::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ஈரானுக்கு ஏவுகணை விநியோகம்; ஒப்புக்கொண்டது ரஷ்யா

iran.jpgஈரானுக்கு அதிநவீன ஏவுகணைகளை விநியோகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் மேற்கொண்டதை ரஷ்யா தற்போது அங்கீகரித்தது. அமெரிக்க ஜனாதிபதியாக புஷ் இருந்த போது ஈரான் நாட்டை “ரவுடி நாடு” என குறிப்பிட்டிருந்தார்.

“ஈரான் அரசால் அன்டை நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஈரான் நாட்டுக்கு அதிநவீன எஸ். 300 ரக ஏவுகணையை விநியோகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த விஷயம் சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து ரஷ்யா இந்த உண்மையை ஒப்புக்கொண்டது இது குறித்து ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப் பிடுகையில், “எஸ். 300 ஏவுகணையை ஈரானுக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டாலும், சர்வதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் ஏவுகணையை விநியோகிக்கவில்லை இன்னும் அந்த ஒப்பந்தம் காலாவதியாகவில்லை.

படிப்படியாக இந்த ஒப்பந்தத்தை அமுல் செய்ய யோசித்து வருகிறோம் என்றார். ஈரானுக்கு இந்த ஏவுகணையை விநியோகம் செய்தால் ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் பகையை சம்பாதித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் சீமானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

seeman.jpgஇலங் கைத் தமிழர் பிரச்சினைக்காக புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புதுச்சேரி காவல்துறையினர் அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இயக்குனர் சீமான் நெல்லை பொலிஸ் ஆணையர் மஞ்சுநாதா முன்னிலையில் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சீமானை கைது செய்த பொலிஸார், புதுச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு நேற்று புதுச்சேரி மாவட்ட உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இயக்குனர் சீமானிடம், நீங்கள் விடுதலை பிணை கேட்டு உள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு இயக்குனர் சீமான், இது சம்பந்தமான விவாதம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சீமானை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்

விடுதலைப்புலிகள் பெயரில் குண்டு மிரட்டல்

kerala-airport.jpgகேரளாவில் உள்ள விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு நேற்றிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் 3 மணி நேரத்தில் கேரளாவில் உள்ள ஒரு விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம்என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

இது குறித்து கேரள போலீசாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த விமான நிலையங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு பிரிவு போலீசாரும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர். விமான நிலையத்துக்கு வருபவர்கள், பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. புலிகள் பெயரில் குண்டு மிரட்டல் வந்ததால் கேரளாவில் பரபரப்பாக இருக்கிறது.

கேரளா மாநில 3 விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு -புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலையடுத்து நடவடிக்கை

kerala-airport.jpgபுலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலையடுத்து இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள மூன்று சர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன

திருவனந்தபுரம், கொச்சின் கரிப்பூர் ஆகிய விமான நிலையங்கள் மீது எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுப் பிரிவினர் தெரிவித்ததையடுத்தே இவற்றின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை பாதுகாப்பு நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவித்தலையடுத்து இந்த மூன்று விமான நிலையங்களுக்குமான மேலதிக பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேரளா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஒபாமாவின் கருத்தை இரான் வரவேற்றுள்ளது

obma-iran.jpgஅமெரிக்கா-  இரான் இடையிலான முப்பது ஆண்டுகால பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ள கருத்தை இரானிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் வரவேற்றுள்ளார்.

”ஆனால் வாஷிங்டனின் நிலைப்பாட்டு மாற்றம் வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் நீடிக்கவேண்டும், தம்முடைய கடந்தகால தவறுகளை அது அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்கா அப்படிச் செய்யும் பட்சத்தில் இரான் தனது முகத்தைத் திருப்பிக்கொள்ளாது” என்று அலி அக்பர் ஜவான்ஃபகிர் கூறியுள்ளார்.

இரானிய புத்தாண்டை முன்னிட்டு அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்துச் செய்தியில், இரானுடன் நேர்மையாகவும் பரஸ்பரம் மரியாதையுடனும் உறவுகளை முன்னெடுக்க தான் விரும்புவதாகக் கூறியிருந்தார்.

புலி ஆதரவாளர்களை கட்டுப்படுத்த சுவாமி நடவடிக்கை.

subramanian_swamy.jpg தமிழ் நாட்டிலுள்ள புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய உயர் நீதிமன்றத்தில் உதவியை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் ஆட்சியின்கீழ் புலி ஆதரவாளர்கள் சட்ட திட்டங்களை உதாசீனம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ம் திகதி நீதிமன்றத்தில் வைத்து புலி ஆதரவுச் சட்டதரணிகளினால் சுப்பிரமணிய சுவாமி தாக்கப்பட்டார் நீதிபதி மற்றும் பொலிஸார் முன்னிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இவ்வாறு எதிர்வரும் காலங்களில் இடம்பெறாது தடுப்பதற்கு இந்திய உயர் நீதிமன்றத்தின் உதவியினை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் கொடிகளை வைத்திருந்தமை சட்டத்திற்கு முரணானதல்ல -கனடியப் பொலிஸார் தெரிவிப்பு

