இராமநாதன் அர்ச்சுனா

இராமநாதன் அர்ச்சுனா

அர்ச்சுனா – கஜேந்திரகுமார் – தமிழ்தேசியம் ஆய்வாளர் வி சிவலிங்கத்துடனான நேர்காணல்

அர்ச்சுனா – கஜேந்திரகுமார் – தமிழ்தேசியம்

ஆய்வாளர் வி சிவலிங்கத்துடனான நேர்காணல்

 

 

தையிட்டி விகாரையை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வுகள்..? பா.உ அர்ச்சுனாவின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான அதிருப்தி, பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஜனநாயக விரோத கட்சி நடைமுறை, சுகாஸ் போன்றோரின் உசுப்பேற்றும் அரசியல், மீண்டும் பாசிச பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள தமிழ்தேசியத்தின் எதிர்காலம் என்ன..? என பல விடயங்களை தேசம் ஜெயபாலனுடன் கலந்துரையாடுகிறார் மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம்!

 

தையிட்டி விகாரையை உடைக்க வேண்டும் ! பா உ கஜேந்திரகுமார் – கட்டிய தையிட்டி விகாரையை உடைக்க முடியாது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் ! பா உ அர்ச்சுனா

தையிட்டி விகாரையை உடைக்க வேண்டும் ! பா உ கஜேந்திரகுமார் – கட்டிய தையிட்டி விகாரையை உடைக்க முடியாது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் ! பா உ அர்ச்சுனா

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முரண்பாடு ஏற்பட்டது. தையிட்டியில் கட்டப்பட்ட விகாரை சட்;டவிரோதமானது என்றும் அதனை உடைத்து அப்புறப்படுத்தி காணியை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் மாவட்ட அபிவிவிருத்திக் கூட்டத்தில் தெரிவித்தார். அதனை உடனடியாக நிராகரித்து, எந்த மதமாக இருந்தாலும் கட்டிய வழிபாட்டுத்தலத்தை உடைப்பது தவறு என்றும் தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்வதை நிறுத்தமாறு பா உ அர்ச்சுனா இராமநாதன், பா உ கஜேந்திரகுமாருக்குத் தெரிவித்தார். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கி பிரச்சினையைத் தீர்க்குமாறும் இதையெல்லாம் தங்களுடைய அரசியல் கட்சி நலன்கனுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரினார்.

தையிட்டி விகாரை தொடர்பில் தேசம்நெற்க்கு நேர்காணல் வழங்கிய வணக்கத்துக்குரிய மாத்தளை சுனித்தா ஹமத்துரு அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே இனங்களிடையே முரண்பாடுகளை வளர்ப்பதாகவும், தான் தையிட்டி விகாரைக்கு நியமிக்கப்பட்டால் மக்களோடு பேசி அவர்களுக்கான நஸ்டஈட்டைப் பெற்றுக்கொடுத்து இப்பிரச்சியைனைத் தீர்த்து வைப்பேன் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டியில் விகாரைக்கு உரித்தான காணி இருந்தும் 6 ஏக்கர் தனியார் காணி ஆக்கிரமிக்கபட்டு விகாரை கட்டப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் வீடு கட்டினால் இடிக்க சொல்லுகின்றனர். ஆனால் விகாரை விவகாரம் தொடர்பில் கட்ட முன்பே சொல்லப்பட்டும் அது கட்டப்பட்டுள்ளது. எனவே இதை விவகாரத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என கஜேந்திரகுமார் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடி சங்கிகளின் துணையோடு பள்ளிவாசலை உடைத்து இராமர் கோயில் கட்டிய பாணியில் ஒரு இன மதக் கலவரத்தை கஜேந்திரகுமார் மனக்கண்ணில் ஓட்டுகின்றார் என்கிறார் பாரிஸ் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சோலையூரான்.

இதற்கு பதிலளித்த ஆளுநர்.நா வேதநாயகன் விகாரை தொடர்பில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் விகாரைக்குரிய காணியை மாற்றீடாக ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றார்.

ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதை ஏற்க மறுத்ததுடன் அந்த விடயம் தொடர்பில் இன்னும் ஆழமாக மக்களுடன் தங்கள் முன் கலந்துரையாட வேண்டும் என்றார்.

இதன் போது குறுக்கிட்ட இராமநாதன் அர்ச்சுனா, இவர்கள் தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றார்கள். முடிந்த கோவிலை இடிக்கச் சொல்வது முட்டாள்தனமானது. கட்டிய கோவிலை அப்படியே வைத்துக்கொண்டு அதற்குரிய நட்டஈட்டைக் வழங்கி விகாரைக்குரிய காணியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அத்தோடு இந்த தையிட்டிப் பிரச்சினை முடிந்ததும் இவர்களுடைய பாராளுமன்றக் கதிரை பறிக்கப்படும் என்றார். அர்ச்சுனாவுடைய கருத்தை ஜனாதிபதி சிரித்தபடி கேட்டமையை அவதானிக்க முடிந்தது.

பா உ கஜேந்திரகுமார் இனவாதத்தைத் தூண்டி இன்னுமொரு இன, மதப் பிரச்சினையை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கின்றார் என்றும் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான் தெரிவித்தார். தமிழ் மக்கள் எந்த ஒரு சமூகத்திற்குமோ மதத்திற்குகோ எதிராகச் செயற்படவில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகிறோம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தான் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு நேரம்பார்த்துக்கொண்டுள்ளனர்.

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு 

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு
இலங்கை அரசியலில் இருந்து விரைவில் விலகப் போவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை. தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன்” என தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு அனுராதபுரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் காவல்துறையினரால் கைதான பா.உ அர்ச்சுனா, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஒருபுறம் இதுவரை ஜனநாயக தேர்தலில் வாக்களிக்காத ஒரு நபரை யாழ்ப்பாண மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். மறுபுறம் புலிகளின் காலத்தில் தான் ஒரேநாளில் எழுபத்து ஐந்து தடவைகள் கள்ள வாக்குகள் அளித்த சிறீதரனை தெரிவுசெய்துள்ளார்கள் என குறைபடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பா உ அர்ச்சுனாவை தேடி பிரச்சினைகள் வருகிறதா ? அல்லது பிரச்சினைகளை தேடி அவர் போகிறாரா ?  

பா உ அர்ச்சுனாவை தேடி பிரச்சினைகள் வருகிறதா ? அல்லது பிரச்சினைகளை தேடி அவர் போகிறாரா ?

மீண்டும் போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக சென்றவேளை, அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகள் பொருத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த காணொளியில் பொலிசாருடன் தர்க்கம் செய்யும் பா உ இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டை தராதது அரசாங்கத்தின் பிழை. நீ என்ன படித்திருக்கிறாய்? சிங்கள எம்.பி ஒருவரை உன்னால் நிறுத்த முடியுமா? ஜனாதிபதி அனுர குமாரவின் வாகனத்தை நிறுத்துவியா? ஜனாதிபதி அனுரtpனால் தான் நாங்கள் சொந்த வாகனத்தில் பாராளுமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது என தனது ஆவேசத்தை வெளிப்படுத்துவதை அக்காணொலி காட்டுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதனிடையே பாஉ அர்ச்சுனா கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற அமர்விலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நேற்றைய தினம் பா உ அர்ச்சுனா தனக்கு பேசுவதற்கு நேரம் தரவில்லை என முறைப்பாடு செய்துள்ளார்.

கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊசி அர்ச்சுனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்று அதன் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார்.

இதன்போது அவர் கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை !

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ஆம் திகதி உத்தரவிட்டது.

 

இன்றையதினம் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

 

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அர்ச்சுனா – குவிந்த மக்கள் – ஒருவர் கைது !

வைத்தியர் அர்ச்சுனா விடுப்பில் கொழும்பு சென்றிருந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம் மீண்டும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலைக்கு வருகை செய்துள்ளார்.

இதனால் சாவகச்சேரி வைத்தியசாலை  வளாகத்திற்கு முன்பாக இன்று (15.7.2024) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது விடுமுறை காலம் முடிந்து இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், அவரை வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடினர்.

குறித்த பகுதிக்குள் காரணம் ஏதுமின்றி எவர் ஒருவரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்றும், தங்களது கட்டுப்பாட்டில் சாவகச்சேரி வைத்தியசாலையை காவல்துறையினர் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினரின் இந்த செயற்பாடு குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விசாரணைக் குழு அமைக்கப்பட்டு , சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(09.07.2024) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த விடயத்தினை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது,

“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக கடந்த ஜீன் மாதம் நியமிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், அங்கு நிலவி வந்த நிர்வாக சீர்கேடுகளையும், குறைபாடுகளைம் அடையாளம் கண்டு அவற்றை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில், பெண் நோயியல் பிரிவு, சந்திர சிகிச்சை பிரிவு, ஐ.சி.யு. பிரிவு ஆகியவற்றை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடம் கடந்த 14 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததுடன், நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அவற்றை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வைத்திய அத்தியட்சகர், முதற் கட்டமாக ஐ.சி.யு. மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியவற்றை செயற்படுத்தியுள்ளார்.

மேலும், சந்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் சத்திர சிகிச்சை பிரிவை இயக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதேபோன்று, குறித்த வைத்தியசாலையில் உயிரிழப்பவர்களின் உடல்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், அதனை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேற்கொண்டு, பொது மக்களுக்கு ஏற்பட்டு வந்த தேவையற்ற அசௌகரியங்களை தடுப்பதற்கும் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், மருந்துப் பொருட்கள் உரிய களஞ்சியப்படுத்தல் ஏற்பாடுகள் இன்றி, தரையில் போடப்பட்டிருந்ததுடன், குறித்த வைத்தியசாலையில் 22 வைத்தியர்கள் கடமையாற்றி வந்ததுடன், அவர்களுள் பெரும்பாலானவர்கள், மாதத்தில் 10 நாட்கள் மாத்திரமே வைத்தியசாலையில் கடமையாற்றியுள்ளனர்.

இவ்வாறான பல்வேறு சீர்கேடுகள் மற்றும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு வைத்திய அத்தியட்சகர் முன்னெடுத்த முயற்சிகளை விரும்பாத சக்திகள், அங்கு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

இவை அனைத்தையும் அறிந்து கொண்ட பொது மக்கள் பாரிய போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.

எனவே, குறித்த விவகாரம் தொடர்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.