இளையோரை மீட்டெடுக்க சனசமூக நிலையங்கள் உத்தவேகத்துடன் இயங்க வேண்டும் !
இளையோரை மீட்டெடுக்க சனசமூக நிலையங்கள் மீண்டும் உத்தவேகத்துடன் இயங்க வேண்டும் என அளவெட்டி தெற்கு கலைவாணி ஜனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலையை சமயாசாரப்படி திறந்து வைக்கும் நிகழ்வின் போது வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய ஆளுநர், இளையோரை சமூகப் பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுத்தவேண்டும். அவர்களின் திசைமாற்றச் செய்யவேண்டும். சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இத்தகைய வழிகளை இவ்வாறான கிராமமட்ட மக்கள் அமைப்புக்கள்தான் முன்னெடுக்க முடியும். என ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.