தமிழக எம்.பிக்கள் குழுவினர் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
தமிழகத்தை சேர்ந்த ரி.ஆர் பாலு தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடந்த இச்சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிரதி உயர் ஸ்தானிகர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைää இடம்பெயர்ந்தோரின் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உட்பட மற்றும் பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.