அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்புரிமையை கௌசல்யாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை ! சட்டப்படி பறித்து புளொட் சித்தார்த்தனுக்கு நீதிமன்றம் வழங்க உள்ளது ?

அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்புரிமையை கௌசல்யாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை ! சட்டப்படி பறித்து புளொட் சித்தார்த்தனுக்கு நீதிமன்றம் வழங்க உள்ளது ?

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் எட்டாம் அல்லது ஒன்பதாவது மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவ்வாறான அறிவித்தல்களை இவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படதுமுதல் இருந்தே தெரிவித்து வருகின்றார். இரு வாரங்களுக்கு முன்னரும் தான் பதவிவிலகி கௌசல்யா நரேன்ற்கு இடமளிக்கப்போவதாகத் தெரிவித்து இருந்தார்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக போடப்பட்டுள்ள பொதுநல வழக்கு அவருக்கு எதிராகவே திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இராமநாதன் அர்ச்சுனா சுயேட்சைக் குழவின் தலைவராகவும் இருப்பதால் முறைதவறி தேர்தலில் போட்டிட்டிருந்தால் முறைதவறி நடந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சியே முறைதவறியதாகக் கணிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அக்கட்சியிலிருந்து ஒருவர் அதாவது அடுத்த நிலையில் உள்ள கௌசல்யா நரேன் அந்த இடத்தை நிரப்ப முடியாத நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அதற்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஜனநாயகத் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அப்பாராளுமன்ற உறுப்புரிமை செல்லும் என்கிறார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தன். இதனை நீதிமன்றமே உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த சாம் சம்பந்தன் நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கும் பட்சத்தில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்ற உறுப்பினராவார் என்பதை தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மார்ச் 7 பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பா உ அர்ச்சுனா தான் பதவியை கௌசல்யா நரேன் இடம் ஒப்படைக்க இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் 52 வீதம் பெண்கள் இருந்தாலும் பிரதமரின் கூற்று படி நாடாளுமன்றில் வெறும் 9.8 வீதமான பெண்களே இருப்பதாகவும் இதன்படி நாடாளுமன்றில் பெண்களின் எண்ணிக்கையை 10 வீதமாக மாற்றுவதாக கூறிய அவர் தான் பதவி விலகி அந்த பதவியை பெண்ணொருவருக்கு வழங்கப் போவதாக குறிப்பிட்டார்.

ஆனால் மற்றைய ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் போலவே தன்னுடைய பதவி நிச்சயம் பறிக்கப்படும் என்ற நிலையிலேயே அதனை தான் கௌசல்யா நரேனிற்கு வழங்குவதாக அர்ச்சுனா அறிவிக்கின்றார். பா உ அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு நீதி மன்றில் முடிவெடுக்கப்படும் காலத்திலேயே தன்னுடைய பதவியை அவர் விட்டுக்கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *