ஃபிரிட்சலுக்கு ஆயுள் தண்டனை

austria_incest.jpg
ஆஸ்திரியாவில் தனது மகளை இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் சிறைவைத்து, அவரை பலமுறை பாலியல்
வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவர் மூலம் 7 குழந்தைகளையும் பெற்றுக்கொண்ட ஜோசெப் ஃபிரிட்சல் என்பவருக்கு ஆயுட்சிறை கிடைத்துள்ளது.

இந்த சிறைவாசத்தை அவர் ஒரு மனநல காப்பகத்தில் கழிப்பார்.

பாலியல் வல்லுறவு, குடும்பத்துக்குள் தகாத உறவு வைத்திருத்தல், சிறைவைத்தல், தனது மகளை சிறை வைத்த காலத்தில் பிறந்த ஒரு குழந்தையை அலட்சியத்தின் காரணமாக கொலை செய்தமை ஆகியவை உட்பட ஒரு தொடரான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக ஏகமனதாக காணப்பட்டார்.

விசாரணைகளின் போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட அந்த குற்றவாளி, தான் தனது குற்றங்கள் அனைத்தையும் உணர்ந்து வருந்துவதாகவும் கூறினார். தனது மகள் வீடியோ மூலம் வழங்கிய வாக்குமூலத்தை கேட்டபின்னர் தனது கட்சிக்காரர் தனது மனதை மாற்றிக்கொண்டதாக குற்றவாளியின் தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *