‘சர்வதேச நாடுகள் இப்போது புலிகள் பற்றி பேசுவதில்லை’ – அமைச்சர் போகொல்லாகம

rohithaogollagama.bmpசர்வதேச நாடுகள் இப்போது எல். ரீ. ரீ. ஈ. யினர் பற்றி பேசுவது இல்லை. அவர்களுடைய கவனம் முழுவதும் இலங்கையில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதிலும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலுமே இருக்கிறது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று அமைச்சர் போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற மோதல் காரணமாக உள்ளூரில் இடம் பெயர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதில் சர்வதேச சமூகங்கள் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றனர். இருப்பினும், வடக்கிலிருந்து மோதல் காரணமாக இடம் பெயர்ந்திருக்கும் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் குறித்து சர்வதேச நாடுகள் இதுவரையில் பேச்சு நடத்தவில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்துள்ளவர்களை விரைவில் மீளக் குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் துரித திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கில் தேசிய உள்ளூர் உற்பத்தி சதவீதம் மிகவும் குறைவாகும்.

இச்சதவீதத்தை அதிகரித்து வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்களின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டதன் பின்னர் ஜனநாயகம் தழைத்தோங்கியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *