SK கிருஷ்ணாவுக்கு இப்போதைக்கு விடுதலையில்லை – அடக்கி வாசிக்கும் யூடியுப்பர்கள் !
வீடு ஒன்றினுள் வீட்டாரின் அனுமதியின்றி அத்துமீறி வீடியோ எடுக்க முற்பட்ட யாழ்ப்பாண யூடியூப்பர் SK கிருஷ்ணா, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அண்மையில் கைதாகியிருந்த கிளிநொச்சி யூடியுபரான DK கார்த்திக் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அண்மைய நாட்களில் உதவி செய்வதாக ஈழத்து யூடியுப் சேனல்களில் பதிவேற்றப்பட்ட பலருடைய வீடியோக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.