த பினேன்ஸ் நிதி நிறுவன மோசடி – நீதி கோருகிறார் கஜேந்திரகுமார் !
த பினேன்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மக்களுக்கு உரியத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த எம்.பி கஜேந்திரகுமார், மூடப்பட்ட குறித்த நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மக்களுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை. குறித்த நிறுவனம், மூடப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரும் அந்த நிறுவனத்தினால் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. அத்துடன் த பினேன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலத்தில் செய்வதற்கு நீதிமன்றம் விற்பனை அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போதைய மதிப்பீட்டை விடவும் குறைந்த அளவில் அவை விற்பனை செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சந்தேகம் நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.