சிறிதரன்

சிறிதரன்

போர்க் குற்றவாளிகள் மீது பிரித்தானியா விதித்த தடையை வரவேற்கும் எம்பி சிறிதரன் ! வருத்தப்படும் முன்னாள் எம்பி அலிசப்ரி !

போர்க் குற்றவாளிகள் மீது பிரித்தானியா விதித்த தடையை வரவேற்கும் எம்பி சிறிதரன் ! வருத்தப்படும் முன்னாள் எம்பி அலிசப்ரி !

இலங்கையில் இறுதி உள்நாட்டு போர் முனைப்படைந்த காலங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா, புலிகளில் இருந்து விலகிய விநாயகமூர்த்தி முரளீதரன், முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா ஆகியோர் மீது அண்மையில் பிரித்தானியா தடை விதித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி எம்.பி சிறிதரன், இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னணி தலைவர்கள் மற்றும் கருணா குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடை, ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று என்றார். அத்துடன் அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துகிறது. உலகின் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களறியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஆசிரியர் வழங்கிய குற்றச்சாட்டை வைத்து சபையை பிழையாக வழிநடத்துகின்றார் அர்ச்சுனா மின்சாரசபை அதிகாரி குற்றச்சாட்டு !

தன்னுடைய ஆசிரியர் வழங்கிய குற்றச்சாட்டை வைத்து சபையை பிழையாக வழிநடத்துகின்றார் அர்ச்சுனா மின்சாரசபை அதிகாரி குற்றச்சாட்டு !

 

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மின்சார சபை அதிகாரி ஒருவர் பா உ அர்ச்சுனாவுக்கு முகத்தில் அறைந்தது போன்று சில பதில்களையும் வைத்தார். தன்னுடைய முகத்தை மிக இறுக்கமாக வைத்திருந்த அந்த அதிகாரி , ஊசி அர்ச்சுனாவுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் அவருக்கு வழங்கிய குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு ஊசி அர்ச்சுனா இந்த சபையையும் நாட்டையும் தவறாக வழிநடத்துவதாக அர்ச்சுனாவின் முகத்தில் அறைந்தாற் போல் குற்றம்சாட்டினார்.

அரசியல் விடயங்கள் கதைக்க வேண்டாம் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தாண்டி யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பற்றி விவாதிக்க வேண்டிய இடத்தில் அதிகாரிகளை கூப்பிட்டு வைத்து அவமானம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டினார். மேலும் இதனை கண்டித்து ஆக்க பூர்வமாக நடக்காத கூட்டத்தை விட்டு தான் வெளியேறுவதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஏன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடையில் வெளியேறி ஸ்ரன்ட் அடிக்க வேண்டும். எம்பி சிவஞானம் சிறிதரன் அரசாங்க அதிகாரிகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று கொந்தளித்தன் பின்னணியில் கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்பே காரணமாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள விடயத்துக்கு வெளியேறினால் அது தன்னுடைய பெயரைப் பாதிக்கும் என்பதால் இந்த விடயத்தில் அரச அதிகாரிகளுக்காக பா உ சிறிதரன் வெளிநடப்புச் செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் தான் ஊசி அர்ச்சனா தமிழ் பெண்கள் சிலரை விபச்சாரிகள் என்று விமர்சித்ததற்கு பாராளுமன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பா உ சிறிதரன் அதனைக் கண்டித்து தமிழ் பெண்களை விபச்சாரிகள் என்று ஊசி அர்ச்சுனா சுட்டிக்காட்டியதை கணக்கெடுக்காது, சபாநாயகர் அர்ச்சுனாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைக் கண்டித்திருந்தார். நாங்கள் தமிழ் தேசியத்தின் தூண்கள் என்றார். இப்ப மீண்டும் மல்லுக்கட்டுகின்றனர்.

தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !

தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !

தமிழரசுக் கட்சிக்குள் பா உ சிறிதரனும் எம் ஏ சுமந்திரனும் இருக்கும்வரை கட்சி வளர்ச்சியடையாது என தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்கள் என தங்களை முன்நிறுத்தும் ஊடகவியலாளர் நிலாந்தன் மற்றும் பொங்கு தமிழ் கணேசலிங்கம் ஆகியோர் டான் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆய்வாளர் வி சிவலிங்கம் பா உ எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் அல்லது தானாக கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியிலிருந்து இவ்விருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாதது. கட்சி தற்போது எம் ஏ சுமந்திரனின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாலும் மத்திய குழுவில் சுமந்திரனுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாலும் பா உ சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பா உ சிறிதரன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்தில் அவர் ஆசனத்தை வென்று எம் ஏ சுமந்திரன் ஆசனத்தை இழந்தார்.

இருந்த போது பா உ சிறிதரனால் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தற்போது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலில் வேட்ப்புமனு தாக்கல் செய்வதில் இன்னுமொரு நெருக்கடிநிலை உருவாகும்.

ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பா.உ சிறிதரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்த போது, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதாக இருந்தால், முதலில் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் 50 சதவீத தொகுதி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைக்கு தென்னிலங்கையிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. நாமும் அதனை எதிர்க்கிறோம். மாகாணசபைத் தேர்தல் இவ்வாறானதொரு இழுபறி நிலையில் தான் இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயாரில்லை. அதேபோன்று எமது கட்சி வழக்கு நிலுவையில் இருக்கிறது. கட்சி உறுப்பினர்களே வழக்கினைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இது தாயை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு, தாயிடம் உணவு கேட்பதுபோல் உள்ளது. நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல. மாறாக இனவிடுதலையை இலக்காகக்கொண்ட அரசியலாகும். பதவிகளுக்காக அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

தங்களை தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்களாக முன்நிறுத்தும் நிலாந்தனும் பொங்குதமிழ் கணேசலிங்கமும் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளுக்கிடையே உள்ள தனிப்பட்ட முரண்பாடுகளே தமிழ் தேசியம் பலவீனப்படுவதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தன்னை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டது எனச் சுட்டிக்காட்டினர்.

தேசிய மக்கள் சக்திக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் அச்சமடைந்து தான் தமிழ் தேசியக் கட்சிகள் புதிய கூட்டணிகளை உருவாக்குவதாக நிலாந்தனும் கணேசலிங்கமும் தெரிவிக்கின்றனர்.

உள்ளுராட்சித் தேர்தல் கூட்டணி பா உ சிறிதரனை எதிர்பார்க்கின்றது ! சிறிதரன் இக்கூட்டணிக்குள் வந்தால் சந்திரகுமார் தமிழரசுக் கட்சிக்குள் போய்விடுவார் !

உள்ளூராட்சித் தேர்தல் கூட்டணி பா உ சிறிதரனை எதிர்பார்க்கின்றது ! சிறிதரன் இக்கூட்டணிக்குள் வந்தால் சந்திரகுமார் தமிழரசுக் கட்சிக்குள் போய்விடுவார் !

 

ஒன்பது கட்சிகள் இணைந்த உள்ளுராட்சி கூட்டணி, முதல் கோணல் முற்றும் கோணல் என்ற நிலையில் உள்ளது. இந்த ஒன்பது கட்சி கூட்டணியில் சமத்துவக் கட்சி இணைந்து கொள்வதை பெயரில் மட்டும் பசுமையைக் கொண்டுள்ள காய்ந்து சருகான கட்சியின் பொன் ஐங்கரநேசனும் காமுகச் சாமியாரைக் கும்பிட்டுவரும் விக்கினேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த மணிவண்ணனும் இந்தப் பழம் புளிக்கும் என்ற தோரணையில் தாங்கள் ஒரே சங்கு சின்னத்தில் போட்டியிடுவது பற்றி மீளச் சிந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, இக்கட்சிகள் பா உ சிறிதரன் இந்த ஒன்பது கட்சிக் கூட்டுக்குள் வந்து இணைவார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் அதன் மூலம் கூட்டணிக்கு வாக்கு வங்கியை எடுக்கலாம் என்றும் கணக்குப் போட்டுள்ளனர். ஆனால் தமிழரசுக் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. அப்படி பா உ சிறிதரன் ஒன்பது கட்சிக் கூட்டுக்குள் வருவதாக இருந்தால் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி வர வேண்டும் இல்லையேல் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இதில் எது நடந்தாலும் சமத்துவக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுவிடுவார். இவ்விடயம் இந்த ஒன்பது கட்சிக் கூட்டணிக்குள் பேசப்பட்டது என தேசம்நெற்றின் யாழ் நிருபர் தெரிவிக்கின்றார்.

சமத்துவக் கட்சியும் அதன் தலைவர் மு சந்திரகுமாரும் தமிழ் அரசியல் தரப்பில் ஏனைய தமிழ் கட்சிகள் மீதோ அல்லது அரசியல்வாதிகள் மீதோ பெரும்பாலும் விமர்சனங்களை வைப்பதில்லை. விதிவிலக்காக பா உ எஸ் சிறிதரன் மீது அவர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். கீரியும் பாம்பும் என்ற நிலையிலேயே இவர்கள் உள்ளனர்.

கடந்த மாவீரர் நிகழ்வில் மூன்று போராளிகளின் தாய், மு சந்திரகுமாரின் விழாவில் ஏற்கனவே கேட்டுக்கொண்டமைக்கு அமைய விளக்கேற்றி விட்டார் என்பதற்காக பா உ சிறிதரன் அவரை மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்ற விடாமல் தடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

தற்போது பா உ சிறிதரனின் வலதுகரமும் கரைச்சி பிரதேச சபைத் தவிசாளருமான வேழமாளிதனும் பா உ சிறிதரனும் அடிக்கும் கூத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கதிர்காம பேரழகி மன்னம்பேரியை எப்படி பார்க்கிறீர்களோ அது போல இசைப்பிரியாவுக்கும் நீதி வேண்டும் – பாராளுமன்றில் சிறிதரன் !

கதிர்காம பேரழகி மன்னம்பேரியை எப்படி பார்க்கிறீர்களோ அது போல இசைப்பிரியாவுக்கும் நீதி வேண்டும் – பாராளுமன்றில் சிறிதரன் !

வரவு செலவுத் திட்டத்தில் 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல எனவும் இதனை நாங்கள் எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அங்கு பா.உ சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே யுத்தம் இல்லை, சண்டை இல்லை, ஆயுதங்களுடைய சரசரப்புக்கள் இல்லை ஆனால் 442 பில்லியன் ரூபாக்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை சுகாதாரத்திற்காக, கல்விக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் கூட பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

கதிர்காமத்து அழகி மனம்பேரியின் மரணம் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல அந்தக் கால கட்டத்திலே தமிழ் மக்களையும் நிறைந்த அளவிலே பாதித்திருந்தது. மனம்பேரியினுடைய மரணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்களோ அதேபோன்று இசைப்பிரியாவின் மரணம் எங்களை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதையும் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

சம உரிமை சமமாக வழங்குகின்றோம். நாங்கள் சமமாக நடத்துகின்றோம் என்ற வார்த்தைகளுக்கூடாக தமிழர்களின் கோரிக்கைகளை மழுங்கடிக்க செய்யாதீர்கள் ” என தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !

தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !

தையிட்டி விகாரை இடித்தழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் தான் முப்பது வருடங்களுக்கு மேலதிகமாக தம்புள்ளையில் இருந்த காளி கோயில் இடித்தழிக்கப்பட்டது என கூறுகிறார்கள். தற்போதைய ஜனாதிபதி அநுர சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகிறார். சட்டத்தின் அடிப்படையில் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் எனவும் பா உ சிறிதரன் கூறியுள்ளார்.

பா.உ கஜேந்திரகுமார் உள்ளிட்ட அவருடைய சைக்கிள் கட்சியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தமது அரசியலை உறுதி செய்ய மீள தையிட்டி விகாரையை கையிலெடுத்துள்ளனர் என குற்றச்சாட்டினை முன்வைக்கும் தேசம் ஜெயபாலன் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறுவது மீள ஓர் இனவாத தீயை கொழுந்து விட்டு எரிய வைத்து அதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்ட முனையும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மைய தேசம் திரை நேர்காணலில் கலந்து கொண்டிருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோருக்கு மக்களின் பொருளாதார பிரச்சினைகள் கண்ணுக்கு தெரியாத நிலையில் தையிட்டி உள்ளிட்ட அரசியல் செய்யக்கூடிய பிரச்சினைகளில் தான் அதிக கவனம் செல்கிறது எனவும் இந்த குறுந்தேசியவாதிகள் எதிர்வரும் காலங்களிலும் மக்களால் நிராகரிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே தனிக்கட்டையாக பாராளுமன்றத்தில் உள்ள பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என்ற கருத்துடன் கைகோர்த்திருக்கிறார் பா.உ சிறிதரன். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் பலரை தேசியம் என்ற பெயரில் உசுப்பேற்றி வரும் பா.உ சிறிதரன் தையிட்டி விகாரையை வைத்து தனது அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்திருக்கிறார்.

இதேவேளை விகாரை அமைக்கப்பட்டு முழுமையடையும் வரை அமைதியாக இருந்துவிட்டு விகாரை முழுமையடைந்ததும் அதனை இடித்தழிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறி மீள ஓர் வன்முறை கலாச்சாரத்தை ஆரம்பித்து வைக்கின்றனர் என இணக்க அரசியலை விரும்பும் தரப்பினர் கருத்து வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவை சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களைத் தடுத்து அவர்களை அவமதித்து திருப்பி அனுப்பும் திட்டத்தோடு பா உ சிறிதரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயற்பட்டதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி சர்வதேச பத்திரிகையாளர் டிபிஎஸ் ஜெயராஜ் டெய்லி எப்ரி இணையத்தில் பெப்ரவரி 7இல் எழுதிய கட்டுரையிலும் குற்றம்சாட்டியுள்ளார். பெப்ரவரி 2இல் மாவையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள கறுப்புச்சட்டை அணிந்த கூட்டம் கிளிநொச்சியிலிருந்து இறக்கப்பட்டதாகவும் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த 18 பேரைக் குறிவைத்திருந்ததாகவும் டிபிஎஸ் ஜெயராஜ் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பா உ சிவஞானம் சிறிதரன் அண்மையில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஒரே நிர்வாகத்தின் கீழு; கொண்டு வரும் முயற்சியை தனது கையாட்களை வைத்து குழப்பினார் என்ற குற்றச்சாட்டுக்களை மாவீரர் துயிலும் இல்ல நிர்வாகம் முன்வைத்திருந்தது. மேலும் சிறிதரன் சட்டவிரோத சக்திகளை வைத்து கிளிநொச்சியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் பா உ முருகேசு சந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் பட்டியலில் தற்போது மவையின் இறுதி நிகழ்வை குழப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மாவையின் குடும்பத்தினர் குறிப்பாக மாவையுடைய மனைவி பவானி சேனாதிராஜா, தன்னுடைய கணவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொள்ளும் யாரையும் தடுக்க வேண்டாம் என்று கேட்டிருந்ததாகவும் ஆனால் அதனை இறுதி நிகழ்வு விடயங்களை முன்நின்று நடத்திய பா உ சிறிதரனோ மற்றவர்களோ கருத்தில் கொள்ளவில்லை என்றும் பவானி சேனாதிராஜாவின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் செயற்பட்டதாகவும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

மாவையுடைய இறுதிநிகழ்வை வைத்து இலங்கைத் தமழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்தவர்களைப் பழிவாங்க பா உ சிறிதரன் அணி முழு முயற்சி எடுத்தது. குறிப்பாக மத்திய குழுவிலிருந்த 18 பேருக்கு எதிராகவும் அவர்கள் தான் மாவையின் மரணத்துக்குக் காரணம் என்று பொருள்பட தயாரிக்கப்பட்ட பெரும் போஸ்டர்கள் இறுதிநிகழ்வு நடைபெற்ற தச்சன்காடு மயானத்தில் கட்டப்பட்டு இருந்தது. தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டில் குளிர்காயும் கஜேந்திரகுமார் அணி மற்றுமொரு போஸ்டரை தெல்லிப்பளைச் சந்தியில் கட்டியது.

எம் ஏ சுமந்திரன் குடும்பத்தினர், கறுப்புச்சட்டை அணிந்த வெறிக்குட்டிகள் போதை மயக்கத்தில் உறக்கத்தில் இருந்த காலை வேளையில் பவானி சேனாதிராஜாவையும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துவிட்டு வந்தனர். ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

மாவையின் உடலைப் பொறுப்பேற்று சகல ஆயத்தங்களையும் செய்வித்து தனது அரசியலை ஸ்தீரனப்படுத்த முயன்ற சிறிதரன் கடைசி வரைக்கும் கட்சி அலுவலகத்திற்கும் மவையின் உடல் செல்வதற்கு ஏற்பாடு செய்யவில்லை. அங்கு நிகழ்த்தப்பட்ட இறுதி உரைகள் கூட தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குவதற்கான களமாகவே பயன்படுத்தப்பட்டது.

மரணச் சடங்கிலாவது அத்மாவை அமைதியாக உறங்கவிடுவோம் என்ற மனநிலையில் பா உ சிறிதரன் செயற்படவில்லை. மாவையின் இறுதி நிகழ்வு தன்னுடைய எதிரிகளைப் பழிவாங்குவதற்கான நிகழ்வாக உரைகள் அமைந்தது. மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன், யாழ் பல்கலை விரிவுரையாளர் மாணிக்கவாசகம் இளம்பிறையன், மாவையின் இளைய சகோதரர் சோமசுந்தரம் தங்கராஜா ஆகியோர் மற்றவர்களை தாக்குகின்ற விமர்சிக்கின்ற உரைகளை வழங்கினர்.

நிகழ்வை ஏற்பாடு செய்த பா உ சிறிதரன் இவற்றையெல்லாம் அனுமதித்தார். தடுக்க முயற்சிக்கவில்லை என்கிறார் மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒரு அரசியல் தலைவருடைய இறுதி நிகழ்வு எப்படி நடத்தப்படக் கூடாது என்பதற்கு மாவையுடைய இறுதி நிகழ்வு நல்ல உதாரணம் என சவுதஏசியன் அபயர்ஸ் என்ற இணையத் தளத்திற்கு நேற்று எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்குப் பின் அந்த இடத்தில் தங்களை முன்னிலைப்படுத்த பலரும் முயற்சி எடுத்தனர். அதில் முன்னிலைக்கு வந்தவர்களில் பா உ சிறிதரனும், பா உ கஜேந்திரகுமாரும் முக்கியமானவர்கள். இவர்கள் மாவீரர் தினங்களில் தங்களை அடையாளம் காட்டியும், தாங்களே ‘தேசியத் தலைவர்’ரின் கொள்கைகளை முன்னெடுப்பதாகவும் நம்புகின்றனர். முன்னாள் விடுதலைப் போராளியும் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாளருமான முல்லை மதியின் வார்த்தைகளில் சொன்னால் அதித கற்பனாவதிகள்.

தற்போது ஈழத் தமிழர்களைத் தாண்டி பின்தளத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் “தேசியத் தலைவர்” போட்டியில் முன்னணியில் ஓடிக்கொண்டுள்ளார். அவருடைய அணிக்கு மதிவதனி பிரபாகரனின் சகோதரி அருணா முக்கிய தூணாக உள்ளார். தலைவரின் குடும்பத்தை தான் நேரில் சந்தித்ததாக சீமானுக்கான அன்று ஒரு புரட்டையும் அவர் வெளியிட்டு இருந்தார். சீமானுக்கு லண்டனில் நிதி வழங்குபவர்களில் முக்கியமானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக நன்கு அறியப்பட்ட பிரித்தானிய அரசியல் செயற்பாட்டாளர் ஜனனி ஜனநாயகத்தின் தந்தை, நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி சீவரத்தினத்தின் மகன் இவர்களை விடவும் பல குட்டிக் குட்டி சீமான் ஆதரவுக் கூறுகள் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ளனர்.

இனவாதியும் சாதியமானுமான சீமானுடன் உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராக மான் சின்ன அரசியல்வாதி இராசையா உமாகரன் உள்ளார். அவர் சீமானை வெகுவிரையில் தேசியத் தலைவராகப் பிரகடனப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விசிலடிச்சான் குஞ்சுகளும் பிற்போக்குத் தமிழ் தேசியவாதிகளும் சமூகவலைத்தள லைக் பிரியர்களுமே சீமானின் அணியல் பெரும்பாலும் உள்ளனர். அவர்களுடாக சீமான் கணிசமான வருமானத்தை ஈட்டுவதுடன் ஈழத்தமிழர்களுக்கு எதிராக முற்போக்குதன்மையோடு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பெரியார் போன்றவர்களின் கருத்துக்களை சீமான் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தி சங்கிகளின் பிஜேபியை தமிழ்நாடுக்குக் கொண்டு வரப்படாதபாடு படுகின்றார்.

திராவிடம் தமிழகத்தில் ஆரியத்துவத் திணிப்புக்கு எதிராகவும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகவும் வீச்சுப்பெற்ற கருத்தியல் என்கிறார் அசோக் யோகன் கண்ணமுத்து. பெரியார் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியாரின் சீர்திருத்தங்களில் காணப்பட்ட முற்போக்குப் பாத்திரம் முக்கியமானது என்கிறார் அவர். சீமான் போன்றவர்களின் சுயநல விமர்சனங்களையும் அசோக் யோகன் கண்ணமுத்து கடுமையாக விமர்சித்தார்.

கொம்யுனிஸ்ட் சண்முகதாசனின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவரும் முகநூலில் நன்கு அறியப்பட்டவருமான எஸ் பாலச்சந்திரன் தன்னுடைய இடதுசாரியச் சிந்தனைக்கு முரணாக சீமானுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். அவருடைய பதிவை நீங்கள் இங்கு காணலாம்.

“தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள், புலனாய்வுத்துறைகள் பேச விரும்புவதை தன்னை விடுதலைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் சீமானே பேச ஆரம்பித்து விட்டார்” என்று சீமானின் சந்தர்ப்பவாத அரசியலைக் கடுமையாக விமர்சிக்கின்றார், ஜேர்மனியில் இருந்து இயங்கும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சபேசன்.

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு 

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு
இலங்கை அரசியலில் இருந்து விரைவில் விலகப் போவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை. தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன்” என தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு அனுராதபுரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் காவல்துறையினரால் கைதான பா.உ அர்ச்சுனா, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஒருபுறம் இதுவரை ஜனநாயக தேர்தலில் வாக்களிக்காத ஒரு நபரை யாழ்ப்பாண மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். மறுபுறம் புலிகளின் காலத்தில் தான் ஒரேநாளில் எழுபத்து ஐந்து தடவைகள் கள்ள வாக்குகள் அளித்த சிறீதரனை தெரிவுசெய்துள்ளார்கள் என குறைபடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.