இராமநாதன் அர்ச்சுனா

இராமநாதன் அர்ச்சுனா

வலம்புரியில் நடந்த தாக்குதல்: அர்ச்சுனாவின் முகநூல் பதிவுக்கு எதிராக 500 மில்லியன் மானநஸ்ட்ட வழக்கு !

வலம்புரியில் நடந்த தாக்குதல்: அர்ச்சுனாவின் முகநூல் பதிவுக்கு எதிராக 500 மில்லியன் மானநஸ்ட்ட வழக்கு !

பா உ அர்ச்சுனா இராமநாதன் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் மார் 10 இல் மற்றுமொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பா உ அர்ச்சுனாவும் – கௌசல்யாவும் உணவருந்திக் கொண்டிருந்த போது வம்புசெய்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட ரட்ணம் சிறிகரன் என்ற ஜேர்மன் புலம்பெயர் தமிழர் வழக்குப் பதிவு செய்துள்ளார். இது ஊசி அர்ச்சுனாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவாதி பாலச்சந்திர தினேஸ் 59 வயது ரட்ணம் சிறிகரன் சார்பில் வழக்கைப் பதிவு செய்தள்ளார்.

வலம்புரி சம்பவத்தில் ரட்ணம் சிறிகரன் மற்றும் அவருடைய கார்ச் சாரதி வலம்புரியில் உணவருந்திக் கொண்டிருந்த அர்ச்சுனாவையும் கௌ;சல்யாவையும் அணுகியதும் அது வாக்கு வாதமாகி கார்ச்சாரதியை அர்ச்சுனா சாப்பாட்டு பிளேட்டினால் தாக்கியதும் தெரிந்ததே. அதன் பின்னர் அர்ச்சுனாவும் அவரால் தாக்கப்பட்ட சாரதியும் சமாதானமாகப் போய்விட்டார்கள்.

ஆனால் சம்பவத்திற்குப் பின் பெப்ரவரி 12 இல் அர்ச்சுனா முகநூலில் வெளியிட்ட பதிவில் ரடணம் சிறிகரன் கிரிமினல் செயற்பாடுகளில் தொடர்புடையவர் என்றும் நிதிமோசடிகளில் ஈடுபட்டவர் என்றும் அர்ச்சுனா குற்றம்சாட்டியிருந்தார். அத்தோடு ரட்ணம் சிறிகரனின் மனைவி மற்றும் அவரின் மகளின் படத்தையும் வெளியிட்டு இருந்தார். தன்னுடைய நன்மதிப்பைக் குறைக்கும் இச்செயலுக்காகவே ரட்ணம் சிறிகரன் 500 மில்லியன் இலங்கை ரூபாய் நஸ்ட்ட ஈடு கோரியுள்ளார். அத்தோடு தன்னைப் பற்றி எழுதியவற்றை முகநூலில் இருந்து நீக்க வேண்டும், பொதுத்தளத்தில் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும், மீண்டும் இவ்வாறான பொய்யான விடயங்களைப் பரப்ப மாட்டேன் என எழுத்து மூலமாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ரட்ணம் சிறிகரன் கோரியுள்ளார்.

ரட்ணம் சிறிகரன் வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உதவிகள் வழங்கி வருபவர் என்றும் சம்பவத்திற்கு முன்தினமும் அவர் உதவி செய்த பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டவர் என்றும் தெரியவருகின்றது.

இச்சட்ட நடவடிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு அர்ச்சுனாவுக்கு 14 நாட்கள் உள்ளது. மார்ச் 10 இல் இக்கடிதம் அர்ச்சுனாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது எனத் தெரியவருகின்றது. அர்ச்சுனா ஒரு கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இவ்வழக்கு முக்கியத்துவம் பெற வாய்ப்புள்ளது.

அர்ச்சுனா – கௌசல்யா கூட்டுக்கு தமிழ் மக்களுடன் இருந்த தேன்னிலவு கசக்க ஆரம்பித்துவிட்டது !

அர்ச்சுனா – கௌசல்யா கூட்டுக்கு தமிழ் மக்களுடன் இருந்த தேன்னிலவு கசக்க ஆரம்பித்துவிட்டது !
வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் அர்ச்சுனா – கௌசல்யா ஊசிக்கூட்டை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. சாளினி, சங்கவி, சுவஸ்திகா எனப் பெண்களை விபச்சாரிகள் எனப் பிரச்சாரம் செய்து அவர்களின் நிர்வாணப் படங்களை முகமூடி போட்டுக்கொண்டு வெளியிட்ட அர்ச்சுனா – கௌசல்யா ஊசிக்கூட்டணியின் பிரச்சார ஊடகமாக மாறியுள்ளது ஊழல் ஒழிப்பு அணி வன்னி. இந்தக் கூட்டுக்குள் இருக்கும் மற்றுமொருவர் லண்டனில் வாழும் அர்ச்சுனா அடியான் – ஊசி அடியான். இவர்கள் பெண்கள் மீது நடத்திய மும்முனைத் தாக்குதல்கள் சமூகத்தில் முன்னுக்கு வருகின்ற பெண்களின் நடத்தை மீது களங்கத்தை ஏற்படுத்துவது, அவர்களை மிரட்டிப் பணிய வைப்பது இல்லையேல் கடைசி ஆயதமாக அவர்களை நிர்வாணமாக்கிய படங்களை வெளியிடுவது. இதற்கு மாநகர முதல்வராக போட்டியிடும் கௌசல்யாவும் உடந்தையாக உள்ளார்.
மூகமூடி அணிந்து கொண்டு இந்த இழிசெயலில் ஈடுபடும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியை ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிடுபவர்கள் என்று சான்றிதழையும் கௌசல்யா வழங்கியுள்ளார். அர்ச்சுனாவின் பிரச்சாரப் பீரங்கியான ஊழல் ஒழிப்பு வன்னி யிடம் தன்னைப் பற்றியும் எழுதச் சொன்னதாக சொல்லி பெருமைப்படுகின்றார் அர்ச்சுனா. நீங்களே நடத்தும் முகமூடி வலைத்தளத்திற்கு நீங்களே என்னைப் பற்றியும் எழுதுங்கோ என்று கேட்பீங்களாம். அவர்கள் அதற்கு கும்பிடு போடுவார்களாம். யாழ் மக்கள் எத்தினை பேர் தான் காதில பூ வைப்பீர்கள். எத்தனைதரம் தான் வைப்பீர்கள்.
தற்போது இந்த ஊசிக் கூட்டுத் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ் தேசியக் கட்சிகள் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யுத்தத்திற்குப் பின்னான 15 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்ததால் தான் சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து கதாநாயகனாகத் தோண்றிய அர்ச்சுனாவை மக்கள் நம்ப வேண்டி வந்தது. ஆனால் ஊசி அர்ச்சுனா தான் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை பெண்களுக்கு விபச்சாரப் பட்டம் வழங்கி வாக்களித்த யாழ் மக்களின் முகத்தில் கரி பூசிவிட்டார். அதனை ஒருவர் இவ்வாறு விபரிக்கின்றார்.

எம்.பி அரச்சுனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் நலிந்த ! பம்முகிறார் அர்ச்சுனா !

எம்.பி அரச்சுனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் நலிந்த ! பம்முகிறார் அர்ச்சுனா !

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகர் சில நடவடிக்கை எடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கத்திற்கு எதிராக பாலியல் ரீதியான இழிவான கருத்தை வெளியிட்டதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என கூறியுள்ளார்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தான் அப்படி கூறவில்லை என மறுத்து வருகின்றார். பெண்ணியவாதியும் மனித உரிமைவாதியுமான சட்டத்தரணி சுவாஸ்திகா அருணலிங்கத்தை அரசியல் விபச்சாரி, பல ஆண்களோடு திரிகிறார், விபச்சாரி என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிந்த அவர் தற்போது பம்முகின்றார். எம்பி அர்ச்சுனா சட்டத்தரணி ஸ்வதிகாவை “அரசியல் விபச்சாரி” என பாலியல் ரீதியாக பாராளுமன்றத்தில் சொல்லவில்லை என்று மழுப்பல் கதை சொல்கின்றார். தனது முகநூலில் வசை பாடியதை நாசுக்காக மறைக்கின்றார்.

கடந்த பாராளுமன்ற அமர்வில் வட்டக்கச்சியை சேர்ந்த இளம்பெண் “ சாளினியையே” எம்பி அர்ச்சனா விபச்சாரம் செய்கிறார் என ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விடயம் தொடர்பில் எம்பி அர்ச்சுனா மீது சபாநாயகர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாளினியின் பெயர் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனப் பெண்ணிய வாதிகள் கோரி வருகின்றனர்.

பா உ அர்ச்சுனாவின் இழிவான நடத்தைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட முத்த தமிழ் பத்திரிகையாளரான முன்னாள் தினக்குரல் ஆசிரியர் வீரகத்த தனபாலசிங்கம் லண்டன் ஊடகவியலாளர் எம்என்எம் அனஸ்க்கு வழங்கிய நேர்காணலில் பா உ அர்ச்சுனாவை கண்டித்துள்ளதுடன் இவர் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் எதிர்வு கூறியுள்ளார்.

பூதாகராமாகும் அர்ச்சுனாவின் விவகாரம் – வழக்கறிஞர் ஸ்வஸ்திகா தொடர்பில் பல்டி அடித்தார் எம்.பி அர்ச்சுனா !

பூதாகராமாகும் அர்ச்சுனாவின் விவகாரம் – வழக்கறிஞர் ஸ்வஸ்திகா தொடர்பில் பல்டி அடித்தார் எம்.பி அர்ச்சுனா !

 

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்றைய நாடாளுமன்ற விவாத தொடக்கத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வழக்கறிஞர் சுவஸ்திகா அருள்லிங்கம் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக சுவஸ்திகா அருள்லிங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த நேற்றையதினம் யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு வருகை தந்த எம்.பி அர்ச்சுனாவிடம் இது பற்றி ஊடகவியலாளர் கேட்ட போது, சுவஸ்திகா அருள்லிங்கம் விபச்சாரி எனக் குறிப்பிட்டதற்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும், சட்டத்தரணி சுவஸ்திகா தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் பேசவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் ஓட்டையை தான் பயன்படுத்துகிறேன் பார் என்ற தோரணையில், தான் பெரும் கெட்டித்தனம் செய்வதாக பா உ அர்ச்சனா நடந்துகொள்கின்றார். பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கிளிநொச்சி ரிக்ரொக் பெண்ணான சாளினியை விபச்சாரி என்று அழைத்தார். சாதாரண பெண்ணை அவ்வாறு அழைத்தமைக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இருந்தாலும் பாராளுமன்றத்திற்கு வெளியே சுவாஸ்திகா அருளலிங்கத்தை மீண்டும் மீண்டும் விபச்சாரி என்று சொல்வதற்கு எதிராக என்றாலும் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் தலிபான்கள்: வம்பன்கள், ஊசி அர்ச்சுனா, லண்டன் தமிழ் அடியான், ஊளையிடும் அணி, புலனாய்வுப் புண்ணாக்குகள் – பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்

தமிழ் தலிபான்கள்: வம்பன்கள், ஊசி அர்ச்சுனா, லண்டன் தமிழ் அடியான், ஊளையிடும் அணி, புலனாய்வுப் புண்ணாக்குகள் – பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்

 

பெண்கள் எப்படி வாழ வேண்டும், என்ன படிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வெளியில் வர வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் , யாரை திருமணம் செய்ய வேண்டும், ஏன் யாருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் மற்றும் யாருக்கு பிள்ளை பெற வேண்டும் என்பதை கூட போலி முகவரியுடன் வரும் சமூக வலைத்தளங்கள் முடிவு செய்யத் தொடங்கிவிட்டன. எல்லா மோதல்களிலும் பெண்கள் தான் இறுதியில் இலக்கு வைக்கப்படுவார்கள். அதேபோன்று தான் சமூக வலைத்தளங்களிலும் நடக்கின்றது.

ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா உ அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், வம்பன் டொட்கொம், எஸ் கே கிருஷ்ணா போன்றோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அடாவடித் தனங்கள், தலிபான்களிலும் பார்க்க மோசமானதாக மாறி வருகின்றது. இவர்கள் சமீபகாலங்களில் வெளியிட்டு வரும் பதிவுகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் புகார்கள் அனைத்தும் எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனா, ஹிஸ்புல்லா போன்ற குறைவிருத்தி அரசியல் வாதிகள் தமிழ் – முஸ்லீம் உறவை சிதைக்கின்றனர் !

பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனா, ஹிஸ்புல்லா போன்ற குறைவிருத்தி அரசியல் வாதிகள் தமிழ் – முஸ்லீம் உறவை சிதைக்கின்றனர் !

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா போன்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த போதும் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொள்கின்றனர் எனக் குற்றம்சாட்டுகின்றார் ஓய்வுபெற்ற சட்டத்தரணியும் அரசியல் செயற்பாட்டாளருமான மொகமட் நிஸ்தார். இவர் தேசம்நெற்க்கு முஸ்லீம் விவாவகம் விவாகரத்து பற்றிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார். ஹிஸ்புல்லா அர்ச்சுனாவை பைத்தியம் என்றும் அவருக்கு வைத்தியம் செய்யப்பட வேண்டும் என்று சொல்வதும் அர்ச்சுனா ஹிஸ்-ஃபுல் என்றும் முளையில் எதுவுமில்லை என்று சொல்வதும் ஒன்பது வயதுப் பெண் பிள்ளையோடு உடலுறவுக்கு அனுமதிப்பவன் படித்தவனா நான் படித்தவனா என்றெல்லாம் பேசவது நாகரீகமாகத் தெரியவில்லை என்றார் மொகமட் நிஸ்தார்.

இலங்கையில் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லீம் சட்டம் என மூன்று தனிநபர் சட்டங்கள் உள்ளன எனத் தெரிவிக்கும் மொகமட் நிஸ்தார் விவாவகம் – விவாகரத்து தொடர்பில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சலீம் மஸ்ரூப் அவர்கள் இந்த முஸ்லீம் சட்டத்தை திருத்துவதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளார் அதே போல் தற்போது ரணிலின் கட்சியில் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்றுள்ள பைசர் முஸ்தபாவினுடைய தந்தையும் ஒரு பரிந்துரையை வழங்கியிருந்தார். இதில் எந்த பரிந்துரையை தெரிவு செய்வதென்பதில் முஸ்லீம் சமூகம் ஒரு முடிவுக்கு வரமுடியாதுள்ளனர் என்கிறார் மொகமட் நிஸ்தார்.

அன்றைய பாராளுமன்ற விவாதத்தில் அர்ச்சுனா பேசியது தவறல்ல எனத் தெரிவிக்கும் மொகமட் நிஸ்தார் அவர் விடயத்தை புரியாமல் தெரியாமல் பேசியதே தவறு என்றார். மேலும் முஸ்லீம் சமூகம் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையை இதுவரை நடைமுறைக்கு கொண்டு வராதது தான் இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

தமிழ் – முஸ்லீம் உறவுக்கு சாவு மணி அடிக்கும் பா உ அர்ச்சுனா !

தமிழ் – முஸ்லீம் உறவுக்கு சாவு மணி அடிக்கும் பா உ அர்ச்சுனா !

உளறுவாயனாகிய பா உ அர்ச்சுனா நுனிப்புல் மேய்ந்த கூகிள் அறிவாளியாக வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் – முஸ்லீம் உறவுநிலையை மிகக் கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. நேற்று முன் தினம் தன்னுடைய இஸ்லாமோபோபியா கருத்துக்களைத் தெரிவித்து விட்டு இறுதியில் முஸ்லீம்களை எங்களின் இரத்தம் என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.

நேற்று அதே அர்ச்சுனா முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனக் குரோதத்தை த் தூண்டும் வகையில் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டுள்ளார். பா உ அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சமூகத்தில் உள்ள மலினமான உணர்வுகளைத் தூண்டி மூன்றாம் தர அரசியல் செய்வதாகவே உள்ளது. அதன் உச்சகட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நடந்தேறியது.

பா உ அர்ச்சுனா ஒடுக்கப்பட்ட மக்களோடு இல்லை. அவர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார். தன்னை யாழ் சைவ வேளாள ஆண் ஆதிக்கத்தின் பிரதிநிதியாகவே இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றார். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கவில்லை, கல்வி ரீதியில் பின் தங்கியவர்களை மதிப்பதில்லை, பிரதேச ரீதியில் யாழ் மீதான அதித மேலாதிக்க கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார், பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே கருதி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

கேள்விச் செவியன் அர்ச்சுனா, ஊரைக் குழப்பிய தருணங்கள் – கூகிள் அறிவாளியின் அதிக பிரசங்கித்தனம் !

கேள்விச் செவியன் அர்ச்சுனா, ஊரைக் குழப்பிய தருணங்கள் – கூகிள் அறிவாளியின் அதிக பிரசங்கித்தனம் !
கடந்த வாரம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா ஆர்வக்கோளாறினால் முஸ்லீம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் முஸ்லீம் மக்களுக்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மார்ச் 8 இல் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது 1951 ஆண்டு முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அர்ச்சுனாவும் அழையா விருந்தாளியாக தனது கருத்தை திணித்துள்ளார்.
முஸ்லீம் விவாக விகாரத்துச் சட்டத்தை நுனிப்புல் மேய்ந்த எம்பி அர்ச்சுனா முஸ்லீம்களிடையே 12 வயதிலேயே சிறுவயது திருமணம் இடம் பெறுவதாகவும் அதேநேரம் திருமணம் முடிக்கும் போது மணப் பெண்ணின் சுய சம்மதம் மட்டுமே கருத்தில் எடுக்க வேண்டும் எனவும், விவாகரத்தின் போது ஆணும் பெண்ணும் வெவ்வேறாக கையாளப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அர்ச்சுனாவின் கருத்துக்களை முஸ்லீம் சமூகம் முற்றாகவே நிராகரிக்கின்றது. முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் எந்தவிதமான அடிப்படை அறிவும் இல்லாமல் எம்பி அர்ச்சுனா தமது தனித்துவமான சட்டத்தில் கருத்து வெளியிட்டமையை கண்டிக்கின்றனர்.
அர்ச்சுனா முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு தெரிவித்த கருத்துக்கள் ஏற்கனவே பல கடந்த கால கசப்பான அனுபவங்களால் சிதைந்து போய் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான உறவுவை மேலும் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக இனங்களுக்கான நல்லிணக்கத்திற்காக பாடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லீம் எம்பிக்கள் யாழ்ப்பாண தேச வழமைச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிப்பது எப்படி பொருத்தமற்றதோ அப்படியே எம்பி அர்ச்சுனாவின் கருத்தும் எடுத்துக் கொள்ளப்படும். இதனையே பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சி முஸ்லீம் எம்பிக்களும் அர்ச்சுனாவின் கூற்று தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கு பாராளுமன்றம் இடமளிக்கக்கூடாது என எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் சபையில் வலிறுயுத்தினர். அதேநேரம் ஆளும் கட்சி என்பிபி முஸ்லீம் எம்பியும் பிரதியமைச்சருமான முனீர் முளப்பரும் அர்ச்சுனா உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அர்ச்சுனாவை குறுக்கிட்டு, தெரியாத விடயங்களை கதைக்க வேண்டாம்” எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்த விவகாரத்தில் மகளிர் விவகார அமைச்சர் போல்ராஜ் தெரிவித்த கருத்துக்களும் முஸ்லீம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் ஆராய மல்டி செக்டோரியல் கொமிட்டி ஒன்று உருவாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை நிராகரிக்கும் சட்டத்தரணி நுஸ்ரா ஷாரூக், ஏன் பல துறை பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். நாங்கள் முஸ்லீம்கள். தனித்துவமான இனம். எங்களுடைய முஸ்லீம் பிரதிநிகளை உள்ளடக்கியே இந்த விடயம் கையாளப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார்.
முஸ்லீம் பெண்கள் சார்பில் குரல்கொடுத்த சட்டத்தரணி நுஸ்ரா ஷாரூக் எம்பி அர்ச்சுனா யுஎன்டிபி அறிக்கையை சுட்டிக் காட்டி தெரிவித்த கருத்தை நிராகரிக்கின்றார். நாங்கள் யுஎன்டிபி அறிக்கையை பின்பற்றுபவர்கள் அல்ல. நாங்கள் அல்-குரான்ஜயும் ஹதீஸ்யையும் பின்பற்றுபவர்கள். ஆகவே யாரும் யாருடனும் இருக்கலாம் , விரும்பினால் திருமணம் செய்யலாம், இல்லை பிரியலாம் என்பது எங்களுக்கு பொருந்தாதவைகள் என்கிறார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட எம்.பி மொகமட் தாஹிர், மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எம்பி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்பி சலீம் நளீம் ஆகியோரும் எம்பி அர்ச்சுனா மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.
எம்பி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எமது மார்க்க விடயங்களில் அர்ச்சுனா எம்பி மூக்கை நுழைக்க கூடாது. அவர் சமூக வலைத்தளங்களில் தான் பெயர் ,புகழ் பெற வேண்டும் என்பதற்காக எமது மார்க்கத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நிலையை நாம் காண்கின்றோம். இவர் தனது பைத்தியத்தை போக்க நல்ல வைத்தியத்தை பெற வேண்டும். அவரை சபாநாயகர் புத்தி சொல்லி வழிநடத்த வேண்டும் என்றார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட எம்பி அர்ச்சுனா
இதற்கு பதிலளிக்கையில், பொதுவான மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை மட்டுமே நான் இங்கு பெண்கள் சார்பாக கூறினேன் .இங்கு முஸ்லிம் எம்.பி.க்கள் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றேன்.முஸ்லிம் மதம் என்பது நாங்கள் நினைப்பதுபோன்று சிறிய மதம் அல்ல.ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் மதம். அந்த மதத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்துவதற்கு நாங்கள் யாரும் முயற்சிக்கவில்லை. எமது ரத்தம் அவர்கள். நான் சொன்ன விடயம் சிறுபிள்ளைகளையும் பெண்களையும் மட்டுமே கருதியது. மதத்தை நிந்திப்பதற்காக நான் கூறவில்லை என்று கூறி ஒருவாறு சமாளித்தார். முஸ்லீம் பெண்களுக்கு நீலிக் கண்ணீர் இதே எம்பி அர்ச்சுனா தான் யாழ்ப்பாண என்பிபி எம்பிகள் மூவரையும் பெண் எம்பிக்கள் என கூறியிருந்தார். அவரைப் பொறுத்தவரை பெண்மை என்பது மலினமானது எ‌‌ன்ற ஆணாதிக்க மனோபாவ கருத்தியலாக தான் அக் கூற்று இருந்தது. தன்னை மேதாவியாக காட்டிக் கொள்ளும் வைத்திய கலாநிதிக்கு எல்லா விடயத்திலும் தனக்கிருக்கும் குறையறிவை உணராதவராகவே இருந்து வருகிறார்.
முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் முஸ்லீம் மக்களின் கருத்தும் முஸ்லீம் பெண்களின் கருத்துக்குமே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் ஒரு பிரத்தியேக தனிநபர் சட்டம். அச்சட்டத்தின் வரையறைக்குள் வருபவர்கள் அது தொடர்பில் தமது உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ள முடியும். உலகெங்கும் சமூக வலைத்தளங்களினூடாக பரப்பப்பட்டு வரும் “ இஸ்லாமிய போபியா” தொடர்பில் இலங்கை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்புரிமையை கௌசல்யாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை ! சட்டப்படி பறித்து புளொட் சித்தார்த்தனுக்கு நீதிமன்றம் வழங்க உள்ளது ?

அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்புரிமையை கௌசல்யாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை ! சட்டப்படி பறித்து புளொட் சித்தார்த்தனுக்கு நீதிமன்றம் வழங்க உள்ளது ?

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் எட்டாம் அல்லது ஒன்பதாவது மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவ்வாறான அறிவித்தல்களை இவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படதுமுதல் இருந்தே தெரிவித்து வருகின்றார். இரு வாரங்களுக்கு முன்னரும் தான் பதவிவிலகி கௌசல்யா நரேன்ற்கு இடமளிக்கப்போவதாகத் தெரிவித்து இருந்தார்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக போடப்பட்டுள்ள பொதுநல வழக்கு அவருக்கு எதிராகவே திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இராமநாதன் அர்ச்சுனா சுயேட்சைக் குழவின் தலைவராகவும் இருப்பதால் முறைதவறி தேர்தலில் போட்டிட்டிருந்தால் முறைதவறி நடந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சியே முறைதவறியதாகக் கணிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அக்கட்சியிலிருந்து ஒருவர் அதாவது அடுத்த நிலையில் உள்ள கௌசல்யா நரேன் அந்த இடத்தை நிரப்ப முடியாத நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அதற்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஜனநாயகத் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அப்பாராளுமன்ற உறுப்புரிமை செல்லும் என்கிறார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தன். இதனை நீதிமன்றமே உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த சாம் சம்பந்தன் நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கும் பட்சத்தில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்ற உறுப்பினராவார் என்பதை தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மார்ச் 7 பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பா உ அர்ச்சுனா தான் பதவியை கௌசல்யா நரேன் இடம் ஒப்படைக்க இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் 52 வீதம் பெண்கள் இருந்தாலும் பிரதமரின் கூற்று படி நாடாளுமன்றில் வெறும் 9.8 வீதமான பெண்களே இருப்பதாகவும் இதன்படி நாடாளுமன்றில் பெண்களின் எண்ணிக்கையை 10 வீதமாக மாற்றுவதாக கூறிய அவர் தான் பதவி விலகி அந்த பதவியை பெண்ணொருவருக்கு வழங்கப் போவதாக குறிப்பிட்டார்.

ஆனால் மற்றைய ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் போலவே தன்னுடைய பதவி நிச்சயம் பறிக்கப்படும் என்ற நிலையிலேயே அதனை தான் கௌசல்யா நரேனிற்கு வழங்குவதாக அர்ச்சுனா அறிவிக்கின்றார். பா உ அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு நீதி மன்றில் முடிவெடுக்கப்படும் காலத்திலேயே தன்னுடைய பதவியை அவர் விட்டுக்கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிப் புத்தியை காட்டும் எம்பி அர்ச்சுனாவின் நாத்தடிப்பு !

யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிப் புத்தியை காட்டும் எம்பி அர்ச்சுனாவின் நாத்தடிப்பு !

 

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கைநாட்டு; எழுத வாசிக்க தெரியாதவர் என எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அவமாரியாதையாக நேற்றைய நாடாளுமன்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியிருந்தார்.

சமீபத்தில் அமைச்சர் கப்பலில் தோட்டத் தொழிலாளராக வந்த வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் நாங்கள் அதாவது அர்ச்சுனாவின் யாழ்ப்பாண வம்சாவளியினர் கப்பல் கட்டி விட்ட மேட்டுக்குடியினர் என மட்டம் தட்டி வலைத்தளத்தில் பேசி இருந்தார். அர்ச்சுனா கடற்தொழில் அமைச்சர் மீது காட்டும் வன்மம் தான் வெள்ளாள யாழ்ப்பாண மேட்டுக்குடியைச் சேர்ந்தவன் என்ற மேலாதிக்க மனோபாவத்தின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு எனவே கருதப்படுகிறது. இராமலிங்கம் சந்திரசேகர் கடற்தொழில் அமைச்சாராக வந்ததை அர்ச்சுனாவைப் போன்று குறுந் தமிழ்த்தேசிய வெள்ளாள மேட்டுக்குடியினரும் விரும்பவில்லை. ஒரு மலையகத் தமிழன் அதுவும் ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் யாழ்ப்பாணத்தானை ஆளவா? என்ற காழ்ப்புணர்வை பலர் மனதில் வைத்துள்ளார்கள். எம்பி அர்ச்சுனா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காட்டுகிறார்.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீதான தனது அதிருப்தியை அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தனது பங்கிற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை நாய் என குறிப்பிட்டுள்ளார் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா.

மேலும் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் வடக்கின் சுகாதார நிலை தொடர்பில் பேசிய எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தின் மொத்த சுகாதார அமைச்சின் செலவுக்கு 0.019 வீதம் பிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்தோடு, முதுகெலும்பு இருந்தால் நான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என சுகாதார அமைச்சருக்கு சவால் விடுத்துள்ள எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்திலும், வடக்கு, கிழக்கிலும் சுகாதாரத்துறை ஒழுங்கற்று காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.