கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: – நியூசிலாந்து அணி 200 ஓட்டங்களால் வெற்றி

india.jpgஇலங்கை – இந்தியா – நியூசி லாந்து ஆகிய அணிகளுக்கிடையி லான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் நேற்று இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையே தம்புள்ளயில் நடைபெற்ற முதலா வது போட்டியில் நியூசிலாந்து அணி 200 ஓட்டங்களால் அபாரமாக வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசி லாந்து அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ரொஸ் டெய்லர் 95 ஓட்டங்களையும் ஸ்கொட் ஸ்டை ரிஸ் 89 ஓட்டங்களையும் நியூசி லாந்து அணிக்கு பெற்றுக் கொடுத்த னர். பந்து வீச்சில் அஸிஸ் நெஹ்ரா 4 விக்கெட்டுகளையும், பிரவீன் குமார் 3 விக்கெட்டுகளையும் பெற்ற னர். பதிலளித்து ஆடிய இந்திய அணி 29.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ரவீந்திர ஜடேஜா 20 ஓட்டங்க ளையும், விரேந்தர் சேவாக் 19 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் டெரல் டஃபி 3 விக்கெட்டுகளையும், கைல் மில்ஸ், ஜேக்கப் ஓராம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பெற் றனர்.

MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim

MoU+Meeting_08Aug10Whilst the Sri Lankan Opposition parties have on 8 August 2010 called on the Government (GOSL) to release the draft constitutional and electoral reforms that are to be amended and how they will be amended in the proposed new Sri Lanka Constitution, an important milestone in uniting the Tamil diaspora in London was achieved on the same day.

A representative gathering of over 50 members of Tamil and Muslim political parties, independent researchers and general public gathered at Walthamstow, East London unanimously endorsed a Memorandum of Understanding of all Tamils and Muslim communities in London to implement at the earliest opportunity the guidelines consisting of Nine (9) Minimum Aspirations of All Tamils and Muslims for circulation among the wider diaspora around the world and in Sri Lanka.

MoU_Meeting_08Aug10These Minimum Aspirations – the Walthamstow Guidelines – are not demands on the Government (GOSL) for the settlement of the Tamil problem, but are the accepted minimum conditions to be recommended to all elected Tamil and Muslim political parties and their representatives in Sri Lanka and all Tamil & Muslim diaspora  for co-operation with the Government (GOSL) to alleviate the suffering of the Tamil speaking peoples, as well as to lend support to the Government (GOSL) to amend the Constitution of Sri Lanka speedily.

The Walthamstow Guidelines are practical and pragmatic principles within a set timeframe for requesting implementation by the Government (GOSL) for good governance, reconciliation and enduring peace in Sri Lanka. The Guidelines were formulated by an all party Tamil and Muslim sub-committee consisting of political activists, adversaries, independent researchers and think tank who studied the Tamil intransigence and political naivety over one year and made these guidelines in a Consultation Paper to the larger diaspora and which was unanimously accepted by the Tamil and Muslim representatives at yesterday’s ,meeting.

The list of the Nine Minimum “Walthamstow Guidelines”  will be published soon.

Victor Cherubim
8 August 2010.

ஓகஸ்ட் 08 ஞாயிறு : தமிழர்களிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை எட்டுவதற்கான சந்திப்பு : தேசம்

தமிழ் அரசியல் தலைமைகளிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டவும் அப்புரிந்துணர்வை தொடர்ந்தும் தக்க வைப்பது பற்றியுமான கலந்துரையாடல் ஓகஸ்ட் 8 2010 இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் பல்வேறு அரசியல் பிரிவுகளினின்றும் ஆர்வலர்கள் கலந்தகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பின் முதலாவது அம்சமாக அண்மையில் இலங்கை சென்று ஓகஸ்ட் 6 2010ல் லண்டன் திரும்பியுள்ள வாசுதேவன் இலங்கையின் தற்கால யாதார்த்த நிலவரம் பற்றி தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து ஒரு குறுகிய கலந்துரையாடல் இடம்பெறும்.

அதனை அடுத்து கலந்துரையாடலின் முக்கிய அம்சமான குறைந்தபட்ச புரிந்துணர்வு மற்றும் குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறைகள் பற்றிய விடயம் கலந்துரையாடப்படும். குறைந்தபட்ச புரிந்தணர்வை எட்டுவது அதற்கான வரையறைகள் பற்றி கடந்த ஓராண்டு காலமாக இடம்பெற்ற விவாதங்களை ரவி சுந்தரலிங்கம் வி சிவலிங்கம் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.

அவர்களுடைய தொகுப்புகளைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும். கலந்துரையாடலின் முடிவில் குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறைகள் எது என்பதனை கூடி உள்ளவர்களின் ஒப்புதலுடன் தீர்மானிமாக்கப்படும்.

இக்குறைந்தபட்ச புரிந்தணர்வின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகள் பின் பொதுத்தளத்தில் வெளியிடப்படும். அது தொடர்பான மேலதிக விவாதங்கள் பல்வேறு மட்டங்களிலும் இடம்பெற்று அவை பரவலாக்கப்படும்.

இக்கலந்தரையாடல் தேசம் கூட்டங்கள் வழமையாக இடம்பெறும் குவார்கஸ் ஹவுசில் இடம்பெறாது. வோல்தம்ஸ்ரோவில் கீழுள்ள புதிய முகவரியில் இடம்பெறும்.

சந்திப்பு விபரம்:

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு

காலம்: ஓகஸ்ட் 8, 2010 (ஞாயிறு) மாலை 16:30

இடம்: Lord Brooke Hall, Shernhall St, Walthamstow, E17 3EY (next to Vallentin Road)

._._._._._.

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு – ஓகஸ்ட் 08,  2010ல் : தேசம்

Thesam Logoஇலங்கைத் தமிழ் மக்களுடைய வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயம் மே 18 2009ல் முடிவுக்கு வந்து புதிய அத்தியாயம் ஆரம்பித்தது. முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழலில் முற்றிலும் மாறுபட்ட அரசியல் சவால்களை தமிழ் மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். பல்வேறு முரண்பாடுகளும் பல்வேறு குறைபாடுகளும் இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளிடமே உள்ளது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் பல்வேறு கூறுகளாகி நிற்பதனால் தமிழ் சமூகம் பலவினமான நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழர்களை ஆயுத பலம்கொண்டு பலாத்காரமாக ஓரணியல் நிறுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலாலும் அத்தலைமைகளை ஓரணியில் கொண்டு வரமுடியவில்லை. அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் வந்தவர்களும் உண்மையான முழுமையான புரிதலுடன் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மே 18 2009ற்குப் பின்னான அவர்களின் அரசியல் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளிடையே ஒரு புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் குறைந்தபட்ச புரிந்துணர்விற்கு வரவேண்டும் என்பது அவசியமானதாக இருந்தது. இப்புரிந்துணர்வு வெளி அழுத்தங்களால் உருவாவதைக் காட்டிலும் அவர்களின் சுயவிருப்பில் இருந்து அவர்களின் சிந்தனையில் இருந்து உருவாவது அந்தப் புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும்.

02Aug09_Audienceஇப்புரிந்துணர்வை எட்டுவதை அடிப்படையாகக்கொண்டு யூன் 21 2009இல் ‘அடுத்த நகர்வை நோக்கிய ஒரு பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் தேசம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

Constantine_T_and_Srithunga_Jதமிழ் மக்களைப் பாதிக்கின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கடந்த 13 ஆண்டுகளாக தேசம் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றது. 2002ல் மலேசியத் தமிழ் அறிஞர்களை வரவழைத்து மலேசிய தமிழ் இலக்கியம் – நூல் கண்காட்சியும் கலந்துரையாடலும், 2006இல் கலாபூஷணம் பி எம் புன்னியாமீன் அவர்களை வரவழைத்து தமிழ் – முஸ்லீம் இனஉறவுகள், 2007ல் கொன்ஸ்ரன்ரைன் தலைமையில் லண்டன் வந்திருந்த ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கை: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல், 2008இல் 13வது திருத்தச்சட்டம் பற்றிய சந்திப்பு இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் தேசம் கலந்துரையாடல்களை மேற்கொண்டது. 

இவ்வாறு சமகால விடயங்களை கலந்துரையாடி விவாதிக்கும் தேசம் யூன் 21 ஏற்படுத்திய சந்திப்பில் பல்வேறு முரண்பட்ட அரசியல் கருத்துக்களையும் அரசியல் பின்னணியையும் உடையவர்கள் கலந்துகொண்டு  பல்வேறு அரசியல் கருத்துக்களையும் முரண்பாடுகளையும் உடையவர்கள் மத்தியில் புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் அதற்கான உரையாடல் அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இச்சந்திப்பில் இலங்கையில் செயற்படுகின்ற பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Shanmugaratnam Nஅதன் அடிப்படையில் ‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பில் ஓகஸ்ட் 2ல் மற்றுமொரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பில் பேராசிரியர் என் சண்முகரட்ணம், வியூகம் ஆசிரியர் ரகுமான் ஜான் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் இறுதியில் கீழுள்ள எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்று  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

02Aug09_Audienceஇந்த எட்டு விடயங்களிலும் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான வரையறை என்ன என்பது பற்றி ஆராய்ந்து உடன்பாடு எட்டுவதற்கு 15 பேர் கொண்ட செயற்குழு உருவாக்கப்பட்டது. இவர்கள் கடந்த ஓராண்டு காலத்தில் 12 சந்திப்புக்களை மேற்கொண்டு தற்போது குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் இதுவே இறுதியானது அல்ல. இந்த வரையறையை நிர்ணயம் செய்ய கேட்டுக்கொண்ட யூன் 21 2009, ஓகஸ்ட் 02 2009 பொதுக் கூட்டத்தளத்தைக் மீண்டும் கூடி அவர்களின் கருத்துக்களையும் பெற்று இந்தக் குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இது பற்றிய விவாதம் ஆரம்பிக்கப்பட்ட போது அன்றைய நிலைமைகள் புரிந்துணர்வு எட்டப்படுவதற்கான தேவையை வலியுறுத்திய போதும் கட்சிகள் தேர்தல்களை எதிர்நோக்கி இருந்த அப்போதைய சூழல் புரிந்துணர்விற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது அந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Tamil_PP_28July10யூன் 24 2010இல் முதலில் சந்தித்த தமிழ் கட்சிகள் தற்போது தொடர்ச்சியாக 3 சந்திப்புக்களை மேற்கோண்டு தமக்கிடையே புரிந்துணர்வை எட்டுவதற்கும் தமிழ் மக்களுடைய நலனை முன்னிலைப்படுத்தும் பொது வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்படவும் முன் வந்துள்ளன. மேலும் சந்திப்புக்கள் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியின் பணிமனையிலோ என்றில்லாமல் பரஸ்பர உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தமிழ் கட்சிகளின் அடுத்த சந்திப்பை கிழக்கு மாகாணத்தில் நடாத்த முதலமைச்சர் சந்திரகாந்தன் அழைப்புவிடுத்துள்ளார். அதன்படி அச்சந்திப்பு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இத்தமிழ் கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டிற்கு வரும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மௌனமாகவே உள்ளது. தமிழ் மக்களின் கூடிய பிரதிநிதித்துவத்தை வைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பொது இணக்கப்பாடு ஏற்படுத்தப்படுவது அவசியம் என்பதனை ஏனைய கட்சிகள் அறிந்தே தமது அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!

தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஒவ்வொருவருமே பொறுப்புடையன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் கூடிய பொறுப்புடையது. பெரும்பாலும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களையும் அதன் தலைமைகளை உருவாக்கியது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலே. அந்த வகையில் வி ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, ஆர் சம்பந்தன் ஆகியோர் தாங்கள் பெற்றெடுத்த அரசியல் வாரிசுகளுடன் ஒரு புரிந்துணர்விற்கு வந்து தமிழ் மக்களுடைய நலன்கள் மேலும் பாதிக்கப்படாமல் தடுப்பதுடன் தமிழ் மக்களுடைய அரசியல் சமூக பொருளாதார வாழ்நிலையின் தரத்தை உயர்த்துவதற்கு முன்வர வேண்டும்.

தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் தமக்கிடையேயான முரண்பாடுகளுடன் முட்டிமோதி காலத்தையும் நேரத்தையும் விணடிப்பது தமிழ் மக்களின் வாழ்நிலையையே கீழ்நிலைக்கு இட்டுச்செல்ல காரணமாகிறது. அதனால் தமிழ் கட்சிகளிடையே ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அழுத்தங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களாலும் வழங்கப்பட வேண்டும்.

சந்திப்பு விபரம்:

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு

காலம்: ஓகஸ்ட் 8, 2010 (ஞாயிறு) மாலை 16:30

இடம்: Lord Brooke Hall, Shernhall St, Walthamstow, E17 3EY (next to Vallentin Road)

இக்குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறையைச் செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஆன சந்திப்பு ஓகஸ்ட் 08 2010ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்னைய சந்திப்புக்கள் பற்றிய விபரமும் இணைக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான வரையறையை நிர்ணயம் செய்வது தொடர்பான முன்னையை சந்திப்புக்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம்.

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

ஜனநாயகமயப்படுத்தல் – ரவி சுந்தரலிங்கம்

10 புரட்டாசி 2009 – சாராம்சம்: இலங்கையில் இன்றுவரை தீர்க்கப்படாத இனப் பிரச்சனை அடிப்படையில் ஜனநாயக உடமைகள் பற்றியது. பிரதேச ரீதியிலான சமூக-பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இப் பிரச்சனைக்கும் சிங்கள மக்களது கிளர்ச்சிகளுக்கும் பொதுக் காரணிகளாக இருந்துள்ளன. ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்கம் பற்றிய அரசியலும்; வாக்களிப்பும் அல்ல, அவை மக்களது உடமைகள் பற்றியவை. இவ்வுடமைகள் தனி-மனித ரீதியிலும் சமுதாய, சமூக ரீதிகயிலும் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டியவை. சர்வதேசிய மயப்படுத்தல் என்பது முதலாளித்துவத்தின் சந்தைப்படுத்தல் ஆயினும் புரட்சிகர தொழிலாள அகராதிகளில் அமைந்தவை ஆகினும், ஜனநாயகத்தின் பரிமாண வாதங்களால் தொடர்பு படுத்தக் கூடியவை என்பவற்றை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

1. புலிகளது/புலிகளால் அழிவு

19/5 இலங்கைத் தீவின் அரசியலில் பாரிய திருப்புமுனை என பல அரசியல் அவதானிகளால் கணிக்கப்படுகிறது. தமிழர்களது இன்றைய நிலை, அவை குறித்து புலிகளது நேரடி/மறைமுகமான பங்கு, சாதக/பாதகமான விளைவுகள், என்பவற்றை மட்டுமே கொண்டு இக் கணிப்புக்கு வருபவர்களே பலர் உள்ளனர். இவற்றின் மேல் ஜனநாயகம், தொழிலாளர் உடமைகள் அவர்களது வாழ்க்கைத்தரம், பிராந்தியத்தின் பாதுகாப்பு அதன் ஸ்திரம் என்பவற்றைக் கொண்டு இம் முடிவுக்கு வருபவர்களும் உண்டு.

எவ்வழி தேர்ந்தாலும், இவர்கள் இடது/வலது எனக் கடைப் பிடிக்கும் இடைவெளி அற்றுப்போவதும், அவர்கள் முன்வைக்கும் தர்க்கங்களின் விளக்கங்கள் ஈற்றில் பல விடயங்களில் ஒரு இனப்படுவதும் சில வேளைகளில் ஆச்சரியமானவை. மேலும், இந்நிலமைக்கான அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்கியது நாமே என ஜே.வி.பியும், சில தமிழ் ஆயுதக்குழுக்களும் உரிமைகோருவது வியப்பூட்டுபவை ஆயினும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

புலிகளது கட்டுப்பாட்டில் தமிழ் பேசும் சமுதாயங்கள் பேச்சற்ற ஊமைகளாக, மூச்சு விடமுடியாது வாழும் பிராணிகளாக, அறிவிலும் ஆற்றல்களிலும் தேக்கம் கண்ட மனித முண்டங்களாக முடங்கி வாழ்ந்தார்கள் என்பது உண்மை. எமது தாயங்களில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் புகலிகள் கூட அரசியல் கலாச்சாரக் கூட்டங்களை நடத்த முடியாத மனோவியல் நிலைப்பாட்டை உருவாக்கி வைத்திருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது. தமது ஆதரவாளர்களை மிக உக்கிரமாக பணம் சேகரிக்கும் இயந்திரங்களாகவும், மக்களை பணம்-கறக்கும் பசுக்களாகவும் மட்டுமே கருதிய காலம் இது. எனவே, புலிகள் ஜனநாயகத்திற்கு குந்தகமானவர்கள் என்பதில் ஐயமே இல்லை.

ஜனநாயகம் என்ற கருத்திற்கே இடமில்லை என மாற்று அமைப்புகளை இல்லாது செய்து, மாற்றுக் கருத்துக்கள் தம்மிடையேகூட இருப்பதைத் தவிர்த்து, தாமே தமிழர்களது ஏக-பிரதிநிதிகள் என்று இருந்தும், உலக நாடுகள் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ராஜிவின் படுகொலைக்குப் பின்னர் இந்தியாகூட இந்நிலையை ஏற்றுக் கொண்டு தீர்வுகளை தேடியது. சிறீலங்காவும்தான் புலிகளுடன் மட்டுமே உடன்பாடுகளுக்கு வந்தது. எனவே, ஜனநாயகம் என்பதில் இந்தப் போக்கில் பங்குபற்றிய வெளிநாடுகள் எப்படியான நிலைப்பாட்டை கொண்டிருந்தன, முதன்மைப்படுத்தின என்பதை உணராது, ஏற்படுத்திய புறச் சூழ்நிலைகளை அவதானியாது, ஜனநாயகமயப்படுத்தல் பற்றி பேசுவது பொருத்தமற்றது.

இலண்டனில் புலிகளது கெடுபிடிகளைத் தாண்டுவதற்கு ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்கள் சங்கர் ராஜி, இரத்தினசபாபதி ஆகியோரது இறப்புகளின் பின்னடியிலான ‘நினைவு மாகாநாடுகள்’ தேவைப்பட்டன என்பதிலும் பார்க்க, அதற்கான காலம் பங்குனி 2007 வரை ஆகிற்று என்பதே குறிப்பிட வேண்டியது.

இவ்வாறு புலிகளது அடக்கு முறையின் ஆழத்தை அதன் வீச்சை என்றுமே உணர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்ளாத போதிலும், “புலிகளது அழிவு என்பது ஜனநாயக-மறுமலர்ச்சியின்” தொடக்ககாலம் என்ற கூற்றை எம்மால் ஏற்று கொள்ள முடியாமல் இருப்பதற்கு மேற்படி நாம் சுட்டிக்காட்டிய புறச் சூழ்நிலையே உணர்த்தப் போதுமானது. இதனத் தவிர்த்தால், இலங்கையின் ஜனநாயகம் என்பது புலிகளது நடத்தையில் மட்டுமே தங்கி இருக்கவில்லை என்ற எமது விளக்கமே போதுமானது.

ஆனால், புலிகளது அழிவு தமிழ்பேசும் மக்களது கைகளில் இருந்திருந்தால், மேற்கத்திய நாடுகளது உதவிகள் இந்தியாவின் ஆதரவு சீனாவின் ஈடுபாடு என உலகாளாவிய ‘சதியுடன்’, எம்மரும் சேர்ந்து நடத்திய மக்கள் அழிவுப் போர்த் திட்டமாக அமைந்திராவிட்டால், சிறீலங்கா அரசிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே உள்ள சரித்திர பூர்வமான உடமைப் பிரச்சனைக்கான தீர்வுடன் இடம் பெற்றிருந்தால், ஏன், சில புலி எதிர்ப்புவாதிகளது வெறியுடன் கூறினால், “குறைந்தபட்சம் பல ஆயிரம் மக்களது படுகொலைகளுடன் முடிந்திராவிட்டால்”, சிலரால் சில வேளைகளில் ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கும். இது உணர்வு பூர்வமான வாதம்.

மேலும், “கள்வனை கண்டுபிடிக்க இன்னொரு கள்வன் வேண்டும்” எனும் ஆங்கில பழமொழிபோல, ஒரு ஜனநாயக விரோத சக்தியை அழிப்பதற்கு அதற்கு மேலான ஜனநாயக விரோத சக்தி தேவைப்படும் என்பதால், இலங்கை தீவையையே தீயிடுவது போலாகிடும் என்றோம். இன்று எமது வாதங்களுக்கான பதில்கள் கண்முன் உள்ளன. இலங்கையின் சகல அரச, சமுதாய, சமூகக் கட்டுகளும் ஜனநாயகம் இழந்தவையாக இருப்பது வருத்தத்திற்குரிய ஒரு விடயம். அதேசமயம், எவ்வாறு ஜேர்மனியர்களை மனிதாபமற்ற மனித-விரோதிகளாக சரித்திரம் பூராக கணிப்பதற்கான மனோநிலையை யூதர்களதும் மற்றைய ஐரோப்பியரதும் படுகொலைகள் ஏற்படுத்தியதோ, அதேபோன்ற நிலைக்கு தமிழ் மக்களது படுகொலைகள் சிங்கள மக்களையும் அவர்களது அரசையும் சரித்திரத்தில் நிறுத்தி உள்ளது என்பது மேலும் வருத்தத்திற்குரிய விடயம். இவ்வாறான அவதூறுனை சம்பாதிப்பதால் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு என்ன பலன் எவ்வளவு செலவு என மனோவியல் ரீதியில் வினவுவது தவிர்க்க முடியாதது. இவ்வகையில் சிங்கள மக்களது பாரம்பரியங்கள் சொத்துக்கள்-பெறுமானங்கள் (assets) மாசுபட்டுள்ளன என்று கூறுவது தப்பா என்றும் சிந்திக்க வேண்டும்.

இதற்கு மேலாக தமிழ் மக்களது சொத்துக்கள்-பெறுமானங்கள் என்ற கேந்திர ரீதியிலும் எமது பதில்கள் இருக்க வேண்டும் என்பதால், “வீட்டுள் நச்சுப் பாம்பு புகுந்துவிட்டால் சுற்றாருடன் சேர்ந்து வீட்டையே தீயிடுவதில்லை” என்ற நிதானத்துடன் புலிகளை அணுக வேண்டும் என்றோம். ஆகவேதான், புலிகள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்ற போதிலும் “இறுதித் தீர்வில் அவர்களது இயற்கையான சமைவும் இருக்க வேண்டும்” என்றோம்.

ஆனால் ஜனநாயகம் பற்றிய விசித்திரமான வாதங்கள் பலதரப்பட்டவை. கடந்த ஆண்டு இலண்டன் வந்த ஜே.வி.பி பா.உறுப்பினர் நா. சந்திரசேகர், “நாம் மற்றவர்கள் போல புலிகளது இனவாதப் போருக்கும், இனவாதங்களுக்கும் எதிராக வாய்ப் பேச்சுடன் நின்று விடவில்லை. அதற்காக அயாராது நிலத்தில் கருமமும் ஆற்றினோம். புலிகளை அழிக்க வேண்டும் அல்லது பலவீனப்படுத்த வேண்டும் என்பது எமக்கு முதலாவது கருத்தாக இருந்தது. எனவே, மகிந்தாவை பதவிக்கு கொண்டுவருவதே தகுந்த உபாயமாகவும் எம்மால் கணிக்கப்பட்டது. எமது உழைப்பு இல்லாது மகிந்தா வென்றிருக்க முடியாது.” என்ற தமது விளக்கத்தை தருகிறார். மறு கணமே, “புலிகளுடன் அழிக்கப்பட்டது பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களது ஆயிரமாயிரம் வருடங்களான சரித்திரமும் அவர்களது பலமும் வீரமும் அவர்களது நிலம் மீதான ஆளுமையும் கூடவே” என்கிறார். இவற்றை இணைத்துப் பார்ப்பவர்கள் அவர் கூற்றுகளிடையே உள்ள முரண்பாடுகள் எவ்வளவு பாரதூரமானவை என்பதைப் புரிந்து கொள்வர். ஆனால், அவை அரைவாசி விளக்கமே.

மிகுதி: “1. நாம் சிறீ லங்காவின் தேசிய விடுதலைக்காகப் போராடுகிறோம், 2. தமிழர்களது பூர்வீக-நிலம் என்ற கோரிக்கையை நாம் ஏற்க முடியாது, 3. அதிகார/நிர்வாகப் பரவலாக்கம் என்பது பொறுப்பற்ற விடயம், 4. இந்திய-ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்டதால் நாம் 13ம் சீர்-திருத்தத்தை நிராகரிக்கிறோம், (Further reading, reference 10) 5. ஜே.வி.பி அரசுக்கு வந்தால் தமிழ் பேசும் சமுதாயங்கள் இன ரீதியில் முன் வைக்கும் கோரிக்கைகள் அவசியமற்றவை ஆகிவிடும்”.

புலிகளை அழிக்க அல்லது பலவீனப்படுத்த மகிந்தாவை ஜனாதிபதியாக்கிட தமது தோழர்களது உழைப்பையும் பணத்தையும் விரையம் செய்கிறார்கள் ஜே.வி.பியினர். ஆனால், புலிகளோ அதே மகிந்தாவை ஜனாதிபதியாக்கி தம்மை அழித்துக் கொள்ள அவரிடமிருந்து பணத்தையும் பெற்று தம் மக்களது வாக்குரிமையும் ‘ரத்துச்’ செய்கிறார்கள். இவை இரண்டையும் எவ்வாறு பொருத்திப் பார்ப்பது, புரிந்து கொள்வது? யாதார்த்த வாதத்தால், வெறும் அரசியல்வாதிகள்/ கட்சிகளை முதன்மைப்படுத்திய கருத்துச் சொல்வதால் சரிதிரத்தின் துண்டுகளுக்கு விளக்கம் சொல்பவர்கள் உண்டு.
ஆனால், மக்கள் வாழ்வே அரசியல் என உணர்ந்து ஏற்றுக் கருமம் ஆற்றுபவர்களால் எப்படி இவ் விளங்கங்களை ஏற்றுக்கொள்ள முடியும்?

ஜேவிபியினரது மக்கள் விடுதலைப் போர்களினால் கண்ட ஜனநாயகப் பலா பலன்களை சாதாரண சிங்கள மக்களது அனுபத்துடன், இனங்கள் பிரதேச கலாச்சார வேறுபாடுகள் என்பவற்றுடன் இணைத்துப் பார்க்கும்போது, மேலுள்ள ஐந்து குறிப்புகளும் ஒட்டு மொத்தமாக ஜனநாயக விரோத நிலைப்பாடுகள் என வகைப்படுத்துவது பொருத்தமானது. இவற்றினை, தொழிளார்-சர்வாதிகாரம் என்பதை ஒரு-கட்சிச் சர்வாதிகாரமாகவும் இறுதியில் அதனை ஒரு இனத்தின் சர்வாதிகாரமாகவும் மாற்றிடும், மூன்றாம் உலக வளர்ச்சிகளில் பின்தங்கிய தேசியவாதப்-புரட்சிவாதிகளது குளப்பவாதம் என சரித்திரம் தந்த படிப்பினைகளுள் உட்படுத்தும் போது ஜனநாயகம்பற்றிய இவர்களது விளக்கமும் துலக்கமாகிறது.

ஆகவே, புலிகளது இன ரீதியான தேசியவாதத் திட்டமும், ஜேவிபியினரது தேசியவாதம் கொண்ட புரட்சித் திட்டமும், பிராந்திய வாரியாக எழுந்த இளைஞர்களது அதிருப்த்தியே என்பதும் சமூக-ஜனநாயகத்தை வேண்டிய ஆதங்களின் அடிப்பிறப்பாக இருந்தபோதும், ஜனநாயக விரோத, மக்கள் விரோத போக்குகளுள் முடங்கியதும் ஏன் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அப்படியாகின், ஜனநாயகப்படுத்தல் எனும்போது நாம் எவற்றைக் குறிப்பிட முடியும், அவற்றை எவ்வாறு வரைவிடுவது என்பவை அடுத்த அத்தியா அவசியமான காரியமாகிறது. பதிலாக நாம் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட சித்தாந்த வரைவு இலக்கணங்களை மட்டுமே ஒப்பியாது, பலவிதமான உலகளாவிய போக்குகளைவும் அவதானித்து எமது வரைவுகளைக் தேர்ந்து கொள்ள வேண்டியது கடமை என்பதிலும் பார்க்க, மக்களது உடன்பாட்டை ஈடுபாட்டை பெற வேண்டுமாயின் அவசிமானது என்பதும் புரிய வேண்டியதாகிறது.

ஜனநாயக மாதிரிகள் (Theoretical models)

சரித்திர ரீதியில் ஜனநாயகம் என்பதற்கான வரைவுகளின் நிலைதளங்கள் (framework)

1. அரசியல் – பொருளாதாரம், (political versus economical) , 2. நடைமுறை, செயலாக்கம் – நிறைவான பொருளாக்கம் (procedural versus substantial) , 3. விடுதலை – அடக்கு முறை (liberal versus non-liberal) என்பவற்றின் இடையேயான வாதப் பிரதிவாதங்களாகவே இருந்து வந்துள்ளது. இவற்றுடன் நான்காவதாக பிரஜாஉரிமை – சர்வதேசியம் (citizenship and universality) என்பவையும் இணைக்கப்பட வேண்டும் என்பது எமது பிரத்தியேக வாதம்.

இவ்வகையில் மேற்கத்தய ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவை மீளாய்வு செய்யப்பட வேண்டியவை, செய்யப்பட்டும் வந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் முடிவுகளின் போது ஜோஸேப் ஸ்ஸம்றர் போன்றோரதும் (Schumpeter, Joseph. 1943. Capitalism, Socialism, and Democracy, NY – Harper), சோவியத் கால முடிவு காலத்தில் அடம் பிவோக்ஸ்ஜி (Przeworski, Adam et. al. 2000. Democracy and Political Development: Political Institutions and Well-Being in the World, 1950 – 1990, NY – CUP) போன்றோரது எழுத்துக்களும் மேற்கத்திய ஜனநாயகத்தை 1. தேர்தல் குறித்த நடைமுறை வழக்காகவும் (electoral process), 2. பிரதானமாக, ஸ்தாபன ரீதியிலான அதிகாரமாகவுமே (institutional power) அடையாளம் காட்டி உள்ளன.

இவற்றின் சாரமாக றொபேட் டால் என்பவர் முன்வைத்த எட்டு “உரிமைகளை” இவ்வகைப்பட்ட ஜனநாயகத்தை வரைவுதரும் தேர்வுப் பட்டியலாகக் (check list) கொள்ளலாம்:

1. வாக்களிக்கும் உரிமை, (right to vote) 2. தேர்வு செய்யப் படுவதற்கான உரிமை, (right to be elected) 3. ஆதரவுக்கும் வாக்குகளுக்கும் போட்டியிடும் உரிமை, (right to compete for votes & support) 4. இடையூறுகள் தடைகளற்ற தேர்தலுக்கான உரிமை, (right to free & fair elections) 5. ஒன்று கூடும் உரிமை, (right to free association) 6. கருத்துச் சுதந்திரம், (right to free expression) 7. மாற்று தகவல் தாஸ்தாவேதுகளுக்கன வளம், (right to alternative source of information இறுதியாக, 8. வாக்குகளிலும் கருத்துச் சுதந்திரத்திலும் தங்கிய நிர்வாக அமைப்புகள் என்பவையாகும் (institutions that depend on votes and other expressions of preference). இவற்றை “குறைந்தபட்ச அளவு கோலாகக்” கொண்டு அரசியல் பொருளாதார நிர்வாக அமைப்புகள் உருவாக்கப் படவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. (Dhal, Roberts. 1971. Polyarchy; 1989. Democracy and its Critics. New Haven: Yale UP)

இங்கே, ஜனநாயகத்தின் ஆழமும் வீச்சும், வெறும் பிரதிநிதித்துவத்தின் ஆளுமை (governance by representation) என மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்பது உணரப்பட்டது. எனவே, ‘விடுதலையும் சுதந்திரமும்’ (liberty & freedom), “நீதியும் நியாயமும்” (justice & fairness), “வாழ்வில் வெற்றி கொள்ளும் தளமும் வாய்ப்பும்” (opportunity & success in life), போன்ற உன்னதமான விளைவுகளை ஊர்ஜிதம் செய்வதே ஜனநாயகம் என்ற வாதமும் உருவாக்கப்பட்டது.

மாக்ஸினது சரித்திரம், பொருளாதாரம், அரசியல் என்பவை குறித்த தர்க்கீக வாதங்கள் மேற்கத்திய ஜனநாயக வரையறுப்புகளை மாற்றி அமைத்திடுவதில் எவ்வளவு உதவின என்பது புரிந்த விடயம். அவற்றின் விளைவே ‘சமூக அவசியங்கள்’ (social requirement) என்ற வாதம் ஜனநாயகச் சித்தாந்தின் மூன்றாம் பரிமாணம் தருவது எனலாம்.

மாக்ஸினது சித்தாந்த வாதங்களையோ கவனிக்காது, மனிதன் அடிப்படையான பொருளாதார அவசியங்கள் பூர்த்தி செய்ப்படாத பட்ச்சத்தில் ஜனநாயக நடைமுறைகளில் பூணமான தனது பங்கை வகிக்க முடியாதவன், ஆகவே ‘சமூக அவசியங்கள்’ என்பது ஜனநாகயத்தின் அங்கமாகிறது என்று வாதிடப்பட்டது. (Marshall, T. H. 1992. Citizenship and Social class. London: Pluto Press; 1997; Huber, E. et.al. The paradoxes of contemporary democracy: Formal, Participatory, and social democracy) இவற்றின் அடிப்படையிலேயே, 1940 களில் அமரிக்க ஜனாதிபதி ரூஸ்வோல்ற் (F.D. Roosevolt) தனது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக “தேவைகளில் இருந்து விடுதலை” (freedom from wants) என்ற வாதத்தை முன்வத்திருந்தார்.

புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தமே பொருத்தமானது என்ற வாதம் முதலாளித்துவத்தை பூரணமாக ஏற்றுக் கொண்டது என்பதற்கல்ல. அவ்வகையில், ஜனநாயகத்தின் குறைபாடுகளை அன்றாடம் எதிர்முகம் கொண்டவர்கள் ‘உரிமைகள்’ என்ற வரைவுக்குள் ‘அடிப்படையில் சட்டத்தின் முன்னே சம உரிமை’, ‘பெண்களுக்கு சம உரிமை’, ‘சிறுபான்மையினருக்கு சம உரிமை’, என்ற எல்லைகளை முற் கூட்டி சென்ற வண்ணம் உள்ளனர்.

புரட்சி என்றவாறு தொழிற்துறைகளில் (industrial) வளர்ச்சி கண்ட மக்களது சித்தாங்களை உள்வாங்க முற்படும் போது, மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படும் சிக்கல்களை குளப்பங்களை அநுபவ ரீதியில் அறிந்தவர்கள் நாம். ஆகவே, அதே வழி சென்று சமூக-பொருளாதார வளர்ச்சி கண்டவர்கள், தனிமனிதர்கள் – சமுதாயங்கள்; – சமூகங்கள் என்ற ஒழுங்கில் கட்டி எழுப்பும் “மனித-உரிமைகள்” என்ற சித்தாந்தங்களை நேரடியாக உள்வாங்கிட முடியாது.

இலங்கை போல் சமூக-பொருளாதார வளர்ச்சிகளில் பின்தங்கிய நாடுகளில் அரசு-அரசாங்கம்-ஆளுமை என்பவற்றிக்கு இடையேயான உறவுகளை குடியானவர்-ஜனநாயகம் (feudal democracy) என நாம் வரைவு செய்துள்ளோம். (Further reading, references 7 and 8) இவ்வாறான நாடுகளில் ஜனநயாகம் எவற்றை குறித்து நிற்கிறது, ஜனநாயகத்தின் பேரில் நிலை நாட்டப்பட வேண்டியவை எவை, அவற்றை நிலை நாட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன, அவற்றின் சித்தாந்தாந்த விளங்கங்கள் வேலைத் திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? என்பவைபற்றிய ஆய்வுகள் வேண்டியவை.

மேலும், அவற்றிக்கான ஆய்வுகள் செயற்திட்டங்களாக ஆகும்போது விளைவுகளை நேரடியாக அநுபவிப்பவர்கள், நடைமுறைப்படுத்த முற்படுபவர்கள், அரசியல் குழுக்கள் கட்சிகள் என பல தரப்பினரிடையே கலந்தாலோசனைகள் இல்லாது போகின் ஜனநாயகமயப் படுத்தல் என்பதே அர்த்தமற்ற விடயம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முதலில், ஜனநாயகம் என்பது முதலாளித்துவ-ஜனநாயகத்தை குறிப்பிடுவதால் நாம் முழுமையான-ஜனநாயகம் அல்லது பூரண-ஜனநாயகம் என்பதன் வரைவைத் தரவேண்டி உள்ளோம்.

பூரண-ஜனநாயகம்: “சமுதாய-உடமைகள் சார்ந்த உரிமைகளுடன், கூட்டாகவும் தனிமனிதனாகவும், தத்தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளையும் அவற்றின் உத்தரவாதங்களையும் தன்னியக்கமாகக் கொண்ட ஸ்தாபனமயப்படுத்தலை பூரண-ஜனநாயகம் எனக் கொள்ளலாம்.”

பூரண-ஜனநாயகம்பற்றிய எமது வரையறுப்பு இதுவாக, அவற்றுள் அமைந்துள்ள சில பதங்களது விளக்கமும் அவசியமாகிறது.

சமுதாய-உடமைகள்: “தலைமுறைகளாக மனிதரது உழைப்பினால் உருவாக்கப்பட்டு பல நுகர்வுத் தன்மைகளிலும் பெறுமதி கொண்ட பொதுச் சொத்துக்கள் அவையாகும்.”

தலைமுறைகளது உழைப்பின்றி காட்டு நிலம் பயிர் நிலமாகவும், நிலத்தின் கீழ் புதைந்து கிடைக்கும் தாதுப் பொருட்கள் புகையிரத வண்டிகளாகவும் அவை ஓடும் தண்டவாளங்களும் ஆவதில்லை.

தலைமுறைகளாக சேர்க்கும் அறிவின்றி, பதப்படுத்திய நிலங்களில் எவற்றைப் பயிரிடுவது என்தைத் தேர்ந்தெடுக்கவும், தலைமுறைகளாக மனிதரது சிந்தனைகளின் தொடர்பில் விளையும் அறிவு இல்லாவிடில், இன்றைய விஞ்ஞான தொழி-நுட்பங்கள் என அழைக்கப்படும் மனிதனது கைங்காரியம் இடம்பெற்றிருக்கவும் முடியாது.

பல நூற்றாண்டுகளாக மனிதரது சிந்தனை-முயற்சியும் உழைப்புமே, தலைமுறையாக அதன் சேகரிப்புமே எமது அறிவு என்பதையும், அவனது உழைப்பின்றி சடப் பொருட்கள் பயன் தரும் ஏதுக்கள் கருவிகள் வளங்களாக உருவாகி விடுவதில்லை என்பதையும் நாம் உணரவேண்டும்.

மனித-உரிமைகள் என்ற விடயத்தை போய் சேர முன்னர் குளப்பங்களைத் தவிர்த்திட இவ்விடத்தில் தனிச் சொத்துப்பற்றிய வரைவைத் தரவேண்டியதும் எமது கடமையாகிறது.

தனிச்-சொத்து: “மனிதன் தனதென்று கொள்வதெல்லாம், அவை அவன்கையில் இருக்கும்போது அவற்றில் ஏற்படக்கூடிய பாராமரிப்புக்கும் இயன்றால் முன்னேற்த்திற்காகவும், அவனது நுகர்வுக்கும், தற்காலிகமாக அவன்வசம் உள்ள சமுதாயத்தின் பொதுச் சொத்துகளேயாகும்.”

ஜனநாயகப்படுத்தல் எனும்போது முதலாவது கேள்வி எதனை? யாரை? என்பதே.

மகிந்தா ராஜபக்ஷா பதவி ஏறியமை ஜே.வி.பியினர் தமது உழைப்பைக் கொட்டியதாலா, அல்லது புலிகள் தமது மக்களது வாக்குகளைப் பறித்தமையாலா என்ற கேள்விகளில்தான் தங்கியிருக்குமாயின், எமது சமூகம் பொருளாதாரம் இலட்சியச்-சரித்திரம் சர்வதேசிய நிலைப்பாடு என்பவை பற்றிய அறிவோ தெளிவோ அவசியம் அற்றவை ஆகிவிடும்.

சரித்திரத்தை வெறும் கதையாக (narrative), தனிமனிதரது அரசியற் கட்சிகளது அல்லது குழுக்களது நடத்தைகளூடாக அவதானித்து, அதன் முக்கிய பாகங்களை அந்நடத்தைகளின் விளைவுகளாகக் கற்பிப்பதையே சரித்திரமாக ஏற்று இயங்குபவர்களே மேலதிகமானவர்கள்.
இது காலம் கடந்த, சரித்தித்தைக் கணிப்பது பற்றிய விஞ்ஞான வளர்ச்சியை அறியாத வழி, என்பவற்றிலும் பார்க்க இது தவறான வழி என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது என்பதே முக்கியமான விடயம்.

மாற்றாக, தனிமனிதரையும் குழுக்களையும் சரித்திரத்தின் விளைவுப் பொருட்களாகவும், அதனுடன் ஒட்டி-உராயும் (interacting) அதன் அங்கங்களாகவும் கொண்டு “மூலதனைத்தை உழைப்பவர் யார் – அதனைச் சேமிப்பவர் யார்” என்ற அடிப்படைக் கேள்வியுடன் நிகழ்வுகளைக் கணிப்பீடு செய்வதை இலட்சியச்-சரித்திரம் (objective-history) என்பர்.

ஜே.வி.பியின் 1971 கிளர்ச்சியின் முன்னர் இலங்கைத் தீவு நிம்மதியன வாழ்வில் இருந்தது. அதுவரை படு-கொலைகளை அறியாத மக்களும், குறிப்பாக இளைஞர்களும், பாதுகாப்புத் துறையினரும் கொடூரமான மனிதர்களாக மாறினர். வன்முறையை இலங்கையர் வாழ்வில் அவர்கள் புகுத்திய பின்னரே நாடு பாழாகத் தொடங்கியது. இவ்வாறான வன்முறைபற்றிய சரித்திரக் கதை சொல்லபவர்கள் உண்டு. அதுபோலவே, புலிகள் தோன்றியதாலேயே தமிழ் பேசுவோர் வன்முறையை அநுபவிக்க நேரிட்டது துரோகி என்ற பதமே உருவாகிற்று என அதே கதையின் தொடர்ச்சி சொல்பவர்களும் உண்டு.

ஆனால், இவை சில தெட்டங்களான சம்பவங்களை தொடர்புபடுத்தும் கதைகளே அன்றி இலட்சியச்-சரித்திரமல்ல. ஜே.வி.பி அல்லது புலிகள் எக்காரணிகளின் வழித்தோன்றல்கள்? ஆகாயத்திலிருந்து குதித்தார்களா? அவற்றின் தலைவர்கள் விஜேவீரா, பிரபாகரன் போன்றோரை எவ்வாறான சூழ்நிலைகள் பெற்றுத் தந்தன? அவற்றிலும் மேலாக, அரசியலில் வன்முறை வழி ஈடுபடுவதற்கான காரணிகள் என்ன? என்றவாறான கேள்விகளுக்கோ சிந்தனைக்கோ, சம்பவங்களூடாக மட்டும் காரணம் கூறிடும் சரித்திரத்தில் அமைப்பு-ரீதியில் (structural) தொடர்போ ஓட்டமோ இருக்கமாட்டாது என்பது தெளிவு.

சமூக-ஜனநாயகம் பொருளாதார-ஜனநாயகம் அரசியல்-ஜனநாயகம் என எந்த வரைவுகளுள் இருந்து பார்த்தாலும், தெற்கு ஆசியாவில் மட்டுமின்றி பல மூன்றாம் உலக நாடுகளில் குழு-வாதமும் சமுதாய-வாதமும் குடும்ப-வாதமுமே ஆளுமை கொள்ளுவதை நாம் அவதானியாது போயிட முடியாது. குடியானவர் சமுதாயங்களை அடியாகக் கொண்ட போது இவை எதிர்பார்க்க வேண்டியவையே என்ற வாதம் ஒரு விளக்கமே. எமது தெற்கு ஆசியாப் பிராந்தியத்தில் இப்போக்கு இராணுவ மயப்படுத்தப்படும் அரச அமைப்புகளே ஸ்தாபனங்களாகி வருவதையும், மக்கள்-நிர்வாக அமைப்புகள் நிர்முலம் செய்யப்படுவதையும் காண்கிறோம். இதனை பாக்கிஸ்தான்-மயப்படல் எனச் சித்தரிப்பதும் உண்டு. இலங்கையும் இவ்வழி செல்கிறதா? அப்படியான கருத்தும் கணிப்பும் பொருத்தமானவையா?

பாக்கிஸ்தான்-மயப்படல்

பாக்கிஸ்தான்-மயப்படல்: “குடியானவரான மக்களைக் கொண்ட, அவர்களது அதிகாரங்கள் ஆளுமைகளுக்கு அப்பாற்பட்ட, அவர்களது அபிலைசைகளின் வரைவுகளுள் இல்லாத, உள்ளார் வெளியார் ஸ்தாபனங்களது அதிகாரப் போட்டிகளிடையே அகப்பட்டும் அவை மீது தங்கியும் உள்ள அரச-ஸ்தாபனங்கள், அவற்றிக்கு அப்பாற்பட்ட இமைப்புகள் யாவும் பாக்கிஸ்தான்-மயப்படுத்தலுக்கு உட்பட்டவையும், அதன் வடிவத்தைத் தருவனவும் எனலாம்”.

பாக்கிஸ்தான் பல மொழி பேசும் சமூகங்களைக் கொண்டு மதம் என்ற பொது உணர்வில் இயற்றப்பட்ட பிரதேச-அமைப்பு (geographical entity). அதன் பிரதேசம் குறிப்பாக சிந்து, பஞ்சாபி, காஸ்மீரி மக்களது சமூகச் சொத்துக்களின் பாகப் பிரிவுகளால் ஏற்படுத்தப்பட்டது. அதன் மக்கள் காலாகாலமாக அங்கு வாழ்ந்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் எஞ்சியவர்களதும் இந்தியா என இன்று அழைக்கப்படும் பிரதேசங்களிலிருந்து வெளியேறியவர்களையும் கொண்ட சமூகக் கூட்டங்களாகும். அதனது, ஆளுமை மக்களது மத-அடையாளத்திலும், இந்தியாவுடனான சரித்தரக் குரோதங்களாலும், தன்உணர்வாகிவிட்ட பலவீனங்களாலும் வரைவு செய்யப்பட்டு, அதன்படி அமைந்த வெளிநாட்டு உறவுகளால் நிச்சயிக்கப்படுவது.

மதத்தின் பெயரில் அமைந்த அதிகார-அமைப்பினுள் தமது அதிகாரப் பங்கை நிலைநாட்டிக் கொள்ள இஸ்லாமிய மத-முதலாளிகள் முன்வருவதை எதிர்பாரக்க வேண்டியதே. ஆனால், இந்தியாவுடனான சரித்திரச் சர்ச்சைகள் போர்களாகவும் அவையே அதனது அடையாத்தின் பெரும் பகுதியை வழங்குவதாலும் பாக்கிஸ்தானிய இராணுவம் அதனது அதிகாரப் பங்கு போடுவதில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. மேலும், நாட்டின் விளை-நிலங்களை தமதாக்கிக் கொண்ட பத்து அல்லது பதினிரண்டு முதற்-குடும்பங்கள் (oligarchs) தமது அதிகாரப்-பங்கினைக் கோருவதும் தர்க்கமாகிறது. எனவே, இஸ்லாமிய மத-முதலாளிகள், இராணுவம், முதற்-குடும்பங்கள் ஆகியவை மூன்றுமே பாக்கிஸ்தானின் மக்களை ஆழும் அரசியல்-ஸ்தாபனங்களது மூலங்களாகி, அதன் அதிகாரத்துக்கான போட்டியில் ஈடுபட வேண்டியவையும் ஆகின.

ஆரம்ப காலங்களில் தமது மதம் சார்ந்த விடயங்கள் கருதி, அவைக்கேற்ப்ப தம்மை முதற்-குடும்பங்களுடனோ அல்லது இராணுவத்துடனோ பக்கம் சார்ந்து கொண்டனர் மத-முதலாளிகள். எனவே, அவர்கள் முதற்-குடும்பங்களின் பக்கமாகும்போது ஜனநாயகம் என்ற பெயரில் பாராளுமன்ற நாடகங்களையும், இரணுவம் பக்கம் சாயும் போது இராணுவ-சர்வாதிகாரப் பலவான்களது நடனங்களையும் காணலாம். அண்மைக் காலங்களில் இஸ்லாமிய மத-முதலாளிகள் தமது தொகுதி மீதான ஆளுமையை இழக்கத் தொடங்கியமையையும் அது தலிபான்மயப்படல் (Talibanisation) என்ற மதவழிப் போக்குள் அகப்பட்டதும், அதனால் தன்னுள் பல வகைகளில் பிளவுற்றமையும் நாம் அறிவோம். இவற்றினால், வழமைப்பட்ட அரசியற் அதிகாரப் போட்டியில் இஸ்லாமிய அணி வலுவிழந்தது போலக காணப்பட்டாலும், மாற்று அரசியல் அதிகாரக்-கட்டு (alternative power centres / referred to as non-state actors) என்றவாக்கில் மிக்க வலிமை பெற்றதையும் அவதானித்து இருப்போம். இவற்றுடன் பாக்கிஸ்தானிய அரசாங்கம் தனது அரசியல் இறைமையை பகிர்ந்து கொள்ள முன்வந்தமையையும் அறிவோம்.

அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாகினும் அதனது பிரதேசத்துள் அமரிக்கா இராணுவப் பிரவேசம் செய்வதை பாக்கிஸ்தான் தடுக்கமுடியாது உள்ளது. அதனது வடக்குப் பிரதேசத்தில் உள்ள அவ்ப்கனிஸ்தானில் NATO நாடுகளால் நடத்தப்படும் போரில் அதனது பங்கு தனது பாதுகாப்பு அல்லது எதிர்பார்புகளுக்காகவன்றி மேல்நாட்டாரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாகவே உள்ளது.

இவற்றினால், தன்நாட்டில் தனக்கேற்ற வழிகளில் தனது உள்நாட்டு அல்லது பிரதேசப் பிரச்சனைகளை தீரக்க முடியாது, அவற்றிக்கு எதிரான பலமான புறக் காரணிகளால் பாக்கிஸ்தான் அரசாங்கம் தனது-தலிபானுடன் படையெடுப்புப் போர் நடத்தியதையும் கண்டிருப்போம். இப் புறக் காரணிகள் இராணுவத்தையும் முதற்-குடும்பங்களது அரசியற் அமைப்புகளையும் ஒன்றாக்கிட முனைவதையும் ‘அரசைப்’ (state) பலப்படுத்தும் வேலைத் திட்டத்தில் அவற்றினை ஈடுபடுத்த நிர்ப்பந்திப்பதையும் நாம் அவதானித்திருப்போம். இவாறான புறக் காரணிகளின் விளைவுகளுடன் பாக்கிஸ்தானின் சமூக-பொருளாதார, சமூக-அரசியற் புள்ளி விபரங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது அதனை ஒரு தூர்ந்து போன அரசு (failed state) எனக் கணிப்பது சரியானதே.

இலங்கைத் தீவில் உள்ள நிலைமைகள் என்ன? மேற் குறிப்பிட்டவை யாவும் சிறீலங்காவிற்கும் பொருந்துமா? சிறீ லங்கா பாக்கிஸ்தான்-மயப்படலில் உள்ளாகிவிட்டதா?

சிறீ லங்காவின் சமுதாய-வீழிச்சி புலிகளுடனோ ஜே.வி.பியினருடனனோ ஆரம்பமாகவில்லை. பிருத்தானியரிடம் இருந்து விடுதலை பெற முன்னரே அதற்கான அத்திவாரம் அங்கிருந்தது. சமுதாயங்களின் கீளோட்டங்களாக இருந்த பல மக்கள்-விரோத மனிதாபிமான-விரோத வழக்குகள், நியதிகள், உறவுகளாக அவை இருந்த போதும், தேசிய அல்லது கலாச்சார-வெளிப்பாடுகளால் மறைக்கப்பட்டு இருந்தன.

பாக்கிஸ்தான் போலவே இலங்கைத் தீவும் (சிங்கள தமிழ் பேசும்) பல சமுதாயங்களைக் கொண்ட அன்னியர்களால் வரையப்பட்டு நிறுவப்பட்ட நாடு. பாக்கிஸ்தானில் நிர்பந்தமான புதிய இயங்கில் உறவுகள்; பல சமூகங்களை கொண்டதாக இருக்கும் போது, இலங்கையிலோ அது இரு சமூகங்களிடையே உள்ள உறவில் தங்கியதால் உருவத்தில் வேறாகிறது. பாக்கிஸ்தானை ஒன்றுபடுத்தும் ஸ்பனங்கiளாக மதமும் இராணுவமும் முன் வைக்கப்பட்டது, ஆனால் இலங்கையிலோ அவை மக்களைப் பிறிதுபடுத்தும் ஸ்தாபனங்களாகவே முன்னெடுக்கப்பட்டன. பாக்கிஸ்தான் நடைமுறை ரீதியில் பஞ்சாபி இனத்தவரின் கைகளில் இருப்பதாகக் அவதானிக்கப்படும் போதிலும், பௌத்த-சிங்களச் சித்தாந்தம் இலங்கையை தனதெனக் கோருவது போல பஞ்சாபியரிடம் ஒரு சித்தாந்தம் இல்லை. ஆயினும், மத ரீதியில் ஒரு நாட்டினை, அதன் மக்களை அடையாளம் காண்பது என்பதில் இவ்விரு நாடுகளும் ஒப்பிடக் கூடியவை. ஆகவே, அதனை பாக்கிஸ்தானிய மயப்படல் என்பதற்கான முதல் அடியாகக் கொள்வது தப்பல்ல என்பது வாதம்.

பாரளுமன்ற அரசு என்பதில் இலங்கை பாக்கிஸ்தானிலும் வேறுபட்டதாகினும், பாராளுமன்றங்கள் சர்வாதிகாரங்களின் கரங்களாகின. இலங்கையில் அது பெரும்பான்மையோரின் பேரில் சோவனிசவாதிகளது, அதாவது இனவாதமதத்துடன் இணைந்த குட்டி முதலாளித்துவர் கூட்டின் கைகளிலும் பாக்கிஸ்தானில் அது இராணுவம்-இஸ்லாமியவாதிகள்-முதற் குடும்பங்களின் சர்வாதிகாரமுமானது. அண்மைக்காலம்வரை இலங்கையில் இராணுவம் பாரளுமன்ற அரசியலில் நேரடித்தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்பதையும் அந்நிலையில் உள்ள மாற்றங்களையும் அவதானிப்போர் அதனையே இலங்கை பாக்கிஸ்தானிய மயப்படுகிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாக கூறுவர். ஆயினும், பாக்கிஸ்தானைப் போலல்லாது இராணுவம் தானுமொரு அரசியற் ஸ்தாபனமாக மாறிவிடவில்லை என்பதையும் அது இன்னமும் அரசியல்வாதிகளது ஆளுமைக்குள் உள்ளது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

“தனது மக்கள்” மீது முப்படை கொண்ட போரை நடத்துவதிலும் இவ்விரு நாடுகள் ஒன்றுபடுவதால், இது பாக்கிஸ்தானிய மயப்படலின் மூன்றாவது சான்றாகக் கணிக்கப்படுகிறது.

நாட்டைக் காப்பாற்றுவது என்றவாறு அதிகார வர்க்கங்கள் படுகொலைகள் நடத்தாத நாடுகள் எங்கும் இல்லை, ஆனால் அவை யாவுமே முப்படை கொண்ட போர்த் தொடுப்புக்களால் ஏற்படுபவைவும் அல்ல. மேலும், இந்நிகழ்வுகள் காலத்தின் பேரில் எடை போடப்படும் போது பிரத்தியேகமானவை என்பதும் கவனிக்க வேண்டியது. சிலவேளைகளில், 150 வருடங்களின் முன்னர் இடம் பெற்ற அமரிக்காவின் உள்நாட்டுப்போரை, ஐ.நா, ஜெனீவா ஒப்பந்தங்கள் என்ற சர்வதேசிய ஸ்தாபன மயப்படுதல்களின் பின்னர், இன்று இலங்கையில் பாக்கிஸ்தானில் இடம்பெற்ற முப்படைப் போர்களுடன் பொருத்தமற்ற ஒப்பீடு செய்யும் வெற்று வாதங்களையும்தான் நாம் கண்டுள்ளோம்.

மக்களது கூட்டுப்பாதுகாப்பை நாட்டின் பேரில் நிராகரிப்பததையும், தேசபாதுகாப்பு என்ற நியாயப்படுத்தலை முன்வைக்கும் போதிலும், நடைமுறையில் தனிமனிதரின் சமுதாயங்களின் பாதுகாப்பு துச்சமாக்குவதையே காண்கிறோம். வெள்ளை ‘வான்கள்’ மக்களது பாதுகாப்பிற்காக ஓடித் திரிவதிலை என்பதும், மக்கள் அடையாளமே இல்லாது போவதும், அரச-நிர்வாக ஸ்தாபனங்கள் நேரடியாகவே தமது மக்கள் மேல் இரகசியப் போர் நடத்துவதற்கான அத்தாட்சிகளும் இருப்பதனால், இந் நிலைப்பாடு இலங்கையின் பாக்கிஸ்தான்-மயப்படுதலுக்கு நான்காவது சான்றாகிறது என்பர்.

பல பின் தங்கிய நாடுகளில், 1. அரசு – மக்கள், 2. ஆளுமை – அதிகாரம் என்பவற்றின் உறவுகளில் உள்ள குளப்பங்கள் ஒரு புறத்திலும், 3. உற்பத்தி உறவுகள் – மூலதனம் என்பவற்றின் இடையேயான சச்சரவுகள் மறு புறத்திலும் பினைந்த குளப்பவாத நிலைகளைப் பிறப்பிக்கின்றன. இதனால் பல நாடுகளால் அந்நியத் தலையீடுகள் தவிர்க்க முடியாது போய்விடுகிறது.
ஆனால், மேற் குறிப்பிட்டவற்றில் மூன்றில் ஏதாவது இரண்டின் சீர் அமைப்பால் இத் தலையீடுகளின் விசையினை குறைத்துக் கொள்ள முயலும் நாடுகளே பெரும்பாலானவை. ஆனால், இம்மூன்று விடயங்களின் குளப்ப நிலையைக் கடைப் பிடிப்பதாலேயே தமது அதிகாரத்தை நீடிக்கலாம் என்றவாறு அமையும் இலங்கை அரசின் நிலைப்பாடுகள் அதனது பாக்கிஸ்தான்-மயப்படலுக்கு ஐந்தாவது சான்றாகிறது.

இலங்கையின் உள்நாட்டுப் போர்கள், கிளர்ச்சிகள், இனக் கலவரங்கள் காலத்துக்குக் காலம் (periodically) இடம் பெறுவதால், அவை நாட்டின் புத்தி-ஜீவிகள், கல்விமான்கள், திறமை பெற்றவர்கள் (skilled people) போன்ற மனித வளத்தின் வெளியேற்றக் காலமாக அமைவதும் வழக்கமாகிவிட்டது. தன்னிசையில் பொருள்வளம் தேடி புகலிடம் தேடுபவர் எப்போதும் உள்ள போதிலும், இப்போக்கினை ஒரு சாதாரண மக்களது நடவடிக்கை ஆக்கிவிடுவது மேற்குறிப்பிட்டவை போன்ற சமுதாய-அசம்பாவிதங்களே. இவ்வகையில், மனித வளங்களை இழப்பதில் ஒற்றுமை காண்பதால் பாக்கிஸ்தான்-மயப்படல் என்தற்கு இது ஆறாவது சான்றாகிறது என்பர்.

எனவே, ஜனநாயகமயப்படுத்தல் எனும்போது ஒரு புறஎல்லையில் பாக்கிஸ்தான்-மயப்படலை தவிர்ப்பது என்பதையும் மறுபுற எல்லையில் இலங்கை பூரான பூரண-ஜனநாயகம் பற்றிய கடமைகளும், நடவடிக்கைகளும் என்பதும் தெளிவாகிறது.

சமுதாய-மாற்றங்கள்

இலங்கையின் பொருளாதாரம் கடந்த 30 ஆண்டுகளில் தனது உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் சில அடியொட்டிய மாற்றங்களைக் கண்டுள்ளது. இவைபற்றிய புள்ளி விபரங்களுடனான ஆய்வு பிறப்பானது. இருந்தும், சமுதாயங்களின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களையும் அவற்றிக்கான சில காரணிகளையும் அவதானிப்புகளாகத் இங்கே தர வேண்டியது அவசியமாகிறது.

இலங்கை காலனித்துவ காலத்தின் பின்னடியில் பெருந் தோட்ட ஏற்றுமதிப் பொருட்களில் தனது 90மூ மேலான அந்நிய வருமானத்தை பெற்றது. இன்று அவை தரும் அந்நிய செலவாணியிலும் பார்க்க வெளி நாடுகளில் வீட்டு-வேலைக்காரர்காளாக பணியாற்றும் பெண்கள், கட்டிடத் துறையின் தொழிலாளிகள் போன்றோரது உழைப்பினால் பெறும் வருவாய் மேலாகிவிட்டது. இவர்களைப் போல விசேட-பொருளாதார-வலையங்களுள் அடிமை ஊழியத்தில் தொழில் செய்வோர் தொகையும் அதிகரித்துள்ளது. மேற்கு மாகாணமும் அதனை அண்டிய பகுதிகளும் வெளிநாட்டுப் பணத்தின் உள்வரவால் வளர்ச்சி கண்டதாக உள்ளன (Central Bank of Sri Lanka Reports 1999 – 2008).

மேலும், வேலை தேடுவோர்களில் 15மூ மேலானோர் அரச பாதுகாப்புத் துறையில் தமது ஊழியத்திற்கு தங்கி உள்ளனர். உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் பெரும் பகுதி 56மூ பாராமரிப்புத் துறைகளுள் அடங்கியவையாகவும் உள்ளன. (Sarvananthan, Muttukrishna. 2007. Economy of the Conflict Region in Sri Lanka, East-West Centre, Washington; Asian Development Bank. February 2008. Sri Lanka: Ploitical and Economic Update)

மாகாண ரீதியில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகரித்ததில் இருந்து பிராந்திய மக்கள் பட்டப் படிப்பிலான திறமைகளில் (skills) கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளனர். இவ்வாய்ப்பு வடகிழக்கில் நடந்த போரினால் அங்கு வாழ்பவர்க்கு பூரணமான தொடர்ந்த பலனைத் தரமுடியாது போகிலும், அவர்களின் சமுதாயங்களின் இடையான உறவுகளின் விதிகளை ஓரளவு மாற்றி அமைக்க உதவி உள்ளது. மலையகத்துத் தமிழர்களிடம் இன்று கல்விவளமும், அதனை ஒட்டிய தன்நம்பிக்கையும் சுயஉணர்வும், வளர்ந்து உள்ளன. அதனால், தமது கொத்தடிமை வேலைகளை விட்டகன்று பட்டினியாகினும் சுயவாழ்வு தேடும் முனைப்புக் கொண்ட தன்மை அவர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளதைக் காணலாம். நாடு பூரான மக்களது வறுமைக்-கோட்டு விகிதாசாரத்தில் 6% முன்னேற்றம் உள்ளபோது மலையகத்தில்மட்டும் 54% பின்னடைவு ஏற்பட்டு உள்ளமைக்கான (World Bank Report. January 2007. Sri Lanka: Poverty Assessment) காரணிகள்பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டிய போதிலும் இளம் சந்ததியினரது நகரப்புற வெளியேற்றமும் அவற்றுள் ஒன்றாகும் எனக் கூறுவதில் தவறில்லை.

தமிழர் மீது சிறீலங்கா நடத்திய போரினாலும், புலிகளால் நடத்தப்பட்ட ஈழப் போர்களினாலும், அவற்றினாலான தாக்கங்களாலும் தமிழ் பேசும் சமுதாயங்கள் பாரிய சமுதாய மாற்றங்களை கண்டுள்ளனர். பல இலட்சக்கணக்கான தமிழர்களது வெளியகற்றல் அங்கே பல ஊர்கள் சிறு நகரங்களையே அழித்துள்ளன. எனவே, அதே அளவிலான எதிர்மாறான பொருளாதாரத் தாக்கத்தை இம்மாநிலங்களின் காண்பது ஆச்சரியமானதல்ல. ஆண்-பெண் வயோதிபர்-இளையவர் கற்றோர்-கல்வி இழந்தோர் விதவைகள்;, ஊனமுற்றோர் என்ற சகலதுறைகளிலும் மனதவளத்தின் வீழ்ச்சி ஒரு புறத்திலும், மேற்கத்தைய நாடுகளில் புகலிகளாகி அங்கு முன்னேற்றம் கண்டவரது தொடர்புகள் மறுபுறத்திலும் ஊக்கு சக்திகளாக அமைய இங்குள்ளவர் மனோவியல் ரீதியில் தமது எதிர்பார்புகளில் பலபடிகளை எய்தி உள்ளனர்.

இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பதில் உள்ள பிளறுகள், அதிலும் பிரதேச ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் வேறாகக் கணக்கில் கொள்ப்பட வேண்டியவை. மேலும், அவ்வாறான வளர்ச்சியினால் அதன் வெவ்வேறு மக்கள் சமுதாயங்கள் கண்ட வளர்ச்சி, அவற்றின் ஏற்றத்தாழ்வுகள் பிறம்பாகக் கவனிக்கப்பட வேண்டியவை.

இவ்வகையில் மனத-வளங்களையும் மனிதத்தன்-வளர்ச்சியையும் கணிப்பிட்டு அவற்றில் சரிநிகர் தேடுவதே அர்த்தமான வாழ்கைக்கான அடிப்படை வாதம் என்பது எமது நிலைப்பாடு. எனவேதான் சமூக-ஜனநாயகம் (social-democracy) மக்கள்-ஜனநாயகம் (peoples-democracy) பற்றிய கவனம் இன்று எமக்கு அவசியமாகிறது.

மக்களது ஜனநாயகம்

ஜனநாயகம் என்பதை வெற்று அரசியல் நடைத்தையாக, சமுதாய-சிந்தையற்ற பொருளாதார நடைமுறைகளை ஊர்ஜிதம் செய்யும் கருவியாகக் கருதும் வழக்கே உலகெங்கும் உள்ளதால், இலங்கையோ அங்குள்ள சமுதாயங்களோ அதன் தாக்கங்களுள் அகப்படாது போக முடியாது. ஜனநாயகம் என்பதை ஒரு நாட்டின் அரசில்-அதிகாரத்தினைக் கைப்பற்றும் அரசியல்-வழியாக யாவரும் கருதுவதால் அதனை ஏதாவதொரு ஸ்தாபனத்தின் பொறுப்பானதாகக் கருதியே செயற்படுகின்றோம். எனவே, குடும்பத்துள்ளேயோ, மற்றைய மனிதர்களுடனான உறவுகளின் போதோ பாவனையில் கொள்ள வேண்டியதில்லை என்ற பழக்கத்துடனேயே நடந்தும் கொள்கிறோம்..

ஆதலால்,

(1) சாதியம் என்பதை மக்களது அடிப்டையான ஜனநாயகப் பிரச்சனையாகக் கருதுவதில்லை.

(2) எம்மிடையே சொந்த நிலமற்று, நீக்கல் கூரை கொண்ட குடில்களுள், குனிந்து வளைந்து தலைமுறைகளாக சீவனம் நடத்துபவர்களது ஜனநாயக உடமைகள் பற்றிய சிந்தனைகளும் இருப்பதில்லை.

(3) பிராந்தியங்களாக வேறுபடும் எமது சமுதாயங்களது சமுதாய-பொருளாதார நிலைகள்பற்றியோ அவர்களது அபிலாசைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதும், அவையும் ஜனநாயகம் என்ற நடைமுறைகளுக்கு உள்ளேயே அடங்குகின்றன என்பதையும் அவதானிப்பதில்லை.

(4) மொழிவாரி இன அடிப்படையிலான ஒடுக்கு முறைகளுள் அடக்கப்பட்டு விட்டதால், மாற்று இன மக்களது ஜனநாயக உடமைப் பிரச்சனைகளை எம்முடன் இணைத்துப் பார்ப்பதும் இல்லை.

(5) பெண்களும் ஆண்களைப் போன்றே சகல ஜனநாயக உடமைகளுக்கும் உரித்தானவர்கள் என ஏற்றுக் கொள்வதில்லை.

(6) சிறுவர்களுக்கும் ஜனநாயக உரித்துகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

தழிழ் பேசும் சமுதாயங்கள் பிறம்பான இனங்களா? தேசங்களா? என்ற விவாதங்கள் ஒரு கரையிலும், அவை தமது ஒன்றுபட்ட பொதுப்பட்ட ‘தமிழ் மொழிவாரியான தேசத்துவத்தை’ (statehood) அதற்கான அரசியல் அலகுகளை நோக்கிய தேடல் அவசியமா? என்ற வாதம் மறுகரையிலுமாக இனரீதியிலான தீர்வுகளை நோக்கிய ஜனநாயகவாதங்கள் ஒரு புறத்தில் அமைந்துள்ளன. இவற்றிக்கு வரைவும் வடிவும் தருனவாக, புலிகளையும் தமிழீழப் போரையும் வெற்றி கண்டதால் சிங்களமயமாக்கலையே சிறீ லங்கா தேசியத்துவம் என நிலைநாட்ட முயலும் பேரினவாதம் மறு புறத்தில் உள்ளது.

எமது கரிசனமோ அவற்றிலும் மேலாக இவ்விரு மக்களிடையேயும், அவர்கள் மத்தியிலும் இடம்பெற வேண்டிய சமூக-பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும் ஜனநாயக மயப்படுத்தல் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதில் உள்ளது.

சர்வதேசியமும் முதலாளித்துவ-சந்தையும்

மார்க்ஸ் ஏங்கல்ஸின் “பொதுவுடமை பிரகடன” (Communist Manifesto) காலத்திலிருந்து சர்வதேசியம் என்ற வாதம் புரட்சிவதிகளது அரசியல் கைவசம் என்றாகிற்று. ஆயினும் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற அறைகூவலின் அடித்தளத்தில் உள்ள சிந்தாந்தம் நடைமுறைப் பரிணாமம் காண்பதாற்கான காலம் தொலைவாகிக் கொண்டே போகிறது. இதற்கான காரணி காரணங்களை ஆய்வு செய்வோர் விளக்கம் தருவோர் பெருவாரியாக உள்ளர்கள்.

மார்க்ஸ் சொன்னது போல, “உலகை நிலைமைகளை விளக்குவதல்ல, மாற்றி அமைப்பதே முக்கியம்” என ஏற்றுக் கொள்வதாகின், இன்றைய நிலைமைகளில் சர்வதேசியம் என்பதை எடைபோட்டு அதற்கேற்ப்ப எமது செயற் திட்டங்களை அமைத்துக் கொள்வது அவசியமாகும். நாமோ எதிர்மாறாக, புரட்சிகளின் தோல்விகளுக்கு காரணங்கள் கண்டு பிடிப்பவர்களாகவும், யாராவது புரட்சிவாதிகளது துதிபாடிகளாகி அவர்களது பழுதுகளுக்கு குறைவுகளுக்கு மன்னிப்பு-வக்காலத்து வழங்குபவர்களாகவும், சுயசிந்தை இழந்த முடிவுகள் எடுக்கும் திராணி அற்ற பிம்பங்களாக மாறிவிடுகிறோம்.

உலகத்து புரட்சிகள் யாவும் தோல்வி கண்டனவோ இல்லையோ, சீனா இன்றும் பொதுவுடமை நாடோ இல்லையோ, பின்தங்கிய நாடுகளில் தேசியவாதங்கள் முளைவிடுவதும் அவற்றை பெரிய தேசியவாதங்களால் வெட்டி எறிவதும் காலாகால வழக்குகளாகி உள்ளன. அதேவேளை, வளர்ந்த நாடுகள் போலவே மூலதனத்தைக் கொண்டவர்கள் பராமரிப்பவர்கள், தமது முன்னேற்றம் கருதி தத்தமது தேசியவாதங்களின் முதன்மைப்படுத்தலை கைவிட்டு ஒற்றைத் தேசியத்தையும் ‘நாட்டுப் பாதுகாப்பையும்’ ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்நிலையில், நாட்டின் சில பகுதிகள் சமுதாயங்கள் பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளதையும் உலகளாவிய ரீதியில் தமது வகுப்பு-மட்டங்களை (standards) நிலைநாட்டக் கூடியவையாக உள்ளதையும் அவதானிக்கிறோம். இவை வெறும் மூலதனத்தின் வரம்புடைப்பா என்ற கேள்விக்கு பூரண பதில் இல்லாது போகினும் தேசிய-வரம்புகளுள் அகப்பட்டும்கூட உழைப்பு (labour) பாரிய அளவில் நாடுகடப்பதையும்தான் அவதானிக்கிறோம். இவற்றின் அடித்தளத்தில் முதலாளித்துவச் சந்தையின் சர்வதேசியம் இருப்பதை நாம் யாவரும் அவதானிக்கிறோம், ஆனால் அதுபற்றிய விளக்கங்களில் பாரிய வேறுபாடுகளில் உள்ளோம்.
இவற்றினால் சாதாரண மனிதர்கள், சில சமுதாயங்கள் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், பொதுப்படையாக சாராசரி மனிதனுக்கு என்ன பயன் கிட்டியுள்ளது என்பது எடைபோடப்பட வேண்டிய விடயமே.

1. பொதுவுடமை வாதத்தின் சிந்தனா-உணர்வுச் சக்தியினது தாக்கத்திலும் மனிதனது நுகர்வுச் சக்தியால் உலகமக்கள் ஒன்றிழுக்கப் பட்டுள்ளனர் (ஒன்றிணைபு அல்ல).

2. ஐக்கிய அமரிக்கா சீனா இந்தியா ரஸியா போன்ற பெரிய நாட்டின் பேரிலோ, ஐரோப்பா போல நாடுகளின் கூட்டின் பேரிலோ முதலாளித்துவம் சர்வதேசியத்தின் முழுமையான ஆளுமையைக் கொண்டுள்ளது.

3. குடியானவர் சமுதாயங்களைக் கொண்ட சிறிய ‘நாடுகள்’, குறிப்பாக குடியான-ஜனநாயகங்கள், வளர்ந்த நாடுகளது பொருளாதார முன்னேற்றங்களின் நுகர்வுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்காகவும் கொள்வனவுக்காகவும் காணவிளையும் வளர்ச்சி அரசியற்-பொருளாதார சிந்தனை அற்றவையாகவும், அரசியல் சொரிவுகளை சந்திக்க வேண்டியவையாகவும் உள்ளன.

4. மனிதனது பொதுவான ஆதங்கங்கள் தனிமனித-உணர்வுகள+டாக, தனிமனித-உரிமைகள் எனவும், அவற்றின் அடிப்படையில் சமுதாய அல்லது சமூக மயப்படுத்தக் கூடியவை என்பதும் பொது-உணர்வாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

5. ஜனநாயகம் என்பது சர்வதேசியமயப் படுத்தக் கூடிய சித்தாந்த வாய்ப்புகளை வளர்த்துக் கொண்டுள்ளது.

எனவே, நாம் விளக்கம் மட்டுமே கூறுபவர்களாக இல்லாது, சூழலுடன்-செயலுடன் தொடர்பு கொண்டவராக (pro-active) இருக்க வேண்டின், ஜனநாயக மயப்படுத்தல் என்பதை வெறும் அரசில் சாசன மாற்றங்களாக, குறிப்பாக இன ரீதியில் எழும் சர்ச்சைகளை மட்டுமே தீர்ப்பதற்கான அரசியற் காத்திரங்களாகக் கருதாது, சமூக-பொருளாதார சமநிலைகளுக்கான தீர்வுகளையும் சர்வதேசியத்தையும் உள்ளடக்கியவையாக மாற்றிட வேண்டும் என்கிறோம்.

இவற்றினை உலகளாவிய ரீதியில் காத்திரமாகும் வகையில் மனித–உரிமைகள் என்ற நிலைதளத்தில் (human-rights framework), அதன் அடிப்படையில் பிரதிபடுத்தப்படும் மொழியிலும் செயலாக்கங்களிலும் நிர்வாக வழிமுறைகளையும், அவற்றை தொடர்படுத்தும் உறவுகளுடனும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறோம்.

இலங்கை அரசின் வடிவமைப்பு 13ம் சரத்தினூடாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான வழிகளைத் தந்துள்ளபோதும் அவை 1. ஜனாதிபதி அதிகாரங்களால், 2. பல்லின மக்களது பாரம்பரிய உடமைகளை அங்கீகாரம் செய்யாது போவதினால், 3. சரத்தில் உள்ள உரிமைகளையே ஸ்தாபன ரீதியில் காத்திரம் செய்ய முடியாமையினால் அடிப்படை மாற்றங்களை காண வேண்டியவை என்கிறோம்.

மேலும் இரு மொழி பேசும் பல சமுதாயங்களை உள்ளடக்கிய நாடு, ஒரு இன மக்களது 1. அரசியலினுள், 2. அரசியற் காலாச்சாரத்துள் தங்கியுள்ளதால், ‘அரசியல்’ என்பதன் நடைமுறைகளிலும் ஜனநாயகம் தங்கிடும் வகையிலான மாற்றங்களையும் அவை கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறோம்.

சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் பிரதேச, இன ரீதியான பாகுபாடுகளுள் உட்படுத்தப் படுவதால் ஜனநாயகம் 1. என்பதை சகரும் சமநிலையில் இருந்து நுகர்வதில்லை, 2. என்பது அதிகார துர்ப்பிரயோகமாகிறது.
இன ரீதியில் வட கிழக்கு மலையக மக்கள் இதுவரை காலமும் புறக்கடிக்கப் பட்டார்கள் என்பதையும், அதே தருணம் பிராந்திய ரீதியில் சிங்களச் சமுதாயங்களது அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள என்பதையும் தாஸ்தாவேதுகள் குறிப்பிட்டாலும் இருசமூங்களது பொது அறிவானவை என்பதற்கில்லை (Further reading, reference 9).

சிறீ லங்காத் தேசியத்துவம் சிங்கள மயப்படுத்தல் என்ற அரசியலுள் அகப்பட்டுவிட்டதால் அரச, நிர்வாக, இராணுவ நடத்தைகள்யாவுமே சிங்களமயப்படுத்தல் என்பதே சிறீ லங்காவின் அரசியல்-பொருளாதார நிலைப்பாடுகளாகியுள்ளன.

ஜனநாயகம் என்பது தனிமனிதரிடையே, குடும்பத்தினிடையே, சமுதாயங்களிடையே, சமூகங்களிடையே உள்ள இயங்கியல் உறவுகள்பற்றியது என்பது ஏற்கப்பட வேண்டியது. எனவே, அது அடித் தளங்களில் இருந்து கட்டி எழவேண்டியது என்பதும் சமுதாயக் கட்டுக்கள் (civil societies) அரசியற்-பொருளாதார நிலைப்பாடுகளையும் ஆதரித்து நிற்பவையாகவும் இருக்க வேண்டிம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை.

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று ஜனநாயகக் கட்டுக்களும் வகைகளாகத் தரப்பட்டுள்ள போதிலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லா வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டால் இலங்கை ஜனநாயகமயப் பட்டுவிடாது என்பதை நாம் சரித்திரத்தின் படிபினைகளாலாவது அறிவோம். ஆதலால், ஜனநாயக மயப்படுத்தல் என்பதே இலங்கைவாழ் சமூகங்களது ஒன்றிணைப்பிற்கான வேலைத் தளம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சமூகங்களது ஒன்றிணைப்பு என்பது சிறீ லங்கா எனும் தேசியம் என்ற பாணியில் சிங்கள மயப்படுத்தலாகுவது ஜனநாயகமயப்படுத்தல் என்பதற்கு எதிர்மாறானது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

ஜனநாயகம் பற்றிய விவாதங்கள், பாராளுமன்றஃஜனாதிபதி ஆட்சி என்றவாறான கொழுப்பை மையமாகக் கொண்ட, மத்தியப்ப படுத்தலுள் (centralised) அகப்பட்டு உள்ளபோது அவை ஜனநாயகப்படுத்தல் என்பதற்கு ஒவ்வாது என்பதும் பிரதேச, இன ரீதிகளிலான அதிகாரப் பரவலாக்கம் என்பவை பற்றிய விவாதங்களும் வன்முறைகளுள் அகப்படாது பரவலாக இடம்பெறும்போதே அரத்த புஸ்டி ஆகிறது என்பதும் உணரப்பட வேண்டும்.

ஜனநாயக மயப்படுத்தல் என்பது அடிப்படையில் தனிமனிதனதும் அவன்சார்ந்த மக்களதும் அதிகாரவலுவாக்கம் (நஅpழறநசஅநவெ) என்பதாகும் எனப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சுருங்கக் கூறின்:

ஜனநாயக மயப்படுத்தல் என்பது,

1.இலங்கை அரசின், அரசியலின் வடிவமைப்பின்,
2.சமூக, சமுதாய-பொருளாதாரத்தின்,
3.தமிழ் சிங்களம் பேசும் சமுதாயங்களின்,

மத்தியில் மனிதனையும் மக்களையும் ஆளுமை கொண்ட ஸ்தாபனங்களாக ஆக்கிடுவதற்கான நடத்தைகள் செயற்பாடுகள் பற்றியவை என்கிறோம்.

முடிவாக, குறைந்தபட்ச புரிந்துணர்வு ஏற்பாட்டுக் குழுவின் பிரேரணைக்குரிய குறிப்புகள்:

1.சிறீ லங்கா அரச சாசனத்தின் 13வது சீர்திருத்தம் இலங்கை அரசியலின் ஜனநாயக மயப்படுத்தலில் அரசக்-கட்டு என்ற (structrally) ரீதியில், நடைமுறையில் நிர்வாக அதிகாரங்களை மட்டுமே பரவலாக்கும் வகையாயினும், முக்கியமான முதற்படியாகும்.

2.அரத்த புஸ்டியான அரசியற்-பரவலாக்கம், அதாவாது மக்கள் தமது சமூக-பொருளாதார அபிலாசைகளை நேரடியாக பாராமரிப்பதால் தமது பூரண ஜனநாயக உடமைகளை நுகரும் உரிமைகளைத் தரும் அரசியல் அதிகாரங்களின் பரவலாக்கம் என்பது, பிராந்திய ரீதியிலும் சமூக ரீதியிலும் அணுகும்போதே சாத்தியமாகிறது.

3.பிரிவினை வாதங்கள் பிரதேச சமூக ரீதியில் ஜனநாயகத்தின் அணுகுமுறை அற்ற, அவற்றிக்கான கட்டுகள் வகைகள் இல்லாத பட்சத்தில், அவற்றினை எய்த முனைவோரதும் அதிகாரங்களை மையப்படுத்த விளைவோருக்கும் இடையிலான இயங்கியல் உறவின் முறிவுகளால் ஏற்படுவன.

4.இவற்றிக்கு அடித்தளமாக பிரதேச மக்களது சமூக-பொருளாதார வளர்ச்சியின் பின் தங்கலும், வளர்ச்சிக்கு எதிரான அரசியற்-பொருளாதார நிலைப்பாடுகளும் காரணமாக, இலங்கையின் ஜனநாயக மயப்படுத்தலுக்கு எதிரான நிலமைகளையே உருவாக்குகின்றன.

5.பிரதேச ரீதியில் சரி, இன ரீதியில் சரி, இலங்கை பூரானதாயினும் சரி, சமூக-பொருளாதார உடமைகளும் வளர்ச்சிகளுக்கான வாய்ப்புகளும் கொண்ட செயற்பாடுகளே ஜனநாயக மயப்படுத்தலை ஊர்ஜிதம் செய்வன எனக் கொள்ள வேண்டும்.

6.எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியை அல்லது உரிமைகளை முதன்மைப் படுத்துவது அவை பேரிலான தேசிய வாதங்களை முன்னெடுப்பது, அதேவேளை மனிதச் சமுதாயங்களது பூர்வீக உடமைகளை நிராகரிப்பது, யாவும் ஜனநாயக மயப்டுத்தலுக்கு ஒவ்வாதவை.

7.சகல இனங்களும், அவற்றிடையே உள்ள சமுதாயங்களும், ஏற்றத் தாழ்வுகளற்ற சமூக-பொருளாதார வளர்ச்சிகளை காணும்போதே இனப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அடைய முடியும்.

8.ஜனநாயக மயப்படுத்தல், தனிமனிதனதும் மனிதக் கூட்டுகளதும் பூரண ஜனநாகயக உடமைகளை காத்திரமாக்கும் மனித-உரிமைகள் (human-rights) என்ற நிலைதளத்தை (framework) உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

9.ஜனநாயக மயப்படுத்தல் அடித்தளத்தில் மனிதனதும் அவனது சமுதாயங்களதும் ஆளுமை (empowerment) பற்றியது.

Further reading
(கருத்துகளின் விபரங்களுக்கு)

1.Committee on Foreign Relations, United States Senate. Dec 7, 2009. Sri Lanka: U.S. Strategy After the War.

2.Peebles, Patrick. 1990. Colonisation and Ethnic Conflict in the Dry Zone of Sri Lanka, The Journal of Asian Studies 49.

3.Sen, Amartya. 1999. Democracy as a universal value, Journal of Democracy.

4.Sen, Amartya. 10.06.2003. Why Democratisation is not the same as Westernisation, The New Republic Online.

5.Smith, J. W. 2005. Economic Democracy: Political Struggle of the Twenty-first Century, Institute for Economic Democracy Press.

6.Ravichandra, (Ravi) Sundaralingam. 09.04.2010. Parliamentary elections and post civil war trajectories in Sri Lanka. Sri Lanka Guardian.

7.Ravichandra, (Ravi) Sundaralingam. 24.01.2010. Police or military state: That is the question for India. South Asia Analysis Group.

8.ரவிச்சந்திரா, (ரவி) சுந்தரலிங்கம். ஆடி, 2008. அரசியற் பொருளாதாரமும் 13ம் சட்ட சீர்திருத்தமும். ASATiC,-Thesamnet.

9.வசந்தி, சுப்பிரமணியம். சித்திரை, 2010.இலங்கையின் வட கிழக்கு மத்தியமாகாகங்களில் இனரீதியான குடிப்பரம்பல்கள்-வளங்கள்-குடியேற்றத் திட்டங்கள்: ஒரு பார்வை. குறைந்தபட்ச புரிந்துணர்வு ஏற்பாட்டுக் குழுச் சந்திப்பில் சமர்ப்பணம்.

10.அமரசிங்க, சோமவன்ச, சில்வா, ரில்வின். 19.09.2008. இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு. நியமுவா வெளியீடு.

பின்குறிப்பு:
இக்கட்டுரை முக்கிய பகுதி 10.09.09 தேசம் இணையத்தளத்தில் “இலங்கைத் தமிழரது எதிர்காலம்” என்ற தலைப்பில் பதிப்பானது. அதேவேளை, குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்பாடு செய்யும் செயற் குழுவின் பார்வைக்கு London- Leyton, Walthamstow குறிச்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது, சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் (03.08.10) குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் (08.08.10) சமர்ப்பிப்பதற்காக திருத்தங்களுடன் தரப்படுகிறது
.

ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary
ASATiC

சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்… மீராபராதி

நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு

முதலில் சிங்கள மொழியில் தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். சிங்கள மொழி தெரியாமைக்கான காரணம் அந்த மொழி மீதான வெறுப்பினால் அல்ல. அதற்காக சிறுவயதிலும் வெறுப்பு இருக்கவில்லை என பொய் கூறவில்லை. நான் வளர்ந்த பின்பு சிங்கள மொழி மீது வெறுப்பு இல்லை. ஆனால் ஒரு மொழியை கற்கும் ஆற்றல் எனக்கு குறைவாக இருப்பதே சிங்கள மொழியில் எழுத முடியாமைக்கான முதன்மையான காரணம். இந்த ஆற்றலை வளர்க்க முடியாமைக்காக மனம் வருந்துகின்றேன். அதேவேளை தமிழ் மொழியில் எழுதுவதால் எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்றோ அல்லது எனது அடையாளம் தமிழ் என்றோ நீங்கள் அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. நானும் அவ்வாறு உணர்வதில்லை.

என்னைப் பொறுத்தவரை மொழி என்பது நம்மை அடையாளப்படுத்துவதற்கும் அப்பால் இன்னுமொரு மனிதருடன் ஆழமாகவும் நெருக்கமாகவும் உரையாடுவதற்கான ஒரு ஊடகமே. ஆனால் துரதிர்ஸ்டவசமாக நாம் சிறுவயதில் இருந்து எந்த விடயங்களுடன் அதிகமான ஈடுபாட்டுடன் வளர்கின்றோமோ அது நமக்குள் ஆழமாக வேருண்றி விடுவது மட்டுமல்ல அதுவே நமது அடையாளமாகவும் உருவாகிவிடுகின்றது அல்லது நமது சமூகங்களால் உருவாக்கப்பட்டு விடுகின்றது. இவ்வாறான ஒரு மனிதரின் அடையாள உருவாக்கத்தில் ஒரு சமூகத்தின் மொழி மட்டுமல்ல மதம், சாதி, மற்றும் பால் அடையாளங்கள் என பல சமூக கூறுகள் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. மனிதர்கள் பிரக்ஞையற்று வாழ்வதன் விளைவாக இந்த அடையாளங்களின் அடிமைகளாக அவர்கள் வாழ்கின்றனர் என்பது மனித வாழ்வில் நடைபெறுகின்ற துரதிர்ஸ்டமான ஒரு விடயம். இந்த அடையாளங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடிமைத்தனத்தை என்று பிரக்ஞைபூர்வமாக புரிந்துகொள்கின்றோமோ அன்று நமது அடையாளம் சார்ந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கான சுதந்திரத்திற்கான பல கதவுகள் திறக்கப்படும் என்பதில் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

மறுபுறம் இவ்வாறன அடையாளங்கள் அதிகாரத்துவத்தால் அடக்கப்படும் பொழுது அல்லது இன்னுமொரு அடையாளம் கொண்ட மனித கூட்டங்கள் அல்லது அவர்களது பிரதிநிதியான ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அடக்கப்பட்டு அழிக்கப்படும் பொழுது இந்த அடையாளங்களுடனான நமது உறவு மேலும் பிரக்ஞையற்ற தன்மையுடாக ஆழமா(கின்றது)க்கப்டுவதுடன், இந்த அடையாளங்கள் அம் மனிதர்களின் வாழ்வில் முக்கியத்துவம் பெருகின்றன. இதன் விளைவாக அவற்றை உயர்ந்தவையாக கருதுவதும் தூய்மையானதாக கட்டமைப்பதும் அடக்கப்பட்ட மனிதர்களின் பிரக்ஞையற்ற எதிர் செயற்பாடாக நடைபெறுகின்றன. இது பெரும்பாலான அடக்கி ஒடுக்கப்படும் மனிதக் கூட்டங்களில் வாழ்வில் அவர்கள் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாக நடைபெறுகின்றது. இதேவேளை இந்தப் பரவலான அடையாள பொதுமைப்படுத்தள்களுக்குள் பல்வேறு வகையான அக சுமூக அடக்குமுறைகள் நிலவியபோதும், மேற்குறிப்பிட்டவாறு பொதுவாகவும் பரந்தளவிலும் அடக்கப்படும் அடையாளங்களுக்காக ஒரு மனிதக் கூட்டம் ஒன்று போராடுவது நியாயமானதல்லவா?.

சிங்களம் பேசும் மனிதர்களே! உங்களது இன மத மொழி அடையாளத்துவத்தின் நிலைமையையே நீங்கள் உதாரணமாகப் பார்க்கலாம். இலங்கையில் மட்டும் பேசப்படும் சிங்கள மொழியையும் பௌத்த மதத்தின் குறிப்பான ஒரு பிரிவையும் காப்பாற்றவேண்டிய தேவை உள்ளதென இலங்கை வாழ் சிங்களம் பேசுகின்ற பௌத்த மத நம்பிக்கையுள்ள மனிதர்கள் உணர்கின்றீர்கள். இந்த உணர்வை பல தமிழ் பேசும் மனிதர்களும் புரிந்துகொள்கின்றனர். இவ்வாறான பயத்திற்கும் அதனால் உருவான தங்களது அடையாளங்களைப் பாதுகாப்பதற்குமான உணர்வுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா மற்றும் அங்கு அதிகாரத்துவத்திலிருக்கின்ற இந்து மதமும் அவர்களின் அரசியலும் மற்றும் தமிழகத்தின் புவிசார் நிலையும் அங்கு வாழுகின்ற தமிழ் பேசும் மனிதர்களின் எண்ணிக்கையும், அவர்களின் அரசியலும் என பல காரணங்களைக் கூறலாம். இவ்வாறான ஒரு சுழலில், தாங்கள் தங்கள் மொழியையும் மதத்தையும் காப்பாற்ற வேண்டிய ஒரு சுழலில் இருக்கின்றீர்கள் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

ஆனால் இவ்வாறு தங்களது மொழியையும் மதத்தையும் நீங்கள் காப்பாற்றுவதற்காக, இலங்கை நாட்டில் ஒரு பகுதியில் வாழும் தங்களிலிருந்து வேறுபட்ட ஒரு மொழியையும் அடையாளத்தையும் கொண்டுள்ள ஆனால் அந்த நாட்டிலையே ஒரு தொடர்ச்சியான வாழ்வையும்; நீண்ட கால வரலாற்றையும் பொதுவான அடையாளத்தையும் கொண்டுள்ள தமிழ் பேசும் மனிதர்களை, நீங்கள் அல்லது தங்களது அரசு அடக்குவதும் அழிப்பதும் அல்லது அவ்வாறு நடைபெறுவதற்கு நீங்கள் ஆதரவளிப்பதும் நியாயமற்றதல்லவா?. இவ்வாறான நியாயமற்ற தன்மையாலும் சுழ்நிலையினாலுமே, தங்களைப் போன்றே தமிழ் பேசும் மனிதர்களும் தமது மொழியையும் அடையாளத்தையும் காப்பாற்றவும் அதன் அடிப்படை உரிமைக்காகவும் போராடினார்கள். ஆனால் இன்று தமிழ் பேசும் மனிதர்களுக்கு எதிராக குறிப்பாக அவர்களது உரிமைப் போராட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போரில் சிறிலங்கா அரசாங்கம் வென்றுள்ளது. இந்த வெற்றிக் களிப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கும் சிங்கள மொழி பேசும் மனிதர்களே! உங்களுடன் மனம் திறந்து கதைக்கும் விருப்பத்தில் உந்தப்பட்டே இதை ஆர்வமுடன் எழுதுகின்றேன்.

சிங்களம் பேசும் மனிதர்களே! முதலில் தங்களின் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒரு சாதாரண மனிதராக கூட என்னால் பங்குபற்ற முடியாதது. ஏனனில் நான் தமிழ் பேசியபோதும், இன்று நான் ஒரு புத்தரின் சீடன். இந்தடிப்படையில் இந்த போரின் வெற்றியை நீங்கள் கொண்டாடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக பௌத்த மதத்தை பின்பற்றும் நீங்கள் இவ்வாறு கொண்டாடுவதை பார்த்து கவலையே கொள்கின்றேன். இவ்வாறு நான் ஏற்றுக்கொள்ள முடியாமைக்கும் கவலை கொள்ளவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் சில காரணங்களை இங்கு முன்வைக்கின்றேன். முதலாவது இக் கொண்டாட்டம் புத்தரின் போதனைகளுக்கு எதிரானது என்பதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை நீங்கள் இன்னும் புரியாது இருக்கின்றீர்கள் என்பதை உணரும் பொழுது மேலும் கவலைகொள்கின்றேன். இரண்டாவது தங்களின் அல்லது தங்களது அரசாங்கம் பெற்ற போர் வெற்றி என்பது சாதாரண சுரண்டப்படும் மனிதர்களுக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக இந்த வெற்றியானது சாதாரண சிங்கள மொழி பேசும் மனிதர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்த இனவாத சக்திகளின் வெற்றி என்பதானால் உடன்பட முடியவில்லை. இதை நீங்கள் புரியாதிருப்பதனால் கவலைகொள்கின்றேன். மூன்றாவது அடக்கப்பட்டுவரும் தமிழ் பேசும் மனிதர்களின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறையின் மீதும் அவர்களின் நியாயமான உரிமைக்கான விடுதலைக்கான போராட்டத்தின் தோல்வியின் மீதும் கொண்டாடப்படுகின்ற வெற்றியே இது. இதனால் நீங்கள் அல்லது தங்களது அரசு போரில் வெற்றிபெறவில்லை என நான் கூறவில்லை.

சிங்களம் பேசும் மனிதர்கள் அல்லது அவர்களது அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழ் பேசும் மனிதர்கள் அல்லது புலிகள் இயக்கம் தோற்றுப்போய்விட்டார்கள். ஆனால் அடக்கப்படுகின்ற மனிதர்களின் சார்பாக இந்த வெற்றியுடன் உடன்படவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. இதன் அர்த்தம் நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்பதல்ல. அதாவது புத்தரை அவரின் போதனைகளை நான் புரிந்து ஏற்றுக்கொண்ட போதும் நான் ஒரு பௌத்த மதத்தினரோ அல்லது அந்த அடையாளத்தைக் கொண்டவரோ அல்ல. இதேபோல் நான் ஏற்கனவே கூறியதுபோல் நான் தமிழ் பேசினாலும் எனது அடையாளம் தமிழ் என்பதை நான் ஏற்பதில்லை. ஆனால்; ஒருவர் தமிழ் மொழியை பேசுகின்றார் என்பதற்காகவும் தமிழ் அடையாளத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதற்காகவும் அவர் அடக்குமுறைக்கு உள்ளாவதை எதிர்கின்றேன். இந்த அடக்குமுறையானது போர் முடிந்த பின்பும் தொடர்வது மேலும் கவலைக்குரியதும் துரதிர்ஸ்டமானதுமாகும். ஆகவே தமது உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் இன்றும் போராட வேண்டிய தேவை தமிழ் பேசும் மனிதர்களுக்கு உள்ளது என்றே நான் உணர்கின்றேன். அதற்கான சுழல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன…

சமூக மாற்றத்தை விரும்பும் ஒருவர்; எந்த அடக்குமுறைகளுக்கும் அடிப்படையில எதிரானவராக இருப்பார். இந்தடிப்படையில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் செயற்படவும்; வேண்டிய பெறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஏனனில் அது நியாயமான தேவையாக இன்றும் உள்ளது. உதாரணமாக என்பதுகளின் கடைசியில் ரோகன வீஜய வீரவை சிறிலங்கா அரசாங்கம் கொன்ற பொழுதும் நான் கவலைப்பட்டேன். இதன் காரணம் நான் ரோகண வீஜய வீரவை ஆதரிப்பவரோ அல்லது அவருடன் உடன்பாடு கொண்டதனாலோ அல்ல. மாறகா அவருடைய கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் மீது விமர்சனம் உள்ளது. ஆனால் அவரும் அவரது இயக்கத்தின் செயற்பாடும் போராட்டமும் அடக்கப்பட்டு சுரண்டப்படும் பரந்துபட்ட பெரும்பான்மை வறிய சிங்கள மொழி பேசும் மனிதர்களின் வாழ்வுடனும் அவர்களின் விடுதலைக்கான சுதந்திரத்திற்கான போராட்டத்துடன்; பிண்ணிப்பினைந்திருந்தது. அந்த அடக்கப்பட்ட சுரண்டப்படும் சிங்களம் பேசும் மனிதர்களின் குரலாக அன்று ரோகன வீஜய வீரவும் அவரது இயக்கமும் ஒலித்துக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறுபுறம் அந்த சுரண்டப்படும் சிங்கள் மொழி பேசும் மனிதர்களின் போராட்டம் அடக்கப்பட்டதற்கும் தொடர்ந்தும் அவ்வாறு அடக்கப்பட்டு கொண்டு இருப்பதற்கும் ரோகண வீஜய வீரவின் தலைமையும் அவரது இயக்கம் அல்லது கட்சியின் கொள்கைகளும் ஒரு காரணமாக இன்றும் இருக்கின்றன. மேலும் இவர்களும் எந்த அடக்கப்பட்ட மனிதர்களின் வீடுதலைக்காகப் போராடினார்களோ அவர்களுக்கு எதிராக பல்வேறு காரணங்களைக் கூறி (உதா. துரோகி, உளவு பார்ப்பவர்) தமது ஆயுதங்களை திருப்பினர். இவ்வாறன காரணங்களுக்காக பலருக்கு அவர்கள் மீது இன்றும் கோவம் மற்றும் விமர்சனம் உள்ளது என்பதை இங்கு குறிப்பிடப்படவேண்டியுள்ளது. ஏனனில் இதுபோன்றதொரு சுழலில்தான் தமிழ் பேசும் மனிதர்களும் வாழ்ந்தார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இதேபால் புலிகள் மீதும் பல தமிழ் பேசும் மனிதர்களுக்கு கோவமும் விமர்சனமும் அன்றும் இருந்தது இன்றும் உள்ளது. ஏனனில் புலிகளின் தலைமை சாதாரண தமிழ் பேசும் மனிதர்களை மட்டுமல்ல சாதாரண அடக்கப்படுகின்ற சுரண்டப்படுகின்றன சிங்கள மனிதர்களின் ஆதரவை தமக்குப் பெறுவதற்குப் பதிலாக அவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் படுகொலை செய்து கொன்றுள்ளார்கள். இது புலித் தலைமையின்; தவறான ஒரு செயற்பாடு என்பதை பல தமிழ் பேசும் மனிதர்கள் அன்றே புரிந்திருந்தார்கள். இன்றும் புர்pந்துகொள்கின்றார்கள். ஆகவே புலித் தலைமையின் இவ்வாறான செயற்பாட்டிற்காக, சிங்களம் பேசும் மனிதர்களிடம் குறிப்பாக அடக்கப்பட்டு சுரண்டப்படுகின்ற மனிதர்களிடம், நல்லுறவையும் கூட்டுறவையும் விரும்பும் தமிழ் பேசும் மனிதர்கள் சார்பாக இந்த சந்தர்ப்பத்தில் மன்னிப்பு கேட்பது பொருத்தமானதும் அவசியமானதும் ஒன்று எனக் கருதுகின்றேன். புலிகளின் தலைமையுடன் பெரும்பாலான விடயங்களுடன் உடன்பாடு இல்லாததால் அவர்களின் ஆதரவாளராகக் கூட பல தமிழ் பேசும் மனிதர்கள் என்றும் தம் வாழ்வில் இருந்ததில்லை. இதன் அர்த்தம் அவர்களின் உருவாக்கத்திற்கான பின்னனியையும் இருப்பின் அடிப்படைக்கான நியாயத்தன்மையையும் மறுப்பதோ நிராகரிப்பதல்ல.

ஏனனில் புலிகளின் தோற்றத்திற்கு அடிப்படையில் பல அரசியல் காரணங்களும் அதற்கான சுழலும் இலங்கையில் இருந்தது. அதாவது புலிகளின் ஆயுத வழி அல்லது இராணுவ செயற்பாடுகளுடன் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் கோரிக்கைகளும் அதற்கான போராட்டமும் பின்னிப் பிணைத்திருந்தது. இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் சிங்கள மொழி மற்றும் பௌத்த மதம் போன்றவற்றை பேசாது பின்பற்றாது இன்னுமொரு மொழியான தமிழையும் வேறு மதங்களையும் பின்பற்றுகின்றார்கள் என்பதனால் தொடர்ச்சியாக அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த அடக்குமுறைகளும் அழிவுச் செயற்பாடுகளும் எந்தடிப்டையிலும் நியாயமற்றவை என்பதை சிந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் புர்pந்துகொள்வர்கள். மேலும் இவ்வாறன செயற்பாடுகள் புலிகளை ஆயுதரீதியாக தோற்கடித்த பின்னரும் தொடருகின்றமை மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமும் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். இந்த இனரீதியான அடக்குமுறைகளும் அழித்தொழிப்புகளும் தமிழ்பேசும் மனிதர்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார சுரண்டல்களுக்கும் அக சமூக அடக்குமுறைகளுக்கும் அப்பால் அவர்களது பொதுவான அடையாளத்தின் அடிப்படையிலையே அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக இலங்கை சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டிலிருந்து திட்டமிட்டு இந்த அடக்குமுறை நடைபெற்று வருகின்றது என்பதை சிங்களம் பேசும் மனிதர்கள் நடுநிலையாக நின்று பார்ப்பார்களேயானால் புரிந்துகொள்வார்கள். ஒவ்வொரு ஆட்சியிலும் தமிழ் பேசும் மனிதர்கள் மீதும் அவர்களது அடையாளங்களின் அடிப்படையிலும் அதன் மீதுமான அடக்குமுறைகளும் அழித்தொழிப்புகளும் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை அதைப் புரிந்துகொண்ட மற்றும் அவர்களின் விடுதலைப்போராட்டத்தின் அவசியத்தை ஏற்றும் கொண்ட பல்வேறு சிங்க மொழி பேசும் அறிஞ்ர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்கள் எழுதியும் பேசியும் வந்துள்ளனர். ஆகவே, அதை நான் இங்கு மீண்டும் பட்டியில் போடவேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றேன். அமைதியிலும் சமாதானத்திலும் பிரச்சனைக்கான தீர்வுகளிலும் அக்கறையுள்ளவர்களும் எந்த அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடும் உணர்வுள்ளவர்களும் இவ்வாறான விடயங்களைத் தேடிப் படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இவ்வாறன சமூக அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களும் சுழல்;களும் தான் புலிகள் மற்றும் ஜேவிபி போன்ற இயக்கங்கள் உருவானதற்கான காரணங்களாக இருந்திருக்கின்றன அல்லது உருவாக்கப்பட்டிருந்து. மேலும் இவர்களது வன்முறை செயற்பாடுகள் மோசமானவையாக இருந்தபோதும் பரந்துபட்ட அடக்கப்பட்ட மற்றும் உரிமைகள் மறுக்கப்ட்ட மனிதர்கள் இவ்வாறன இயக்கங்களுக்கு ஆதரவளித்தனர். ஏனனில் இந்த மனிதர்களின் அரசியல் , பொருளாதரா, மற்றும் மனித உரிமைகள் போன்ற கோரிக்கைகளை இந்த இயக்கங்கள் பிரதிபலித்தன. இன்றும்கூட இந்த இயக்கங்களின் தோற்றத்திற்கான காரணங்கள் தீர்வு காணப்படாது இருக்கின்றன. இவ்வாற பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன்வைத்து இக் காரணங்களை நிவர்த்தி செயவதற்குப பதிலாக இதுவரையான அனைத்து அரசாங்கங்களும்; மேற்குறிப்பிட்ட குழுக்களின் வன்முறை செயற்பாடுகளுக்கு நிகராக எந்தளவிலும் குறைவில்லாது அல்லது அவற்றைவிட அதிகமாகவே மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இன்றும் அவ்வாறே தொடர்கின்றனர்.

ஜேவிபி இயக்கம் அன்று போராடியதற்கு குறிப்பான சில சமூக காரணங்கள் இருந்தன. ஊதாரணமாக, பொருளாதார சுரண்டல். விலைவாதி அதிகரிப்பு. மனித உரிமைகள் மற்றும் சமூக அரசியல் கட்டமைப்புகள் என்பவை சிலவாகும்;. ஆனால் ஜேவிபி இயக்கத்தை அழித்த பின்பும் அந்த இயக்கம் தோன்றியதற்கான காரணங்களை களைவதற்கு அல்லது தீர்ப்பதற்குப் மாறாக, சிறிலங்கா அரசாங்கமானது; முன்பு இருந்ததை விட சுரண்டல் மற்றும் விலைவாசிகள் என்பவற்றை அதிகமாக்கியுள்ளது. மனித உரிமைகள் எல்லைகள் மீறி அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கான போரட்டம் மட்டும் அடக்கப்பட்டுள்ளது. ஆனால் இப் பிரச்சனைகளை முன்வைத்து ஜேவிபி போன்றதொரு இயக்கம் மீண்டும் உருவாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இதேபோன்று சிறிலங்கா அரசாங்கம் வடக்கு கிழக்கில் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பது அனைவரதும் கவனத்திற்கு அக்கறைக்கும் உரியது என்றே உணர்கின்றேன். இன முரண்பாட்டிற்கு உடனடியான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்குப் பதிலாக பாரிய இரணுவ முகாம்களை நிறுவுகின்றது. சந்திக்கு சந்தி புத்தரின் சிலைகளை நடுகின்றது. திட்டமிட்ட குடியேற்றங்களை செயற்படுத்துகின்றது. ஆனால் தொடர்ந்தும் அரசியல் உரிமைகளை மட்டும் மறுக்கின்றது. அதாவது புலிகள் போன்ற தமிழ் இயக்கங்கள் தோன்றியதற்கான காரணங்களை களையவோ அப் பிரச்சனைகளை தீர்க்கவோ சிறிது கூட சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறன நிலைமை மேலும் தொடருமாயின் வெகுவிரைவில் புலிகள் போன்ற அல்லது அதைவிட வலுவான ஒரு அரசியல் அல்லது ஆயுதப் போராட்ட இயக்கம் மீண்டும் உருவாகுமாயின் ஆச்சரியமானதல்ல. ஏனனில் அதற்கான காரணிகள் இன்றும் இலங்கையில் நிலவிக் கொண்டிருக்கின்றன. ஆகவே மேலும் ஒரு போரை தவிர்க்க வேண்டுமாயின், வன்முறையற்ற சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின், அநியாயமாக குறிப்பாக இளம் உயிர்களை பலியிடப்படுவதிலிருந்து தவிர்க்க வேண்டுமாயின், அமைதியிலும் சமாதானத்திலும் மனித உரிமைகளிலும் அக்கறையுள்ளவர்கள் ஒன்றுபட்டு; ஆரோக்கியமான அரசியல் வழிமுறைகளில் உடனடியாக செயற்படவேண்டிய ஒரு காலகட்டம் இது.

புத்தரின் வழி பிரக்ஞையுடன் செயற்பட்டு புத்தரின் மீது இயல்பான விருப்பத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதே ஆரோக்கியமான வழிமுறையாகும். இதற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் புத்தரை அதிகாரத்துவத்தினுடாக வடக்கு கிழக்கு பகுதிகளில் சிலைகளாக நிலைநாட்டி புத்த மதத்தை ஆக்கிரமிப்புணர்வுடன் பரப்புவதை கௌதம சித்தாத்தர் என்ற புத்தர் கூட இன்று இருந்திருந்தால் உடன்படமாட்டார் என்றே நான் நம்புகின்றேன். ஏனெனில் புத்தர் சிலைகள் மூலம் அவரையே ஆக்கிரமிப்பாளராக்குவதுடன் அவரின் போதனைகளுக்கு எதிரானதாகவும் அவரை அவமதிக்கும் ஒரு செயலாகவுமே அரசாங்கத்தின் செயற்பாடுகள் இருக்கின்றன. புத்தரின் போதனைகளை மதிக்கும் பின்பற்றும் ஒவ்வொருவரும் சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு செய்வதை எதிர்ப்பார்கள் அல்லது எதிர்க்கின்றனர் எதிர்க்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை நியாயமாக சிந்திக்கும் ஒவ்வொருவரும் எதிர்ப்பார்கள் என்றே நம்புகின்றேன். அல்லது மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் புத்தரின் மீது ஆர்வத்தை தூண்டுவதற்குப் பதிலாக மேலும் எதிர்ப்புணர்வை அதிகரித்து அவரை குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்களிடம் இருந்து அந்நியப்படுத்தவே உதவும். புத்தரின் போதனைகள் மனித வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. இனிவரும் காலங்களில் அதன் முக்கியத்துவம் அதிகரிக்கும் சாத்தியங்கள் தெரிகின்றன. ஆனால் அதை மேற்குறிப்பிட்டதற்கு மாறாக புத்தரின் போதனைகளின் வழி நாம் உதாரணமாக வாழ்ந்து பிற மனிதர்கள் மீது நம்பிக்கையை உருவாக்குவோமாயின் புத்தரை அவரின் போதனைகளை மனிதர்கள் புரிந்துகொள்வர்கள். மேலும் புத்தரை ஒரு ஆக்கிரமிப்பாளராக்க (பார்க்க) வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது. மாறாக புத்தர் மீதும் அவரது போதனைகள் மீதும் இயல்பாகவே மனிதர்களுக்கு மதிப்பும் விருப்பமும் ஏற்படும்.

இன்று நாம் குறிப்பாக முற்போக்கு சிந்தனையுள்ள சிங்கள மொழி பேசும் மனிதர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் இன அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஒரு நியாயமான அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கும் தேவையான அரசியல் அழுத்தத்தை அக்கறையுள்ளவர்கள் கொடுக்கவேண்டும். உதராணமாக இடம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்களை உடனடியாக மீளக் குடியமர்த்தல். அகதி முகாம்களை மூடுதல். ஆரசியல் கைதிகளை விடுதலை செய்தல். இராணுவ முகாம்களை தமிழ் பிரதேசங்களிலிருந்து அகற்றுதல். இன் முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வை உடனடியாக முன்வைக்க நிர்ப்பந்தித்தல். இவ்வாறன விடயங்களே உடனடியாக முக்கியத்தும் கொடுத்து முன்னெடுக்கப்பட வேண்டியவை. மேலும் சிங்களம் பேசும் மனிதர்களிடம் மேலும் பிரக்ஞையை வளர்ப்பதன் மூலம் அவர்கள் எவ்வாறு சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிமையாகவும் தமிழ் பேசும் மனிதர்களை எதிரிகளாகவும் நடாத்துகின்றனர் என்பதையும் குறிப்பாக புத்தரின் போதனைகளுக்கு எதிராகவே அவர்களது வாழ்க்கை குறிப்பாக அரசியல் சிந்தனைகளும் செயற்பாடுகளும் இருக்கின்றது என்பதை புரியவைத்து உணர்த்துவது ஒவ்வொருவரதும் இன்றியமையாத பொறுப்பாகின்றது. கடந்த காலங்களில் இடதுசாரிகள் தவறிழைந்தது போல் அல்லாது இன்றைய சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் இதில் மிகவும் கவனம் எடுத்து தீர்க்க தரிசனத்துடனும் உறுதியாகவும் செயற்படவேண்டிய காலம் இது. அதை அவர்கள் செய்வார்களா? இன்று இவ்வாறு செய்யத் தவறுவோமாயின்…

ஆட்சியாளர்களோ அடக்குமுறையாளர்களோ தொடர்ந்தும் வெல்வதுமில்லை….
அடக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் தோற்பதும் இல்லை….
என்ற உண்மை ஒரு நாள் உணரப்படலாம்.

ஆனால் முன்னெடுக்கப்படும் போராட்டம் எந்தளவு பிரக்ஞையுடன் வன்முறையில்லாது ஆரோக்கியமா முன்னெடுக்கப்படுகின்றது என்பதில் தான் அதன் உண்மையான வெற்றி தங்கியுள்ளது.

நட்புடன்
மீராபராதி

சிங்கள மொழி தெரிந்த தமிழ் பேசும் நண்பர்களே! மேற்குறிப்பிட்ட கட்டுரை சிங்கள மொழி பேசும் மனிதர்கள் வாசிக்கவேண்டியது என நீங்கள் உணர்ந்தால் மொழிபெயர்ப்பு செய்யவும்…. நட்புடன் நன்றிகள்.

சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்…..நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு
http://meerabharathy.wordpress.com

3 ஆவது ரெஸ்ட் போட்டி – இலங்கை 425 ஓட்டங்கள்

samaraweera.jpgஇலங்கை இந்திய அணிகளுக்கிடையேயான 3 ஆவது ரெஸ்ட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணியினர் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 425 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் டி.எம்.டில்ஷான் 48 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரன்னவுட் முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது, சங்கக்கார 75 ஓட்டங்களையும் ஜயவர்தன 56 ஓட்டங்களையும் சமரவீர ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் குண்டுச்சட்டிக்குள் குதிரை!: குலன்

Walk_to_Geneva_Sivanthanமனிதனுடைய செயற்பாடுகள் என்றும் குறிக்கோள் கொண்டதாகவும், பலாபலன்களை நோக்கியதாகவும், எதிர்வினை அறிந்ததாகவும் இருத்தல் அவசியமானது. ஒரு செயற்திட்டத்தைத் திட்டமிடும்போது மைல்கற்கள் திட்டமிடப்பட்டு அதுவரை கிடைத்த பலன்கள் மீளாய்வு செய்யப்படவேண்டும். ஒரினத்தின் போராட்டமும் இதுபோன்றதே. நடந்து முடிந்த ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டமானது தூரநோக்கு, மனிதவிரோதம், ஆத்மீகபலம், புவியியல்சார் ஆழ்ந்த அறிவு, மக்களின் விழிப்புணர்வு, எழுச்சி, போராட்ட குணம், எதிரியின் பலம், பலவீனம், பொருளாதாரபலம், பலவீனம், உலகப்பொருளாதாரம், உலகமயமாதல், இன்னும் எத்தனையோ அடிப்படைக் காரணிகளை அறியாமலேயே ஒரு குருட்டுத்தனமான போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடி முடிந்தது. நாடும், மக்களும் நாசமாய் போனது. போராட்டப்பாதையில் மைல்கற்களான மக்களின் சுயாதீனமான கருத்துக்கள் கணக்கெடுக்கப்படாது போனதே தோல்வியின் முதற்படி. தமிழனின் தலையில் இடி.

கற்பனையில் எழுதப்பட்ட சினிமாப்படங்களைப் பார்த்து, அம்புலிமாமா, கதைப்புத்தகங்கள் வாசித்து போராடப்புறப்பட்டதே காரணமா? பிரபாகரனின் பேட்டியில் ஒருதடவை சொல்லியிருந்தார். சுபாஸ் சந்திரபோஸ்சைப் பார்த்து வீரம் வந்தது என்று. அப்படியென்றால் சுபாஸ்க்கு என்ன நடந்தது என்பதையும் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது நோர்வேயிய அன்றைய சமாதானத்தூதரும், இன்றைய அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சூல்கைம் உடன் தனிமையாக உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. எரிக் தனது நோக்கிலும், கடமையிலும் சரியாகவே இருந்தார். அதை அவர் மிகத்தெளிவாக விளங்கப்படுத்தினார். நாம் எந்தமுடிவுகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தமாட்டோம். எமது கடமை இருபகுதியினரையும் ஒருமேசைக்குக் கொண்டுவந்து பேச்சுவாத்தைகளினூடாக இருசாராரும் புரிந்துணர்வுடன் ஒரு சமரசமுடிவை எட்டுவதே இதன் நோக்கம். சுருங்கக் கூறின் நாம் வெறும் தரகர் அல்லது புரோகர்கள் மட்டுமே. இருசாராரும் சண்டைதான் பிடிக்கப்போகிறார்கள் என்றால் கவலையுடன் விட்டுவிடுவோம். இருசாராரும் போருக்குப் பணம் சேர்ப்பதும் தெரியும் என்றார். இந்த சிறியவிடயத்தைத் துல்லியமாக விளங்கிக் கொள்ளமுடியாத புலிகள் நோர்வேயிடம் சென்று அரசு அதைச் செய்கிறது இதைச் செய்கிறது என்று குழந்தைப்பிள்ளைகள் அப்பா அவர் அடிக்கிறார், இவர் இடிக்கிறார் என்பது போல குற்றச்சாட்டுக்களை நோர்வேயிடம் கூறி ஒப்பாரி வைத்தது மிக வேடிக்கைக்குரியதே. இதில் முக்கியமான ஒன்று ஏ9பாதையைத் திறக்கவில்லை என்பது புலிகளின் குற்றச்சாட்டு ஆகும். இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கை ஏற்ற ஒரு வெள்ளைப் பெண்மணி என்னிடம் கேட்டார் ஏ9 பாதையைத் திறப்பதற்குத் தானா இத்தனை வருடங்களாக உயிர்பலி கொடுத்தீர்கள், இதுதான் உங்களின் போராட்டத்தின் நோக்கமா என்றார். வெக்கித் தலைகுனிய வேண்டியிருந்தது. புரிகிறதா புலிகளின் போராட்டத்தின் நோக்கமும் குறிக்கோளும். இனியாவது குறிக்கோளுள்ள வெல்லக்கூடிய போராட்டங்களில் ஈடுபடுங்கள்.

புலிகளின் போராட்டம் உலகமயமாக்கப்பட்டது என்று இன்றும் பலர் பறையடிக்கிறார்கள். சரியான நோக்கும் தீர்க்கதரினமும் சமயோசிதபுத்தியும் இல்லாமல் புலிகளால் ஒரு இனமே ஏறக்குறைய அழிக்கப்பட்டது என்பதும் உலகமயமாக்கப்பட்ட உண்மை என்றறிக. அரசுடன் சமபலத்தில் இருக்கிறோம் என்று சோ காட்டி மாயை காட்டி இல்லாத பலத்தை இருப்பதாகக் காட்டியே இன்று தமிழர்களுக்கு இந்த நிலை. இரண்டு நாள் வெளிநாடுகளில் தெருவில் இறங்கிப்போராடியபோதே ஏற்பட்ட மறுதாக்கத்தை அல்லது எதிர்விளைவுகளை, பலாபலன்களை மக்கள் புரிந்து போராட்ட வடிவத்தை மாற்றியிருக்கவேண்டும். செய்தார்களா?

மாவிலாற்று அடியிலேயே விளங்கியிருக்க வேண்டும் தொடர்ந்து புலிகள் நிற்பதா இல்லையா என்பதை. முழுமையாக புலிகளினதும், புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடியது தான் மிச்சம். பங்கர்களுக்குள் பதுங்கி வாழ்ந்த நிலத்துப் புலிகளுக்குத்தான் உலகநிலவரம் தெரியாது என்றால் புலத்துப் புலிகளுக்குமா உலகறிவு அற்றுப்போனது? அமெரிக்கா ஒன்றுமில்லாத ஒருபிச்சைக்காரனுடன் சமபந்திப்போசனம் வைப்பதற்கு என்ன அண்ணன் தம்பியா? எதாவது கொடுக்கல் வாங்கல்கள் உண்டா? எந்தவெளிநாட்டு அரசும் இலங்கையரசுடனேயே நட்புறவை வைத்திருக்கவிரும்பும். காரணம் பொருளாதார, அதிகாரபரவலாக்கம். என்றும் பொருளாதாரமே வெளிநாடுகளின் ஆர்வத்துக்குரியதாக இருந்து வந்திருக்கிறது. பணமுள்ள இடத்தில்தானே நட்பும் உறவும். சொந்த இடத்தையே பாதுகாக்க முடியாத புலிகள் அமெரிக்காவுடன் பேரம் பேச என்ன வைத்திருந்தார்கள். கனவுகாண்பது என்றாலும் அதற்கு ஒரு தகுதி வேண்டாமா? இது என்ன எம்.ஜி.ஆர் படமா கூரையைப்பிரித்து இறங்கு புலிகளை மீட்டெடுப்பதற்கு.

பலர் புலிகளின் தோல்விக்கு இந்தியாவை குறை கூறுகிறார்கள். வரலாற்று ரீதியாக சிறீமா சாத்திரி ஒப்பந்தத்தில் இருந்து ஜே.ஆர், இராஜீவ் ஒப்பந்தத்தினூடாக மகிந்தாவரை அனைத்தும் தமிழர்களுக்கு பாதகமாகவே இருந்தது. இனியும் பாதகமாகத்தான் இருக்கும். இந்தியாவுக்கு இதைத்தவிர வேறுவழியும் கிடையாது. புலிகளுக்கு உதவி செய்து நேபாளம்வரை வந்துவிட்ட சீனாவை முழுமையாக அழைத்து இலங்கையில் இருத்த இந்தியா விரும்பாது. தமிழகமாநில அரசோ மத்திய அரசில் பல்லுப்பிடுங்கிய பாம்புதான். புரியவில்லையா குறிப்புக்காட்டக் கருணாநிதி கருணையற்றுக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பது. இப்படியான குழந்தைப்பிள்ளைக்கு விளங்கும் விடயங்களைக் கூடப்புரிந்து கொள்ள வலுவற்ற புலிகளால் எப்படி ஒருபோராட்டத்தை அன்றும் இன்றும் இனி என்றும் வென்றெடுக்க முடியும்?

புலிகளின் நன்மைக்காகவும், எம்மக்களின் நலனுக்காகவும் பிழைகளை எடுத்துரைத்தவர்கள் அனைவரையும் துரோகி துரோகி என்றார்கள், சுட்டும் தள்ளினார்கள். ஈற்றில் பக்கத்தில் இருந்த துரோகிகளாலேயே புலிகள் தொலைந்தனர். துரோகிகள் என்றும் பக்கத்தில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எளிய கருத்தைக் கூட உணரமுடியாத புலிகளால் எப்படி ஒரு போராட்டத்தை வென்றெடுக்க முடியும்? எதிரி என்றும் எதிரில் இருப்பதால் நாம் அவனை அவதானிக்கலாம் துரோகி பக்கத்தில்தான் இருப்பான்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் என்பதை விட புலிகளின் போராட்டம் என்பதே சரியானது. இந்தப்போராட்டம் என்றும் மக்கள்மயமாகவும் இல்லை, உலகமயமாகவும் இல்லை, வெளிநாடுகளின் உயர்மட்ட அரசியலில் நுழையவுமில்லை, ஏன் பேரம் பேசப்படவும் இல்லை. இப்படிக் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய புலிகளால் எப்படி எம்மக்களின் போராட்டத்தை வென்றெடுக்க முடியும்? வாசகர்கள் விரும்பினால் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய விடயங்களை விலாவாரியாக எழுதலாம். இப்படியான வழித்தோன்றல்களின் புதிய குதிரையோட்டமே சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம்.

sivanthan3.jpg
இந்த நடைப்பயணத்தை எடுத்துக்கொண்டால் சிவந்தன் என்பவர் ஏன் ஐ.நா நோக்கி நடக்கிறார் என்பது பலதமிழர்களுக்கே தெரியாத ஒன்றாக உள்ளது. அவரே முன்னுக்குப்பின் முரணாகப் பேட்டி கொடுக்கிறார். இது சரியான முறையில் திட்டமிடப்படவில்லை. மக்கள் தொலைக்காட்சி என்று இலவசமாக தொலைத்துத் தொலைத்துக்காட்டும் மக்கள் தொலைகாட்சி எனும் ஜிரிவிக்கே இந்த நடைப்பயணி எங்கு எந்தவழியால் போகிறார் என்பது நேற்றுவரை 29.07.2010 தெரியாது இருந்தது. தொலைபேசி நேயர்கள் சொன்னார்கள் சிவந்தன் பலவிடங்களில் தனியாகவே நடந்து போகிறார். அவருக்கு மக்கள் வந்து ஆதரவு கொடுங்கள் என்று. அதையடுத்து சரியாக 15நிமிடத்தில் சிவந்தனுடன் தொடர்பு கொண்டபோது அவர் சொல்கிறார். மக்கள் ஆதரவு இருக்கிறது என்று. இது மீண்டும் புலி, அரசுப்பாணியையே நினைவு படுத்துகிறது.

இலண்டனில் இருந்து ஐ.நா நோக்கி நடக்கும் போராட்டம் ஒரு வலுவான அகிம்சைப் போராட்டம்தான். ஆனால் அது திட்டமிடப்பட்ட விதம், பயணம் செய்யும் முறை, சிவந்தனுக்கு பேச்சில் தெரியும் அவரது போராட்டம் பற்றிய அறிவு, தெளிவு என்பனவும், என்மக்கள், வெளிநாட்டவர், அரசியல், இராஜதந்திரிகள் மட்டங்களில் இப்பயணம் பற்றிய நோக்கம் என்பன கேலிக்கூத்தாகவே இருக்கிறது. இலங்கையில் உலகசாதனை புரிய தெருத்தெருவாய் நடனமாடிய மடையர்கள் போலவே தெரிகிறது.

அகிம்சை முறைப்படி பயணப்போராட்டம் செய்பவர் அகிம்சையுடன், சாந்தமாக, அமைதியாக நடப்பது முக்கியம். சிவந்தன் நடப்பதைப்பார்த்தால் போருக்குப் போகிறவர் போல் போகிறார். அகிம்சை ஐயோ என்று அலறிக்கொண்டு ஓடிவிட்டது. சரி நடந்து போகும் போது பிரித்தானியக் கொடியுடன் போகும் இவர் தான் பிரித்தானியன் என்று உலகத்தவர்களுக்குக் கூறுவதுதானா இப்பயணத்தின் நோக்கம்? மொழியறிவற்றவர்கள் கூட குறிப்பறிய ஏன், எதற்கு நடக்கிறார் என்ற குறிப்பு எதுவுமே கிடையாது. குறைந்தபட்சம் முதுகில் கூட ஒரு குறிப்பெழுதிப்போட முடியாமல் போனதா? மனமில்லாமல் போனதா? ஆங்கிலத்தின் கொடியைக் காவிச்செல்லும் இவர்களுக்கு ஆங்கிலத்தில் நாலெழுத்துத் தெரியாமல் போனது ஏன்? யாருக்குக் காட்ட இந்தப்பயணம். இதைக்காட்டி புலத்துப் புண்ணாக்குகளிடம் மீண்டும் பணம் பறிக்கவா? ருசிகண்ட பூனைகள் சும்மாவா இருக்கும்?

ஐ.நாவை நோக்கி நடக்கும் இவரை எதிர்பார்த்து ஐ.நாவின் பொதுச்செயலாளர் பாங்கி மூன் நிற்கிறார்போலும். சிறையில் வாடுபவர்களை விடுவிக்க வேண்டும், போர்குற்றங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறுமிவர் எந்த நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்? பரமேஸ்வரன் மைக்டொனால்ஸ் வழக்குபோல் சாட்சியில்லாத வெற்றிகள் கிட்டலாமல்லவா? ஒருநாட்டில் உயர்நீதி மன்றத்தால் தனக்குச் சரியான தீர்ப்பு கிடைக்காத தனிமனிதர்கள் வழக்குகளை மனித உரிமைகள் நீதிமன்றுக்குக் கொண்டு போகலாம் என்பதை அறியவில்லையா? இதைச் செய்தார்களா? பிரபாகரன் பிணத்தை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரவலுவற்ற உறவுகளும், நட்புகளும், புலிவீரர்களும், புலம்பெயர்புலிகளும் இருக்கும் போது குண்டிச்சட்டிக் குதிரையோடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்.

ஏதாவது தாக்கங்களை உலக அரசியல் மட்டங்களில் ஏற்படுத்துமாறு புதிய முறைகளைக் கையாளுங்கள். கொலஸ்ரோல் உடலில் கூடிவிட்டது என்பதற்காக தமிழரைச் சாட்டி போராடவேண்டாம். இதுவும் ஒரு புலிப்பாணிதான். போராட்டம் தமிழ்மக்களுக்கு என்று கூறி புலிகள் மாபியாவாக வளர்ந்து விழுந்தது தான் மிச்சம். மக்களுக்காகப் போராடியவர்கள் தம்மக்களையே பயணக்கைதிகளாய் வைத்திருந்த நாசகார, நயவஞ்சகச் செயல் புலிகளைத் தவிர உலகில் யாரும் செய்யவில்லை. இப்படியான விவஸ்தை கெட்ட செயல்களை விமர்சித்தால் இன்று ஒரு புதுப்பட்டம் கொடுக்கிறார்கள் அரசாங்கத்தின் ஆள் என்று. புலிகளும், புலிப்பினாமிகளுமே இன்று அரசின் கையாளாக உள்ளனர். எப்போ மாடுசாகும் உண்ணிகளரும் என்று இருந்திருக்கிறார்கள் போலும்.

சிவந்தனிடம் கால்கடுக்கவில்லையா? களைக்கவில்லையா? என்ற கேள்விகளைக் கேட்டபோது அவரின் பதில் குழந்தைப்பிள்ளைக் கூட குலுங்கிச் சிரிக்கவைக்கும். களையைப்பார்த்தால் விடுதலை கிடைக்காதாம். இது விடுதலைப்பயணமா? நீதிகேட்டு பயணமா? ஒன்றுமாய் விளங்கவில்லை யாராவது விளங்கினால் சொல்லுங்கள். இப்படித்தான் எங்களுக்கு ஒன்றும் விளங்காமலே எங்கள் இனத்தையும் நிலத்தையும் அழித்தது போதும். இனியாவது திட்டமிட்டு மக்கள் மயப்பட்ட, இராஜதந்திரரீதியாக, அறிவுரீதியான போராட்டங்களில் ஈடுபடுங்கள். சிலவேளைகளில் விட்டுக் கொடுப்பது கூட இராஜதந்திரம்தான்.

இன்று போரில் விழுந்த இலங்கையையும், சிங்களப்பேரினவாத அரசையும் முண்டு கொடுத்து நிமிர்த்துவது புலிகள் தான். ஈழம் கேட்டுப்போராடியவர்கள் கொழும்பில் வீடுகள் வாங்கினார்கள். எல்லைகள் பறிபோக தமிழர்களின் உறுதிகளைப்பிடுங்கினார்கள். இன்றும் இலங்கைப் பேரினவாத அரசுக்கும் இராஜபக்ச கொம்பனிக்கும் தாராளமாக அள்ளிவழங்குவது புலிகளே. தமிழீழத்தின் தேசியச்சின்னங்கள், சூரியதேவன் பிரபாகரன் வளர்த்த வாரிசுகள் 2009 மே 18 மண்வேண்டி, மண்ணாய், மண்ணில் தலைவன் விழுந்த இரத்தம் காயமுன் விமானரிக்கட்டுகளைப் பதிவுசெய்தார்கள். தலைவன் விழுந்த மண்ணையோ, தண்டிக்கப்பட்ட அப்பாவி மக்களையோ பார்ப்பதற்கல்ல. வியாபாரத்துக்கும் சுற்றுலாவுக்குமாக விமான இருக்கைகள் நிரம்பி விட்டன. இலங்கைத் தயாரிப்புக்களை பகிஸ்கரியுங்கள் என்று வானுயரக்கத்திய புலிகளும் பினாமிகளுமே எயர்லங்காவில் விமான இருக்கைகளைப் பதிவு செய்துள்ளார்கள் என்பதையும் அறிக. தமிழுணர்வும், தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் என விடுதலைவேட்கை பொங்கி வழிகிறது. வாருங்கள் நாங்களும் போய் அள்ளுவோம். ஜிரிவியில் ஒரு விளம்பரம்:- “வாணி சீ பூஃட்சே இனி எம்தேசிய உணவு”. கடலுணவு என்று தமிழில் விளம்பரப்படுத்த முடியாத, அன்றித் தெரியாத தமிழர்களுக்கு வாணி சீ பூஃட் தேசிய உணவாம். சுயமிழந்த தேசியம் தேவடியாளாகி தெருத்தெருவாய் கிடக்கிறது. விலைகூறி மலிவுவிலையில் தேசியம் விற்கப்படுகிறது. முடிந்தால் நீங்களும் வாங்குங்கள்.

இன்று இலங்கைப் பேரினவாத அரசுக்கு தேசியம் பேசிய புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் கொடுத்த பணம் ரிஆர்ஓ வினூடாகவம் கே.பி யினூடாகவும் போய்விட்டது. மீதியை புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் விமானம் எடுத்துப் போகிறார்கள் அன்னியச் செலவாணியை அள்ளி இறைப்பதற்கு. நான் பிறந்த சமூகமே ஏறிமிதிப்பற்குக் கூட இலாயக்கற்றுப்போனாயே போ. முட்டாள் சிங்களவன் என்று குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டி கொட்டமடித்த சமூகமே சிங்களவன் எட்டிக்குட்டிவிட்டு கிட்டநின்று சிரிக்கிறான் உன் செய்கைகளைப் பார்த்து. உன்னைவைத்தே உன்னையழிக்கும் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது கொட்டிக் கொடுங்கள். வாழ்க தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம்.

கூனிக்குறியபடி குலன்.
30.07.2010

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

Vavuniya_Townவவுனியா நகரசபை உறுப்பினர்கள் அதன் தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளனர். அவ்வறிக்கையில் வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் பிரதித் தலைவர் மு முகுந்தன் ஆகியோரது நடவடிக்கைகள் பற்றி மிகக் கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளனர். 29 விடயங்களைப் பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில் தலைவர் பிரதித்தலைவர் மற்றும் ஏ.எல்.எம் முனவ்பர் ஆகியோர் தவிர்ந்த 8 நகரசபை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நகரசபைத் தலைவரின் ஊழல் நிதிமோசடி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றிய பல விடயங்களை இவ்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தள்ளது.

வவுனியா நகர சபைக்கான தேர்தல் சென்ற வருடம் ஓகஸ்டில் நடைபெற்றது. 11 உறுப்பினர்களைக் கொண்ட இந்நகரசபையை அதிக உறுப்பினர்களைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி கூட்டு கைப்பற்றியது.

நகரசபை உறுப்பினர்கள் விபரம்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) : எஸ். என். ஜி. நாதன் (நகரசபைத் தலைவர்), மு. முகுந்தரதன் (உப தலைவர்),  இ. சிவகுமாரன் செ. சுரேந்திரன், ஐ. கனகசபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்எல்எம்சி) : அப்துல் லத்தீப் முனவ்பர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) : ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, க.பார்த்தீபன்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) : எம் எஸ் அப்துல்பாரி, ஜெ.ஏ.டி லலித்ஜெயசேகர

வவுனியா நகரசபைக்கு எஸ்என்ஜி நாதன் தலைவராக நியமிக்கப்பட்டார். கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற மு முகுந்தன் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்களிடையே தலைமைக்கான இழுபறியும் நீண்டகாலமாக இருந்து வந்தது. இப்போதைய நகரசபை பதவியேற்று 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை வவுனியா நகரத்திற்கு எவ்விதமான சேவையையும் வழங்கவில்லை என்றும் நகரசபையின் நிர்வாகம் செயற்திறனற்று இருப்பதற்கு நகரசபைத் தலைவரே முக்கிய காரணம் என்றும் நகரசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

TNA_in_Vavuniyaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நேரடியாக வந்து கலந்துகொண்டதுடன் பதவியேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டனர். நகரசபை உறுப்பினர்கள் ஆர் சம்பந்தன் முன்னிலையில் சத்தியப் பிரமாணமும் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த பத்து மாதங்களாக வவுனியா நகரசபை நிர்வாகம் எவ்வித செயற்பாடுகளையும் செய்யாமல் நகரசபைக்கு வழங்கப்பட்ட நிதியை தவறான முறையில் கையாண்டும் உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் மூவரும் கூட தங்கள் கட்சியின் நகரசபைத் தலைமைக்கு எதிராக கையெழுத்திட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நகரசபையையே தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நிர்வகிக்க முடியாத நிலையை இவ்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கான வாழ்விடமாகியுள்ள வவுனியாவின் நகரசபை கடந்த 10 மாதங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் நகரசபையின் தலைவர் எஸ்என்ஜி நாதனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கும் உள்ள நெருக்கமே எஸ்என்ஜி நாதன் இவ்வாறு செயற்படுவதற்குக் காரணம் என அபிவிருத்திக்கான இளைஞர் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் குற்றம்சாட்டி உள்ளது.

வவுனியா நகரசபைத் தலைமையின் ஊழல் மோசடியும் நிர்வாகச் சீரழிவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்களில் இருந்து அந்நியப்பட்டு நிற்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனின் சொந்தத் தொகுதியான திருகோணமலை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் சென்ற ஆண்டு ஆளும்கட்சிக்கு தாவியிருந்தமை தெரிந்ததே. வெறும் பத்திரிகைக்கு அறிக்கைகள் தயாரித்து வழங்குவதன் மூலம் மட்டுமே தங்கள் வெள்ளை வேட்டி அப்புக்காத்து அரசியலைத் தொடர முடியாது என்பதனை வவுனியா நகரசபை வெளிப்படுத்தி உள்ளது.

._._._._._.

Vavuniya_UC_Members_Signaturesவவுனியா நகரசபை உறுப்பினர்களின் கையெழுத்துடன் வெளியாகி உள்ள அறிக்கை:

வவுனியா நகரசபை நிர்வாகச் செயற்பாடுகள்

கனம் கௌரவ தலைவர் கனம் கௌரவ உப தலைவர் செயலாளர் அவர்கட்கு

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற வவுனியா நகரசபைத்தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பிரிதிநிதிகள் இடம்பெறாது நகரசபை இயங்கியது அத்தோடு இலங்கையில் யுத்தம் முடிவுற்று ஒரு ஜனநாயக சூழலில் காணப்பட்டதுடன் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த சந்தர்ப்பத்தில் இத்தேர்தல் இடம் பெற்றது.

மக்கள் பிரதிநிதிகளினால் நகரசபையினை கைப்பற்றிய பின்னர் முதலாவது கூட்டத்திலிருந்தே சகல உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் நாம் ஆதரவினை இச்சபைக்கு இதுவரை வழங்கியிருந்தோம். ஆனால் இன்று நடைபெறும் 10வது கூட்டத்தில் நாம் பிரசன்னமாகி இருக்கின்றோம். ஆனால் இதுவரை இச்சபை உருப்படியான எந்த ஒரு வேலைத்திட்டத்தினையும் இச்சபைக்கு பொறுப்பாக இருந்து செயற்படுகின்ற கௌரவ தலைவர் கௌரவ உப தலைவர் செயலாளர் ஆகிய மூவரும் திறம்பட செயற்படவில்லை என்பதை மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்

தங்கள் மூவரினதும் செயற்பாடுகள் சம்பந்தமாக வவுனியா நகரில் இருக்கின்ற கல்விமான்கள், உத்தியோக சமூகத்தினர், வரியிறுப்பாளர்கள், வாக்காளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகள் பல்வேறுபட்ட விமர்சனங்களை சுமத்தியுள்ளனர்

அந்த வகையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்கள் நலன் கருதி தொடர்ந்தும் உங்களுடைய சீர்கேடான நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதை மீண்டும் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

01.மக்கள் பிரதிநிதிகள் வவுனியா நகரசபையை பொறுப்பேற்றபிற்ப்பாடு சபையில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நகரபிதாவே பொறுப்புக்கூற வேண்டியவர் ஆவார். அப்படி இருக்கையில் சபையின் நடவடிக்கைகளை இலகுப்படுத்தவும் விரிவாக்கம் செய்வதற்கும் கௌரவ உப தலைவர் கௌரவ உறுப்பினர்கள் செயலாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்களுக்கான அதிகாரங்களை எழுத்து மூலம் கையொப்பமிட்டு அதை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை.

02. சபையின் முதலாவது கூட்டத்திலேயே சபையின் கொடுப்பனவுகளை செய்வதற்கு கையொப்பமிடும் அதிகாரங்களினை குறிப்பிட்ட சபையின் உறுப்பினர்கள் மத்தியில் தீர்மானம் எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு செய்ப்படவில்லை.
உதாரணம்:- வங்கிக்காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம்.

03. வட்டாரரீதியாக கிரமமாக குப்பை அகற்றும் நடவடிக்கை இன்றுவரை சரிவர முன்னெடுக்கப்படவில்லை. மற்றும் வீதிப்பாரமரிப்பு மிகமோசமான நிலையில் உள்ளது. மற்றும் அகற்றப்பட்ட குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு மீள்பாவனைக்கு எடுக்கப்படவில்லை. மற்றும் PHI கிரமமாக குப்பை அள்ளும் பணிகளை ஒவ்வொரு வட்டார ரீதியில் செய்யவில்லை. இது பற்றி விளக்கம் தரவும்.

04. 2009.10.28 ல் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உப குழு தெரிவு செய்தல் தொடர்பான நடவடிக்கை இதுவரையும் எடுக்கப்படவில்லை.

05. 2009.10.28 நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் உணவு விடுதி அமைத்தல் புத்தக நூல்களினை கணணிப்படுத்தல் நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்களை திருத்துதல். ஆளணி அட்டவணையினை சமர்ப்பித்தல் வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை செய்யப்படவில்லை.

06. கோவில்குளத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலைக்கு ரூபா177180.66 ஒப்பந்தக்காரர் F J V அகிலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பாடசாலை நகரசபைக்கு சொந்தமானதா?

07. 20.01.2010 அன்று நடைபெற்ற நான்காவது கூட்டத்தில் தீர்மானம் இல.04இல் வீதிகளுக்குப் பொருத்துவதற்கு 25 நீர்க்குழாய்கள்(போக்) கொள்வனவு செய்வதற்கு சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது இருந்த போதிலும் இதுவரை நீர்க்குழாய்கள் பல இடங்களில் போடப்படவில்லை. போடப்பட்டபின் அதன் பழைய நீர்க்குழாய்(கல்வெட்டு) திருப்பி நகரசபைக்கு ஒப்படைக்கப்பட்டதா?

08. 24.02.2010 அன்று நடைபெற்ற 5வது கூட்டத்தில் 31.01.2010 வங்கிக் கூற்றின்படி ரூபா 22727963.12 பணம் இருந்தது. ஆனால் ஏனைய உறுப்பினர்கள் உடனடி புதிய வேலைகளினை கேட்கும் போது மற்றும் ஒப்பந்தம் வழங்கிய பின்னர் வேலை முடிவடைந்த நிலையில் சபையிலே பணம் இல்லையென பலதடவைகள் கூறியுள்ளனர். இதற்கு உதாரணம்:- வெளிக்குளத்தில் அமைந்துள்ள ஒளவையார் வீதி, சின்னபுதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்த வீதி அதே போன்று ஏனைய சிறு வீதிகள்.

09. 21.04.2010 அன்று நடைபெற்ற 7வது கூட்டத்தில் தீர்மான இல.4ல் பூந்தோட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள பொலீஸ் பாதுகாப்பு நிலையம், பூந்தோட்ட சந்தியில் குளக்கட்டு வீதியை மறித்துள்ள பொலீஸ்காவல் அரணை அகற்றி மக்கள் போக்குவரத்துக்கு அவ்வீதியினை விடுவிப்பதாக சபை ஏகமனதாக தீர்மானித்தது. இதுவரைஅது மேற்கொள்ளப்படவில்லை.

10. கந்தசாமி கோவில் வீதியில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கடைத்தொகுதிக்கு புதிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை அறியக்கூடியதாக உள்ளது. அப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பின் நகர அபிவிருத்தி அதிகார சபைச்சட்டத்திற்கு அமைய வாகன தரிப்பிடம் வழங்கப்படவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம்.

11. நகரசபைக்கு சொந்தமான பழைய பதிய வாகனங்கள் நகரசபை நிர்வாக நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய, மற்றைய தனிப்பட்ட முறையில் தலைவர், உப தலைவர், செயலாளர் பயன்படுத்துவதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது. இது பற்றி சபைக்கு தெரியப்படுத்துங்கள். மற்றும் 19.06.2010 சனிக்கிழமை, 20.06.2010 ஞாயிற்றுக்கிழமை கௌரவ உப தலைவர் மு முகுந்தரதன் அவர்களால் அவரது தனியார் கல்வி நிறுவன வகுப்பிற்காக ஏனைய தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு மாங்குளம் மல்லாவிக்கு வாகனம் பாவிக்கப்பட்டுள்ளது. அதன் உண்மை நிலை என்ன?

12. கடந்தகாலங்களில் வவுனியா நகரசபையினால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வந்த பௌர்ணமி கலைவிழா நிகழ்ச்சியை மீண்டும் நடாத்தும்படி பல தடவைகள் கேட்கப்பட்டபோதிலும் இதுவரை தலைவர் முடிவு எடுக்கவில்லை. இதனால் இளம் கலைஞர்க்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

13. டெங்கு ஒழிப்புத்திட்டத்திற்கு கௌரவ ஆளுனரால் ரூபா4800000 (ரூபா48 லட்சம்) பணம் வவுனியா நகரசபைக்கு வழங்கப்பட்டது. இப்பணம் தலைவர் உப தலைவர் செயலாளர் Dr சத்தியமூர்த்தி என்பவர்களினாலே கையாளப்பட்டது. இதுவரை அதற்கான கணக்கறிக்கை சபையிலே சமர்ப்பிக்கப்படவில்லை.

14. தர்மலிங்கம் வீதி முடிவடையும் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள நகரசபை அங்கீகாரம் வழங்காத மூன்று கடைகளினை அகற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் சபையிலே பத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் சமூகமளிக்காத சந்தர்ப்பத்தில், பின்னர் அக்கடையினை அகற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சபையிலே தீர்மானம் எடுக்கப்பட்டது. இது தலைவரின் கபடப்போக்கை காட்டுகின்றது.

15. ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வாளிக்கிணற்றிக்கு உட்செல்லும் கதவின் ஒரு பகுதியினை மூடி நகரசபையின் சபை அங்கீகாரமில்லாமல் 16 அடி நீளமான கடையொன்று கட்டப்பட்டு அதற்கு வாடகை அறவிடப்படுகின்றது. அப்பணம் சபைக்கு கிடைக்கின்றதா? என்பதை எமக்கு தெரியப்படுத்த வேண்டும். அத்தடன் கற்கழி வீதியில் உள்ள ஓர் ஒழுங்கையை இடைமறித்து கடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது பற்றி நகரசபைத் தலைவர் அறிந்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்?

16. பூந்தோட்டச்சந்தியில் அமைந்துள்ள வடிகாலைத் திருத்தி கழிவுநீரினை சீராக ஓடும் நிலைக்கு அதில் அமைந்துள்ள கல்வெட்டினை அகற்றி புதியதொரு கல்வெட்டினைப் போட்டுத் தருமாறு பல தடவை Dr பஞ்சலிங்கம் அவர்களால் எழுத்துமூல கடிதம் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏன்?

17. சபைக் கூட்டங்களின் போது கௌரவ உறுப்பினர்களால் தெரிவிக்கப்படும் மக்கள் நலன் சார்ந்த தேவைகள், கருத்துக்கள், பிரச்சினைகளை எடுத்துரைக்கும்போது வேண்டுமென்றே செயலாளர் அவர்கள் கூட்ட அறிக்கையில் அவற்றை சேர்த்துக் கொள்ளப்படாதது ஏன் என்பற்கு சரியான விளக்கம் கூறப்பட வேண்டும்

18. கௌரவ தலைவர் அவர்கட்கு ரூபா6800000 (ரூபா68 லட்சம்) பெறுமதியான வாகனத்தினை கொள்வனவு செய்யும்போது சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது என்பதற்கு அப்பால் கூறுவிலை கூறப்பட்டதா? இயந்திரப் பொறியியலாளர் ஒருவரின் தராதர அறிக்கை பெறப்பட்டதா? என்பதை கௌரவ உறுப்பினர்களுக்கு அறியத்தர வேண்டும். ஏன் இதைக் கேட்கிறோம் என்றால் அண்மையில் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் தவறான பாவனையின் காரணமாக வவுனியா நகரசபை எல்லைக்குள் விபத்துக்கு உள்ளாகியிருந்தும் அவ்வாகனம் கொழும்புவரை சென்று திரும்பி வந்தமையினால் அவ்வாகனத்தில் மிகப்பெரிய பிழை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடத்தில் நடைபெற்ற விபத்தை அங்கு நடைபெற்றதாகக் காட்டாமல் அது வேறு இடத்தில் நடந்ததாகக் காட்டி காப்புறுதி பெறப்பட்டுள்ளது. அதன் உண்மை நிலை இதுவரை சபைக்குத் தெரியப்படுத்தவில்லை. இதன் உண்மை நிலை என்ன?

19. நகரசபை உத்தியோகத்தரை ஊழியர்களை இடம்மாற்றம் செய்யும்போதோ அல்லது இடைநிறுத்தும்போதோ அல்லது பதவி உயர்வு வழங்கப்படும்போதோ சபையின் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
உதாரணமாக:- T O சிவராமன், வேலைப்பகுதியை சேர்ந்த சிற்றூழியர் பாஸ்கரன்.

20. கச்சேரியினால் நகரசபைக்கு வழங்கப்பட்ட வேலைப்பகுதி ஒன்று சூசைப்பிள்ளையார் குளம் சனசமூகநிலையத்தின் ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் சபையின் எந்தவித அங்கீகாரம் இல்லாமல் ரூபா500000 (ரூபா 5 லட்சம்) முற்பணமாக வழங்கப்பட்டதாக கேள்விப்பட்டுள்ளோம். சபையின் அங்கீகார முறை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். இதன் உண்மைநிலை என்ன?

21.சின்னப்புதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்திற்கு கௌரவ நகரசபைத்தலைவரின் அங்கீகாரத்துடன் குறிப்பிட்ட வீதியொன்று ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டு வேலை முடிவுற்ற நிலையில் கௌரவ நகரசபைத்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டும் ஒப்பந்தக்காரருக்கு இவ்வேலை திருப்திகரமாக முடிவுற்றுள்ளது என்பதை கூறியுள்ளார். தற்போது செயலாளர் முடிவுற்ற வேலைக்கான கொடுப்பனவினை வழங்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார். எனவே இவ்வேலையை முடித்துக்கொடுத்த ஒப்பபந்தக்காரர்கள் சனசமூகநிலைய நிர்வாகம் மிகமோசமான நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிகின்றோம். இதன் உண்மை நிலை என்ன?

22. 25.06.2010ல் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றதாக விசேட கூட்ட அறிக்கை கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தக் கூட்டம் பற்றி அறியத்தருவது யாதெனில்

1. இக்கூட்டத்தில் செயலாளர் பங்கு பற்றவில்லை.
2. கூட்டம் சபா மண்டபத்தில் நடைபெறவில்லை.
3. கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட விசேட கூட்ட அறிக்கையில் தலைவர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளார் செயலாளரின் கையொப்பம் காணப்படவில்லை.
4. கூட்டத்திற்கு கௌரவ இ. சிவகுமார், கௌரவ சு குமாராசாமி சென்றிருந்தனர் கௌரவ தலைவர் அறையிலேயே இவ்விரு உறுப்பினர்களுடனும் தலைவர் அவர்கள் கதைத்து குளிர்பானமும் வழங்கி ஏனைய உறுப்பினர்கள் வராததினால் கூட்டத்தினை வேறொரு நாள் கூடுவதாக தலைவர் கூறியிருந்தார்.
5. அன்று நடைபெற்ற கூட்டத்தில் கௌரவ JADL ஜெயசேகரா வரவல்லை அவர் வந்ததாக கூட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
மேற்கூறப்பட்ட காரணங்களினால் இக் கூட்டம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது

23. வாகனத்திற்கு தேவையான எரிபொருட்கள், பயன்படுத்தப்படும் ரயர்கள் மற்றும் சபைக்கு தேவையான பொருட்கள் மக்கள் பிரிதிநிதிகள் சபையினை பொறுப்பேற்ற பிற்பாடு கூறுவிலை கோரி பெறப்பட்டதா என்பதை இச்சபைக்கு இதுவரை அறியத்தரப்படவில்லை. இதற்கான முழுவிளக்கத்தையும் தரவும்.

24. மக்கள்பிரதிநிதிகள் சபையை பொறுப்பேற்றபின்னர் இன்று வரைநடைபெற்ற சகல நடவடிக்கைகளுக்கமான கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என்பதனை சபைக்கு அறியத்தருகிறோம்.

25. வீதி விளக்கு போடுவதற்கு நகர சபைக்கு பணம் ஒதுக்கப்பட்டது இன்றுவரை பல வீதிகளுக்கு மின்விளக்கு போடப்படவில்லை. இதன் உண்மைநிலை என்ன?

26. அண்மையில் இசைநிகழ்ச்சி ஒன்று நகரசபை மைதானத்தில நடைபெற்றது. இதன் வரி விபரத்தினை அறியத்தரவும். அத்தோடு நகரசபை நடாத்துவதாக பத்திரிகையில் விளம்பரம் போடப்பட்டது. இதற்கான சபை அனுமதி பெறப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

27. அண்மையில் பல வேலைகளுக்கான ஒப்பந்தங்கள் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைநிலை என்ன?

28.வவுனியாகுளத்தில் உள்ள தனியார் காணி ஒன்று எடுக்கப்பட்டு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு இடைநடுவிலே கைவிடப்பட்டுள்ளது. இதுவரை சபைக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதன் உண்மைநிலை என்ன?

29.சிங்கள மொழிபெயர்ப்பாளர் தேவையென பலதடவை கௌரவ உறுப்பினர் JAD லலித்ஜெயசேகர என்பவரால் சபையிலே கூறியபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை

மேற்கூறப்பட்ட விடயங்களுக்கு சபை சரியான பதிலை தரும் பட்சத்தில் தொடர்ந்தும் சபைக்கு ஆதரவு வழங்குவோம் சரியான பதில் கிடைக்காவிடில் இதுவரை நாம் வழங்கி வந்த ஆதரவினை விலக்கிக்கொள்வதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்

கடந்த 10 மாதமாக கௌரவ தலைவர், கௌரவ உப தலைவர் என்பவருக்கான வாகனம், குளிரூட்டி(AC) தளபாடங்கள் என்பவற்றிக்கு பல லட்சம் ரூபா சபைப்பணத்தினை விரயமாக்கியிருந்தும் எந்தவொரு உருப்படியான வேலையும் இதுவரை செய்யப்படவில்லை என்பதனையிட்டு பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் நாம் எமது ஆட்சேபனையை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி
வணக்கம்.

Vavuniya_UC_Members_Signatures1. .கௌரவ செ சுரேந்திரன் (TNA)
2. .கௌரவ ஜி ரி லிங்கநாதன் (DPLF)
3. .கௌரவ தேசமானய சு குமாரசாமி (DPLF)
4. .கௌரவ க பார்த்தீபன் (DPLF)
5. .கௌரவ இ. சிவகுமாரன் (TNA)
6. .கௌரவ ஜ.கனகையா (TNA)
7. .கௌரவ M S அப்துல்பாரி (PA)
8. .கௌரவ J A D லலித்ஜெயசேகர (PA)

2ஆவது ரெஸ்ட் போட்டி – இலங்கை அணி 642 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்

cri.jpgகொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது ரெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது இந்திய அணி எதுவித விக்கெட் இழப்பும் இன்றி 95 ஓட்ட்ங்களை பெற்றுள்ளது.

நேற்றய தினம் இலங்கை அணி 642 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது முதல் இனிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது.  இலங்கை அணி சார்பில் அதி கூடிய ஓட்டமாக 219 ஓட்டங்களை குமார் சங்ககார பெற்றுக்கொண்டதுடன் மஹேல மற்றும் பரனவிதான சதம் அடித்தனர். பரணவித்தாரன 100 ஓட்டங்களையும் சங்கக்கார 219 ஓட்டங்களையும் மஹேல ஜெயவர்தன 174 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யூலை ’83 முதல் கருகிய கால்நூற்றாண்டு : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Black July 19831983 யூலை இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். இன்றைய முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டம். யூலை 23 1983ல் ஸ்தாபன வடிவம் பெற்ற இந்த வன்முறை அரசியல் மே 18 2009 வரை கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி பாரிய அழிவை ஏற்படுத்தியது. இந்த வகையில் கருப்பு யூலை என்ற குறியீடு 1983 முதல் அடுத்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களது வாழ்வினை இருட்டில் கருமையிலேயே விட்டிருந்தது. இந்த மிகக் கொடிய கால்நூற்றாண்டு வரலாற்றிற்கு நாம் இன்றும் சாட்சியாக வாழந்து கொண்டுள்ளோம்.

இலங்கையின் இரத்தம் தோய்ந்த கால்நூற்றாண்டு வரலாற்றை இன்று திரும்பிப் பார்க்கும் போது, அண்மையில் காலமான தமிழ் – சிங்கள மக்களிடையே உறவுப்பாலமாக இருந்த தோழர் உபாலி குரே அவர்களின் சிந்தனையூடாகப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் என் நினைக்கின்றோம். அவர் தனது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக தனது பெறாமகன் முறையான உறவுக்கார இளைஞனுக்கு எழுதிய மடலில் இருந்து …..

Upaly Cooray‘‘ அன்புள்ள பெரிய மருமகனுக்கு!

உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப் படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்க வாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்க வேண்டும்.

உங்களுடைய வெற்றிக் களிப்பு, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் ஆயுதக் கிளர்ச்சிக்கு வித்திட்ட ஆழமான பிரச்சினைகளை எண்ணிப் பார்க்கத் தவறுகிறது. 1977இன் தமிழருக்கெதிரான இனக் கலவரம், 1981இல் மிகவும் பெறுமதி வாய்ந்த யாழ் பொதுநூல்நிலைய எரிப்பு, இவைகளைச் சரித்திரத்தில் இருந்து இது அழித்துவிட முடியாது. 1983இல் அரசினால் ஏவிவிடப்பட்ட இனக்கலவரத்தின் போது நாடு பூராவிலும் இருந்த தமிழர்கள் மீது பரந்தளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது பல தமிழ் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனார்கள். பலர் கிரமமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். இவைகள் எல்லாம் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டவை…..’’
சிங்கள சமூகத்தைச் சேர்ந்த, தனது மரணம் வரை இன உறவுகளைக் கட்டியெழுப்ப முயன்ற ஒரு சிந்தனையாளனின் வாக்குமூலம் இது.

1983 யூலை இனக்கலவரம் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்தது, இந்த இனக்கலவரங்களின் பின்னால் அப்போது ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் கரங்கள் இருந்தமை ஆதாரங்களுடன் வெளிவந்திருந்தது. தங்களுடைய இனவாத நடவடிக்கைகளை பெரும்பான்மை மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கும், அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டு தங்கள் குறுகிய நலன்களை பூர்த்தி கொள்வதற்குமாகும்.

எழுபதுகளின் பிற்பகுதியில் உருவான தமிழ் எழுச்சியையும் அரசுக்கெதிரான தமிழ் மக்களின் போக்கையும் கட்டுப்டுத்த சந்தர்ப்பம் பார்த்திருந்த அரசு கிடைத்த சந்தர்ப்பத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழ் மக்கள் மீது யுத்தப் பிரகடனம் செய்யும் அறிக்கைகளையும் இனவாத பேச்சுக்களையும் பேசி, தமிழ் மக்களின் மீதான 1958க்களில் நடைபெற்ற கலவரங்களை போன்றதொரு கலவரத்தை நினைத்து ஏங்கியவர்களுக்கு 1983 யூலை 23 சம்பவம் வாய்ப்பாக அமைந்தது. அன்று யாழ்ப்பாணம் திருநல்வேலிச் சந்தியில் வெடிக்க வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடி 13 இராணுவத்தினரைப் பலியெடுத்தது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த சந்தர்ப்பம் பார்த்து இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தமிழர் மீது கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதே ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவருமான ஜே ஆர் ஜெயவர்த்தனாவே 1958, 1977 இனக்கலவரங்களுக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.

J R Jeyavarthaneதமிழ் மக்களுக்கு எதிரான இனக் கலவரங்களில் முன்னின்ற ஐக்கிய தேசியக் கட்சியுடனும் அதன் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனே உடனும் தமிழரசுக் கட்சியும் அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் எப்போதும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தனர். இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் கூட்டுக்களில் தமிழ் அரசியல் தலைமைகளான தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தனை இனக்கலவரங்களின் பின்னும் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே கூட்டினை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

1983 இனக்கலவரம் பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை மீது தலையீடு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. பனிப்போரின் உச்சமாக இருந்த அக்காலப்பகுதியில் உலக நாடுகள் இரு அணிகளாக பிரிந்து நின்றன. இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்த போதும் அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிரான நிலையைக் கொண்டிருந்தது. ஆனால் ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அரசு அமெரிக்க சார்பு நிலையைக் கொண்டிருந்தது.

இந்தியாவின் பிராந்திய நலன்களும் இந்தியாவின் தேவைகளும் இலங்கை அரசிற்குகெதிராக இந்த இனக்கலவரத்தை இந்தியா பயன்படுத்த முற்பட்டது. இதன் விளைவு இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் ஆயுத வடிவம்பெற்று மக்கள் சக்தியிலும் ஆயுதங்களின் சக்தியே மகத்தானது என தமிழ் விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்களைக் கைவிட்டு இந்தியா வழங்கிய ஆயுதங்களை இறுகப் பற்றிக் கொண்டனர். உரிமைப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாக ஆனது.

இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் பல சமூக முன்னணியாளர்களும் சமூகநலவாதிகளும் ‘மக்கள் அரசியல் மயப்படுத்தப்படாத போராட்டம் – அரசியல் முன்னிலைப்படுத்தப்படாத போராட்டம் – மக்களின் பங்கு பற்றல் இல்லாத போராட்டம் – தோல்வியிலேயே முடியும்’ என்பதை அறைந்து சொன்ன போது ஆயுதங்கள் மீதான போதை அவர்களது மதியை மயக்கச் செய்தது. இறுதியில் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட சந்தர்ப்பவாத சக்திகளின் தலைமையில் இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டு தோல்வியுற்றது.

அரசியல் மயப்படுத்தப்டாத இப்போராட்டம் இலகுவில் வல்லரசுகளின் கைப்பொம்மையாகி அல்லது வல்லரசுகளின் வல்லாதிக்கத்திற்குட்பட்டு இலகுவில் தோல்வியை அடையும் என்பதை அன்றே சுட்டிக்காட்டிய அரசியல் சிந்தனையாளர்கள் இன்று அதன் முடிவையும் தாங்கள் வாழ்நாளிற்குள்ளாகவே கண்டும் உள்ளனர். இந்தச் சிந்தனைகள், அறிவுறுத்தல்கள் இவை எல்லாவற்றையும் மீறி ஆயுதங்களை மட்டுமே நம்பி இந்தப் போராட்டத்தை நடாத்தி இன்று அந்த போராட்டம் ஆரம்பித்த இடத்தில் இருந்து பின்னோக்கி வெகுதொலைவிற்கு மக்களைக் கொண்டு சென்றுள்ளது.

இன்றும் இந்த கடந்த காலம் பற்றிய மதிப்பீடோ அல்லது விமர்சனமோ இல்லாமலேயே அடுத்த நகர்வுக்குத் தயாராகின்றனர். எமது கடந்த காலத்தை மதிப்பீடு செய்து தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய எவ்வித விவாதமும் இன்றி ஓடுகிற பஸ்ஸில் ஏற முற்படுகின்றனர். அவ்வாறு செய்யாதவர்களுக்கு துரோகிப் பட்டம். கடந்த போராட்டத்தின் தப்பான பண்புகள் இன்னும் தொடர்வதையே இது காட்டுகின்றது. இராணுவ சாகசங்களையே போராட்டம் என்று அடுத்த சந்ததிகளுக்கு படிப்பித்தும் ஆயிற்று. இதிலிருந்து வெளிவருவதும் மக்கள் அறிவூட்டப்படுதலும் மிகவும் சிக்கலான நிலையாகியும் விட்டது, இந்த சிக்கலிலிருந்து வெளியேற எமது கடந்த போராட்டத்தையும் நமது போராட்டவாதிகளின் போக்குகளையும் முழுமையாக மீள்மதிப்பீடு செய்தாக வேண்டிய அவசியமான காலகட்டம் இது.

Black July 1983இந்த 1983 யூலைக் கலவரத்தின் பின்னரும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கையின் இனவாத அரசுகள் தங்களது இனவாதப் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அல்லது இனவாத அரச இயந்திரம் மாற்றங்களை அனுமதிக்கவில்லை. இனவாத நடவடிக்கைகள் யுத்தத்தின் பின்னணியில் மிகவும் துரிதமாக இடம்பெற்றது. இந்த இனவாத நடவடிக்கைகளை தமிழ் மக்கள் ஸ்தாபனமயப்பட்டு கண்டிக்கவோ அதற்கு எதிராக செயற்ப்படவோ முடியாதபடி தமிழ் மக்களை வலிந்து பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்தனர். இன்னோர் வகையில் இந்த இனவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் நெய்யூற்றி வளர்த்தும் விட்டனர்.

இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி சிங்கள பேரினவாதக் கட்சிகள் எவ்வாறு குறுகிய அரசியல் லாபம் பெற்றனரோ அவ்வாறே தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களின் தொடர்ச்சியான தமிழீழ விடுதலைப் புலிகளும் இனவாதத்தைக் கூர்மைப்படுத்தி தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

இந்த இனக்கலவரத்தை தூண்டிய காரணங்களில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை அரசும் அதற்கான முழுமையான பொறுப்புகளைக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலீசாரும் இராணுவத்தினரும் சிங்களக் காடையர்கள் இனவாதிகளுடன் சேர்ந்து தாமும் இணைந்தே இந்த 1983ம் ஆண்டு இனக்கலவரத்தை நடாத்தி தமிழ் மக்களை கொன்று குவித்தனர், இந்த ஈனச்செயலுக்கு பொறுப்பான பலர் இன்றும் பல முக்கிய அரச பொறுப்புக்களில் உள்ளனர். இவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை,

அதேசமயம் இந்த 1983 யூலை கலவரத்திற்கு சற்று முன்னான தமிழ் ஆயுத அமைப்புகளின் நகர்வுகள் இங்கு பதிவு செய்யப்படுவது அவசியம். யூலை 23 1983 திருநெல்வேலிச் சந்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னால் இருந்த உள்நோக்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

TELO_Thangaththuraiதமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ வெலிக்கடைச் சிறையில் இருந்த தமது தலைவர்களான குட்டிமணி தங்கத்துரை ஆகியோரை சிறையை உடைத்து வெளிக்கொணர்வதற்காக 24 இளைஞர்களை பயிற்சியளித்து வெலிக்கடைசிறையை தாக்கும் திட்டம் ஒன்றை செய்வதற்கு ஆயத்தமாக இருந்த வேளையிது. ‘இந்த தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் அதன் தலைவர் வே பிரபாகரனிடமும் உதவிகள் கேட்கலாம்’ என்று சில ரெலோ உறுப்பினர்களிடம் அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இதற்கிடையே சில ரெலோ உறுப்பினர்கள் வே பிரபாகரனே தமது ரெலோ தலைவர்களை காட்டிக் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டினர். அவர்கள் ‘ரெலோ தலைவர்களை உயிருடன் வெளியே எடுப்பது வே பிரபாகரனுக்கு விருப்பமானதாக இருக்காது’ என்றும் கூறினர். ‘வே பிரபாகரன் இந்த திட்டத்தை குழப்புவார்‘ என்ற பலமான அபிப்பிராயத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த அபிப்பிராயத்தை அன்று கொண்டிருந்தவரில் ரெலோ சுதனும் முக்கியமானவர். இவர் இப்போது லண்டனில் வாழ்கிறார்.

TELO_Kuddymani‘தமிழீழ விடுதலைப் புலிகளோ அதன் தலைவர் வே பிரபாகரனோ உதவி செய்யத் தேவையில்லை.உபத்திரவம் இல்லாது இருந்தாலே போதும். இப்போதைக்கு எந்த இராணுவத் தாக்குதலையோ இராணுவத்தினர்க்கு எதிரான சேட்டைகளையோ செய்ய வேண்டாம்’ என புலிகளிடம் கேட்பதாக முடிவாகியது. சிறீசபாரத்தினத்தின் இணக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை இதே சுதன் சந்தித்து மேற்கூறிய வேண்டுகோளை விடுத்திருந்தார். ரெலோ சுதன் கலட்டி அம்மன் கோவிலடியில் வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கண்ணனிடம் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது. (கண்ணன் இன்றும் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.) ரெலோ தலைவர் தங்கத்துரை பிரபாகரனின் இம்மாதிரியான தாக்குதல்களை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாயும் இத்தகவலை வே பிரபாகரனுக்கு அனுப்பியதாயும் இந்த ரெலோ உறுப்பினர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இராணுவ சாகசங்களை நிறுத்தவில்லை. இராணுவத்தினர் மீது மேற்கொள்ளளும் வலிந்த தாக்குதல்களை, துப்பாக்கிப் பிரயோகங்களை நிறுத்தவில்லை. திருநெல்வேலித் தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றினர். இனக்கலவரம் வெடித்தது. வெலிக்டை சிறையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை கொல்லப்பட்டனர்.

LTTE Leader V Pirabakaranஇன்றும் லண்டனில் வாழும் முன்னாள் ரெலோ உறுப்பினர்களிடம் இந்த 13 இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் ரெலோ தலைவர்களை வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்குடனேயே செய்யப்பட்டதாக திடமாக நம்புகிறார்கள். அதேவேளை இந்தக் காலங்களில் சிறையில் இருந்த தங்கத்துரை தனது நீதிமன்ற உரைமூலம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு உள்ள நியாயத்தை முக்கியமாக இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் எடுத்து கூறி இருந்தார். இவ்வுரை தங்கத்துரை போராட்டம் பற்றிய சரியான போக்கைக் கொண்டிருந்தார் என்பதைக் கோடிற்று நின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தங்கத்துரையை சிறையிலிருந்து மீட்டிருந்தால் வே பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நடாத்தியிருந்திருக்க முடியுமா? பின்னாளில் ஏற்பட்ட அரசியல் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? என்பது ஆர்வத்திற்குரிய விவாதமாக அமையும்.

அன்று 1983 யூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு வன்னியில் குடியேறிய மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தங்களுக்கும் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகினர். இன்றும் இந்த வன்னி அகதி முகாம்கிளிலிருந்து வெளியேறி தங்க இடம் இல்லாது இருப்பவர்கள் இவர்களே.

இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே மூல காரணமாக இருந்த போதும் சுதந்திரக் கட்சி இவ்விடயத்தில் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இலங்கை அரச இயந்திரத்தை இனவாத நச்சுச் சுழலில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கு சுதந்திரக் கட்சி காத்திரமான பங்களிப்பினை இதுவரை மேற்கொள்ளவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள சுதந்திரக் கட்சிக்கு தற்போது அமைந்துள்ள அரசியல் சூழல் மிகவும் வாய்ப்பானதொன்று. அதனை முழுமையாகப் பயன்படுத்தி அரசு இயந்திரத்தை இனவாதச் சூழற்சிக்கு வெளியே கொண்டுவர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசினால் முடியும். ஆயினும் அவர்கள் தாம் அதற்குத் தயாரில்லை என்பதனையே அவ்வரசின் இராணுவப் போக்கு உணர்த்துகின்றது. இன்றும் வன்னி முகாம்களில் உள்ள இந்த மக்கள் 1983ம் ஆண்டின் இனவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வெளியேறிய அப்பாவி மலையக மக்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் அறியாதவர்களா என்ன? இன்றைய அரசின் நடவடிக்கைகள் தம் குறுகிய அரசியல் நலன்களுக்காக நாட்டை மற்றுமொரு இனவாதச் சுழற்சிக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசு தள்ளுகின்றதோ என்ற அச்சம் தமிழ் மக்களிடையெ எழுவது தவிர்க்க முடியாதது.

Rehabilitation_Wanni வன்னி அகதி முகாம்களில் உள்ள மீதமான மக்கள் மட்டுமல்ல பெயரளவில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களும் தமக்கென வாழ விவசாயம் செய்ய நிலமற்றவர்கள், வீடற்றவர்களாகும். இந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமலும் அந்த இளம்பிள்ளைகளின் கல்வியில் அக்கறையில்லாமலும் அரசுக்கு என்ன வெற்றி விழா, ஆண்டுவிழா தேவைப்படுகின்றது. இப்படிப்பட்ட இனவாத போக்கே இலங்கையில் தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக போராட முற்பட்டதும் இராணுவத்தினரை தாக்கும் எண்ணம் உருவாகக் காரணம் ஆனது என்பதை இன்னும் உணராமல் இருப்பது இவர்களும் வரலாற்றைக் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
இந்த மக்களின் அவல நிலையை இன்றுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டுகொள்வதாக இல்லை. தம் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதற்கு அப்பால் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்திரமாக எதனையும் செய்துவிடவில்லை. அந்த மக்களை வன்னி முகாம்களில் சென்று பார்ப்பதற்குக் கூட அவர்கள் போராடவில்லை. பொறுப்பு வாய்ந்த அரசு ஆட்சியில் உள்ளது எனக் கூறிக்கொள்ளும் சுதந்திரக் கட்சியின் தமிழ் ஆதரவாளர்களும் அமைப்பாளர்களும் தோழமைக் கட்சிகளும் கூடி தமது சுதந்திரக்கட்சி அரசியல் உறவுகளை முழுமையாக இந்த மக்களுக்காக பயன்னபடுத்த முடியாதவர்களாகவே உள்ளனர்.

இக்கட்டுரையை மீண்டும் உபாலி குரேயின் சிந்தனையின் அடிப்படையிலேயே நிறைவுக்குக் கொண்டு வருவது பொருத்தமாக இருக்கும். அவர் மேற்குறிப்பிட்ட கடிதத்தில்…..

‘‘இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றால், எங்களுக்கு இன்று தேவையானது வெற்றி குறித்த பெருந்தன்மையே அல்லாமல் வெற்றிக் களிப்பல்ல. நாங்கள் அவர்களோடு உடன்பாடு கொள்ள வேண்டிய தேவை இல்லாவிடினும் அவர்களை நோக்கி நாங்கள் நட்புக்கரம் நீட்ட வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமேயன்றி இனிமேலும் சண்டைக்குப் போகக்கூடாது. அவர்களுடைய குறைகளை நாங்கள் கேட்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகளை அடைவதற்கு நாங்கள் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும். இன்னும் உங்கள் வெற்றிக் களிப்பு எங்களுடைய கலாச்சாரத்திற்கு அந்நியமானது. உதாரணத்திற்கு, துட்டகைமுனு, எல்லாளனை வெற்றி கொண்டபின், எல்லாளனுடைய சமாதிக்குச் சென்றபோது எல்லாளனுக்கு மரியாதை செலுத்துமுகமாக ஒவ்வொரு குதிரைவீரனும் அந்தச் சமாதிக்கு மண்டியிட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். இந்த உயர்நிலையின் வழிநின்றுதான் நாங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை அணுகவேண்டும்.’’

இந்த மனமாற்றம் பேரினவாதத் தலைமைகள் மத்தியில் ஏற்பட்டாக வேண்டும். அதற்கு முதல் நிபந்தனை இந்த மனமாற்றம் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். கடந்த கால்நூற்றாண்டு கால ஆயுதப் போருக்கு செலவழித்து ஆயிரக்கணக்கான லட்சக்கணக்காண கோடிக்கணக்கான பணத்தை சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுக்க அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப் பயன்படுத்தி இருந்தால் எமது நியாயமான உரிமைகளை வென்றெடுக்க சிங்கள, முஸ்லீம் மக்கள் தோளோடு தோள் நின்றிருப்பார்கள். உபாலி குரேயின் கடிதத்திற்கு அந்த உறவுக்கார இளைஞன் வருமாறு பதிலளிக்கிறான்…..

”என் அன்புக்குரிய பெரிய அங்கிள்,

உங்களுடைய இந்தக் கட்டுரையை என்னுடைய FACEBOOK இலும், சில இலங்கையரின் FACEBOOK இலும் பிரசுரித்தேன். என்னுடைய நண்பர்களில் 20 பேருக்கும் அதிகமானவர்கள் யுத்தம் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை இதற்குப் பின் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய கட்டுரை மூலமாக அவர்களுடைய அபிப்பிராயங்ளை மாற்ற முடிந்தததையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இதைக் கட்டாயம் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

தயவுசெய்து இதுபற்றி யோசியுங்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்ததற்காக நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரியமுடன்”

இலங்கை இந்த இனவன்முறை என்கிற நச்சு வட்டத்தில் இருந்து வெளியேற தமிழ் – சிங்கள – முஸ்லீம் சமூகங்களில் இருந்து பல உபாலி குரேக்கள் தோன்ற வேண்டும். தமிழ் இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்களிலும் பார்க்க உபாலி குரே போன்றவர்களின் சிந்தனையும் எழுத்தும் இன மத பேதங்களைக் கடந்து அவர்களின் இதயங்களையும் சிந்தையையும் வெற்றிகொள்ளும். உபாலி குரேயின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அதன் முடிவில் இசைக்கப்பட்ட பொப் மாலியின் பாடல் இன்னும் மெல்லியதாக காதோரம் ஒலித்துக் கொண்டுள்ளது…..

Get up, stand up!
Stand up for your rights!
Get up, stand up!
Don’t give up the fight!