பூதாகராமாகும் அர்ச்சுனாவின் விவகாரம் – வழக்கறிஞர் ஸ்வஸ்திகா தொடர்பில் பல்டி அடித்தார் எம்.பி அர்ச்சுனா !

பூதாகராமாகும் அர்ச்சுனாவின் விவகாரம் – வழக்கறிஞர் ஸ்வஸ்திகா தொடர்பில் பல்டி அடித்தார் எம்.பி அர்ச்சுனா !

 

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்றைய நாடாளுமன்ற விவாத தொடக்கத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வழக்கறிஞர் சுவஸ்திகா அருள்லிங்கம் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக சுவஸ்திகா அருள்லிங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த நேற்றையதினம் யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு வருகை தந்த எம்.பி அர்ச்சுனாவிடம் இது பற்றி ஊடகவியலாளர் கேட்ட போது, சுவஸ்திகா அருள்லிங்கம் விபச்சாரி எனக் குறிப்பிட்டதற்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும், சட்டத்தரணி சுவஸ்திகா தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் பேசவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் ஓட்டையை தான் பயன்படுத்துகிறேன் பார் என்ற தோரணையில், தான் பெரும் கெட்டித்தனம் செய்வதாக பா உ அர்ச்சனா நடந்துகொள்கின்றார். பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கிளிநொச்சி ரிக்ரொக் பெண்ணான சாளினியை விபச்சாரி என்று அழைத்தார். சாதாரண பெண்ணை அவ்வாறு அழைத்தமைக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இருந்தாலும் பாராளுமன்றத்திற்கு வெளியே சுவாஸ்திகா அருளலிங்கத்தை மீண்டும் மீண்டும் விபச்சாரி என்று சொல்வதற்கு எதிராக என்றாலும் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *