ஆளுநர் வேதநாயகன்

ஆளுநர் வேதநாயகன்

இளையோரை மீட்டெடுக்க சனசமூக நிலையங்கள் உத்தவேகத்துடன் இயங்க வேண்டும் !

 

இளையோரை மீட்டெடுக்க சனசமூக நிலையங்கள் மீண்டும் உத்தவேகத்துடன் இயங்க வேண்டும் என அளவெட்டி தெற்கு கலைவாணி ஜனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலையை சமயாசாரப்படி திறந்து வைக்கும் நிகழ்வின் போது வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய ஆளுநர், இளையோரை சமூகப் பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுத்தவேண்டும். அவர்களின் திசைமாற்றச் செய்யவேண்டும். சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இத்தகைய வழிகளை இவ்வாறான கிராமமட்ட மக்கள் அமைப்புக்கள்தான் முன்னெடுக்க முடியும். என ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.

 

7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! திருப்பி அனுப்பாமல் அபிவிருத்தி நிதியை பயன்படுத்தவும் !

7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! திருப்பி அனுப்பாமல் அபிவிருத்தி நிதியை பயன்படுத்தவும் !

 

வடக்கிற்கான அபிவிருத்தி நிதியை வினைத்திறனாக பயன்படுத்துங்கள் என அரசாங்க அதிகாரிகளிடம் ஆளுநரும், கடற்தொழில் அமைச்சரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கு 7,328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன், மாகாணசபைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதைச் செலவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் வருகைதரும் நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை அதிகாரிகள் வழங்கவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

பழக்கடைச் சிறுவனிடம் ஆளுநர் பேச வேண்டும் ! தனது அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் !

பழக்கடைச் சிறுவனிடம் ஆளுநர் பேச வேண்டும் ! தனது அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் !

ஆளுநர் வேதநாயகன் விழாக்களில் சொற்பொழிவாற்றுவதோடு நின்று விடாமல் இலஞ்சம் மற்றும் ஊழலில் ஈடும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் நகரப் பகுதியில் தெருவோரம் பாடசாலை மாணவன் ஒருவர் வைத்திருந்த பழக்கடையை அகற்றி யாழ் மாநகரசபை அதிகாரிகள் சர்ச்சையில் சிக்கியிருந்தனர்.

அது தொடர்பான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்தது.

பாடசாலை செல்ல வேண்டிய வயதில் தெருவோரம் பழ விற்பனையில் ஈடுபடும் மாணவனிடம் பழங்களை மாநகரசபை ஊழியர்கள் வழமையாக இலஞ்சமாக பெற்று வந்திருக்கின்றனர். குறிப்பிட்ட தினத்தில் தான் பழங்கள் கொடுக்காமையாலேயே அதிகாரிகள் தனது கடையை அகற்றினர் என்கிறார். மேலும் இரு அதிகாரிகள் தன்னை பிடித்துக் கொள்ள தனக்கு முதுகில் அடிகள் விழுந்ததாகவும் கூறினார்.

இம் மாணவனின் பழக்கடைக்கு விஜயம் செய்த யுரியூப்பர் ரஜித் இடம் அம் மாணவன் இவ்வாறு கூறினார். அவர் மொத்த பழ வியாபாரியான ஒரு முதலாளியிடம் பழங்களை வாங்கி விற்பனை செய்கிறார். அம் மாணவனுக்கு நாளாந்த கூலியாக 2500 ரூபாய் கிடைப்பதாக தெரிவித்தார். இந்த விடயத்தில் மாநாகர சபை அதிகாரிகள் ஏனைய நடைபாதை வியாபாரிகளிடமும் மணிக்கூடு மற்றும் ரிசேர்ட் என இலஞ்சம் வாங்கின்றனர் என்பதைக் கேள்வியுற்றதாகவும் இச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாநகரசபை நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்களை மேற்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்கள் நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடும் அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வழிசமைத்திருக்கின்றது.

அனுர அரசாங்கம் வடக்கு அபிவிருத்தியில் அக்கறை கொண்டுள்ளது – ஆளுநர் வேதநாயகன் !

அனுர அரசாங்கம் வடக்கு அபிவிருத்தியில் அக்கறை கொண்டுள்ளது – ஆளுநர் வேதநாயகன் !

 

மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எமது மாகாணத்தை நாம் துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான palliative care கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஆளுநர், “ மாகாண அபிவிருத்திக்கான இது போன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் இழக்கக் கூடாது.சுயநலம் மலிந்த இந்தக் காலத்தில் மற்றையவர்களுக்கு உதவி செய்பவர்கள் அருகிச் செல்கின்றனர்.

அவ்வாறானதொரு நிலைமையில் மருத்துவமனைக்கு உதவியைச் செய்வதற்கு முன்வந்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. புலம்பெயர்ந்து சென்றாலும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்பும் அவர்களது எண்ணம் மிகப்பெரியது. தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைகள் இன்னமும் நிறைய இருக்கின்றன. அவையும் விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரை: காணியை இழந்தவர்களோடும் விகாராதபதிகளோடும் ஆளுநர் பேச்சுவார்த்தை ! விரைவில் தீர்வு – இழப்பீடு !

தையிட்டி விகாரை: காணியை இழந்தவர்களோடும் விகாராதபதிகளோடும் ஆளுநர் பேச்சுவார்த்தை ! விரைவில் தீர்வு – இழப்பீடு !

 

யாழ். தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது விகாரை அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்பதற்குரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்ததுடன் விகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் தெரியப்படுத்தினர்.

விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தனர்.

காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாரையின் விகாராதிபதியுடனும் ஆளுநர் பேச்சு நடத்திவருகின்றார். அத்துடன் இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பில் புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தையிட்டி விவகாரம் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. பா.உ இராமநாதன் அர்ச்சுனா குறித்த கூட்டத்தில், முழுமைப்படுத்தப்பட்ட விகாரையை இடிப்பது முட்டாள்தனமானது எனவும் தையிட்டி விகாரை விவகாரம் சைக்கிள் கட்சியினரின் அரசியலுக்காக பயன்படுகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஜனாதிபதி அனுரவும் யாழில், மக்களுக்குச் சொந்தமான காணிகள் மக்களுக்கானது, வட மாகாணத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், காணிகளை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தரும் செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி !

ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி !

ஜனாதிபதி அனுராவின் யாழ் விஜயத்தின்போது யாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான விடயங்கள் கேட்டறியப்பட்டு அதற்கான செயற்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுடைய போக்குவரத்தப் பிரச்சினைக்கு பஸ்களை வழங்குவது, தெருக்களைப் புனரமைப்பது, மருத்துவமனை வெற்றிடங்களை நிரப்புவது, யாழ் மக்களுடைய குடிநீர் பிரச்சினை, பொலிஸாரின் குற்றச்செயல்களுக்குத் துணைபோகும் நடவடிக்கை எனப் பல்வேறு விடயங்களும் பேசப்பட்டது. தீர்வுகளும் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரவின் தலைமைத்துவத்தின் மீது வடக்கு மக்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

வடக்கு மக்கள் சார்பாக ஜனாதிபதியை வரவேற்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர்,  ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் இந்தப் பிரதேசத்தில் மிகப் பெரிய மாற்றம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும்,  இந்தப் பகுதி மக்கள் அவர் மீது அதற்காக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அனுர காலத்தில், நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழர்கள் நம்புகிறார்கள் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

ஜனாதிபதி அனுர காலத்தில், நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழர்கள் நம்புகிறார்கள் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார மேம்பாடு தொடர்பிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநரிடம், தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பாகவும் அதன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும், கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துவது தொடர்பிலும், நியூஸிலாந்துத் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் வடக்கு மாகாணத்தில் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பிலும், வடக்கில் அதிகரித்துள்ள உயிர்கொல்லி போதைப் பொருள் பாவனை மற்றும் அதனது தாக்கங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டியதன் அவசியம், மீள்குடியேற்றம், உள்கட்டுமான அபிவிருத்தி தொடர்பிலும் ஆளுநர், தூதுக் குழுவினருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

வீட்டுக்குப் பக்கத்திலேயே பணியிடத்தை கேட்கும் அரச அதிகாரிகள் – ஆளுநர் வேதநாயகன் அதிருப்தி !

வீட்டுக்குப் பக்கத்திலேயே பணியிடத்தை கேட்கும் அரச அதிகாரிகள் – ஆளுநர் வேதநாயகன் அதிருப்தி !
அரசாங்க வேலை கிடைத்தவுடன் தமது வீட்டுக்குப் பக்கத்தில் பணியிடம் கேட்கும் போக்கில் மாற்றம் தேவை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவிலில் நேற்று இடம்பெற்ற (17.01.2025) வடக்கு மாகாண பொங்கல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விவசாயத்தை வருமானம் அதிகம் தரக்கூடிய துறையாக மாற்ற வேண்டும். இன்றைய இளையோருக்கு விவசாயத்தின் மீதான நாட்டம் குறைந்து வருகின்றது. அரசாங்க வேலையையே அவர்கள் கோருகின்றனர். ஓய்வூதியம் மற்றும் பணிச்சுமை குறைவான வேலை என அதை அவர்கள் தெரிவு செய்கின்றார்களோ தெரியவில்லை. குடும்பம் முக்கியமானது. அரச பணியைப் பெற்றுக்கொண்டால் அதையும் சிறப்பாக செய்யவேண்டும் என்றார்.
தாம் நிர்வாக சேவைக்கு நுழைந்த காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகளோ ஏனைய வசதிகளோ இல்லை என்றும் மிகக் கஷ்டமான காலத்திலும் மனநிறைவான, சந்தோசமாக பணியாற்றியதையும் குறிப்பிட்ட ஆளுநர் இன்று பல வசதிகள் இருந்தும் மக்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கவில்லை எனவும் வேதனை வெளியிட்டார்.
அரச அதிகாரிகளுக்கான வருடாந்த இடமாற்றங்கள் வடக்கின் அனைத்து அரச அலுவலகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடமாற்றங்கள் தொடர்பான விடயங்கள் பேசுபொருளாகியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற அபிவிருத்தி குழுகூட்டத்தில் பேசியிருந்த பா.உ ஜெகதீஸ்வரன், நகர்ப்புற ஆசிரியர்கள் பின்தங்கிய கிராமப்புறங்களுக்கு இடமாற்றம் பெற்று சேவையாற்ற செல்வது கிடையாது எனவும் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். வடக்குமாகாண வேலையில்லா பட்டதாரிகளும் அரச வேலை மட்டுமே செய்வோம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்கள் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் வேண்டுகோள் !

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்கள் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் வேண்டுகோள் !

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை திறப்பு விழாவில் தெரிவித்தார்.

பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், பௌதீக வளங்களின் முன்னேற்றம் என்பது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அதேபோன்று தனித்து பௌதீக வளங்களின் முன்னேற்றம் மாத்திரமும் அபிவிருத்தியாகிவிடாது. எங்களின் சேவையை மேம்படுத்தும்போதுதான் அபிவிருத்தி முழுயடையும். எனவே மக்களுக்கு தரமான, அன்பான, விரைவான சேவையை வழங்க முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.

அங்கு மேலும் பேசிய ஆளுநர், கௌரவ ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாக செயற்படுத்தவேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்கவேண்டும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆலயங்கள் நீதிமன்ற வழக்குகளுக்கே அதிகம் செலவு செய்கின்றன – ஆளுநர் வேதநாயகன் !

ஆலயங்கள் நீதிமன்ற வழக்குகளுக்கே அதிகம் செலவு செய்கின்றன – ஆளுநர் வேதநாயகன் !

 

ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்இ அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டன் லூசியம் சிவன் ஆலயத்திலும் இவ்வாறு வழக்குகளில் ஏராளமான நிதி செலவழிக்கப்படுவதான குற்றச்சாட்டு தேசம்நெற் இல் வெளிவந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல ஆலயங்கள் நீதிமன்றம் ஏறி இறங்கி மக்கள் சேவைக்குப் பயன்படுத்து நிதியை வீணடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாகவே வைக்கப்பட்டு வருகின்றது.

 

குறித்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் வேதநாயகன், 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபராக இருந்தமையை நினைவுகூர்ந்து அன்றைய நாட்களில் அம்மையாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார். அன்றைய காலத்தில் ஆலயங்கள் சமூகப் பணிகளை முன்னெடுக்காதிருந்த சூழலில், அம்மையார் அவர்களே அதனைத் தொடக்கி அதன் முன்னோடியாக இருந்ததாகவும் புகழாரம் சூட்டினார். இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை. இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப்படியேறியுள்ளன எனக் குறிப்பிட்டார்.

 

புலம்பெயர் தேசங்களிலிருந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டாலும் ஆலய நிர்வாகங்கள் ஒழுங்காக கணக்கறிக்கைகள் முன்வைப்பதில்லை எனவும் இது பிரச்சினைகளுக்கு அடிநாதமாக இருக்கின்றது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

 

தனது உரையில் நா வேதநாயகன் ஆறுதிருமுருகனை தங்கம்மா அப்பாக்குட்டி அடையாளம் காட்டியதாக எந்த அடிப்படையில் குறிப்பிட்டார் எனத் தெரியவில்லை என அந்நிகழ்வில் கலந்துகொண்ட தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சேவைகளில் விருப்புக் கொண்ட மயில்வாகனம் குமரகுரு. அவர் மேலும் குறிப்பிடுகையில் சிறுமிகள் இல்லத்தில் என்ன நடந்தது தொடர்பான சுயாதீன விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிடுவதுடன் கிளீன் சைவம் என்ற புரஜக்ற்றும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.