உள்ளுராட்சித் தேர்தல் கூட்டணி பா உ சிறிதரனை எதிர்பார்க்கின்றது ! சிறிதரன் இக்கூட்டணிக்குள் வந்தால் சந்திரகுமார் தமிழரசுக் கட்சிக்குள் போய்விடுவார் !

உள்ளூராட்சித் தேர்தல் கூட்டணி பா உ சிறிதரனை எதிர்பார்க்கின்றது ! சிறிதரன் இக்கூட்டணிக்குள் வந்தால் சந்திரகுமார் தமிழரசுக் கட்சிக்குள் போய்விடுவார் !

 

ஒன்பது கட்சிகள் இணைந்த உள்ளுராட்சி கூட்டணி, முதல் கோணல் முற்றும் கோணல் என்ற நிலையில் உள்ளது. இந்த ஒன்பது கட்சி கூட்டணியில் சமத்துவக் கட்சி இணைந்து கொள்வதை பெயரில் மட்டும் பசுமையைக் கொண்டுள்ள காய்ந்து சருகான கட்சியின் பொன் ஐங்கரநேசனும் காமுகச் சாமியாரைக் கும்பிட்டுவரும் விக்கினேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த மணிவண்ணனும் இந்தப் பழம் புளிக்கும் என்ற தோரணையில் தாங்கள் ஒரே சங்கு சின்னத்தில் போட்டியிடுவது பற்றி மீளச் சிந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, இக்கட்சிகள் பா உ சிறிதரன் இந்த ஒன்பது கட்சிக் கூட்டுக்குள் வந்து இணைவார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் அதன் மூலம் கூட்டணிக்கு வாக்கு வங்கியை எடுக்கலாம் என்றும் கணக்குப் போட்டுள்ளனர். ஆனால் தமிழரசுக் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. அப்படி பா உ சிறிதரன் ஒன்பது கட்சிக் கூட்டுக்குள் வருவதாக இருந்தால் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி வர வேண்டும் இல்லையேல் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இதில் எது நடந்தாலும் சமத்துவக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுவிடுவார். இவ்விடயம் இந்த ஒன்பது கட்சிக் கூட்டணிக்குள் பேசப்பட்டது என தேசம்நெற்றின் யாழ் நிருபர் தெரிவிக்கின்றார்.

சமத்துவக் கட்சியும் அதன் தலைவர் மு சந்திரகுமாரும் தமிழ் அரசியல் தரப்பில் ஏனைய தமிழ் கட்சிகள் மீதோ அல்லது அரசியல்வாதிகள் மீதோ பெரும்பாலும் விமர்சனங்களை வைப்பதில்லை. விதிவிலக்காக பா உ எஸ் சிறிதரன் மீது அவர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். கீரியும் பாம்பும் என்ற நிலையிலேயே இவர்கள் உள்ளனர்.

கடந்த மாவீரர் நிகழ்வில் மூன்று போராளிகளின் தாய், மு சந்திரகுமாரின் விழாவில் ஏற்கனவே கேட்டுக்கொண்டமைக்கு அமைய விளக்கேற்றி விட்டார் என்பதற்காக பா உ சிறிதரன் அவரை மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்ற விடாமல் தடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

தற்போது பா உ சிறிதரனின் வலதுகரமும் கரைச்சி பிரதேச சபைத் தவிசாளருமான வேழமாளிதனும் பா உ சிறிதரனும் அடிக்கும் கூத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *