எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இரு சிறுமிகள் மரணம் தொடர்பாக அதிகார சபையின் விசாரணை ஆரம்பம்

girl2222.gifகொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் இரு சிறுமிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வயது குறைந்த சிறுவர், சிறுமியர் வேலைக்கு அமர்த்தப்படுவது சட்டவிரோதமான செயல் என்றும் அதனைமீறி இச்சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சிறுமிகளை வேலைக்காக சேர்த்த தரகர் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மலையகத்தைச் சேர்ந்த பல சிறுமிகள் குடும்பக்கஷ்டம் காரணமாக வீட்டு வேலைகளுக்கு தரகர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருவது தற்போது தெரியவந்துள்ளதாக அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவற்றைத் தடுப்பதற்கு அதிகார சபை உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். சிறுவர், சிறுமிகள் வேலை செய்வது தொடர்பாக அதிகாரசபைக்கு புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் மீள்குடியேறுவோருக்கு கூரைத்தகடுகள், 25,000 ரூபா பணம்

ga-vavuniya-222.jpgவவுனியா வடக்கில் மீளக்குடிய மரும் மக்கள் தமது வீடுகளைப் புனரமைத்துக் கொள்வதற்காக 12 கூரைத் தகடுகளும் 25 ஆயிரம் ரூபா நிதியும் மற்றும் ஏனைய உதவிகளும் வழங்கப்படவுள்ளன. மீள்குடியேற்றம் சம்பந்தமாக நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பியும் கலந்து கொண்டார். குறித்த 35 கிராமங்களில் புனரமைப்புப் பணி கள் 40% பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய கூட்ட த்தில் விபரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர் வவுனியா வடக்குப் பகுதியில் அடுத்த வாரம் புனரமைப் புப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.

நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வவுனியா பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதேவேளை, மீள்குடியமரும் மக்களின் நெற்காணி களை துப்புரவு செய்து கொடுக்க இராணுவத்தினர் உதவி வழங்குவார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வீடுகளைத் தாமாகவே புனரமைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக, கூரைத் தகடுகளும், பணமும் வழங்கப்படுகின்றன. அதேநேரம் ஏனைய உதவிகளையும் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர் வேலை நிறுத்தம்

electricity.jpgசம்பள அதிகரிப்பு உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதுமுள்ள மின்சார சபை ஊழியர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திலீடுபட விருக்கின்றனர். அரச்சாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைவதற்கு 10 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உடன்பாடுகண்டுள்ளன.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படும் சம்பள அதிகரிப்பைச் செய்யத் தவறியமை, மின்சார சபையை அழிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்ட மூலத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் மின்சார சபை ஊழியர்களின் ஊழியர் சேமலாபநிதியின் மூலம் கிடைக்கும் அனுகூலங்களை நீக்கும் முயற்சிகளை உடன்கைவிடுமாறும் மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளில் கைவைக்க வேண்டாம் என்று அரசை வலியுறுத்தும் நான்கு கோரிக்கைகளை இத்தொழிற் சங்கங்கள் முன்வைத்துள்ளன.

நாடு முழுவதும் குடி நீர் வசதி; 2010ல் ரூ.36,000 மில்.ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் மக்களுக்கு குடிநீர் வசதி அளிப்பதற்காக 2010 ஆம் ஆண்டில் 36 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; இந்த வருடத்தில் குடிநீர் விநியோகத்துக்கென 29 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டையில் உள்ள 22 வீதமான மக்களுக்கே குடிநீர் வசதி அளிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது 75 வீதமான மக்களுக்கு குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையில் கூடுதலான நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஹம்பாந்தோட்டை இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். விரைவில் ஹம்பாந்தோட்டை முதலாவது இடத்தை பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் தடையின்றி குடிநீர் வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட முடிவுக்குள் மேலும் பலருக்கு குடிநீர் வசதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த வருடம் கூடுதலான மக்களுக்கு குடிநீர் வசதி அளிப்பதற்காக இந்த வருடத்தை விட கூடுதல் தொகை நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வடமேல் மாகாணத்தில் 10 பாதைகளில் புதிய அட்டவணைப்படி பஸ் சேவை

bus.jpgவடமேல் மாகாணத்தில் 10 பாதைகளுக்கான இணைந்த நேர அட்டவணைக்கான பயணிகள் போக்குவரத்து பஸ் சேவையினை அக்டோபர் மாதம் ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக வடமேல் மாகாண பயணிகள் போக்குவரத்து சபையின் தலைவர் சரத்குமார ரணதுங்க தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சரத் குமாரரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

புத்தளம் கல்பிட்டி பாதையில் சேவையில் ஈடுபடும் பயணிகள் பஸ்கள் பல தரிப்பிடங்களில் நீண்ட நேரம் தரித்து நிற்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து மாகாண சபை உறுப்பினர் தாஹிர் விபரித்தார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றும் போது தலைவர் சரத் குமார ரணதுங்க கூறுகையில், இலங்கை போக்குவரத்து சபையுடன் தற்போது பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. இம்மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் இது குறித்த பேச்சுகள் இடம்பெறவுள்ளன.அதனையடுத்து இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் இணைந்த நேர அட்டவணைக்குள் தமது பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் அதி நவீன பீரங்கி

இந்திய ராணுவத்திற்காக, புதிதாக தயாரிக்கப்படட பீஷ்மா எனப்பெயர் கொண்ட  “டி-90′ அதி நவீன பீரங்கிகள்,  நேற்று உத்தியோகபூர்வமாக  பாதுகாப்பு பணிக்காக ஒப்படைக்கப்பட்டன. இதனை உற்பத்திசெய்த சென்னை,ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வளாகத்தில் அதற்கான விழா நடந்தது.  இத்திட்டத்துக்கு ரஷ்யா தொழில்நுட்ப ஒத்துழைபபை வழங்கியுள்ளது.

