இராமநாதன் அர்ச்சுனா

இராமநாதன் அர்ச்சுனா

சாவகச்சேரியில் பாராளுமன்ற பொடியன்களை திருத்திய சாவகச்சேரி மக்கள் !

சாவகச்சேரியில் பாராளுமன்ற பொடியன்களை திருத்திய சாவகச்சேரி மக்கள் !

நேற்றைய தினம் மார்ச் 27 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணநாதன் தலைமையில் நடைபெற்ற சாவகச்சேரி பிரதேச சபை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் பெரியளவிலான முரண்பாடுகள் இன்றி சுமூகமாக நடைபெற்று முடிந்தது. அவ்வப்போது எம்பி இளங்குமரனுக்கும் எம்பி அர்ச்சுனாவுக்கும் முட்டிக் கொண்டாலும் இருவரும் நகைச்சுவையோடு ஆக்கபூர்வமாக கூட்டத்தை நடத்தி முடித்தனர். எம்பி அர்ச்சுனா இராமநாதன் எப்பவும் போல மூச்சுக்கு முன்னூறுதரம் நான் வைத்தியர் நீ பில் போடுகிறனி என மற்றவர்களின் தொழிலை தரம்தாழ்த்தி கதைத்தார். எம்பி இளங்குமரனும் உடனடியாக துடுக்காக பதில் கொடுத்துக் கொண்டே இருந்தார். சில இடங்களில் எம்பி இளங்குமரன் வம்புக்கு அலைகிறவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தார். இப்படி எம்பி இளங்குமரனும் எம்பி அர்ச்சுனாவும் வாயாடிக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் குறுக்கிட்டு கண்டிக்க வேண்டியும் ஏற்பட்டது.

எம்பி இளங்குமரன் கருணாந்தன் தலைமை ஏற்று நடத்திய முதலாவது கூட்டம் சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற முக்கியமான தீர்மானத்துடன் முடிவடைந்துள்ளது. 60 கிராம சேவகர் அலுவலர் பிரிவை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையின் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு சாவகச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ,, சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாக “ பிரிக்க கூட்டத்தில் கலந்து கொண்ட ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உட்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்தனர்.

எம்பி அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி வைத்தியசாலையை பிரச்சினைகளை முன்னிறுத்தியே மக்கள் மத்தியில் பிரபல்யமானார். அந்தவகையில் சாவகச்சேரிப் பிரதேசத்திலேயே அவருக்கு அதிகளவான வாக்குகள் கிடைத்து அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். அதற்கேற்ப நேற்றைய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு மக்களின் கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார். சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான கோரிக்கைகளை சாவகச்சேரி பதில் வைத்தியசாலைப் பணிப்பாளர் ரஜீவ் கோபாலமூர்த்தி முன்வைத்த போது, அர்ச்சுனா தனது வழமையான குதர்க்க கேள்விகளை தவிர்த்துக் கொண்டு பொறுப்போடு நடந்து கொண்டார்.

வைத்தியர் ரஜீவ் கோபால மூர்த்தியின் நிர்வாகத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை தூய்மையாக உள்ளதாகவும் சிறப்பாக இயங்குவதாகவும் பாராட்டினார். அதேநேரம் எம்பி இளங்குமரனும் மகப்பேறு மருத்துவர் உள்ளாரா? , மகப்பேறு பிரிவு இயங்குகிறதா?, சத்திர சிகிச்சைப்பிரிவு இயங்குகிறதா? அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் உள்ளார்களா? என உருப்படியான கேள்விகளைக் கேட்டு மக்களுக்கும் அறியும்படியாக தகவல்களைப் பெற்றுக் கொடுத்தார். ஒருவகையில் சாவகச்சேரி வைத்தியசாலை ஓரளவு சீராக இயங்க வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவும் காரணம் என சாவகச்சேரி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் கூடுதல் கரிசனை காட்டிய எம்பி இராமநாதன் அர்ச்சுனா, சில வாக்குறுதிகளையும் கொடுத்தார்.

மேலும் நேற்றைய சாவகச்சேரி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அப்பிரதேச வீதி அபிவிருத்தி, இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுப்பு, சாவகச்சேரி சந்தைத் தொகுதி கடைகள் குத்தகை விவகாரம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் தனியார் காணிகள் கையகப்படுத்தப்பட்டு விற்கப்படும் விவகாரம் எனப் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

IBC கந்தையா பாஸ்கரனின் “றீச்சா” பண்ணைக்கு ஏக்கர் கணக்கில் வந்த காணிகளின் பின்னணி தொடர்பிலும் நிலவும் சர்ச்சையும் குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் தமிழர் எஸ்.கே. ரி. நாதன் கிளிநொச்சியில் முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் நடத்துகிற போர்வையில் விடுதலைப் புலிகளின் பராமரிப்பில் பாவணையில் இருந்த பெருந்தொகையான ஏக்கர் நிலங்களை ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவில் கையகப்படுத்தியிருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சட்டவிரோதமாக மக்கள் காணிகள் அபகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இவ்வாறு வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமானதாகும்.

கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டம் – அடக்கி வாசித்த எம்.பி இராமநாதன் அர்ச்சுனா 

கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டம் – அடக்கி வாசித்த எம்.பி இராமநாதன் அர்ச்சுனா

கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில், வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, விவசாயம், கல்வி, நீர்ப்பாசனம் சம்பந்தமான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், பிரதேச செயலாளர், மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து நல்லூர் பிரதேச செயலக கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆகியவற்றில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா பலத்த குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த போதும் கூட கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அமைதி காத்ததுடன், முக்கியமான விடயங்களை நீங்கள் முன்வைப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என எம்.பி அர்ச்சுனாவை நோக்கி எம்.பி ரஜீவன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ் முஸ்லிம் சிவில் அமைப்பு பொலிஸில் முறைப்பாடு !

எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ் முஸ்லிம் சிவில் அமைப்பு பொலிஸில் முறைப்பாடு !

 

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு எதிராக தனது முறைப்பாட்டை பொலிஸ் மா அதிபரிடம் முன்வைத்துள்ளதாக யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் தாஹா ஐன்ஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த திங்கள் சபாநாயகரை சந்தித்து அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்று அளித்திருந்தோம். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் முஸ்லிம் சமூகம் குறித்து அவர் சில கருத்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது அத்தோடு காவல்துறை திணைக்களம் இது தொடர்பில் நடவடிக்கை என நாம் நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் வலிகளை உணராத கோமாளியின் பன்னாடைத் தனமான கிளுகிளுப்புப் பேச்சுக்கள் !

போராட்டத்தின் வலிகளை உணராத கோமாளியின் பன்னாடைத் தனமான கிளுகிளுப்புப் பேச்சுக்கள் !

 

எண்பதுக்களில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 வரையான நீண்ட நெடிய பாதையைக் கொண்டது. அப்போராட்டம் பற்றிய விமர்சனங்கள் பல இருந்தாலும் அதில் செய்யப்பட்ட அர்ப்பணிப்புக்களை யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது. போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் மக்களையும் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டும், மக்களைப் போராட்டத்தின் பங்குதாரர்களாக்க வேண்டும் என்பது எந்த வகையான போராட்டத்தினதும் அத்திவாரமாக இருந்தது. அதற்காக மக்களுடன் நெருங்கிப் பழகுவது, மக்களோடு மக்களாக வாழ்வது, அவர்களிடமே வாங்கி உண்பது இதுவெல்லாம் விடுதலைப் போராட்டங்களின் முக்கிய இயல்புகள்.

ஆனால் போராட்டத்தையே கூகுளில் தேடிக் கற்றுக்கொண்ட ஒரு உதவாக்கரைக் கூட்டம் தற்போது உருவாகி வருகின்றது. இதனையெல்லாம் கேவலமானதாக சித்தரிக்கின்றனர். ஊசி அர்ச்சுனா யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பா உ இளங்குமரனைக் குத்திப் பேசும் போது நீ வீடு வீடாகப் போய் கொடிவித்து எம்பி யான மாதிரியோ மாதிரியோ. நான் எம்பிபிஎஸ் என்று தன்னுடைய வர்க்க குணாம்சத்தை வக்கிரமாக வெளிப்படுத்தினார்.

மக்களோடு மக்களாக பணியாற்றாததாலேயே தமிழ் தேசியம் தனது கடைசி மூச்சில் உள்ளது. ஆனால் ஊசி அர்ச்சுனாவோ மக்களோடு மக்களாக பணியாற்றுவதை கேவலமாக சித்தரிக்கின்ற தனது மனநிலையைப் பொது வெளியில் கூச்சமின்றிச் சொல்கின்றார். அர்ச்சுனா போன்ற குறைவருத்தியுடையவர்களால் தமிழ் தேசியம் தலைமை தாங்கப்படுவதால் சாதாரண மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். கொழுத்துகின்ற வெய்யிலில் வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப் போன அடிமைத்தனத்தின் குறியீடான ரையைக் கட்டிக்கொண்டு குரைப்பதால் தான் தமிழ் மக்கள் இதுகள் தங்களைக் கடித்துவிடும் என்ற அச்சத்தில் தள்ளியே நிற்கின்றனர்.

இதற்குள் ஊசி அர்ச்சுனா விடும் இன்னுமொரு உல்டா என்ன வென்றால் நான் அரசியலை விட்டுவிட்டுப் போனால் டொக்டர் தொழில் இருக்கு, இலங்கையில் இல்லாவிட்டால் வெளிநாட்டுக்கு சென்று சொகுசாக செற்றிலாகி விடுவேன் என்பதாகும். ஊசி அர்ச்சுனா நீங்கள் வெளிநாடுகளில் வந்து வேலை செய்வதற்கு உங்களுடைய முன்னைய வேலையிடத்திலிருந்து நற்சான்றிதழ் இருக்க வேண்டும். அதை எந்த மருத்துவமனை உங்களுக்கு வழங்கும். தற்போது உங்களுடைய பரீட்சையிலும் நீங்கள் பெயிலாகிவிட்டீர்கள்.

மருத்துவருக்கு நல்ல பண்புகள் இருக்க வேண்டும். உங்கள் மீது வழக்குகள் மட்டும் தான் இருக்கின்றது. அதில் அரைவாசி வழக்குகள் மருத்துவர்களால் போடப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சுனா வெளிநாட்டுக்கு வந்தால் சில தொழில் பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நோயாளிகள், சக ஊழியர்கள் அவர்கள் கக்கூஸ் கழுவுவர்களாக இருந்தாலும் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். நீ என்ன படிச்சனி, எம்பிபிஎஸ் படிச்ச என்னிலும் பார்க்க உனக்கு கனக்கத் தெரியுமோ என்றெல்லாம் கேட்க முடியாது.

அர்ச்சுனா தன்னுடைய யூரியூப்பை நம்பி மக்கள் விரோதியாகாமல் தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவரைக்கும் தன்னுடைய அரசியலுக்கு இன்னொருவரை வென்றெடுக்க வக்கற்ற ஒருவராகவே அர்ச்சுனா இருக்கின்றார். அவரோடு பயணிப்பார் என்று நம்பப்பட்ட கௌசல்யா நரேந்திரன் தற்போது வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உண்மையில் என்ன நடந்தது. ஒரு சட்டத்தரணியாக கௌசல்யா நரேந்திரன் மக்களிடம் வந்து பேச வேண்டும்.

தன்னுடைய ஆசிரியர் வழங்கிய குற்றச்சாட்டை வைத்து சபையை பிழையாக வழிநடத்துகின்றார் அர்ச்சுனா மின்சாரசபை அதிகாரி குற்றச்சாட்டு !

தன்னுடைய ஆசிரியர் வழங்கிய குற்றச்சாட்டை வைத்து சபையை பிழையாக வழிநடத்துகின்றார் அர்ச்சுனா மின்சாரசபை அதிகாரி குற்றச்சாட்டு !

 

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மின்சார சபை அதிகாரி ஒருவர் பா உ அர்ச்சுனாவுக்கு முகத்தில் அறைந்தது போன்று சில பதில்களையும் வைத்தார். தன்னுடைய முகத்தை மிக இறுக்கமாக வைத்திருந்த அந்த அதிகாரி , ஊசி அர்ச்சுனாவுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் அவருக்கு வழங்கிய குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு ஊசி அர்ச்சுனா இந்த சபையையும் நாட்டையும் தவறாக வழிநடத்துவதாக அர்ச்சுனாவின் முகத்தில் அறைந்தாற் போல் குற்றம்சாட்டினார்.

அரசியல் விடயங்கள் கதைக்க வேண்டாம் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தாண்டி யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பற்றி விவாதிக்க வேண்டிய இடத்தில் அதிகாரிகளை கூப்பிட்டு வைத்து அவமானம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டினார். மேலும் இதனை கண்டித்து ஆக்க பூர்வமாக நடக்காத கூட்டத்தை விட்டு தான் வெளியேறுவதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஏன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடையில் வெளியேறி ஸ்ரன்ட் அடிக்க வேண்டும். எம்பி சிவஞானம் சிறிதரன் அரசாங்க அதிகாரிகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று கொந்தளித்தன் பின்னணியில் கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்பே காரணமாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள விடயத்துக்கு வெளியேறினால் அது தன்னுடைய பெயரைப் பாதிக்கும் என்பதால் இந்த விடயத்தில் அரச அதிகாரிகளுக்காக பா உ சிறிதரன் வெளிநடப்புச் செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் தான் ஊசி அர்ச்சனா தமிழ் பெண்கள் சிலரை விபச்சாரிகள் என்று விமர்சித்ததற்கு பாராளுமன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பா உ சிறிதரன் அதனைக் கண்டித்து தமிழ் பெண்களை விபச்சாரிகள் என்று ஊசி அர்ச்சுனா சுட்டிக்காட்டியதை கணக்கெடுக்காது, சபாநாயகர் அர்ச்சுனாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைக் கண்டித்திருந்தார். நாங்கள் தமிழ் தேசியத்தின் தூண்கள் என்றார். இப்ப மீண்டும் மல்லுக்கட்டுகின்றனர்.

அர்ச்சுனா ஒரு குழப்படிகாரப் பொடி: அர்ச்சுனா குரைக்கின்றார் என்பதற்காக பொறுப்பானவர்கள் குரைக்கக் கூடாது !

அர்ச்சுனா ஒரு குழப்படிகாரப் பொடி: அர்ச்சுனா குரைக்கின்றார் என்பதற்காக பொறுப்பானவர்கள் குரைக்கக் கூடாது !

பள்ளிக்கூடங்களில் எல்லா வகுப்பிலும் ஓரிரு சிறுபிள்ளைத்தனமான குறளிவித்தை செய்யும் மாணவர்கள் இருப்பார்கள். அவ்வாறான மாணவர்களை பக்குவமாகக் கையாள்வது ஆசிரியருடைய பொறுப்பு . அதேபோல கூட்டத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை கையாள்வது சபையின் முதல்வருடைய பொறுப்பு. அர்ச்சுனா ஒரு சமூகம் பற்றிய புரிதல் அற்ற உளவியல் பிரச்சினைகள் கொண்ட குறளிவித்தைக்காரன். அர்ச்சுனா கூட்டங்களில் குரைக்கின்றார் என்பதற்காக மற்றவர்களும் குரைப்பது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பதற்கு நல்லூர், வேலனை பிரதேசசபைக் கூட்டங்கள் மற்றும் யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் என்பன நல்ல உதாரணங்கள். யாழில் நேற்றைய தினம் நடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் குழப்பத்தில் முடிவடைந்தது. இந்த விவகாரம் தொடர்பில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்திருந்தார்.

வரவு செலவுத்திட்டத்தில் வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை கணக்காய்வு செய்யும் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திதிட்டங்கள் தொடர்பாக யாழில் நேற்று அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அக்கூட்டத்தை வினைத்திறனாக நடத்த விடாமல் சில நபர்கள் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இருந்தபோதும் வடக்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தாங்கள் கலந்துரையாடி உள்ளோம் என்றார். கூட்டம் குழப்பத்தில் முடிந்தாலும் வடக்கில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து என்பிபி அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சூளுரைத்தார். கூட்டத்தை குழப்பிய பாராளுமன்ற அர்ச்சுனாவையே அமைச்சர் இவ்வாறு சாடியிருந்தார்.

பாராளுமன்ற சம்பளத்தைவிட யூரியூப் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை உழைப்பதாகத் தெரிவிக்கும் அர்ச்சுனா தன்னுடைய வெளிநாட்டில் உள்ள பார்வையாளர்களை கிளுகிளுப்பாக வைத்திருக்க பல்வேறு குறளிவித்தைகளையும் காட்டி வருகின்றார். அதற்காக அவர் எந்தக் கீழ் நிலைக்கும் செல்லத் தயங்கப் போவதில்லை.

கடந்த ஆறுமாதங்களில் அர்ச்சுனா தன்னை யார் என்பதை மிகத் தெளிவாக அடையாளப்படுத்தி உள்ளார். அதனால் அவருடைய நிலையை உணர்ந்து தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடைய உளவியல் வலைக்குள் சிக்காமல் அறிவுபூர்வமாகச் செயற்பட வேண்டும். அர்ச்சுனா குரைக்கின்றார் என்பதற்காக என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்களும் பதிலுக்குக் குரைத்து மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளை பிற்போடக் கூடாது. பா உ ரஜீவன் தலைமையில் நடந்த நல்லூர் பிரதேசசபைக் கூட்டத்தை ரஜீவன் ஓரளவு அவதானமாகச் செய்திருந்தாலும் ஊசி அர்ச்சுனாவுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கக்கூடாது.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான ஆளும் கட்சி எம்பி இளங்குமரன் கருணாநாதன் எதிர்க்கட்சி எம்பியுமான அர்ச்சுனா இராமநாதன் இருவரும் கண்டபடி வார்த்தைகளை அள்ளி வீசி மோதிக் கொண்டனர். அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள் முன்னிலையில் முக்கியமான பிரச்சினைகளை கதைக்க வேண்டிய நேரத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் தனிப்பட்ட விடயங்களை இழுத்து பரஸ்பரம் சேற்றை வாரியிறைத்து கூட்டத்தை நாறடித்தனர்.

கிழக்கில் நடைபெறுகின்ற அமைதியான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு மாறாக வடக்கில் அர்ச்சுனாவின் யூரியூப் வியூஸ்க்காக பெரும்பாலும் உருப்படியற்ற கலாட்டா கூட்டங்களே நடைபெறுகின்றது. பொதுவாகவே ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் காரசாரமான வாதப்பிரதி வாதங்களால் அதகளப்படுவது அவ்வப்போது நடைபெறுவது உண்டு. முக்கியமான விடயங்கள் கலந்துரையாட வேண்டிய கூட்டத்தை கேலிக்கூத்தாக்க முடியாது. தனிநபர் வசை பாடல்களை தவிர்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறலாம்.

அர்ச்சுனா தன்னை நோக்கி என்ன கேள்வி வந்தபோதும் தேய்ந்துபோன றெக்கோட் (Record) போல் நான் எம்பிபிஎஸ் படித்தனான் நீ என்ன படிச்சனி என்பதில் வந்து நிற்கின்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் தன்னளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் படித்தவராம் அதனால் தான் தான் கூட்டுச்சேர்ந்தவர் என்கிறார். தலைவர் பிரபாகரன் எட்டாம் வகுப்பை தாண்டாதபடியால் தன்னளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் படித்த அன்ரன் பாலசிங்கத்தை மதியுரைஞராக வைத்திருந்தவராம். தன்னளவுக்கு இல்லாவிட்டாலும் அன்ரன் பாலசிங்கம் என்ற படித்தவர் இல்லாவிட்டால் பிரபாகரனின் நிலையும் பரிதாபம் என்று நினைக்கின்றார் ஊசி அர்ச்சுனா.

இப்படியான வேண்டத்தகாத மற்றும் நேரத்தை விரயமாக்கும் குழறுபடிகளை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகளை முற்கூட்டியே திட்டமிட வேண்டும். நிகழ்ச்சி நிரல் முறையாக தயாரிக்கப்பட்டு அதன்படியே ஒருங்கிணைப்பு கூட்டத்தை கொண்டு நடத்த வேண்டும். நடந்த குழப்பங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திறமையாக சமாளிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை அவர் மிகத் திறமையாக கையாண்டிருந்தார். எதிர்காலத்திலும் அவர் திறமையாகக் கையாள்வார் எனக் கொள்ளலாம்.

பா உ அர்ச்சுனா தமிழ்ப் பெண்களின் சாபக்கேடு: கட்டிய மனைவி முதல் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பா உ அர்ச்சுனா !

பா உ அர்ச்சுனா தமிழ்ப் பெண்களின் சாபக்கேடு: கட்டிய மனைவி முதல் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பா உ அர்ச்சுனா !

 

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் கடந்த காலங்கள் கசிய ஆரம்பித்துள்ளது. பெண்களை மிகக் கேவலமாக நடத்தும், அவர்களைக் கீழானவர்களாகக் கருதும் தனது யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிஆணாதிக்க பொதுப் புத்தியை அர்ச்சுனா நாட்டின் உயரிய சபையில் வெளிப்படுத்தி அதற்கான தண்டனையையும் பெற்றார். சாவகச்சேரி மருத்துவமனையில் எழுந்த பிரச்சினையை வைத்துக்கொண்டு ஒரு சைக்கோலொஜிக்கல் திரில்லர் ட்ராமா ( psychological thriller drama ) அதாவது உளவியல் ரீதியான விறுவிறுப்பு நாடகத்தை அரங்கேற்றினார். மக்களின் கவனத்தை அர்ச்சுனா தன்பக்கம் திருப்பினார். தமிழ் தேசியத் தலைமைகளால் கடந்த 15 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட மக்களுக்கு அர்ச்சுனா ஒரு மீட்பராக கதாநாயகனாக மாறினார். மருத்துவத்துறையிலிருந்த பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே போட்டுடைத்தார். பல மருத்துவத்துறை ஊழல்கள் அம்பலமாகியது. அந்த அடிப்படையில் தேசம்நெற் உம் அர்ச்சனாவின் போராட்டத்திற்கு ‘தம்ஸ்அப்’ 👍வழங்கியது.

வடக்கின் மருத்துவத்துறை உலுப்பி எடுக்கப்பட்டது. ஆனால் அர்ச்சுனாவால் வெளிக்கொண்டுவரப்பட்ட எந்தப் பிரச்சினைக்கும் அர்ச்சுனாவிடம் எவ்வித தீர்வும் இருக்கவில்லை. அர்ச்சுனாவிடம் முறையான ஆதாரங்களும் இருக்கவில்லை. ஆனால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை மக்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் அதனை ஒரு மருத்துவ சுப்பிரிண்டன்ட் சொல்கின்றபோது அது வலுப்பெற்றது. அர்ச்சுனாவின் இந்த உளவியல் விறுவிறுப்பு நாடகத்தின் மூலம் மருத்துவத்துறையிலிருந்த அர்ச்சுனாவுக்கு எதிராகச் செயற்பட்ட ஊழல்வாதிகள் அம்பலமாகினர். அர்ச்சுனா மிகச்சாதுரியமாகத் திட்டமிட்டு அவர்களை பொதுமக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் வைத்துத் தண்டித்தார். தென்மராட்சி அபிவிருத்தி அமைப்பு வழங்கிய நிதிதொடர்பில் அர்ச்சுனா வைத்த குற்றச்சாட்டையே சில தினங்களில் அர்ச்சுனா மீளப்பெற வேண்டிவந்தது. ஆனாலும் அது தற்செயலானதாகவே கருதப்பட்டது.

அர்ச்சுனாவை மிகச்சிலர் ஆரம்பத்திலேயே சந்தேகத்துடன் பார்த்தனர். அர்ச்சுனாவும் ஒரு மருத்துவராகையால் மருத்துவ வட்டத்துக்குள் இவர் நன்கு அறியப்பட்டு இருந்தார். அவர்கள் மத்தியிலிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தன. அவ்வாறு விமர்சனத்தை வைத்தவர்களில் என்னுடைய சகோதரனும் ஒருவர் ஆவார். ஆனால் அவரும் ஒரு மருத்துவர் என்பதால் மருத்துவத்துறைக்கு எதிராக ஊழல்களை அம்பலப்படுத்துவதால் இந்த டொக்டர்மார் எல்லாம் குழம்புகின்றார்கள் என்று அவர்களின் கருத்துக்களை அதன் கண்டு கொள்ளவில்லை.

அதன்பின் அர்ச்சுனாவின் அரசியல் பிரவேச முன்முயற்சிகள் அர்ச்சுனாவின் குறளி வித்தைகளை தேசம்நெற் ஆங்காங்கே வெளிப்படுத்தியது. அர்ச்சுனா அரசியலுக்குள் குதித்து ஊசி அர்ச்சுனாவாக மாறியபோது அர்ச்சுனாவின் சாயம் வெளுத்து உண்மைத் தோற்றம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

‘நான் விரல் நீட்டியவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்’ என அன்று அர்ச்சுனா எனக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். அதுவே அர்ச்சுனா ஒரு கற்பனையில் வாழும் உள்ளடக்கமற்ற மனிதன் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் இந்த வார்த்தையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அதனை சொல்லக் கூடிய தகுதியில் இருந்த அவர் ஒருபோதும் அதனைச் சொன்னதாக நான் அறியவில்லை. நேற்றைய மழையில் இன்று முளைத்த நச்சுக்காளான் அர்ச்சுனா “நான் விரல் நீட்டியவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்’’ என்பது உளவியல் சார்ந்த உயர்வுச் சிக்கல் மனநிலை என புரிந்து கொள்ள வேண்டும்.

அர்ச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தை எடுத்தது முதல் அவர் செய்கின்ற அனைத்து விடயங்களுமே தன்னை ஒரு பேசுபொருளாக அதாவது கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் செத்த வீட்டில் பிணமாகவும் இருக்க வேண்டும் என்று கருதும் அற்ரென்ஞ்ன் சீக்கிங் (attention seeking) மனநிலை தற்போது அவர் யார் என்பதைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்துள்ளனர்.

அர்ச்சுனா பொதுவெளியில் வெளிநாட்டில கக்கூஸ் கழுவிறதை சரியா கழுவுங்கோ, இவள் விபச்சாரி, அவள் விபச்சாரி, நீ என்ன படித்தாய் என்றெல்லாம் மற்றவர்களின் கல்விநிலையை, தொழிலை, அவர்களின் பிரதேசங்களை சமூகத்தை கொச்சைப்படுத்தும் உயர்வுச் சிக்கல் கொண்ட மனநிலையுடையவர். அதேபோல் தன்னைப் பற்றி: நான் 3 கம்பஸில் படித்தன், நான் யாழ்ப்பாணத்தான், நான் தமிழன், நான் சைவன் என்று தன் சைவ வெள்ளாள ஆணாதிக்க மனநிலையை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.

குறிப்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை அவருடைய மலையகப் பின்னணியை மிகக் கீழ்த்தரமாக கைநாட்டு, எழுதப்படிக்கத் தெரியாதவர், கப்பலில் கூலியாக வந்தவர் என்றெல்லாம் விமர்சித்துள்ளார். இவ்வாறான மிக ஆபத்தான வக்கிர மனநிலைகொண்டவராக அர்ச்சுனா உள்ளார்.

அர்ச்சுனாவின் இந்த வக்கிர மனநிலையை தொலை தூரத்திலிருந்து இருந்து பார்ப்பவர்களுக்கே எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்குகின்றது. அதேநேரம் அர்ச்சுனாவுடன் நான்கு ஆண்டுகள் குடும்பம் நடத்திய அவருடைய முதலாவது மனைவியின் நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள்.

“நீ யாரையடி மனதில் வைத்திருக்கிறாய், எத்தனை பேரோடு சுத்தினாய், எத்தினை பேரோடு படுத்தாய், நீ விபச்சாரி, …” என்றெல்லாம் அர்ச்சுனா தன்னுடைய மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் எப்போதும் சந்தேகப்பட்டு வன்முறையில் இறங்குவதாகவும், அர்ச்சுனாவின் முன்னால் மனைவியின் கனடாவில் வாழும் சினேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அந்தச் சினேகிதி நான்கு ஆண்டுகள் நீடித்த இவர்களுடைய திருமணம் நரகமாக அமைந்ததாக விபரிக்கின்றார். இவ்வாறு தான் கட்டிய மனைவியைச் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய ஒரு கொடூரன் ‘புலிகளையும் மாவீரர்களையும் பிரபாகரனையும்’ போர்த்திக்கொண்டு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது, தமிழ் பெண்களுக்கே சாபக் கேடு என அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ரிக்ரொக் சாளினி, ஊடகவியலாளர் சங்கவி, சட்டத்தரணி சுவஸ்திகா ஆகியோரை விபச்சாரி என்று பாராளுமன்றத்திலும் பொதுவெளியிலும் சொல்கின்ற மனநிலை திடீரென வரவில்லை என்று தெரிவிக்கும் அர்ச்சுனாவின் முன்னாள் மனைவியின் சினேகிதி. இந்த வசையாடல்களை நான்கு ஆண்டுகள் அனுபவித்து இதற்கு அப்பால் தன்னால் முடியாது என்ற நிலையிலேயே அர்ச்சுனாவின் முன்னாள் மனைவி விவாகரத்துச் செய்துகொண்டார்.

அர்ச்சுனாவின் முதல் மனைவி தொடர்பில் கருத்துத் தெரிவித்த இதேமாதிரிப் பாதிக்கப்பட்ட முக்கிய பொறுப்பில் உள்ளவரின் மகளும் தன்னுடைய கதையை தேசம்நெற்றிடம் பகிர்ந்து கொண்டார். அந்தப் பெண் தான் காதலித்து திருமணம் செய்தவன் , திருமணத்திற்குப் பின் சந்தேகபுத்திகொண்டு தன் மீது வீட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாகவும் குறிப்பிட்டார். வன்முறையின் உச்ச கட்டமாக தன்னை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தாகவும் தெரிவித்தார். இறுதியில் தலைகீழாகக் கட்டி கட்டையால் முகத்தில் அடித்து கடுமையாக காயமடைந்துள்ளார். இதற்குமேல் தாங்க முடியாது என்ற நிலையில் தான் விவாகரத்துப் பெற்றதாகவும் அந்தப் பெண் தன்னுடைய கண்ணீர் கதையை பகிர்ந்து கொண்டார் . அத்துடன் அர்ச்சுனாவின் முன்னாள் மனைவி எவ்வாறான துன்பங்களை அனுபவித்திருப்பார் என்பது என் கண்முன்னால் காட்சிகளாக நகருவதாக அவர் தெரிவித்தார். இந்த சந்தேக மனநிலையுடய ஆண்களோடு வாழுவது என்பது ஒரு வெறிகொண்ட மிருகத்தோடு குடும்பம் நடத்துவதற்குச் சரியென்கிறார் அப்பெண். இவ்வாறான வெறிகொண்ட சில நூற்றுக்கணக்கானோரிடம் எங்கள் பிள்ளைகள், சகோதரிகள், உறவுகள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்.

இவர்கள் கொக்குவில் பகுதியில் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் குடியிருந்தவர், வடமாகாண சபையில் முக்கிய உறுப்பினராக இருந்த ஒருவர். அவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் பொழுதுபட்டால் அர்ச்சுனா வீட்டிலிருந்து பெரும்பாலும் பெரிய சத்தங்கள் வரும். ஒரே அடிபிடியாகவே இருக்கும். பாவம் அந்தப் பொம்பிளைப் பிள்ளை. இவன் வலம்புரியில் அந்த ரைவர் ஏதோ கொழுவிட்டான் என்று அடித்து நொருக்கின மாதிரித்தான் அந்தப் பிள்ளையின் நிலைமையும். இவன்கள் தான் இப்ப யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என வருத்தப்பட்டார் அவர்.

 

இந்த ஆணாதிக்க சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்பினால், ஊழல் ஒழிப்பு அணி வன்னி பெண்களின் நிர்வாணப் படங்களைப் பதிவேற்றும். அர்ச்சுனாவுக்கு எதிராக அர்ச்சுனா செய்த கொடுமைகளை அவருடைய முன்னாள் மனைவியோ மற்றும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்களோ வெளிக்கொண்டுவந்தால் அப்பெண்கள் சமூகவலைத்தளத்தில் நிர்வாணமாக்கப்படுவார்கள்.

அடுத்ததாக அர்ச்சுனாவின் இரண்டாவது மனைவி சிங்களப் பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரச்சினையின் சமயம் தான் சிங்களப் பெண்ணை திருமணம் செய்திருப்பதாக ஊடகங்களில் தெரிவித்திருத்தார். ஆனால் இதுவரை அந்த இரண்டாவது மனைவி யார் ? அவருக்கு என்ன நடந்தது என்பதே மர்மமாக உள்ளது. இந்த வரிசையில் கடைசியாக நிர்வாணமாக்கப்பட்டவர் கௌசல்யா நரேந்திரன். தற்போது அவர் மௌனிக்க வைக்கப்பட்டுள்ளார். அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். ஏன் ? கௌசல்யா நரேந்திரனின் முன்னாள் காதலன் சிறந்த சதுரங்க விளையாட்டுக்காரர். அவர் கிளிநொச்சியில் சதுரங்க கழகங்களை உருவாக்கி மாணவர்களுக்கு சதுரங்கம் பழக்குவதுடன் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பயணித்து மாணவர்களை அத்துறையில் வளர்த்து வருகின்றார். கௌசல்யாவுக்கும் அவருடைய காதலனுக்கும் உள்ள உறவில் பொறாமைகொண்டு அதற்குள் தலையிட்டு தங்கை என்று கூறியவளை நான் கட்டுவேன் என்று சொல்லி அந்த உறவை முடிவுக்கு கொண்டு வந்தவர் அர்ச்சுனா. தற்போது கௌசல்யாவையும் முகவரியற்றவர் ஆக்கிவிட்டார். தங்கம் என்று சொன்னவளை தங்கச் சங்கிலி போட்டுக் கட்டி வைத்துள்ளார் அர்ச்சுனா.

அதே ஆணாதிக்க ஆண்கள் சமூகத்தைச் சேர்ந்த எம்பி சிவஞானம் சிறிதரன் அர்ச்சுனாவின் கேவலமான பேச்சுக்களை பாராளுமன்றம் தடை செய்யக்கூடாது எனக் கோருகின்றார். எம்பி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அர்ச்சுனாவை தனது கட்சிக்குள் வரவேற்பதாகக் கூறுகின்றார். தமிழ் பெண்கள் விழித்துக்கொண்டு இந்த ஆணாதிக்க வெறியர்களுக்கு எதிராக தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

கௌசல்யாவின் அரசியல் நீக்கம் ! அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !

கௌசல்யாவின் அரசியல் நீக்கம் ! அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்திக்கும் வரை ஆளுமையோடு இயங்கிய கௌசல்யா நரேந்திரன் தனித்தன்மையை இழந்து பொது வாழ்க்கையிலிருந்து ஓரங்கட்டப்பட்டப்பட்டுள்ளார். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதிலுள்ள சவால்களை இது காட்டுகின்றது. கௌசல்யா ஏன் தொடர்ந்து அரசியலில் எம்பி அர்ச்சனாவுடன் பயணிக்க மாட்டார் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் நகைப்பிற்கிடமாகவுள்ளது. எம்பி அர்ச்சுனாவின் வழக்கிற்கு உதவி சட்டத்தரணியாக வந்த கௌசல்யா நரேந்திரன் எம்பியின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம். இந்த இடத்தில் கௌசல்யா மீது பரிதாபமே தோன்றுகின்றது.
சிறு வயதில் தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த கௌசல்யா தன்னுடைய கல்வியில் சிறந்து விளங்கியிருக்கின்றார். படித்து முடித்து ஒரு வளர்ந்து வரும் சட்டத்தரணியாகவும் திறமையுடன் தொழில் செய்திருக்கின்றார். அப்படியிருக்க இன்னொருவர் அதாவது அர்ச்சுனா இராமநாதன் தனக்காக முடிவுகள் எடுக்க அனுமதியளிக்கும் வகையில் கௌசல்யா தனது தனித்துவத்தை இழந்து போனது எப்படி?
அதுதான் யாழ்ப்பாணத்து வெள்ளாளிய ஆண் மைய தமிழ்ச் சமுதாயம் கட்டியெழுப்பியுள்ள சமூகவாழ்க்கை. அந்த வாழ்க்கையில் ஒரு தமிழ்ப்பெண் எப்போதும் ஏதோவொரு ஆணின் நிழலில் தான் தன்னுடைய அடையாளத்தை கட்டியமைக்க வேண்டியுள்ளது. அந்த ஆண் தந்தையாகவோ, தனயனாகவோ, கணவனாகவோ அல்லது மகனாகவோ தான் இருக்க முடியும். அப்போது தான் பெண் பாதுகாப்பாக கௌரவமாக வாழமுடியும் என தமிழ்ப் பெண்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனப்பாங்கின் வெளிப்பாடே ”முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும், சேலை தான் கிழியும்“ என்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் கருத்தியல், பழமொழியாக கடத்தப்படுகிறது.
இந்த விடயத்தில் கௌசல்யாவை எடுத்துக் கொண்டால், கௌசல்யா அரசியலுக்கு வருவதையும் அரசியலை விட்டு விலகுவதையும் எம்பியும் வைத்தியருமான அர்ச்சனா இராமநாதன் முடிவு எடுத்துள்ளார். அதனை எம்பி இராமநாதனே தனது வாயால் ஒத்துக்கொள்கிறார். கௌசல்யா அரசியிலிருந்து விலகும் முடிவை தானே எடுத்துள்ளதாக கூறும் அவர் சட்டத்தரணி கௌசல்யா முகநூல் கூட அவரால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதைவிட பெரிய வேடிக்கை கௌசல்யாவிற்கு ஏதும் தகவல் சொல்வதாக இருந்தால் தன்னிடம் அறிவிக்கும்படி கூறுகிறார்.
கௌசல்யாவின் காதலில் குறுக்கிட்டு குழப்பிய போதும் சரி, கௌசல்யாவை தானே திருமணம் செய்வேன் என முழங்கிய போதும் சரி, கௌசல்யாவின் சலத்தை கம்பவாரதி ஜெயராஜ்க்கு பூசக் கொடுப்பேன் என்று கூறும் போதும்சரி, பொது இடத்தில் ஒரு சட்டத்தரணியை ‘தங்கம்‘, ‘ தங்கம்’ என அழைத்து தரம்தாழ்த்திய போது வராத அக்கறை, கௌசல்யா மீது இப்போது ஏன் எம்பி அர்ச்சனாவுக்கு வந்துள்ளது. எல்லை மீறி விட்டது. கௌசல்யாவின் எதிர்காலமும், கௌசல்யாவினது குடும்ப மரியாதையும் இப்போது ஏன் கண்ணுக்கு தெரிகிறது. தனித்துவமாக தன்னுடைய அடையாளத்தோடு வாழ வேண்டிய ஒரு பெண் சட்டத்தரணியின் எதிர்காலத்தை இருட்டாக்கியது எம்பி அர்ச்சுனா இராமநாதன் ஆகும்.
கௌசல்யா செய்ததும் தவறு. தொழில்முறை ரீதியான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுடைய தொடர்பை அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது கௌசல்யா கற்றுக் கொண்ட “சட்டத்தரணி தொழில் நெறிமுறைகளுக்கு“ முரணானது. இந்த விடயம் தனிப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் என்ற இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்ட விடயமாக கடந்து செல்ல முடியாது. மக்களுக்கு சேவை என பொது வெளியில் வந்த இரு நபர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்.
சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தன்னுடைய தொழிலிலும் முறையான நெறிமுறைகளை பின்பற்றவில்லை. அரசியலிலும் அதையே தான் செய்திருக்கிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரை நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள். மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய இடத்தில் அவர் உள்ளார். கௌசல்யா தானாக முன்வந்து அரசியலை விட்டு விலகினாலும் சரி விலத்தப்பட்டாலும் சரி வாக்குப் போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
கௌசல்யா மாதிரியான பெண்களை ஈழத்தமிழ்ப் பெண்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆண் மைய, பால்நிலைச் சமத்துவமற்ற மற்றும் வன்முறைகள் நிறைந்த சமூகத்தில்  பெண்கள் அரசியலில் தனித்துவத்தோடு செயற்படுவது மிகச் சிரமம். ஆனால் கௌசல்யா நரேந்திரன், உமாசந்திரப் பிரகாஷ் , சுரேகா பரமநாதன் போன்ற பெண்கள், ஆண்மைய அரசியலின் பிரதிநிதிகளாக இருப்பதும் பெண் உரிமைகளுக்கு மிக ஆபத்தானது.
கௌசல்யா தனக்காகவும் குரல் கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை. ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற போலி அடையாளத்துடன் இயங்கும் முகநூலில் பெண்களின் நிர்வாணப்படங்கள் மற்றும் அவதூறுகள் வலம் வந்த போதும் கௌசல்யா அந்த இழி செயலை செய்பவர்களுக்கு வாக்காளத்து வாங்கினார். இன்று திடீரென பொதுவெளியிலிருந்து ஓடி ஒளித்து விட்டார். இப்படியானவர்களிடம் அதிகாரம் போனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த தமிழ்ச் சமூகத்தில் இது பெரிய பின்னடைவாக இருக்கும்.
உமாசந்திரப் பிரகாஷ் போன்ற பெண்கள் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுக்கு அரசியலில் முகவரியை உருவாக்கிக்கி கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல காலம்காலமாக பேரினவாத அரசியலைச் செய்து, தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்சவின் கட்சி எனத் தேசியக் கட்சிகளுக்கு  வாக்கு சேகரித்து கொடுக்கும் இவர்களையும் தமிழ்ப் பெண்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். போரில் வன்முறைக்குள்ளான பெண்கள் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கப் போவதில்லை. மேட்டுக்குடிப் பெண்களான இவர்களுக்கு அரசியல் அதிகாரம் ஒரு சமூக அந்தஸ்து மட்டுமேயாகும்.
சுரேக்கா பரமநாதன் போன்ற பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேல் நிலைக்கு வரும்போது அவர்கள் தம்மையும் மேட்டுக்குடியாக பாவனை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். தமிழரசுக் கட்சி முன்னாள் தவிசாளர் வீட்டில் தீக்குளித்து இறந்த விஜிதாவுக்கு குரல் கொடுத்த சுரேகா, எப்படி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். எம். ஏ. சுமந்திரன் தமிழரசுக் கட்சியில் நீண்டகாலமாக செயல்பட்ட பெண்களுக்காக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவில்லை. அதேநேரம் சுரேகாவை எம். ஏ . சுமந்திரன் பின்கதவால் தமிழரசுக் கட்சிக்குள் கொண்டு வந்து, சுரேகாவின் வாய்க்கு பூட்டுப் போட்டார். விஜிதாவின் மரணத்திற்கு காரணமானவர் என்று சுரேகாவால் குற்றம்சாட்டப்பட்ட சுகிர்தனோடே இணக்கமாக ஒரே கட்சியில் அரசியலில் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். தாம் கொண்ட கொள்கையில் நிலையில்லாத பெண்களால் சமூகத்தில் இருக்கின்ற ஏனைய பெண்களின் உரிமைகளுக்காக போராட முடியாது.
பெண்கள் எத்தனை துறைகளில் சரி சமமாக ஆண்களுக்கு நிகராக முன்னேறினாலும், அரசியலில் மட்டும் அவர்களால் தனித்துவமாக செயற்பட முடியவில்லை. அதற்கு பிரதான காரணம் அதிகார அரசியலில் பெண்கள் இடத்தைப் பிடித்தால் பெண்களுக்கெதிரான சட்டங்கள் தொடக்கம் சமூக கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற அச்சமாகும்.
ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்துமே ஆண்களின் தலைமைத்துவதிலேயே செயற்படுகின்றன. அக்கட்சிகளில் பெண்கள் ஆண்களுக்கு விருப்பு வாக்குகளைச் சேர்த்துக் கொடுக்கும் கருவிகளே. பெண்களால் தலைமைதாங்கி நடத்தக் கூடிய அரசியல் கட்சிகள் தோன்றினால் அல்லது பெண்களே தமக்கான கட்சிகளை உருவாக்கிக் கொள்ளும் போது ஒருவேளை பெண்களை அரசியலில் கருவேப்பிலையாக பயன்படுத்தும் நிலைமை மாறலாம்.
அதற்கு அரசியலுக்கு வரும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கருத்தியல் ரீதியான வன்முறைகளை எதிர்த்து நிற்க கூடிய திராணி பெண்களுக்கு உருவாக வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள பெண்களும், ஒடுக்கப்படுகிற பெண்களும் மற்றும் வன்முறைகளிலிருந்து உடைத்துக் கொண்டு வருகிற பெண்களும் அரசியலுக்கு வரும் போது மேட்டுக்குடி அலங்கார பொம்மைகளாக இருந்து கொண்டு போலிப் பெண்ணியம் பேசும் பெண்களை அரசியலில் இருந்து நீக்கலாம். வலிகளைச் சுமப்பவர்களே அந்த வலிகளுக்கு தீர்வை காண முடியும். அந்தவகையில் கௌசல்யா நரேந்திரனின் அரசியல் நீக்கம் தமிழ்ப் பெண்களின் போலி அரசியல்ப் பிரவேசத்தைப் பற்றிய மறுபரிசீலனையை வேண்டி நிற்கின்றது.

மற்றவர்களைப் படிக்காதவர்கள் கை நாட்டு என்று மட்டம் தட்டும் அர்ச்சுனாவுக்கு வேட்புமனு படிவம் நிரப்பத் தெரியவில்லை !

மற்றவர்களைப் படிக்காதவர்கள் கை நாட்டு என்று மட்டம் தட்டும் அர்ச்சுனாவுக்கு வேட்புமனு படிவம் நிரப்பத் தெரியவில்லை !

 

பா உ அர்ச்சுனா மற்றவர்களை அறிவற்றவர்களாக ஏளனம் பண்ணுபவர். அமைச்சர் ராமலிங்கத்தையும் பல தடவைகள் அவருடைய மலையகப் பின்னணியை வைத்து அவமானப்படுத்துபவர். அவர் அமைச்சர் சந்திரசேகரனைமட்டுமல்ல மலையக சமூகத்தையே கீழ்த்தரமாக பேசிவருபவர். தனக்கு மூன்று பட்டங்கள் இருக்கின்றது, மூன்று பல்கலைக்கழகங்களில் படித்தவர், என்றெல்லாம் பெருமை பேசிவந்தவர். கௌசல்யா நரேனையும் சிறந்த சட்டத்தரணியாக பெருமை பேசுபவர். ஆனால் இறுதியில் வேட்புமனுவையே நிரப்பத் தெரியவில்லை என்றதும் படிவங்களில் கையெழுத்துப் போடாமல் வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்ததும் இவர்கள் எவ்வளவு அறிவாளிகள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது.

இது தொடர்பில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பா உ அர்ச்சுனா தமிழ் பெண்களை அவமானப்படுத்தி வருவதை கண்டித்ததுடன், தன்னைப் பற்றியும் பொய்களைப் பரப்பி வருவதையும் சுட்டிகாட்டினார்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பல பகுதிகளில் யாழ்ப்பாணத்தின் முன்னணி கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இது ஆளுங்கட்சியின் திட்டமிட்ட சதி எனவும் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் எனவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது, வடக்கு கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டை தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம் என்றார்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பல தமிழ்தேசிய கட்சிகளும் என்.பி.பியை குற்றஞ்சாட்டிவரும் நிலையில், யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களுக்குள் நாங்கள் சென்று ஏதோ திருகு தாள வேலைகளை செய்தது போல அவர்களது குற்றச்சாட்டுக்களில் தெரிகிறது.

இந்த வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்ற முறைமைகள் சாதாரணமாக (A/L) கா.பொ.த. உயர் தரம் படிக்கின்ற ஒரு மாணவரிடம் கேட்டால் கூட இது தான் இப்படிதான் என தெளிவாக சொல்லுகிற போது இவர்களுக்கு தெரியாமல் இருப்பதென்பது இவர்களிடத்தே அக்கறையில்லை என்பதை காட்டுகிறது. ஆகையினால், தங்களது இயலாமையை மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியை பயன்படுத்த வேண்டாம் என்றார்.

மேலும் பட்டாலந்தா சித்திரவதை முகாம் தொடர்பான விசாரணையைப் போலவே, யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று என்.பி.பியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சிங்களவர்களால் எனக்கு ஆபத்து இல்லை. முஸ்லீம்களால் தான் ஆபத்து’ – எம்.பி அர்ச்சுனா !

சிங்களவர்களால் எனக்கு ஆபத்து இல்லை. முஸ்லீம்களால் தான் ஆபத்து’ – எம்.பி அர்ச்சுனா !

 

அரசியலை விட்டு விலகினால் 2009ஆம் ஆண்டு இருந்த அரசியலுக்கு உள்ளேயே தமிழ் மக்கள் மீண்டும் சென்று விடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் தனக்கு சிங்களவர்களால் ஆபத்து இல்லை சிறுபான்மை இனத்தால் தான் பாதிப்பு என்று மறைமுகமாக முஸ்லீம்களைச் சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலும் பேசிய அவர், சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் என்னால் வழக்கு தொடர முடியும். ஏனெனில் 77 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் சபாநாயகர் பேச விடாது தடுத்துள்ளார். என்.பி.பி அரசாங்கத்திற்கு நான் உயிரோடு இருப்பதில் பிரச்சினை இருக்கின்றது. குறிப்பாக சிங்கள மக்களினாலோ அல்லது வேறு நபர்களாலோ எனக்கு பிரச்சினை இல்லை. சிறுபான்மை இனத்தவர்களாலேயே அதிக பிரச்சினை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இனியாவது அர்ச்சுனா தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கிறோம் , நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டி விடக்கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.