சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

கல்வி அமைச்சுக்கு வழங்கிய காலக்கெடு முடிவடைகிறது 2 ஆயிரம் அதிபர்கள் ராஜிநாமா செய்ய ஆயத்தம்

நீண்டகாலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்திவரும் அதிபர்கள் கல்வியமைச்சுக்கு ஒரு மாதகால அவகாசம் வழங்கிய போதிலும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாததால் சுமார் 2 ஆயிரம் அதிபர்கள் தமது பதவிகளை எதிர்வரும் புதன்கிழமை இராஜிநாமா செய்யவுள்ளனர்.

இது தொடர்பில் கல்விசார் ஊழியர் சங்கத்தின் தேசிய இணைப்பாளர் கே. சதாநந்தலிங்கம் தெரிவிக்கையில்; கடந்த 16 வருடகாலமாக அதிபர்களின் பதவியுயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 25 ஆம் திகதி எமது சங்கம் நடத்திய அதிபர்களின் மகாநாட்டில் அவர்களால் ஏகோபித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதாவது எமது பிரச்சிணைகளை தீர்க்குமாறு கல்வியமைச்சுக்கு ஒரு மாதகால காலக்கெடு வழங்கப்பட்டது. இல்லாவிட்டால் தமது பதவிகளை ராஜிநாமா செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் வலியுறுத்தும் நோக்கில் மாகாநாடு இடம்பெற்ற கொழும்பு தேசிய நூலகத்திலிருந்து விகாரமாதேவி பூங்கா வரை பேரணி நடத்தப்பட்டு சத்தியாக்கிரகமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அதிபர்களின் ஒரு மாதகால அவகாசம் முடிவுறும் தறுவாயிலும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையினையும் கல்வியமைச்சு எடுக்காதநிலையில் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை அதிபர் சேவையில் அதிபர் தரம் வாய்ந்த அதிபர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்யவுள்ளனர்.

முதலில் பெலவத்தை சந்தியில் காலை ஒன்று கூடும் இரண்டாயிரம் அதிபர்கள், கால்நடையாக கல்வியமைச்சுக்கு சென்று கல்வியமைச்சரிடம் தாம் பெற்ற அதிபர் சேவைக்கான நியமனக்கடிதங்களை வழங்கவுள்ளதுடன் தம்மை முன்னர் உள்ளதுபோல் ஆசிரியர் சேவையில் அமர்த்துமாறு கோரவுள்ளனர்.

வருண் காந்தியை கைது செய்ய இடைக்காலத் தடை

20-varun-ganthi.jpgஉத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வருண் காந்தி அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில், முஸ்லிம்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசினார்.

இது குறித்து தேர்தல் கமிஷனின் உத்தரவின் பேரில், வருண் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றதில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதே போல தான் கைது செய்யப்படுவதைத் தவி்ர்க்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது

திலான் சமரவீர சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

samaraweera.jpgஇலங்கை அணி வீரர்களில் திலான் சமரவீர நவலோக்க தனியார் மருத்துவ மனையிலிருந்து சிகிச்சைப்பெற்று வெளியேறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ்ஸின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அணியின் பயுற்றுவிப்பாளர் உட்பட 6 வீரர்கள் காயமடைந்தனர்.

திலான் சமரவீர தொடர்ந்தும் நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது காலில் காணப்பட்ட துப்பாக்கி ரவை சிறிய சத்திர சிகைச்சை மூலம் அகற்றப்பட்டு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள திலான் சமரவீர ஏப்ரல் மாதமளவில் பயிற்சிகளை ஆரம்பிப்பார் என அவரது முகாமையாளர் ஒஸெஇன் சாளி தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. 

கச்சைதீவில் சமய வழிபாட்டுத்தலம்

kachchativu.gifகச்சைதீவு இலங்கைக்கே சொந்தமானதெனவும் அதனைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் புனித பிரதேச அபிவிருத்தியமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல வினாவுக்கு விடையளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கச்சைதீவில் இப்போது சமய வழிபாட்டுத்தலமொன்று அமைக்கப்பட்டுள்ளது.மீனவர்களும் பொது மக்களும் அங்கு தினமும் வந்து வழிபாடுகளை நடத்துகின்றனர். அவர்களையும் அப்பிரதேசத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இருவார காலத்தில் 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் முல்லைத்தீவுக்கு! – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தகவல்

sb_diwarathnass.jpgகடந்த இருவார காலத்தில்; 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஆணையாளர் மேலும் கூறியதாவது,

இந்த 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் இரு கட்டங்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல்மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. முல்லைத்தீவில் துறைமுகம் இல்லாத காரணத்தால் கப்பல் கடலில் நங்கூரமிடப்பட்டு சிறு படகுகள் மூலமே தரையிறக்கப்பட்டன. பின்னர் இக்கப்பல் மூலம் முல்லைத்தீவில் புலிகளிடம் சிக்கியுள்ள நோயாளிகள் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு கடந்த பெப்ரவரி மாதம் முதல் இம்மாதம் 16 ஆம் திகதிவரையில்  4116 நோயாளிகள் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

புலிகளால் அச்சுறுத்தல் இருந்தபோதும் ஒரு மாதத்துக்கு மூன்று முறை இக்கப்பல் மூலம் முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கை பல கஷ்டங்களுக்கும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஆதர்- சி – க்ளார்க் நினைவு தின சொற்பொழிவு இன்று

arthur_c_clarke.jpgசர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞானி ஆதர் சி. க்ளார்க்கின் முதலாவது சிரார்த்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவு தின சொற்பொழிவொன்று இடம்பெறவுள்ளதாக விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்துக்கான ஆதர் சி. க்ளார்க் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவு தின சொற்பொழிவை இந்திய விஞ்ஞானியான கலாநிதி கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் நிகழ்த்துவார். பெங்களுரிலுள்ள உயர் கல்விக்கான தேசிய நிறுவனத்தின் பணிப்பாளரான இவர் இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனங்கள் பலவற்றிலும் பணியாற்றியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரான் தொலைக்காட்சியில் ஸ்லம்டாக்

Slumdog_Millionaire_Sceneஆஸ்கர் விருதுகள் பல பெற்றுள்ள ஆங்கிலத் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தையும், ஹாலிவுடன் திரைப்படமான தி டார்க் நைட் திரைப்படத்தையும் இஸ்லாமிய புத்தாண்டு கொண்டாட்டக் காலத்தில் தாம் தொலைக்காட்சியில் திரையிடப் போவதாக இரான் நாட்டின் அரச தொலைக் காட்சி அறிவித்துள்ளது.

திரைக்கு வந்து சில காலமேயான புது திரைப்படங்களை திரையிடுவது இரான் நாட்டு தொலைக்காட்சியில் வழக்கமேயல்ல. இரானுக்கு வெளியேயிருந்து வரும் பாரசீக மொழி செயற்கைக் கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இருந்து இளைஞர்களின் கவனத்தை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நிருபர்கள் கூறுகின்றனர்.

வருண் காந்திக்கு மேலும் சிக்கல்-2 வழக்குகள்

varun-gandhi.jpgபிலிபித் தொகுதியின் பாஜக வேட்பாளர் வருண் காந்தி முஸ்லீம்கள் குறித்து விஷமத்தனமாக பேசி சிக்கலில் மாட்டியுள்ள நிலையில் மேலும் சிக்கலாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லீம்களைக் கொல்வேன் என்று பேசியது தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான பதட்டத்தை ஏற்படுத்துதல், வன்முறையை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தப் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

முதல் வழக்கைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டவுடனேயே வருண் காந்தி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தனது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நாளை முற்பகல் 11 மணிக்குள் வருண் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வருண் காந்தியின் பேச்சு இடம் பெற்றுள்ள வீடியோ டேப்புகளை தடவியல் சோதனைக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் கலந்து கொண்ட, பேசிய அனைத்து கூட்டங்களின் வீடியோ பதிவுகளையும் கண்டுபிடித்து சமர்ப்பிக்கவும் உ.பி. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: இதற்கிடையே, உ.பி. மாநிலம் பிசால்பூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒரு புதுப் புகார் வருண் காந்தி மீது கிளம்பியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அக்தர், பிசால்பூருக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

ஒலிவாங்கியில் கூறப்படாதவற்றை ஊடகங்களில் வெளியிடத் தடை-சபாநாயகர் எச்சரிக்கை

parliament.jpgஉத்தியோக பூர்வமாக ஒலிவாங்கி முடுக்கிவிடப்படாத வேளையில் உறுப்பினர் ஒருவர் பேசிய விடயத்தையோ, பிரசுரிக்க வேண்டாம் என கூறப்பட்ட விடயத்தையோ பிரசுரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் ஊடக நிறுவனத்திற்காக வழங்கப்படும் பாராளுமன்ற அனுமதியும் ரத்துச் செய்யப்படும் என சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கபண்டார நேற்று அறிவித்தார்.

அத்துடன் ஆளும் தரப்பினரோ, எதிர்த்தரப்பினரோ பாராளுமன்றத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமை யில் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ண, நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஐ.தே.க. குழுக் கூட்டத்தில் குளறுபடிகள் நடந்ததாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டிருந்தன என்று கூறியதுடன், வேண்டுமென்றே தவறான தகவல்கள் வழங்கப்பட்ட தாகவும், நடக்காத ஒரு விடயம் நடந்துவிட்டதாக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபையில் தெரிவித்து ஊடகங் களூடாக பிரசாரம் செய்யப்பட்டது என்று குற்றம் சுமத்தினார்.

எதிர்த்தரப்பு பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியதுடன் பாராளுமன்ற கட்டட தொகுதியில் ஐ.தே.க குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சில காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன. எனினும் அவற்றை திரிவுபடுத்தி சபையில் நடந்த விடயத்தை எடிப் செய்யப்படாத இறுவெட்டுக்களை அனுப்பி ரூபவாஹினியூடாக ஒலிபரப்பினார்கள் என குற்றம் சாட்டினார்.

அமைச்சர் ஜகத் புஷ்ப குமார எம்.பியே பாராளுமன்றத்தில் தவறான செய்தியை பரப்பிவிட்டார் என லக்ஷ்மன் செனவிரட்ண எம்.பி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நான் ஒருபோதும் எதிர்க் கட்சித் தலைவருக்கு அடித்து விட்டார்கள் என கூறவில்லை. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஐ.தே.க. எம்.பி ஒருவர் அவரது தொலைபேசியினூடாக எனக்கு தகவலைத் தந்தார்.

“எதிர்க் கட்சித் தலைவர் எந்நேரத்திலும் தாக்கப்படலாம். இங்கு நிலமை மோசமடைந்து கொண்டு வருகிறது” என்றார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குரிய கடமையாக கருதி இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை சபாநாயகருக்கு அறிய த்தந்தேன் அவ்வளவுதான் என்றார்.

கட்சிக்குள் உட்பூசல்கள் இருக்கின்றன. அதனை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. ஏன் எமது கட்சிக்குள் இப்படி உட்பூசல்கள் இருப்பதாக ஊடகங்கள் வெளி யிடவில்லையா? ஏன் அரச ஊடகம் மட்டும்தானா இந்த விடயத்தை வெளிப்படுத்தின. ரணில் விக்கிரமசிங்கவின் மாமாவின் பத்திரிகை கூடத்தானே இதற்கு முக்கிய த்துவம் கொடுத்திருக்கிறது. என சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.“நடக்காத விடயம் ஒன்றை பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் கூறி அதற்கு பிரசாரம் பெற்றுக்கொடுப்பது தான் தவறு என்கிறேன்” என எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

இவ்வாறு இரண்டு தரப்பினருமே செய்திருக்கிறார்கள்” என சபாநாயகர் தெரிவித்தார். ‘இல்லை’ ‘இல்லை’ என ஜோசப் மைக்கில் கூறியபோது “நானும் எதிர்க் கட்சி பிரதம கொரடாவாக இருந்திருக்கிறேன்” என சபாநாயகர் தெரிவித்ததுடன் ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர எழுந்து நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பேசினார். அவருக்கு ஒலி வாங்கி வழங்கப்படவில்லை. அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியதால் அவருக்கே ஒலிவாங்கி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜகத் புஷ்ப குமாரவுக்கும், தயாசிறி ஜயசேக்கரவுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன. ஒலிவாங்கிகள் வழங்கப் பட்டிருக்கவில்லை.

சபாநாயகர் லொக்குபண்டார சான்றுப்படுத்தப்பட்ட இலங்கை முகாமைத்துவ கணக்காளர் நிறுவக சட்ட மூலத்தை சமர்ப்பித்து பேசுமாறு அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அழைப்பு விடுத்தார். ஒலிவாங்கி அமைச்சர் பந்துலவுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு பேசமுடியாதவாறு சபையில் வாக்குவாதங்கள் நடைபெற்றன.

இந்த சந்தர்ப்பத்திலேயே சபாநாயகர் மேற்படி அறிவித்தலை விடுத்தார். இதனைத் தொடர்ந்து சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது.

பதவியா வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் நோயாளர் குறைகளை கேட்டறிந்தார்

padaviya-hospital.jpgவன்னிப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் காயமடைந்த பொதுமக்களை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று பதவியா மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்டார்.

மோதல்கள் காரணமாக வன்னிப் பகுதியிலிருந்து மேற்படி காயமடைந்த பொதுமக்கள் கடல் மார்க்கமாக புல் மோட்டைப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பதவியா நகருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக சுமார் 70 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வவுனியா சைவப்பிரகாசர் மகா வித்தியாலயத்திலுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய வட மாகாண விசேட செயலணியின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களது குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் அம்மக்க ளின் கோரிக்கைகளை ஆராயும் முகமாக தனது பிரதி நிதிகளை அங்கு நியமித்துவிட்டு உடினடியாக பதவியா நகருக்குச் சென்றார்.

பதவியாவில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களின் உறவினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையத்திற்கு முதலில் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பல்வேறு பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன் அம்மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்கள் மத்தியில் இருந்த கிறிஸ்தவ மத குருமார்களுடன் தற்போதைய வன்னி நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் இம்மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

இதன் பின்னர் பதவியா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் வருகையால் பெரிதும் ஆறுதலடைந்த நோயாளர்கள் தங்களது குறைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.