அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தமிழக எம்.பிக்கள் பாதுகாப்புச் செயலாளாருடன் சந்திப்பு!

தமிழக எம்.பிக்கள் குழுவினர் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
 
தமிழகத்தை சேர்ந்த ரி.ஆர் பாலு தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடந்த இச்சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிரதி உயர் ஸ்தானிகர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைää இடம்பெயர்ந்தோரின் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உட்பட மற்றும் பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முரளிதரனின் பெயரில் இலங்கை மாணவர்களுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில்கள்!

14murali_.jpgஉலகப் புகழ்பெற்ற இலங்கையின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயரில் இலங்கை மாணவர்களுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

பிரிட்டனின் பொல்கொன் பல்கலைக்கழகத்தில் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக கடந்த வியாழக்கிழமை அங்குரர்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இப்புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் இலங்கை மாணவர்கள் ஆறுபேர் பிரிட்டனின் பொல்கொன பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்படுவரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தீபாவளி விசேட ரயில் சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் 18ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.  இதன்படி கொழும்பில் இருந்து பதுளைக்கும்,  பதுளையில் இருந்து கொழும்பிற்கும் இரு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
 
வுழமையாக மேற்கொள்ளப்படும் ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 6.50 ற்கு பயணமாகும் விசேட ரயில் மறுநாள் அதிகாலை 3.25 மணியளவில் பதுளையை சென்றடையும்.

இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்புக்கான விசேட ரயில் சேவையொன்றும் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மஹாபொல கண்காட்சி இன்று ஆரம்பம்!

மஹாபொல புலமைப்பரிசில் கண்காட்சி இன்று பெலியத்தை ருஹ{னு விஜயபா வித்தியாலயத்தில் ஆரம்பமாகின்றது.

இக கண்காட்சி இன்று முதல் எதிர்வரும்; 18ஆம் திகதி வரையான ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.   இளைஞர்களுக்கான நாளை அமைப்பினூடாக இளைஞர் யுவதிகளுக்கான களியாட்ட நிகழ்வுகள்ää விளையாட்டுக்கள் பொழுதுபோக்கு ஏற்பாடுகள் என்பனவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.  பொதுமக்களுக்கான வர்த்தக நிலையங்கள் மற்றும் இராணுத்தினரின் ஆயுதக் கண்காட்சி என்பனவும் இடம்பெறவுள்ளது. 

‘ருபெல்லா’ ஏற்றிய மாணவி மரணம் – தடுப்பூசி ஏற்றுவது இடைநிறுத்தம்

vaccine.jpgருபெல்லா தடுப்பூசி ஏற்றப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் மரணமானதையடுத்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ள தாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதுஅதேநேரம், வாரியப்பொல மினுவான்கெட்டே வித்தியாலயத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி நேற்று மரணமான சம்பவத்தை விசாரிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியது.

நான்கு பேர் கொண்ட இந்தக்குழு இன்று காலை விசாரணைகளை ஆரம்பிக்குமென பொதுச் சுகாதார பிரதிப் பணிப்பாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்தார். டொக்டர் மனோரி சேனநாயக்க, டொக்டர் ரஜீவ டி சில்வா, டொக்டர் ஆனந்த சமரசேகர, டொக் டர் சிறியானி திஸாநாயக்க ஆகிய நால்வருமே மேற்படி குழுவின் அங்கத்தவர்களாவர்.

வாரியப்பொல மினுவான் கெட்டே வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் மாணவிகளுக்கு ருபெல்லா தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டது.

இத்தடுப்பூசி மருந்தின் ஒவ்வாமை காரணமாக மூன்று மாணவிகள் பாதிக்கப்பட்டு வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.

இவர்களில் ஒரு மாணவி மிக ஆபத்தான நிலையில் குருணாகலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.  இங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இம்மாணவி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர் – திருமாவளவன்

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் புலம் பெயர்வாழ் தமிழர்களும் ஒன்று பட்டு கூட்டு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கை வந்துள்ள தமிழக பாராளுமன்ற குழுவின் உறுப்பினரும் விடுதலைச் சிறுதைகள் அணியின் தலைவருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தம்மை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எம்மிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.

இலங்கை விஜயம் தொடர்பாகவும் அகதிமுகாம்களில் மக்களின் உண்மை நிலை குறித்தும் விளக்கி தமிழக முதலமைச்சரின் ஊடாக இந்திய மத்திய அரசுக்க அறிக்கையினை சமர்ப்பிப்போம். இதனை விட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தனியான அறிக்யொன்றினையும் நான் சமர்ப்பிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விருப்பு வாக்குகளில் ஆட்சேபனை இருந்தால் வழக்கு தொடர முடியும்

000dayananda-dissanayake.jpgவிருப்பு வாக்கு முடிவுகள் தொடர்பில் ஏதும் வேட்பாளருக்கு ஆட்சேபனையிருந்தால் அது தொடர்பில் வழக்குத் தொடர முடியும்.

அதனை விடுத்து குறித்த மாவட்டத்துக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அதிகாரியை குற்றஞ்சாட்டவோ அச்சுறுத்தவோ எந்தவொரு வேட்பாளருக்கும் உரிமை கிடையாதென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு காலி மாவட்ட ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நிசாந்த முதுஹெட்டிகம, கடந்த 12 ஆம் திகதி கொலை அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஆணையாளர், குறித்த சம்பவம் குறித்து பொலிஸாரும் குறித்த வேட்பாளரை பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சியும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண் டும் எனவும் கேட்டுள்ளார்.

ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நிசாந்த முது ஹெட்டிகம கடந்த மாதம் 28 ஆம் திகதி காலி மாவட்ட தேர்தல் காரியாலயத்துக்குச் சென்று அங்கிருந்த உத்தியோகஸ்தர்களை ஏசி அவர்களின் கடமைகளை செய்ய தடங்கல் செய்துள்ளார்.

இது குறித்து பொலிஸில் முறையிடப் பட்டுள்ள தோடு கடந்த 12 ஆம் திகதி விருப்பு வாக்கு தொடர்பில் குற்றஞ்சாட்டி காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியை அச்சுறுத்தியுள்ளார். இது குறித்தும் பொலிஸில் முறையிடப்பட்டுள் ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குகள் தொடர்பிலோ விருப்பு வாக்குகள் குறித்தோ திருப்தி அடையா தவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். இது தவிர வாக்குகள் எண்ணும் மண்டபத்தில் வைத்து மீள எண்ணுமாறு கோர அனு மதியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆணையாளர் வாக்குகள் எண்ணும் போது எந்த கட்சி பிரதிநிதியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விருப்பு வாக்கு விவகாரம் தொடர்பாக தெரிவத்தாட்சி அதிகாரியை அச்சுறுத்தியதை தேர்தல் திணைக்களம் வன்மையாக கண்டிப்பதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

நிவாரண கிராமங்களில் 27 ஜோடிகளுக்கு பதிவுத் திருமணம்

வன்னி யிலிருந்த இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவர்களுள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளாமலுள்ள 27 ஜோடிகளுக்கு பதிவும் திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன.

இடம்பெயர்ந்து வரும் போதே குழந்தைகளுடன் வந்த இவர்களுக்கு இலவசமாக பதிவுத் திருமணங்களை கதிர்காமர் நிவாரணக் கிராமங்களில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இயங்கும் “நிதியை சமமாக அணுகும் கருத்திட்டம்” என்ற அமைப்பு செய்து வைத்தது.

அரசியலமைப்பு, தேசிய நல்லிணக்க அமைச்சு, சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் வலுவூட்டல அமைச்சு என்பவற்றின் உதவியுடன் மேற்படி 27 ஜோடிக்கும் பதிவுத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. வவுனியா உதவி பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜயரட்ணம் கதிர்காமர் கிராமத்திற்குச் சென்று திருமறை பதிவுகள் செய்ததுடன் அதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் பதிவு இன்றி திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஜோடிகளுக்கும் பதிவுத் திருமணத்தை செய்துவைக்க மேற்படி கருத் திட்டத்தினர் நடவடிக்கை எடுத்துக் வருகின்றனர்.

ஏ-9 வீதியூடாக வியாழன் முதல் தபால் சேவை!

141009post-box.jpgயாழ் குடாநாட்டுக்கும் வெளியிடங்களுக்கும் ஏ-9 பாதையூடாக தபால் சேவை நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் அரச அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. தற்போது ஏ-9 பாதையூடாக பயணிகள் போக்குவரத்து ஆரம்மபிக்கப்படவுள்ளது. தற்போது  பயணிகள் கப்பல் சேவை ஒழுங்காக நடைபெறாததால் தபால் சேவையில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனைத் தவிர்ப்பதற்காகவே பயணிகள் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் தினமும் தபால் பொதிகளை எடுத்தச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். 

பிரான்சில் 22 இலங்கையர்கள் மீது வழக்கு விசாரணை

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் 22 தமிழர்கள் மீது திங்கட்கிழமை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.  பிரான்சில் 75 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 5 மில்லியன் யூரோ பணத்தை இந்த 22 பேரும் மிரட்டிப் பெற்றனர் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த 22 பேரில் பெரும்பாலானவர்கள் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டவர்கள். தீவிரவாதத்திற்கு ஆதரவாகக் குற்ற சதிச்செயல்களில் ஈடுபட்டார்கள் என அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. என ஏ.எஃப்.பி செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது