மே 06 – உள்ளூராட்சி சபைத் தேர்தல் !
இலங்கையிலுள்ள 337 உள்ளூராட்சி சபைளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமானது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.27 மாநகர சபைகள், 36 நகர சபைகள் 274 பிரதேசசபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்புமனு தாக்கல் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, தற்போது அதற்கான திகதி மே 06 தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.