எட்டு மில்லியன் இலங்கை ஊழியப் படையில் பத்து வீதம் பேரே வரி செலுத்துகிறார்கள் !
சுமார் 8 மில்லியன் பேர் ஊழியப் படையில் இருந்தபோதும், சுமார் 800,000 பேர் மட்டுமே வரி வலையின் கீழ் வருவது ஏன் என்று அரசாங்க நிதி பற்றிய குழு நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் மார்ச் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. அதில் தனிநபர் வருமான வரிக்கான (PIT) விடுப்பை ஆண்டுக்கு 1.2 மில்லியன் ரூபாவிலிருந்து 1.8 மில்லியன் ரூபாவாக திகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.