சிறைச்சாலைகளுக்கு விசேட ஸ்கானர் இயந்திரம்

சிறைக்கைதிகளை பார்வையிட செல்பவர்கள் கொண்டு செல்லும் பொருட்களை சோதனையிடவென விசேட ஸ்கேனர் இயந்திரம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சுக்கும், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜேகுணவர்த்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் காணப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஹெனத் பெர்னாண்டோ நேற்றுத் தெரிவித்தார்.

எவ்வாறான ஸ்கேன் இயந்திரம் பொருத்துவது அதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை பெறுவது தொடர்பாகவும், இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு பெறுவது தொடர்பாகவும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகும் பட்சத்தில் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளில் இந்த இயந்திரங்களை பரீட்சார்த்தமாக பொருத்தி அது தொடர்பாக ஆராய்ந்த பின்னர் நாடு முழுவதிலும் அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். ஸ்கேனிங் இயந்திரம் பொருத்தப்படுவதன் மூலம் சட்டவிரோத ஆயுதங்கள், பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்வதை தடுக்க முடியும் என்றும் ஹெனத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *