பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 15 பேரில் இருவர் மட்டுமே தமிழர்கள். ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர்களுக்கு எதிராக மட்டும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மேற்கொள்ளப்படுகின்றபோது கூட் இவ்வளவு ஆக்ரோசமாக அதனை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் பெருமளவில் பாதாள குழுக்களுக்கு எதிராகப் பாய்ந்துகொண்டிருக்கின்ற இந்நேரத்தில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரும் கொள்கைப் பிடிப்போடு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரர்கள் உங்களுக்குப் பிச்சை போடுவார்கள் என்று பா உ அர்ச்சுனா முழங்கினார். பொன்னம்பலம் கஜேந்திர குமார் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கினால் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்போம் என்று தெரிவித்திருந்தார். பாதாள குழுக்களின் மனித உரிமைகள் மீது தமிழ் தேசியத்துக்கு ரொம்பவும் கருணைதான் என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுமந்திரன், இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் பாரதி ஊடகவியலாளராகப் பணிபுரிந்ததுடன், இச்சட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே வாக்குறுதியளித்ததைப் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்.
அதேவேளை இச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்க வேண்டியது மிகமிக அவசியமானதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.