இதில்,  உள்நாட்டு தொழில் நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப் படுவதால், வெளிநாடுகளில் இருந்து தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படுவது,  5 சதவீதம் குறைந்துள்ளது.  இந்த பீஷ்மா டி-90 பீரங்கி,  21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற அதி நவீன போர் கவச வாகனமாக திகழும் என இந்தியா தெரிவித்துள்ளது

ரொஜர் பெடரர் மூன்றாம் முறையாக சின்சினாட்டி சாம்பியன்

tenis_champ.jpgசின் சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் உலகின் “நம்பர்-1′ வீரரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் ஏ.டி.பி., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் இறுதிப்போட்டியில்  சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்,  செர்பியாவின் நொவாக் ஜோகோவிச்சை சந்தித்தார்.

விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் செட்டை பெடரர் 6-1 என கைப்பற்றினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-5 என சற்று போராடி தன்வசப்படுத்தினார். இறுதியில் பெடரர் 6-1,  7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று,  சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் மூன்றாவது முறையாக (2005, 2007, 2009) சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர்.

சிறைச்சாலைகளுக்கு விசேட ஸ்கானர் இயந்திரம்

சிறைக்கைதிகளை பார்வையிட செல்பவர்கள் கொண்டு செல்லும் பொருட்களை சோதனையிடவென விசேட ஸ்கேனர் இயந்திரம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சுக்கும், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜேகுணவர்த்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் காணப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஹெனத் பெர்னாண்டோ நேற்றுத் தெரிவித்தார்.

எவ்வாறான ஸ்கேன் இயந்திரம் பொருத்துவது அதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை பெறுவது தொடர்பாகவும், இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு பெறுவது தொடர்பாகவும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகும் பட்சத்தில் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளில் இந்த இயந்திரங்களை பரீட்சார்த்தமாக பொருத்தி அது தொடர்பாக ஆராய்ந்த பின்னர் நாடு முழுவதிலும் அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். ஸ்கேனிங் இயந்திரம் பொருத்தப்படுவதன் மூலம் சட்டவிரோத ஆயுதங்கள், பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்வதை தடுக்க முடியும் என்றும் ஹெனத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

வினாத்தாள்களை மாறிக் கொடுத்ததால் உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் குழப்பம்

000stud.jpgக.பொ.த. (உயர் தர) பரீட்சை ஆங்கில வினாத்தாள்களைக் கொட்டிகாவத்தை ராஜசிங்க வித்தியாலயத்தில் மாற்றிக் கொடுத்ததால் குழப்ப நிலையேற்பட்டது. இம்முறை உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பாட வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாகக் கூறப்பட்டு வந்த நிலையிலேயே மேற்படி பாடசாலையில் மேற்பார்வையாளர்களின் தவறால் சனிக்கிழமை குழப்ப நிலையேற்பட்டது.

பரீட்சை நிலையத்தின் மண்டபம் ஏ யில் சனிக் கிழமை காலை ஆங்கில பாடம் பகுதி I ற்குப் பதிலாக பகுதி II வினாத் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. பகுதி I காலை 8.30 மணிமுதல் முற்பகல் 11.30 மணிவரையும் நடைபெறவிருந்தது. ஆனால் பகுதி I ற்குப் பதிலாக பகுதி II வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தப் பாடசாலையின் ஏனைய பரீட்சை மண்டபத்திலிருந்த மாணவர்களுக்குச் சரியான வினாத்தாள் (பகுதி-I) வழங்கப்பட்டுள்ளது. தவறை உணர்ந்து கொண்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள், மாணவர்கள் பகுதி II வினாத்தாளுக்கு விடையளித்ததும் அவர்களை மதிய போசனை இடைவேளைக்கு வெளியே செல்ல அனுமதிக்காது அந்த மண்டபத்தினுள்ளேயே வைத்திருந்ததுடன் ஒரு மணிநேர இடைவேளைக்குப் பின் பகுதி I வினாத்தாள்களை வழங்கியுள்ளனர்.

மூன்றரை கோடி பெறுமதியான சிகரட் வகைகளை சுங்க அதிகாரிகளினால் மீட்பு

cigarette.jpgமூன்றரை கோடி பெறுமதியான சிகரட் வகைகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த சிகரட் வகைகளின் மூலம் அரசாங்கத்திற்கு பாரியளவு வரி வருமான நட்டம் ஏற்பட்டுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது. சட்டவிரோதமாக தருவிக்கப்பட்ட சிகரட் வகைகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
பயணப் பொதி என்ற போர்வையில் பெருந்தொகை சிகரட்டுக்கள் டுபாயிலிருந்து கடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் சிகரட் வகைகளினால் பெரும் நட்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.