விருப்பு வாக்கு முடிவுகள் தொடர்பில் ஏதும் வேட்பாளருக்கு ஆட்சேபனையிருந்தால் அது தொடர்பில் வழக்குத் தொடர முடியும்.
அதனை விடுத்து குறித்த மாவட்டத்துக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அதிகாரியை குற்றஞ்சாட்டவோ அச்சுறுத்தவோ எந்தவொரு வேட்பாளருக்கும் உரிமை கிடையாதென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு காலி மாவட்ட ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நிசாந்த முதுஹெட்டிகம, கடந்த 12 ஆம் திகதி கொலை அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஆணையாளர், குறித்த சம்பவம் குறித்து பொலிஸாரும் குறித்த வேட்பாளரை பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சியும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண் டும் எனவும் கேட்டுள்ளார்.
ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நிசாந்த முது ஹெட்டிகம கடந்த மாதம் 28 ஆம் திகதி காலி மாவட்ட தேர்தல் காரியாலயத்துக்குச் சென்று அங்கிருந்த உத்தியோகஸ்தர்களை ஏசி அவர்களின் கடமைகளை செய்ய தடங்கல் செய்துள்ளார்.
இது குறித்து பொலிஸில் முறையிடப் பட்டுள்ள தோடு கடந்த 12 ஆம் திகதி விருப்பு வாக்கு தொடர்பில் குற்றஞ்சாட்டி காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியை அச்சுறுத்தியுள்ளார். இது குறித்தும் பொலிஸில் முறையிடப்பட்டுள் ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குகள் தொடர்பிலோ விருப்பு வாக்குகள் குறித்தோ திருப்தி அடையா தவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். இது தவிர வாக்குகள் எண்ணும் மண்டபத்தில் வைத்து மீள எண்ணுமாறு கோர அனு மதியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆணையாளர் வாக்குகள் எண்ணும் போது எந்த கட்சி பிரதிநிதியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விருப்பு வாக்கு விவகாரம் தொடர்பாக தெரிவத்தாட்சி அதிகாரியை அச்சுறுத்தியதை தேர்தல் திணைக்களம் வன்மையாக கண்டிப்பதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.