ltte_flag.jpg
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கனடா தடைசெய்திருக்கின்ற நிலையில் இந்த வாரம் ரொரொன்ரோவில் தமிழ் சமூகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பொது புலிகளின் கொடிகளை வைத்திருந்தமை சட்டரீதியானதென கனடியப் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ரொரொன்ரோவில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர் . இலங்கை யுத்தம் தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையிலும் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு கனடிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுமே இந்த மனிதச்சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புலிகளின் கொடிகளை ஏந்தியிருந்தனர். அவ்வாறு கொடிகளை வைத்திருந்தமை கனடாவின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு முரணானதா என்பது குறித்து கனடாவின் சட்டத்திணைக்களம் ஆராய்ந்து வருவதாக நகரப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர். ஆனால், அது சட்டவிரோதமானதல்ல என்ற கருத்தை பொலிஸ் படை வழக்கறிஞர்கள் கொண்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மார்க்புகாஷ் கூறியுள்ளார்.

“எந்தவொரு சட்டத்திற்கும் முரணானதாக இது இல்லை’ என்ற கருத்தை எமது வழக்கறிஞர்களிடமிருந்து கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசு புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டதையடுத்து புலிகள் அமைப்பிற்கு அங்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது

ஃபிரிட்சலுக்கு ஆயுள் தண்டனை

austria_incest.jpg
ஆஸ்திரியாவில் தனது மகளை இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் சிறைவைத்து, அவரை பலமுறை பாலியல்
வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவர் மூலம் 7 குழந்தைகளையும் பெற்றுக்கொண்ட ஜோசெப் ஃபிரிட்சல் என்பவருக்கு ஆயுட்சிறை கிடைத்துள்ளது.

இந்த சிறைவாசத்தை அவர் ஒரு மனநல காப்பகத்தில் கழிப்பார்.

பாலியல் வல்லுறவு, குடும்பத்துக்குள் தகாத உறவு வைத்திருத்தல், சிறைவைத்தல், தனது மகளை சிறை வைத்த காலத்தில் பிறந்த ஒரு குழந்தையை அலட்சியத்தின் காரணமாக கொலை செய்தமை ஆகியவை உட்பட ஒரு தொடரான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக ஏகமனதாக காணப்பட்டார்.

விசாரணைகளின் போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட அந்த குற்றவாளி, தான் தனது குற்றங்கள் அனைத்தையும் உணர்ந்து வருந்துவதாகவும் கூறினார். தனது மகள் வீடியோ மூலம் வழங்கிய வாக்குமூலத்தை கேட்டபின்னர் தனது கட்சிக்காரர் தனது மனதை மாற்றிக்கொண்டதாக குற்றவாளியின் தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்

வருண் காந்தியை கைது செய்ய இடைக்காலத் தடை

20-varun-ganthi.jpgஉத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வருண் காந்தி அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில், முஸ்லிம்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசினார்.

இது குறித்து தேர்தல் கமிஷனின் உத்தரவின் பேரில், வருண் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றதில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதே போல தான் கைது செய்யப்படுவதைத் தவி்ர்க்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது

மடகஸ்கார் நீதிமன்றம் ரஜோலினாவின் ஜனாதிபதி நியமனத்துக்கு அங்கீகாரம்

madak.jpgமடகஸ் கார் உச்ச நீதிமன்றமானது அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் அன்றி ராஜோலினாவிடம் அதிகாரம் கையளிக்கப்பட்டமைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

அந்நாட்டு ஜனாதிபதி மார்க் ரவலோமனானா பதவியை விட்டு விலகிய பின், அந்நாட்டு இராணுவம் 34 வயது அன்ட்றி ரஜோலினாவிடம் அதிகாரத்தை கையளித்திருந்தது. மடகஸ்கார் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் ஆகக் குறைந்தது 40 வயதை அடைந்திருப்பது கட்டாயமாகும்.

இந்த வயது நிபந்தனையின் பிரகாரம் 6 வயது இளமையான அன்றி ரஜோலினா ஜனாதிபதியாக பதவியேற்பது சட்ட சிக்கல் மிக்க ஒரு விடயமாகவே கருதப்பட்டது.

இந்நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரது ஜனாதிபதி நியமனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ஆபிரிக்க நாடான சாம்பியாவானது, உடனடியாக மடகஸ்காரை ஆபிரிக்க ஒன்றியத்திலிருந்தும் தென் ஆபிரிக்க அபிவிருத்தி சமூகத்திலிருந்தும் நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மடகஸ்காரில் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைக்கப்படும் அரசாங்கத்தை சாம்பியா நிராகரிக்கிறது” என சாம்பிய வெளியுறவுத் துறை அமைச்சர் கபிங்கா பண்டே தெரிவித்தார்.

மடகஸ்காரில் புதிய தேர்தலை 24 மாதங்களில் நடத்துவதாக அன்றி ரஜோலினா வாக்களித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அது மிக நீண்டகாலமாகும்” என பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்தது.

மடகஸ்கார் உலகின் நான்காவது பெரிய தீவாகும். அந்நாட்டின் சனத்தொகை 20 மில்லியனாகும். நாட்டு மக்களின் 70 சதவீதமானவர்கள் நாளொன்றுக்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.