மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்
மாவை சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களைத் தடுத்து அவர்களை அவமதித்து திருப்பி அனுப்பும் திட்டத்தோடு பா உ சிறிதரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயற்பட்டதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி சர்வதேச பத்திரிகையாளர் டிபிஎஸ் ஜெயராஜ் டெய்லி எப்ரி இணையத்தில் பெப்ரவரி 7இல் எழுதிய கட்டுரையிலும் குற்றம்சாட்டியுள்ளார். பெப்ரவரி 2இல் மாவையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள கறுப்புச்சட்டை அணிந்த கூட்டம் கிளிநொச்சியிலிருந்து இறக்கப்பட்டதாகவும் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த 18 பேரைக் குறிவைத்திருந்ததாகவும் டிபிஎஸ் ஜெயராஜ் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பா உ சிவஞானம் சிறிதரன் அண்மையில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஒரே நிர்வாகத்தின் கீழு; கொண்டு வரும் முயற்சியை தனது கையாட்களை வைத்து குழப்பினார் என்ற குற்றச்சாட்டுக்களை மாவீரர் துயிலும் இல்ல நிர்வாகம் முன்வைத்திருந்தது. மேலும் சிறிதரன் சட்டவிரோத சக்திகளை வைத்து கிளிநொச்சியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் பா உ முருகேசு சந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் பட்டியலில் தற்போது மவையின் இறுதி நிகழ்வை குழப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
மாவையின் குடும்பத்தினர் குறிப்பாக மாவையுடைய மனைவி பவானி சேனாதிராஜா, தன்னுடைய கணவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொள்ளும் யாரையும் தடுக்க வேண்டாம் என்று கேட்டிருந்ததாகவும் ஆனால் அதனை இறுதி நிகழ்வு விடயங்களை முன்நின்று நடத்திய பா உ சிறிதரனோ மற்றவர்களோ கருத்தில் கொள்ளவில்லை என்றும் பவானி சேனாதிராஜாவின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் செயற்பட்டதாகவும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
மாவையுடைய இறுதிநிகழ்வை வைத்து இலங்கைத் தமழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்தவர்களைப் பழிவாங்க பா உ சிறிதரன் அணி முழு முயற்சி எடுத்தது. குறிப்பாக மத்திய குழுவிலிருந்த 18 பேருக்கு எதிராகவும் அவர்கள் தான் மாவையின் மரணத்துக்குக் காரணம் என்று பொருள்பட தயாரிக்கப்பட்ட பெரும் போஸ்டர்கள் இறுதிநிகழ்வு நடைபெற்ற தச்சன்காடு மயானத்தில் கட்டப்பட்டு இருந்தது. தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டில் குளிர்காயும் கஜேந்திரகுமார் அணி மற்றுமொரு போஸ்டரை தெல்லிப்பளைச் சந்தியில் கட்டியது.
எம் ஏ சுமந்திரன் குடும்பத்தினர், கறுப்புச்சட்டை அணிந்த வெறிக்குட்டிகள் போதை மயக்கத்தில் உறக்கத்தில் இருந்த காலை வேளையில் பவானி சேனாதிராஜாவையும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துவிட்டு வந்தனர். ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
மாவையின் உடலைப் பொறுப்பேற்று சகல ஆயத்தங்களையும் செய்வித்து தனது அரசியலை ஸ்தீரனப்படுத்த முயன்ற சிறிதரன் கடைசி வரைக்கும் கட்சி அலுவலகத்திற்கும் மவையின் உடல் செல்வதற்கு ஏற்பாடு செய்யவில்லை. அங்கு நிகழ்த்தப்பட்ட இறுதி உரைகள் கூட தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குவதற்கான களமாகவே பயன்படுத்தப்பட்டது.
மரணச் சடங்கிலாவது அத்மாவை அமைதியாக உறங்கவிடுவோம் என்ற மனநிலையில் பா உ சிறிதரன் செயற்படவில்லை. மாவையின் இறுதி நிகழ்வு தன்னுடைய எதிரிகளைப் பழிவாங்குவதற்கான நிகழ்வாக உரைகள் அமைந்தது. மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன், யாழ் பல்கலை விரிவுரையாளர் மாணிக்கவாசகம் இளம்பிறையன், மாவையின் இளைய சகோதரர் சோமசுந்தரம் தங்கராஜா ஆகியோர் மற்றவர்களை தாக்குகின்ற விமர்சிக்கின்ற உரைகளை வழங்கினர்.
நிகழ்வை ஏற்பாடு செய்த பா உ சிறிதரன் இவற்றையெல்லாம் அனுமதித்தார். தடுக்க முயற்சிக்கவில்லை என்கிறார் மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒரு அரசியல் தலைவருடைய இறுதி நிகழ்வு எப்படி நடத்தப்படக் கூடாது என்பதற்கு மாவையுடைய இறுதி நிகழ்வு நல்ல உதாரணம் என சவுதஏசியன் அபயர்ஸ் என்ற இணையத் தளத்திற்கு நேற்று எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்