மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்கென கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களினால் சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து மற்றும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் உட்பட்ட பொருட்களை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கொழும்பு பல்கலைக்கழக கலைப் பிரிவு மாணவன் ஆர். எம். சமித்தஜீவன் கையளிப்பதைப் படத்தில் காணலாம். உபவேந்தர் பேராசிரியர் திருமதி சானிகா ஹிரும்துரேகம, சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி பிரேமகுமார மற்றும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் எம். எஸ். அனீஸ் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.