நிவாரண கிராமங்களில் 27 ஜோடிகளுக்கு பதிவுத் திருமணம்

வன்னி யிலிருந்த இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவர்களுள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளாமலுள்ள 27 ஜோடிகளுக்கு பதிவும் திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன.

இடம்பெயர்ந்து வரும் போதே குழந்தைகளுடன் வந்த இவர்களுக்கு இலவசமாக பதிவுத் திருமணங்களை கதிர்காமர் நிவாரணக் கிராமங்களில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இயங்கும் “நிதியை சமமாக அணுகும் கருத்திட்டம்” என்ற அமைப்பு செய்து வைத்தது.

அரசியலமைப்பு, தேசிய நல்லிணக்க அமைச்சு, சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் வலுவூட்டல அமைச்சு என்பவற்றின் உதவியுடன் மேற்படி 27 ஜோடிக்கும் பதிவுத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. வவுனியா உதவி பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜயரட்ணம் கதிர்காமர் கிராமத்திற்குச் சென்று திருமறை பதிவுகள் செய்ததுடன் அதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் பதிவு இன்றி திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஜோடிகளுக்கும் பதிவுத் திருமணத்தை செய்துவைக்க மேற்படி கருத் திட்டத்தினர் நடவடிக்கை எடுத்துக் வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *