமை அவர் எகிப்துக்கு சென்று, முஸ்லீம் நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவை மறுபடி வரையறுக்கும் நோக்கிலான ஒரு உரையை ஆற்றுவார்.

ஒபாமா சௌதி அரேபியாவுக்கு வருகை தந்த அதே நேரத்தில், அல் கயீதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லாடன், அவர் வெறுப்பின் விதைகளை விதைப்பதாக குற்றம் சாட்டினார்.

அதிபர் ஒபாமா அவருக்கு முன்பிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அடிச்சுவட்டிலேயே செல்வதாகவும், அமெரிக்கர்கள் இதன் பின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்த ஒரு ஒலிநாடா மூலம் ஒசாமா பின் லாடன் கூறினார்.

“டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்’

mosquito_preventionss.jpgமக்கள் ஒத்துழைப்பில்லாமல் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாது. சூழலை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். அக்குறணை வைத்தியசாலை வளாகத்தில் சுகாதாரக்குறைவு காணப்படுவதுடன் வைத்தியர்களுக்கும் இதனால் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது என்று மத்திய மாகாண சுகாதார அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தன தெரிவித்தார்.

மத்திய மாகாணசபையில் எழுத்துமூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் அக்குறணை மாவட்ட வைத்தியசாலையில் நிர்வாக சீர்கேடுகள் நிலவுகிறது. இங்கு விடுதிகளில் எந்தவொரு வைத்தியரும் தங்குவதில்லை. இதனால், அவரசிகிச்சை பிரிவு இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

ஞாயிற்றுக்கிழமையில் வெளிநோயாளர் பிரிவில் காலையிலும் மாலையிலும் ஒரு வைத்தியர் மட்டும் சேவையிலுள்ளதால் 50 வீத நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாது மீண்டும் திரும்பிச் செல்கின்றனர். முறையற்ற சேவைமாற்று முறைகளை முறையாக்க பணிப்பாளரினால் சேவைமாற்று பட்டியல் ஒன்று தயாரித்து அனுப்பப்படவேண்டும்.தற்போது சேவைமாற்று முறைப்படி வெளிநோயாளர் பிரிவிற்கான வைத்தியர்கள் அதற்காக கலந்துகொள்வதில்லை.

சிலர் மேலதிக சேவைக்கொடுப்பனவினை முறையாக கடமைசெய்யாது பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எழுத்துமூல கேள்வியினை மாகாணசபை உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மாகாண சுகாதார அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தனவிடம் கேட்டிருந்தார்.

இதற்கு தொடர்ந்தும் அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தன பதிலளிக்கையில்; வைத்தியர் சேவை செய்வது போதாது என கூறமுடியாது. மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் அக்குறணை தெலும்புஹாவத்த பகுதியே டெங்குமூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாடசாலையில் 378 மாணவர்களில் 150 மாணவர்களே வருகை தருகிறார்கள். இங்கு சரியான குடிநீர் வசதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் ஆர்.பி. சமரகோன் தும்பனை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு எனக்கு அறிவித்தல்கள் அனுப்பப்படுவதில்லை.இதுபற்றி நான் விசாரித்தேன். ஒரு அமைச்சரின் உத்தரவுக்கு அமையவே அழைப்புகள் அனுப்புவதில்லை என்றனர்.இது எனது உரிமை மீறப்பட்ட செயலாகும் என்றார். இதுபற்றி தும்பனை பிரதேச செயலாளருக்கு அறிவிப்பதாக சபைக்குத் தலைமைதாங்கிய எம்.யசமான தெரிவித்தார்.

யாழ். மாநகர, வவுனியா நகர சபை: 18 முதல் 25 வரை வேட்புமனு ஏற்பு

sri-lanka-provincial-council.jpgயாழ். மாநகர, சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் நேற்று (3) அறிவித்தது. இது தொடர்பான வர்த்தமான அறிவித்தல் இன்று (4) வெளியிடப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.

சுயேச்சைக்குழுக்கள் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். வேட்பு மனுக்கள் யாழ். மற்றும் வவுனியா மாவட்ட செயலகங்களில் ஏற்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. யாழ். மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 417 பேர் தகுதி பெற்றுள்ளதோடு வவுனியா நகர சபைத் தேர்தலில் வாக்களிக்க 24 ஆயிரத்துக்கு 626 பேர் தகுதி பெற்றுள்ளனர். யாழ். மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகர சபைக்கு 12 உறுப்பினர்களும் தெரிவாக உள்ளனர்.

இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படவுள்ளன.

அமரர் தொடங்கொடவின் இறுதிக்கிரியைகள் இன்று

dodangoda.jpgஅமரர் அமரசிறி தொடங்கொடவின் இறுதிக் கிரியைகள் இன்று (04) வியாளக் கிழமை காலி கராப்பிட்டியில் நடைபெறுகிறது. நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சரான அமரசிறி தொடங்கொட கடந்த சனிக்கிழமை இரவு காலமானார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பாராளுமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, கராப்பிட்டிய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அன்னாரின் மறைவு குறித்து பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள இரங்கல் செய்தியில் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராகவும் பணியாற்றிய அமரசிறி தொடங்கொடவின் இழப்பு இலங்கை மக்களுக்குப் பேரிழப்பாகும். குறிப்பாக காலி மக்களுக்கு ஈடுசெய்ய முடியாததாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாண சபைத் தேர்தல் – 2008 வாக்காளர் இடாப்பின்படி தேர்தல்: எட்டு இலட்சத்து 75,000 பேர் தகுதி

sri-lanka-provincial-council.jpgஊவா மாகாண சபைத் தேர்தல் 2008 வாக்காளர் இடாப்பின் படி நடத்தப்படும் எனவும் இம்முறை தேர்தலில் வாக்களிக்க சுமார் 8 இலட்சத்து 75 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வேட்பு மனு கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தினுள் அறிவிக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து 5 இலட்சத்து 74 ஆயிரத்து 815 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக பதுளை மற்றும் மொனராகலை உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர். பதுளை மாவட்டத்தில் 507 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஊவா மாகாண சபை கடந்த 28 ஆம் திகதி மாகாண ஆளுநரால் கலைக்கப்பட்டது. மாகாண சபை கலைக்கப்பட்ட ஒரு வாரத்தில் வேட்புமனுத் திகதி அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.

இதேவேளை ஐ. ம. சு. கூட்டமைப்பு, ஐ. தே. க, ஜே. வி. பி. அடங்கலான பல கட்சிகள் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. சு.க. வேட்பாளர் பட்டியல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு ஏனைய கூட்டுக் கட்சிகளிடம் தமது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரித்துள்ளார்.

புலிகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்களின் விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் -அமைச்சர் யாப்பா

laxman_yapa_abeywardena.jpgஇலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊடகவியலாளருமான போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்டனம் எதுவும் வெளியிடாமல் கவலைமட்டுமே தெரிவித்த ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இராணுவத்தினர், வர்த்தகர்கள், அரசியல் வாதிகள் போன்று விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களும் இருப்பதாகவும் அவ்வாறானவர்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.

ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தக் கருத்தை வெளியிட்டார். போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நாம் கவலைப்படுகிறோம். கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதில் சகல ஊடகவியலாளர்களையும் குற்றம் சாட்ட முடியாது.

யுத்தம் காரணமாக சகல துறைகளிலும் பிரச்சினை இருந்தது. வர்த்தகர்கள் மட்டுமல்லாது, இராணுவத்தில் இருப்பவர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அரசாங்கத்தினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகளும் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தனர். இது தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. யுத்த காலத்தின் போது இவர்களால் தெரிந்தோ அல்லது தெரியாமலோ உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இது வேறு பிரச்சினை. அது மட்டுமல்லாது, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களும் இருக்கின்றனர். இது தொடர்பிலும் அரசாங்கம் விசாரிக்கும்.

எவ்வாறாயிருப்பினும் போத்தல ஜயந்த மீதான தாக்குதல் குறித்து கவலையடைகிறோம். இது குறித்து ஜனாதிபதிக்கும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், சம்பவம் தொடர்பில் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  அத்துடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பாக 2 வாரங்களுக்குள் சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேநேரம், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களது விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது;  அது பாதுகாப்பு அமைச்சின் வேலை. இது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு நாம் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டிருக்கிறோம் என்று லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

‘சர்வதேச நாடுகள் இப்போது புலிகள் பற்றி பேசுவதில்லை’ – அமைச்சர் போகொல்லாகம

rohithaogollagama.bmpசர்வதேச நாடுகள் இப்போது எல். ரீ. ரீ. ஈ. யினர் பற்றி பேசுவது இல்லை. அவர்களுடைய கவனம் முழுவதும் இலங்கையில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதிலும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலுமே இருக்கிறது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று அமைச்சர் போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற மோதல் காரணமாக உள்ளூரில் இடம் பெயர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதில் சர்வதேச சமூகங்கள் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றனர். இருப்பினும், வடக்கிலிருந்து மோதல் காரணமாக இடம் பெயர்ந்திருக்கும் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் குறித்து சர்வதேச நாடுகள் இதுவரையில் பேச்சு நடத்தவில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்துள்ளவர்களை விரைவில் மீளக் குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் துரித திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கில் தேசிய உள்ளூர் உற்பத்தி சதவீதம் மிகவும் குறைவாகும்.

இச்சதவீதத்தை அதிகரித்து வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்களின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டதன் பின்னர் ஜனநாயகம் தழைத்தோங்கியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

“வன்னி மக்களுக்கு கிடைத்துள்ள நிவாரண உதவிகள் உரிய முறையில் அவர்களுக்கு சென்றடைய வேண்டும்’

refugee_.jpgவன்னி மக்களுக்கு கிடைத்துள்ள நிவாரண உதவிகளை ஊழல், வீண்விரயம் ஏற்படாதவகையில் அம்மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஜனாதிபதியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய அபிவிருத்தி முன்னணியின் நகரசபை உறுப்பினர் எம்.ஆர்.சமருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

வடக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உடைமைகளையும் உறவுகளையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள தமிழ் மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கவும் அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொடுக்கவும் வெளிநாடுகளால் அனுப்பி வைக்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் முற்றும் முழுதுமாக அம்மக்களுக்கும் அப்பிரதேசங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்நிதி வேறு பிரதேசங்களுக்கு சென்றடையாதவாறும் ஊழல் வீண்விரயம் ஏற்படாத வகையிலும் பயன்படுத்தப்படுவதை ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் உறுதி செய்ய வேண்டும்.

ஏற்கனவே கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு கிட்டிய வெளிநாட்டு நிதியுதவிகள் வீண்விரயம் செய்யப்பட்டதாகவும் ஊழல் இடம்பெற்றதாகவும் சிலரால் கூறப்படுகிறது. வடகிழக்கு மக்களின் மறுவாழ்வுக்கு கிட்டும் நிதியுதவியில் இவ்வாறானதொரு அவப்பெயர் ஏற்படாதவாறு ஜனாதிபதியும் அரசும் கவனம் செலுத்த வேண்டும்.

அதேசமயம் வடபகுதி அபிவிருத்தியிலும் அம்மக்களுக்கு இயல்பு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் விடயத்திலும் அரசாங்கமோ அமைச்சர்களோ அரசுடன் சம்பந்தப்பட்டவர்களோ அரசியல் இலாபம் தேட முற்படக்கூடாது. 30 வருட யுத்தத்தினால் உடல், உள ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இவர்களின் பிரச்சினைகள் மனிதாபிமான ரீதியில் அனுப்பப்பட வேண்டுமே தவிர, நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தினரையும் ஏமாற்றும் விதமான செயற்பாடுகள் இடம்பெறுவது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன் தெரிவிப்பு

sampanthan.jpgசரண டைந்த விடுதலைப் புலி உறுபினர்கள் சமூகத்தில் இயல்பு வாழ்வை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது தங்கியுள்ள சம்பந்தன் நிருபர்கள் மத்தியில் பேசும் போது இதனைத் தெரிவித்ததாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை தெரிவித்தது.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர்களின் நியாய பூர்வமான உரிமைகள் தொடர்பாகத் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்படவேண்டும். சாதாரணமாக எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

நாம் முன்வைக்கும் தீர்வில் பிரிவினை வாதத்திற்கோ, இனவாதத்திற்கோ இடமில்லை – படைவீரர்கள் தேசிய விழாவில் ஜனாதிபதி

he_speech_ranaviru_.jpgநாங்கள் வழங்கப்போகும் தீர்வுகளில் பிரிவினை வாதத்திற்கோ,  இனவாதத்திற்கோ எந்தவொரு இடமும் இருக்காது என்றும் பாரிய தியாகங்களுக்கு மத்தியில் ஒன்றுபட்டிருக்கும் எமது தேசத்தை பிளவுபடவோ அல்லது பிரிவினைவாதத்தின் நிழல்கூட விழுவதற்கோ இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர்வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற படையினரின் வெற்றியை கொண்டாடும் தேசிய வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி:

மிகக்கூடிய விரைவில் எமது பிராந்தியத்தில் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவகையிலும் தற்போது ஒன்றுபட்டிருக்கும் எமது தேசம் பிளவுபடாதவிதத்திலும் எமது சொந்த தீர்வினை நோக்கி நகர்வோம். ஒருங்கிணைக்கப்பட்ட தாய் நாட்டின் பூமியிலேயே இன்று நான் தேசியக்கொடியை ஏற்றிவைத்தேன் என்பதை கௌரவத்துடனும் பெருமதிப்புடனும் தெரிவித்துக்கொள்கிறேன். போர்திறன்,  செயல்திறன்,  அஞ்சாமை மற்றும் நல்லொழுக்கமுள்ள உலகை வியப்பில் ஆழ்த்திய முப்படை இன்று எம்மிடமுள்ளது. சிறப்புமிக்க ஒரு எதிர்காலம் உருவாவதைக் கண்டுகொள்ள ஆவலுடன் இருக்கும் நாட்டு மக்கள் மத்தியில் எங்கள் எதிர்காலம் தொடர்பாக பாரிய எதிர்பார்ப்பைக் கொண்டவனாக நான் இன்று உரையாற்றுகிறேன்.

எமது தாய்நாட்டை ஒருங்கிணைக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் சிறந்த ஒரு எதிர்காலத்தை நோக்கிச்செல்லத் தயாராக உள்ள எங்களுக்கு ஒரு பாதையைத் திறந்துவிட்டுள்ளது. எமது தாய்நாடு பெற்றுள்ள இம்மாபெரும் வெற்றியை உலக நாடுகள் அதிசயத்துடன் பார்த்தமை கடந்த சில நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மூலம் புலனாகின்றது. பயங்கரவாதத்தை முரியடித்தமைக்கு பல உலக நாடுகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.

இவ்வாறான மிகவும் மோசமான ஒரு தீவிரவாத இயக்கத்தை உலக நாடுகள்; இதுவரை கண்டதில்லை. கப்பல்கள்,விமானங்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் பயங்கர ஆயுதங்கள் அதுமட்டுமல்லாமல் தற்கொலைக் குண்டுதாரிகள். எனவே இவ்வாறான ஒரு சக்திமிக்க பயங்கரவாத இயக்கத்தை அழிக்க அதிகாரம் மிக்க ஒரு நாட்டின் அல்லது ஐகிய நாடுகளின் படையை ஈடுபடுத்த வேண்டுமென சிலர் வலியுறுத்தினர்.

ஓரிரு வருடங்கள் அல்ல முப்பது வருட காலமாக அவர்கள் எமது நாட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தமை மிகவும் மோசமான ஒன்றாகும். நாட்டை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான அவர்களின் திட்டம் மிக மிகப்பயங்கரமானது. 2005ஆம் காலக்கட்டத்தை எட்டும் போது நான்கு தலைவர்களுடன் போராடி ஒரு தலைவரையும் அழித்துள்ளது. நாட்டில் உயர் பதவி வகித்த படைத்தளபதிகள் பலர் பாதுகாப்பு அமைச்சர்கள்,  உட்பட இந்தியப் பிரதமர் ஒருவரையும் அழித்துள்ளது. விமானங்களையும் படகுகளையும் புனிதத்தளங்களையும் தாக்கியுள்ளது. தலைநகர் உட்பட பொருளாதார வலயத்தையும் தாக்கியுள்ளது. இதனால் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது எவ்வாறாயினும் அவர்களுக்கு எதிராகப் பேசுவதும் பாரதூரமான விடயமாக இருந்தது. அவ்வாறு பேசினால் பேசியவரின் பரம்பரையே பழிவாங்களுக்கு இலக்காகும் ஆபத்தான நிலை தோன்றியிருந்தது.

தீவிரவாதத்தைத் தோற்கடித்து நாம் பெற்றுக்கொண்டுள்ள புதிய சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் ஏனைய வெளிசக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவதைத் தவிர்ப்பதற்கும் எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு வெளியுறவுகளில் புதியதோர் யுகத்தை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தாய்நாட்டின் சுதந்திரத்தை வென்றிருக்கும் நாம், அடுத்ததாக எமது சுதந்திரத்தையும் இறைமையையும் சர்வதேச ரீதியாக தாபிக்க வேண்டும். பயங்கரவாதிகள் இந்த நாடுகளில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருந்தமையால் அவர்களுக்கு உலகநாடுகளின் மூலம் ஒரு சுதந்திரமும் இறைமையும் கொண்ட நாடான எமது நாட்டின் மீது அழுத்தத்தைக் கொண்டுவர முடிந்தது.

முதலாவதாக,  கடந்த 30 ஆண்டுகளாக வடக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த எல்லா வசதிகளையும் நாம் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். 30 வருடங்களாக இருந்துவந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரண்டரை வருட காலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்று இதுவும் ஒரு பாரிய அபிவிருத்தி நடவடிக்கையாக இருக்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வடக்கின் வசந்தம் உதயமாவது மட்டுமல்ல. அது வடக்கெங்கும் மிக விரைவில் பரவி வியாபிக்கும்.