வலம்புரியில் நடந்த தாக்குதல்: அர்ச்சுனாவின் முகநூல் பதிவுக்கு எதிராக 500 மில்லியன் மானநஸ்ட்ட வழக்கு !
பா உ அர்ச்சுனா இராமநாதன் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் மார் 10 இல் மற்றுமொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பா உ அர்ச்சுனாவும் – கௌசல்யாவும் உணவருந்திக் கொண்டிருந்த போது வம்புசெய்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட ரட்ணம் சிறிகரன் என்ற ஜேர்மன் புலம்பெயர் தமிழர் வழக்குப் பதிவு செய்துள்ளார். இது ஊசி அர்ச்சுனாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
சட்டவாதி பாலச்சந்திர தினேஸ் 59 வயது ரட்ணம் சிறிகரன் சார்பில் வழக்கைப் பதிவு செய்தள்ளார்.
வலம்புரி சம்பவத்தில் ரட்ணம் சிறிகரன் மற்றும் அவருடைய கார்ச் சாரதி வலம்புரியில் உணவருந்திக் கொண்டிருந்த அர்ச்சுனாவையும் கௌ;சல்யாவையும் அணுகியதும் அது வாக்கு வாதமாகி கார்ச்சாரதியை அர்ச்சுனா சாப்பாட்டு பிளேட்டினால் தாக்கியதும் தெரிந்ததே. அதன் பின்னர் அர்ச்சுனாவும் அவரால் தாக்கப்பட்ட சாரதியும் சமாதானமாகப் போய்விட்டார்கள்.
ஆனால் சம்பவத்திற்குப் பின் பெப்ரவரி 12 இல் அர்ச்சுனா முகநூலில் வெளியிட்ட பதிவில் ரடணம் சிறிகரன் கிரிமினல் செயற்பாடுகளில் தொடர்புடையவர் என்றும் நிதிமோசடிகளில் ஈடுபட்டவர் என்றும் அர்ச்சுனா குற்றம்சாட்டியிருந்தார். அத்தோடு ரட்ணம் சிறிகரனின் மனைவி மற்றும் அவரின் மகளின் படத்தையும் வெளியிட்டு இருந்தார். தன்னுடைய நன்மதிப்பைக் குறைக்கும் இச்செயலுக்காகவே ரட்ணம் சிறிகரன் 500 மில்லியன் இலங்கை ரூபாய் நஸ்ட்ட ஈடு கோரியுள்ளார். அத்தோடு தன்னைப் பற்றி எழுதியவற்றை முகநூலில் இருந்து நீக்க வேண்டும், பொதுத்தளத்தில் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும், மீண்டும் இவ்வாறான பொய்யான விடயங்களைப் பரப்ப மாட்டேன் என எழுத்து மூலமாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ரட்ணம் சிறிகரன் கோரியுள்ளார்.
ரட்ணம் சிறிகரன் வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உதவிகள் வழங்கி வருபவர் என்றும் சம்பவத்திற்கு முன்தினமும் அவர் உதவி செய்த பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டவர் என்றும் தெரியவருகின்றது.
இச்சட்ட நடவடிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு அர்ச்சுனாவுக்கு 14 நாட்கள் உள்ளது. மார்ச் 10 இல் இக்கடிதம் அர்ச்சுனாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது எனத் தெரியவருகின்றது. அர்ச்சுனா ஒரு கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இவ்வழக்கு முக்கியத்துவம் பெற வாய்ப்புள்ளது.